Jump to content

கவர்ச்சி கடந்து வந்த பாதை! ஒரு ஜிலு ஜிலு பயணம்


Recommended Posts

anuratha%20cut%20out.jpg

 

மூக்கு இருக்கும் வரை எப்படி ஜலதோஷம் இருக்குமோ, அதுபோல கவர்ச்சி இல்லாமல் சினிமா இல்லை. அட.. அவ்வளவு ஏன்? மசாலா இல்லாமல் சாம்பார் வைக்கமுடியுமா? அதுமாதிரிதான் கவர்ச்சி இல்லாமல் சினிமா இல்லை. எந்த டைப் படமாக இருந்தாலும் அதில் கவர்ச்சி கட்டாயம் இருக்கும்.
 
சில படங்களில் இலைமறைகாயாக இருக்கும். சில படங்களில் கதைக்கு தேவைப்படுவதால் இருக்கும். சில படங்களில் அது திணிக்கப்படும்போதுதான் பளிச்சென்று தெரியும்.
 
 தமிழில் 'ரொப் 10' படங்களில் ஒன்றான 'உதிரிப்பூக்கள்' படத்தில் விஜயன் தன் கொழுத்தியாளை பலாத்காரம் செய்யாமல் அவளை நிர்வாணப்படுத்தி "உங்களை இந்தக் கோலத்தில் பார்த்த முதல் ஆள் நான்தான்" என்று சொல்லும் காட்சியும், கொழுத்தியாள் நிர்வாணமாக கிடக்கும் காட்சியும் கவர்ச்சியில்லாமல் வெறென்ன? '16 வயதினிலே' படத்தில் டாக்டர் மயிலுவை ஒவ்வொரு இடமாகத்தொட்டு அதற்கு விளக்கம் சொல்லும் காட்சியும் பாவாடை நனையாமல் ஆற்றை கடக்கும் காட்சியும் கவர்ச்சி தானே? 'அரங்கேற்றம்' படமே கவர்ச்சியை மையமாக கொண்டதுதான்.
 
pramila.jpg
 
பிரமிளா
 
பிரமிளாவின் ஆடையில்லா முதுகில் கரன்சி நோட்டுகள் ஒட்டிக் கிடப்பதெல்லாம் கவர்ச்சிதானே. மிக உன்னதமாக மதிக்கப்படும் படங்களிலேயே கூட கதையோடு இணைந்த கவர்ச்சி உண்டு என்பதற்காகத்தான் இந்த உதாரணங்களே தவிர சம்பந்தப்பட்ட படங்களை குறைத்து மதிப்பிட அல்ல. கவர்ச்சி என்பது கலையோடு கூடிய ஒரு அழகியல். அது தவறல்ல. பரதநாட்டிய அடவுகளில் இருந்து கோயில் சிற்பங்கள வரை கவர்ச்சி கலந்தே இருக்கிறது. அதிக மிகைப்படுத்தும்போதோ, அல்லது திணிக்கும்போதோதான் ஆபாசமாகிறது.
 
jothi%20laxmi%20cut%20out.jpg
ஜோதிலட்சுமி 
 
 
கருப்பு வெள்ளை காலத்தில் கலக்கியவர்கள்
 
இந்த கவர்ச்சி தமிழ் சினிமாவில் காலத்துக்கேறப பல வண்ன ஆடை அணிந்தே வந்திருக்கிறது. கருப்பு வெள்ளையில் புராணப் படங்கள் வந்து கொண்டிருந்தபோது அந்தப் புரத்து ராணிகள் கை இல்லாத ரவிக்கை அணிந்து வந்ததே அதிகபட்ச கவர்ச்சி, மெல்லிய உடை அணிந்து நடித்தாலும் கருப்பு வெள்ளை படத்தில் அந்த வித்தியாசம், தெரியாமல் அவர்கள் கையில்லாத ரவிக்கை அணிந்து நடிப்பதாக நினைத்தே ரசிகன் ஜொள்ளினான்.
 
'மனோகரா' காலத்தில் டி.ஆர். ராஜகுமாரி கண்களிலேயே கவர்ச்சியை அள்ளித் தந்தார். அவர் புருவத்தை நெளித்தி புசும் வசனங்கள் ரசிகனை கிரங்க வைத்தது. ஜெயமாலினி அவரைத் தொடர்ந்து பல நடிகைகள் கருப்பு வெள்ளையில் அணிவகுத்து வந்தனர். ஆங்கிலப் படங்களின் தாக்கம் தமிழ் சினிமாவுக்கு வந்தபோது அதே பாணியில் 'கன்பைட்' காஞ்சனாக்களும் 'ரிவால்வர்' ரீட்டக்களும் வந்தார்கள். சி.ஐ.டி. சகுந்தலா, ஜெயமாலா போன்றவர்கள் இறுக்கமான உடை அணிந்தும், ஆண்களைபோல வீர சாகசங்கள் செய்தும் ரசிகர்களை குதுகாலப்படுத்தினார்கள்.
 
கருப்பு வெள்ளையிலிருந்து வண்னத்துக்கு சினிமா இடம் பெயர்ந்தபோது கவர்ச்சிக்கென்று தனி நடிகைகள் உருவானார்கள். இவர்கள் கவர்ச்சி நடிகையாகவே சினிமாவுக்கு வந்தவர்கள் அல்ல. நாயகியாக வந்து அதை தொடர முடியாமல் கவர்ச்சி நடிகைகளாகவும், கவர்ச்சி ஆட்டக்காரிகளாகவும் மாறினார்கள். ஜெயமாலினி, ஜோதிலட்சுமி, விஜயலட்சுமி, ஹெலன், மாயா என்ற ஒரு பட்டாளமே படையெடுத்தது.
 
இவர்கள் காலத்தில்தான் கிளப் டான்ஸ் எனப்படும் கவர்ச்சி ஆட்டங்கள் வந்தது. “மச்சான் அந்தப் படத்துல "மூணு கிளப் டான்ஸ் இருக்குடா" என்று ரசிக மகாஜனங்கள் படத்துக்கு கிளம்பிய காலம் அது. மாயா ஜால படங்கள் போர்வையில் இவர்கள் நடித்தது எல்லாமே படு கவர்ச்சி படங்கள்தான். 
 
 
cid%20sagunthala%20cut%20out.jpg
சீ.ஐ.டி. சகுந்தலா
 
கவர்ச்சியின் பொற்காலம்
 
இவர்களுக்கு அடுத்த கால கட்டம்தான் கவர்ச்சியின் பொற்காலம். நாற்பதை தாண்டியவர்கள் கவர்ச்சி ஆட்டம் போட்டு பயமுறுத்திக் கொண்டிருந்தபோது ஸ்மிதா வந்தார். ஆந்திராவின் நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்த ஸ்மிதா வண்டிசக்கரத்தில் "வா மச்சான் வா வண்ணாரபேட்டை சிலுக்கோட கையால வாங்கிக்குடி சிவ்வுனு ஏறிடும் தாங்கிப்புடி" என்று ஆட்டம்போட்டு ஒட்டு மொத்த இளைஞர் பட்டாளத்தையும் ஒரே பாட்டில் வலைத்துப்போட்டு, ‘சில்க்’ ஸ்மிதா ஆனார். 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக மாறினாலும் அடுத்து அவர் தேர்ந்தேடுத்தது கவர்ச்சி ஆட்டத்தைதான். அவரது காமம் பொங்கி வழியும் கனிகளும் அண்ட மாமுனிவரையும் அசைத்துப்போடும் அவர் உடல் கட்டும் ஒட்டு மொத்த இளைஞர் கூட்டத்தையும் 'சில்க்…. சில்க்…' என்று புலம்ப வைத்தது. மாஜி கவர்ச்சி நடிகைகள் வி.ஆர்.எஸ். வாங்கிக் கொண்டு விடைபெற்றார்கள்.
 
சில்க் புயல் ஓங்கி அடித்ததில் உச்சத்துக்கு போனவர் நாயகியாக நடிக்க தொடங்கினார். ’சில்க் சில்க் சில்க்’ என்று அவர் பெயரிலேயே படம் எடுத்தார்கள். சில்க் ஹீரோயினானதும் அவர் இடத்தை பிடிக்க வந்தார் அதுவரை ஹீரோயினாகவும் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாகவும் இருந்த அனுராதா. அவரது ஆட்டத்துக்கு தியேட்டரே ஆடியது. தனக்கு போட்டியாக இன்னொருவர் வந்து விட்டார் என்பதை உண்ர்ந்த சில்க், நாயகி வேடத்தை தூக்கி போட்டி விட்டு மீண்டும் களத்தில் குதித்தார். அப்புறம் நடந்தது எல்லாமே கவர்ச்சி தீபாவளிதான்.
 
சில்க் ஸ்மிதா 'பொன்மேனி உருகுதே'…., 'நேத்து ராத்திரி எம்மா….' என சில்க் கொடுத்த கவர்ச்சிக்கு முன்னால் ஒரு கட்டத்தில் அனுராதாவால் தாக்கு பிடிக்க முடியவில்லை. ஆனாலும் இந்த இருவரின் ஆட்டத்துக்கு நடுவில் 80களின் ரசிகர்கள் திக்குமுக்காடிக் கிடந்தார்கள்.
 
கமல் ரசிகர், ரஜினி ரசிகர் என்று பிரிந்த மாதிரி அனுராதா ரசிகன், சில்க் ரசிகன் என்றும் பிரிந்து கிடந்தார்கள். சில்க்கின் ஆட்டத்தைப் போலவே அவரது சொந்த வாழ்க்கையும் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமாய் இருந்ததால் அவர் எப்போதும் லைம் லைட்டிலேயே இருந்தார்.
 
ஒரு நாள் அதிகாலை பொழுது அவர் தன் ஆட்டத்தை தானே முடித்துக் கொண்ட போது ஒட்டு மொத்த தமிழகமும் ரகசியமாய் அழுதது. கவர்ச்சி பொற்காலமும் முடிவுக்கு வந்தது. சில்குக்குப் போட்டியாக களம் இறங்கிய டிஸ்கோ சாந்தி, பபிதா ஆகியோரும் பேக் டு பெவிலியன் ஆனார்கள். சில்க்கிற்கு பிறகு கவர்ச்சி களம் கொஞ்சம் காலியாகத்தான் இருந்தது. ஒரு சிலர் வந்தார்கள் வந்த வேகத்தில் காணாமற் போனார்கள். அதன் பிறகு அனுராதாவின் மகள் அபிநயஸ்ரீயும், பபிதாவின் மகள் லக்க்ஷா உள்ளிட்ட சிலர் கவர்ச்சி களத்திற்கு வந்தார்கள். அவர்களால் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 'வசூல்ராஜா' எம்.பி.பி.எஸ்’ படத்தில் சிரிச்சு சிரிச்சு சீனாதாவோடு வந்த ரகசியாவின் பெல்லி நடனத்துக்கு ரசிகர்கள் அடிமையனார்கள்.
 
'வயத்துல இம்புட்டு விஷயம் இருக்கானு' ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். அவருக்கு போட்டியாக வந்தார் முமைத்கான். 'என் பேரு மீனாகுமாரி'ன்னு இவர் பஸ்ஸில் போட்ட ஆட்டம் பலரின் பல்லை எகிற வைத்தது. இவர்கள் இருவருமே ஆடிக் களைத்து ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் ஆட்டத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தார்கள். அதன் பிறகு மும்பையிலிருந்து வெள்ளை நிறத்தில் ஒல்லிப்பிச்சானாய் வந்து யார் யாரோ ஆடிவிட்டு போனார்கள். யார் முகமும் மனதில் பதியவில்லை. பெருந்தொகை கொடுத்து மல்லிகா ஷெராவத் மாதிரியான பாலிவூட் ஹாட் நடிகைகளை இறக்கி ஆட்டம் போட வைத்தார்கள். பெரும்பாலான படத்தில் ஹீரோயின்களே கவர்ச்சி ஆட்டம் ஆடி விடுகிறார்கள்.
 
டாப் ஹீரோயின்களாக இருப்பவர்களே பெருந்தொகைக்கு ஆசைப்பட்டு ஒரு பாட்டுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டு கல்லா கட்டுகிறார்கள். இதனால் கவர்ச்சி நடிகைகள் என்ற தனி ரகம் இப்போது இல்லை. இப்படியாக கவர்ச்சி பல காலகட்டங்களை தாண்டி இப்போது அது தனி வட்டமாக இல்லாமல் எங்கும் நீக்கமற கிடக்கிறது. கவர்ச்சி என்ற வார்த்தையை மனதில் வைத்துக் கொண்டு திரும்பிப் பார்த்தால் விஸ்வரூபமாய் நிற்பது சில்க் ஸ்மிதா மட்டும்தான். அவரது வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட இந்திப் படம் வசூலைக் குவித்ததோடு விருதுகளையும் குவித்தது. யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் போன் என்பது இதுதானோ? -
 
Silk%20Smitha%20Actress%20Hot%20Sexy%20S
 
silk%20smitha.jpg
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவர்ச்சி  என்றால் ஞாபகம் வருபவர்  சிலுக்கு....

அவரைக்கடைசியாகக்காணும் வரை தேடவேண்டியிருந்தது.. :D

ஆனால் இது வரை இவர்கள் எவரினதும் ரசிகனாக  இருந்ததில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவர்ச்சி  என்றால் ஞாபகம் வருபவர்  சிலுக்கு....

அவரைக்கடைசியாகக்காணும் வரை தேடவேண்டியிருந்தது.. :D

ஆனால் இது வரை இவர்கள் எவரினதும் ரசிகனாக  இருந்ததில்லை.

 

https://www.youtube.com/watch?v=psfxD9s6MpI

 

நான்.... இந்தப் படம், பார்த்ததிலிருந்து சிலிக்கின், பரம ரசிகன்.

ஆஹா.... என்ன, நவரசம் சொட்டும்  நடிப்பு. :wub:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வெள்ளிக்கிழமை  பரிசு.. :icon_mrgreen:  :icon_mrgreen:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.