Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1551749_10201942830725969_68255289406090

 

நீண்ட நெடு மரங்களிநூடு
நிதானமாய் நடக்கிறேன் நான்
மழைத்தூறல் முகம் நனைக்க
மகிழ்வாக மழையில் நனைந்த நாள்
மனதில் வருகிறது.

மனதின் ஓரங்களில் என்றும்
ஒட்டிக்கொண்டே இருக்கும்
காய்ந்துபோன சிலதும்
பழுப்பாகிக் கொண்டிருக்கும்
சில நினைவுகளுடனும்
கவலையும் மகிழ்வுமாய்
மனம் பயணிக்கிறது

காததூரம் வந்துவிட்டோம்
மீண்டும் வர முடியாத
அந்த நாட்களின்
நினைவுகளுடன் மட்டுமாய்
என்பது மனம் கனக்க
மாற்ற முடியாததான நாட்களின்
வலுவிழந்த இறந்த காலத்தின்
வரிகள் மட்டுமே நினைவில்

எல்லாமும் எப்போதும் என்
நினைவில் இல்லை
சிறுபராயத்து சிதிலமடைந்த
நினைவுகளில் சில மட்டும்
செருக்கடையா மனதின்
சிலும்பல்களாய் வந்துபோக
மீட்டல் செய்ய முடியாத
மறந்து போனவைகளுக்காக
வருந்த மட்டுமே முடிகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல வருடங்களுக்கு முன்னர் அடிக்கடி ஓடியும் நடந்தும் திரிந்த நீண்ட மரங்களூடான Mitcham Figge's March park பாதை கண்ணில் தெரிகின்றது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுகள் அழியாதவை மனதில் என்றுமே நிலைத்து நிற்கும்.
அழிந்து போன நினைவுகள் அழிந்துபோனவையாகவே இருக்கட்டும்.

கவிதைக்கு நன்றிகள் சுமேரியர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றிகள் சுமே


எனது  வாழ்வில்

முள்ளிவாய்க்காலுக்குப்பின்

வெறுமை என்றால் என்னவென்று தெரிந்து கொண்டேன்

வேதனை  என்னவென்றால்

நிரப்பப்படபோவதே இல்லை என்பது தான்.... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல வருடங்களுக்கு முன்னர் அடிக்கடி ஓடியும் நடந்தும் திரிந்த நீண்ட மரங்களூடான Mitcham Figge's March park பாதை கண்ணில் தெரிகின்றது!

 

காலையில் நடக்கும்போது பல நினைவுகள் கடந்து போக நடப்பது சுகமும் துக்கமுமானது. நன்றி வரவுக்கும் கருத்துக்கும் கிருபன். 

 

நினைவுகள் அழியாதவை மனதில் என்றுமே நிலைத்து நிற்கும்.

அழிந்து போன நினைவுகள் அழிந்துபோனவையாகவே இருக்கட்டும்.

கவிதைக்கு நன்றிகள் சுமேரியர்

 

நினைவுகள் முற்றிலும் அழிந்து போவது நல்லது. ஆனால் அரையும் காலுமாக நினைவில் வருவது கொடுமை. நன்றி வாத்தியார் வரவுக்கு

 

கவிதைக்கு நன்றிகள் சுமே

எனது  வாழ்வில்

முள்ளிவாய்க்காலுக்குப்பின்

வெறுமை என்றால் என்னவென்று தெரிந்து கொண்டேன்

வேதனை  என்னவென்றால்

நிரப்பப்படபோவதே இல்லை என்பது தான்.... :(

 

நிரப்பப்பட முடியாத எத்தனையோ எம் வாழ்வில் ஆற்றாமையுடன் கடக்க முடியாது கடக்க வைக்கின்றன. நன்றி அண்ணா வருகைக்கு.

 

Link to comment
Share on other sites

 

 

எல்லாமும் எப்போதும் என்

நினைவில் இல்லை

சிறுபராயத்து சிதிலமடைந்த

நினைவுகளில் சில மட்டும்

செருக்கடையா மனதின்

சிலும்பல்களாய் வந்துபோக

மீட்டல் செய்ய முடியாத

மறந்து போனவைகளுக்காக

வருந்த மட்டுமே முடிகிறது

 

உண்மைதான்.. எல்லா நினைவுகளும் ஞாபகத்தில் நிலைப்பதில்லை. பல நினைவுகள் காலப்போக்கில் மெல்ல மெல்ல மறைய அவை தந்த உணர்வுகள் மட்டும் முதிர்ச்சி அடைகின்றன.

 

நல்ல கவிதை சுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கு நன்றி நிழலி, நந்தன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.