Jump to content

டெல்லியில்.... கூட்டமைப்பு மோடி சந்திப்பு: படங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

23-1408786686-modi3567-600.jpg

 

ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு:

ஈழத் தமிழ் எம்.பி.க்களிடம் மோடி வலியுறுத்தல்!

 

டெல்லி: ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும் என்று என்று தம்மை சந்தித்த இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

 

மத்தியில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்ற போது இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

 

இதன் பின்னர் இலங்கை தமிழர் பிரச்சனையில் இலங்கை அரசுக்கு ஆதரவான நிலையையே மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. இதனால் முந்தைய காங்கிரஸ் அரசு மேற்கொண்ட நிலைப்பாட்டைத்தான் ஈழப் பிரச்சனையில் பாஜக அரசும் கடைபிடிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

 

23-1408786663-tamil-national-alliance38-

 

டெல்லியில் த.தே.கூ. குழு.

இந்த நிலையில் ஈழத் தமிழர் தரப்பாகிய இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்கள் குழு நேற்று முன்தினம் டெல்லி வந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் 5 எம்.பிக்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

 

சுஷ்மாவுடன் சந்திப்பு.

இக்குழுவினர் நேற்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜையும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கையும் சந்தித்துப் பேசினர். பின்னர் இன்று பிரதமர் மோடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் சந்தித்து பேசினர்.

 

யார் யார்?

இந்த சந்திப்பில் எம்.பிக்கள் மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வராஜ், செல்வம் அடைக்கல்நாதன், சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

23-1408786704-tamil-national-alliance39-

 

கூட்டமைப்பு எம்.பிக்கள் சொன்னது என்ன?

அப்போது இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்தும், அதிகாரப் பகிர்வு தொடர்பான தமிழர்களின் எதிர்பார்ப்புகள் குறித்தும் பிரதமர் மோடியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்கள் எடுத்துக் கூறினர்.

 

ஒன்றுபட்ட இலங்கைக்குள்....

இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ஈழத் தமிழர்களுக்கு சுயமரியாதையுடனும் சமமாகவும் கண்ணியமாகவும் நீதியானதுமான ஒரு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். அது ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளான தீர்வாக இருக்க வேண்டும். இலங்கையின் 13வது அரசியல் சட்ட திருத்தத்தின் மூலம் இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் ஒரு அரசியல் தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

உதவிகள் தொடரும்..

மேலும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வீடு கட்டுதல், மருத்துவமனைகள் அமைத்த, உள்கட்டமைப்பு, வாழ்வாதார மேம்பாடு, மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கான இந்தியாவின் உதவிகள் தொடரும் என்றும் மோடி உறுதியளித்தார்.

இச்சந்திப்பின் போது பிரதமரின் முதன்மைச் செயலர் நிரிபேந்திர மிஸ்ரா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலர் சுஜாதாசிங் ஆகியோர் உடனிருந்தனர்.

நன்றி தற்ஸ்தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுபட்ட இலங்கைக்குள்....

இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ஈழத் தமிழர்களுக்கு சுயமரியாதையுடனும் சமமாகவும் கண்ணியமாகவும் நீதியானதுமான ஒரு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். அது ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளான தீர்வாக இருக்க வேண்டும். இலங்கையின் 13வது அரசியல் சட்ட திருத்தத்தின் மூலம் இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் ஒரு அரசியல் தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

 

இங்கு ஏன் வந்தீர்கள்??

போய் மகிந்தவுடன் பேசப்பாருங்கள்

நன்றி  வணக்கம். :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

இங்கு ஏன் வந்தீர்கள்??

போய் மகிந்தவுடன் பேசப்பாருங்கள்

நன்றி  வணக்கம். :(  :(  :(

 

 

கூட்டமைப்பு தனி  ஈழத்தையோ வடகிழக்கு இணைந்த மாநில சுயாட்சியையோ கைவிட்டு பல நாட்களாகி விட்டன.

அவர்கள் இருக்கும் வரை அனுபவித்துவிட்டுப்  போய்விடுவார்கள் .

நம்பி வாக்களித்த மக்களுக்கு என்ன பதிலை அடுத்த தேர்தலில் கூறுவார்களோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு தனி  ஈழத்தையோ வடகிழக்கு இணைந்த மாநில சுயாட்சியையோ கைவிட்டு பல நாட்களாகி விட்டன.

அவர்கள் இருக்கும் வரை அனுபவித்துவிட்டுப்  போய்விடுவார்கள் .

நம்பி வாக்களித்த மக்களுக்கு என்ன பதிலை அடுத்த தேர்தலில் கூறுவார்களோ தெரியவில்லை.

 

 

தனி  ஈழம்  என்பது தான் எமது கடைசி  இலக்கு

 

அதை  நானும் நீங்களும் சொல்லக்கூடிய பகுதிகளில் இருக்கின்றோம்

அவர்கள் சொல்லமுடியாத பகுதியில் இருக்கிறார்கள்

 

ஒன்றில் நாம் அங்கிருந்து சொல்லணும்

அல்லது அவர்கள் இங்கு வந்து சொல்லணும்

 

இரண்டும் சரிவராதநிலையில் காலமே பதில் சொல்லணும்

 

நாம் எதையும் சொல்லிக்கொள்ளலாம் 

எழுதிக்கொள்ளலாம்

ஆனால் தமிழீழம்  நோக்கி  நாம் ஒடியே  ஆகணும் என்பதை தீர்மானிப்பது சிங்களம்

அது தொடர்ந்து தமிழீழம் நோக்கி  எம்மை தள்ளியபடியே  தான் இருக்கிறது

இருக்கும்

எனவே எல்லோரும் ஒரு புள்ளியில் நிச்சயம் சந்திக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தியாவின் மொழிவாரி மாநிலங்களை அடக்கி ஆளும் தர்ப்பார் தொடரும் வரை.. ஹிந்தியாவின் ஒருமைப்பாடும்.. இறையாண்மையும்.. சிறீலங்காவின் ஒருமைப்பாட்டில் தங்கி இருப்பதான எண்ணம் உள்ளவரை.. ஹிந்தியா தமிழர்களுக்கு தனி தமிழீழம் அமைவதை ஒருபோதும் ஆதரிக்காது. அது மோடி என்ன கேடி வந்தாலும் நடக்காது. ஏனெனில் இவர்கள் எல்லாம்... ஹிந்தியா சிறீலங்காவின் ஒருமைப்பாட்டில் தான் பலமாக உள்ளதாக நம்ப வைக்கப்பட்டிருக்கிறார்கள். உலகும் இதனை நம்ப வைக்கப் பாடுபடுகுது.

 

அதற்காக நாம் எமது வரலாற்று ரீதியான உண்மைகளைப் புதைத்துவிட்டு தமிழீழத்தையோ.. தனிநாட்டுக் கோரிக்கையையோ கைவிட முடியாது. ஹிந்தியா விரும்பும் தீர்வை ஹிந்தியா சம்பந்தப்படவர்களிடம் பேசி தமிழர்களுக்கு பெற்றுக் கொடுக்கட்டும் அது பற்றி எந்தப் பிரச்சனையும் தமிழர்களுக்கு கிடையாது. அதேவேளை தமிழர்கள் தாம் விரும்பும் தீர்வை அடைய தொடர்ந்து தங்களால் இயன்றதை சர்வதேச.. பிராந்திய இராணுவ.. அரசியல்.. பொருண்மிய மாற்றங்களுக்கு ஏற்ப நகர்த்திச் சென்று அடைய நிச்சயம் தொடர்ந்து செயற்பட வேண்டும்.

 

ஒரு காலத்தில் குர்திஸ் போராளிகளை விடுதலைப்புலிகளோடு சேர்த்து பயங்கரவாதப் பட்டியலில் இட்டவர்கள் இன்று.. அதே போராளி அமைப்புக்களோடு கூடி நின்று ஐ எஸ் தீவிரவாதத்திற்கு எதிராக போராட வேண்டிய நிலையில் நிற்கிறார்கள். குர்திஸ்தானின் விடிவை நோக்கி குர்திஸ் மக்களும் போராளிகளும் தலைவர்களும் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒருகாலத்தில் அமையவே முடியாது என்ற குர்திஸ்தான்.. இன்று ஈராக்கின் வடபுலத்தே விரிந்து பரந்து தனது தர்ப்பாருடன் நிற்கிறது.

 

ஒரு காலத்தில் அமையவே முடியாது என்ற தமிழீழம்.. கடந்த தசாப்தத்தில்.. தனது தர்ப்பாருடன் இருந்த உண்மையின் அடிப்படையில் இருந்து.. தமிழர்கள் நாம் செயற்படும் அதேவேளை.. எமக்கு எமது கொள்கையுடன் இணைந்து பணியாற்றக் கூடிய நேச சக்திகளை கூட்டுச் சேர்த்து ராஜீய வழிகளில் முன்னகரும் ராஜதந்திரமே இன்று அவசியமாக உள்ளது.

 

ஹிந்தியாவை நம்புவர்கள் நம்பட்டும். அது பிரச்சனையே இல்லை. சிங்களவனை நம்பிறவர்கள் நம்பட்டும்.. அதுவும் பிரச்சனை இல்லை. ஆனால்.. தமிழீழம் என்ற ஒரு தேசிய சுதந்திர தேசம் அமைவதன் ஊடுதான் தமிழ் மக்களின் அபிலாசைகள் பூர்த்தியாக முடியும் என்பதை இந்த நம்பிக்கைகள் எந்த வகையிலும் தகர்க்க முடியாது. அதற்கு இடமும் அளிக்கக் கூடாது.

 

தமிழர்கள் நாம்.. எனி.. parallel strategy கொண்டு நகர்ந்தால் அன்றி.. துரோகம்.. துரோகி என்ற உச்சரிப்புக்களோடு கூடிய ஒரு வழி அரசியலால் நாம் எதனையும் எனி சாதிக்க முடியாது. இந்த யதார்த்தத்தை உணர்ந்தவர்களால் மட்டுமே தமிழ் மக்களுக்கு விடிவை எட்ட முடியும்..!!! :icon_idea:

Link to comment
Share on other sites

அருமையாகச் சொன்னீர்கள் நெடுக்ஸ்.. போர் முடிந்த காலங்களில் இதே பேன்று எழுதிய ஞாபகம். இந்தியாவுக்கு கூட்டமைப்பு. மேற்கிற்கு புலம்பெயர் அமைப்புக்கள்.. சீனாவுக்கு ஒன்றை அமைக்கவேண்டும் என்று.. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோடி சொல்வதைக் கேட்டு தலையை ஆட்டிவிட்டு வருவதற்கு அங்கு சென்றார்கள்? 13வது திருத்தச் சட்டத்தைஅமுல்படுத்தச சொல்லி சிறிலங்காவை வற்புறுத்திவது இந்தியாவின் பொறுப்பு என்று சொன்னார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் குர்திஸ் போராளிகளை விடுதலைப்புலிகளோடு சேர்த்து பயங்கரவாதப் பட்டியலில் இட்டவர்கள் இன்று.. அதே போராளி அமைப்புக்களோடு கூடி நின்று ஐ எஸ் தீவிரவாதத்திற்கு எதிராக போராட வேண்டிய நிலையில் நிற்கிறார்கள். குர்திஸ்தானின் விடிவை நோக்கி குர்திஸ் மக்களும் போராளிகளும் தலைவர்களும் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒருகாலத்தில் அமையவே முடியாது என்ற குர்திஸ்தான்.. இன்று ஈராக்கின் வடபுலத்தே விரிந்து பரந்து தனது தர்ப்பாருடன் நிற்கிறது.

 

ஒரு காலத்தில் அமையவே முடியாது என்ற தமிழீழம்.. கடந்த தசாப்தத்தில்.. தனது தர்ப்பாருடன் இருந்த உண்மையின் அடிப்படைல் இருந்து.. தமிழர்கள் நாம் செயற்படும் அதேவேளை.. எமக்கு எமது கொள்கையுடன் இணைந்து பணியாற்றக் கூடிய நேச சக்திகளை கூட்டுச் சேர்த்து ராஜீய வழிகளில் முன்னகரும் ராஜதந்திரமே இன்று அவசியமாக உள்ளது.

 

 

 

இந்த முடிவை முதலில் உறுதிப்படுத்தியவர்  பிரெஞ்சு ஐனாதிபதியாவார்

அவருடன் தமிழருக்கம் நல்ல  தொடர்புகள் உண்டு

 

எமக்கான காலம் வரும்

 

நன்றி  நெடுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் நாங்கள் பேர்ம் பேசவேண்டும்.எங்களுக்கு நிரந்தரமான சுயநிர்ணய அடிப்படையிலான நியாயமான தீர்வைப்பெற்றுத்தருபவருக்கு 100 வருடங்களுக்கு திருமலைக் துறை முகத்தைப் பாவிப்பதற்கு அனுமதிப்போம்.அமெரிக்கா பேரத்திற்கு பணியாவிட்டால் சீனா அல் அலது ரசியவுடன் பேசுவோம். டீலா?நோ டீலா?

Link to comment
Share on other sites

ஆம் நாங்கள் பேர்ம் பேசவேண்டும்.எங்களுக்கு நிரந்தரமான சுயநிர்ணய அடிப்படையிலான நியாயமான தீர்வைப்பெற்றுத்தருபவருக்கு 100 வருடங்களுக்கு திருமலைக் துறை முகத்தைப் பாவிப்பதற்கு அனுமதிப்போம்.அமெரிக்கா பேரத்திற்கு பணியாவிட்டால் சீனா அல் அலது ரசியவுடன் பேசுவோம். டீலா?நோ டீலா?

 

உங்களிடம் இன்று இல்லாத திருமலையை எப்படி தருவீர்கள்? சீனா இன்று கேட்டாலும் கொடுப்பதற்கு ஸ்ரீ லங்கா தயாராக இருக்கும் போது சீனா ஏன் உங்களுடன் உடன்பாட்டுக்கு வரப்போகிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களிடம் இன்று இல்லாத திருமலையை எப்படி தருவீர்கள்? சீனா இன்று கேட்டாலும் கொடுப்பதற்கு ஸ்ரீ லங்கா தயாராக இருக்கும் போது சீனா ஏன் உங்களுடன் உடன்பாட்டுக்கு வரப்போகிறது?

 

 

அதைத்தான் அவரும் கொஞ்சம்  சூடாக சொல்லவாறார்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விடயம்.

கூட்டமைப்பை மோடி சந்திக்கவே பெரும் பாடு பட்டிருப்பார்கள். இதுக்க புலம் பெயர்ஸ் வந்து மோடிக்கு இடித்து உரச்சீங்களா? கடிச்சு உரச்சீங்களா? எண்டு காமடி பண்ணிட்டு இருக்கினம்.

இலங்கை தமிழரது வரலாற்றிலேயே மிகவும் பலவீனமான புள்ளிவரை எம்மை இழுத்துச் சென்று முள்ளிவாய்காலில் நட்டாற்றில் விட்டுப்போனபின், எந்த பலமுமற்ற கூட்டமைப்புக்கு இந்தியாவுக்கு இடித்த்துரைக்கும் பலம் இல்லை என்பது அரசியல் பாலபாடம்.

இந்தியாவுடன் பணிந்து போய், இலங்கையின் முரண்டுப் பிடிவாதத்தை வெளிப்படுத்தி, இலங்கை-இந்திய உறவில் விரிசலை ஏற்ப்படுத்தி அதனால் பலனடையும் ராஜதத்திரமே கூட்டமைப்பு முன் உள்ள ஒரே வழி.

அதுக்கான நல்ல ஆரம்பமாக இது அமையட்டும்.

Link to comment
Share on other sites

உலகத்தால் பயங்கரவாதம் என்று சொல்லபட்ட எமது ஆயுத போராட்டம் முடிவுற்று இன்று ஒரு அரசியல் தீர்வை நோக்கி முன்னர்கின்றது .

அதற்கு ஏன் ஐந்து எடுத்தது என்றால் இந்தியாவில் ஆட்சியில்  இருந்தது எங்களால் கொலை செய்யப்பட்ட ராஜீவின் குடும்ப ஆட்சி .

விடிவிற்கான சிறு வெளிச்சம் தெரிகின்றது அதை ஊதி அணைக்காமல் தமிழர்பிரதேசங்களில் ஒளியை ஏற்றுவோம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒன்றுபட்ட இலங்கைக்குள்....

இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ஈழத் தமிழர்களுக்கு சுயமரியாதையுடனும் சமமாகவும் கண்ணியமாகவும் நீதியானதுமான ஒரு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். அது ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளான தீர்வாக இருக்க வேண்டும். இலங்கையின் 13வது அரசியல் சட்ட திருத்தத்தின் மூலம் இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் ஒரு அரசியல் தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

 

இங்கு ஏன் வந்தீர்கள்??

போய் மகிந்தவுடன் பேசப்பாருங்கள்

நன்றி  வணக்கம். :(  :(  :(

 

 

உதைத்தான் டக்ளஸ் அண்ணையும் கூத்தமைப்புக்கு சொன்னவர்  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயக தேர்தலில் யாழ்பாணத்தில் ஒரு சீட் (10%) வாங்குமளவுக்கு டக்கருக்கு யாழ்மக்கள் மத்தியில் செல்வாக்கிருக்கு.

எகோபித்த தீர்வென்றால் 10% மக்களின் பிரதிநிதியையும் சேர்த்துதான் செய்யணும். நினைச்சபடி சட்டம் வைக்க இதென்ன பிரபாவின் காட்டுத் தர்பாரே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.