Jump to content

சம்பந்தனின் ‘13’ கனவை நிராகரிக்கிறாரா விக்கி? – குறைகள் தொடர்பில் மோடியிடம் விளக்கத்தயார் என்கிறார்!?


Recommended Posts

சம்பந்தனின் ‘13’ கனவை நிராகரிக்கிறாரா விக்கி? – குறைகள் தொடர்பில் மோடியிடம் விளக்கத்தயார் என்கிறார்!?

 

Vik1-300x219.jpg13 ஆவது திருத்தச் சட்டத்தின் குறைபாடுகள் தொடர்பில், இந்தியப் பிரதமருக்கு எடுத்துச் சொல்வதற்கு தயாராக இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.  

வடக்கு மாகாண முதலமைச் சரை சந்திப்பதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் வெளியிட்டிருந்தார். இது தொடர்பில் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினரிடம் அவர் நேற்றுமுன்தினம் நேரடியாகத் தெரிவித்திருந்தார்.   இந்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சரின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் அவரிடம் கேட்ட போது, நான் அழைக்கப்பட்டால், நிச்சயமாக 13 ஆவது திருத்தத்திலுள்ள போதாமை (குறைகள்) தொடர்பில் இந்தியப் பிரதமரிடம் தெரிவிக்க தயாராக இருக்கின்றேன் என்று பதிலளித்துள்ளார்.

http://tamilleader.com/?p=40000

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன்.. சுமந்திரன்.. இதற்கு இப்படி விளக்கம் அளிப்பார்கள்.. 13 பேஸ்மண்டு ஸ்ராங்கு.. பிள்டிங்கு வீக்கு...! இதையே தான் நாங்களும் சொல்லிட்டு வந்தமுன்னு..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் லீடர் சாம், சும், விக்கி இடையே பிரச்சினை என்று தமிழ்நெட் நெடியவனின் பிரச்சாரத்தை பரப்புகிறது.

13 பிளஸ் இப்போது, முடிவில் சமஸ்டி என்பதே ஒட்டுமொத்த கூட்டமைப்பின் நிலைப்பாடு. இதில் எங்கிருந்து வந்தது சச்சரவு?

தமிழ் லீடரின் தமிழ் நெட்டுக்கு நிகரான கீழ்தர ஒற்றுமை குலைப்பு அரசியல்தான் இது.

Link to comment
Share on other sites

கருத்து ஒற்றுமைக்கும்  ஒற்றுமைக்கு இருக்கிற வித்தியாசம் தெரியாமல்  கருத்தெல்லாம் சொல்ல வந்திடுறாங்கய்யா... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுபட்ட இலங்கைக்குள்.. சிங்களவர்களோடு.. சமஸ்டி என்பது கோச்சானின் கூக்குரல்.

 

இப்படி பல சமஸ்டி திட்டங்கள்... ஐயா செல்வநாயகம் காலத்திலேயே பேசப்பட்டு.. சிங்களவரிடம் தோற்றுப்போயின. கடைசியில்.. உள்ளூராட்சி சபைகள் தான் மிஞ்சின.

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடுகள்.. தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு அல்ல.

 

தமிழரசுக் கட்சியின் இன்றைய தலைமை.. இனப்படுகொலை என்பதைக் கூட பேச மறுக்கிறது.

 

சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த.. ஒரு தேசம்... இரண்டு அரசுகள் என்பது தான் குறைந்த சமஸ்டிய தீர்வு இதனை ஏலவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு.. 2004/5 பொதுத் தேர்தலில் முன்வைத்துவிட்டது..! இதனையே விடுதலைப்புலிகளின் தமிழீழத்திற்கு மாற்றான குறைந்த பட்ச தீர்வாக வரவேற்றும் இருந்தார்கள்.

 

இப்போ.. 13... 13+ என்று கொண்டு நிற்பது.. சம்பந்தன் வகையறாக்களின்.. சரணாகதி அரசியல் சித்தாந்தமே. இதனை ஏற்க.. மக்கள் அவர்களுக்குச் சொன்னதாக கதை அளந்து திரிகிறார்கள். அவ்வளவே..! :icon_idea::)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.