Jump to content

சீன எல்லையில் ஆகாஷ் ஏவுகணைகளை நிறுத்துகிறது இந்தியா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
aksha-missile-150-news.jpg

சீன-இந்திய எல்லை வட கிழக்கு பகுதியில் சீன ஜெட் விமானங்கள் , ஹெலிகாப்டர்கள் ஆளில்லா விமானங்களுக்கு எதிராக இந்தியா 6 ஆகாஷ் ஏவுகணைகளை அங்கு நிறுவ தொடங்கி உள்ளது இந்திய விமானப்படை அங்குள்ள படைப்பிரிவுகளுக்கு 6 ஆகாஷ் ஏவுகணைகளை வழங்கி உள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவித்து உள்ளன.இது எல்லா காலநிலைகளிலும் செயல்பட கூடிய 25 கிலோமீட்டர் தூரத்தில் எதிரி நாட்டு விமானத்தை வானத்திலேயே தாக்கி அழிக்க கூடிய திறன் கொண்டதாகும்.

  

ஆகாஷ் ஏவுகணையின் சோதனைப் பயிற்சிகள் 1990 இல் தொடங்கி, முழு பணிகள் 1997 இல் முடிந்தன. புனேவில் உள்ள குவாலியர் சுகோய் மிரஜ் -2000 தளத்தில் 2 ஆகாஷ் ஏவுகணைகளை இந்திய விமானப்படை நிறுவி உள்ளது. வடக்கு எல்லைகளில் அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாதுகாப்புக்கு 6 ஏவுகணைகளுக்கு மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. என் தகவல்கள் தெரிவிக்கின்றன.நீண்ட தாமதமாக இருந்தாலும் இறுதியில் ஆகாஷ் ஏவுகணை நிறுவுவதில் வெற்றிகிடைத்து உள்ளது. இதை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், பாரத் டைனமிக்ஸ் பாதுகாப்பு உற்பத்தி, பொதுத்துறை நிறுவனம் ஆகியவை நிறுவி உள்ளன.

வடகிழக்கில் ஆகாஷ் நிறுவப்பட்டதன் காரணமாக எல்லை கட்டுப்பாடு கோட்டில் இருந்து 4057 கிலோமீட்டர் சீனாவின் அச்சுறுத்தலுக்கு எதிராக அர்த்த முள்ள மற்றும் நம்பகமான தடுப்பு அமைந்து உள்ளது.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=115427&category=IndianNews&language=tamil

Link to comment
Share on other sites

ஆறையும் ஏவி முடிந்ததும் இந்தப்பக்கம் ஓடி வந்துவிடவேணும்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறையும் ஏவி முடிந்ததும் இந்தப்பக்கம் ஓடி வந்துவிடவேணும்.. :D

எந்தப்பக்கம்?

 

சிங்களத்துப் பக்கம் எண்டால், சீனாக்காரன்ர ஏவுகணை துரத்தும்!

 

பாகிஸ்தான் பக்கமெண்டால் ....அங்கையும் சீனாக்காரன்ர ஏவுகணை....!

 

இமயமலைப் பக்கம் போனால், வாழைப்பழம் வாய்க்குள்ள வழுக்கி விழுகிற மாதிரி! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா.... இந்தியாவுக்கு, இப்பவாவது  தன்மானம் வந்ததே.....
மோடி வாழ்க. மோடி ஜிந்தாபாத்.

 

இந்தியாவுக்கு... வேறு அலுவல்கள் இல்லாததால்.....
இவ்வளவு நாளும், ஈழத் தமிழர் பிரச்சினையில்... குழப்பியடித்துக் கொண்டிருந்தவர்கள்.

இனி அதுக்கு... நேரம் இருக்காது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாக்காரன் டம்மி எண்டு நினைக்கப்போறான்.எதுக்கும் ஒருக்கா சுட்டு காட்டுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாக்காரன் டம்மி எண்டு நினைக்கப்போறான்.எதுக்கும் ஒருக்கா சுட்டு காட்டுங்கோ

 

இவர்கள் ஆறு ஏவுகணையை நிறுத்தி, விளையாட்டுக் காட்ட.....

சீனாக்காரன்.... 6000´தை போட்டிட்டு, கம்மென்று போடுவான். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இவையள் ஆரோடை விளையாடினாலும் பாக்கிஸ்தானோடை விளையாடேலாது....ஏனெண்டால் பாக்கிஸ்தானிட்டை இருக்கிறது அவ்வளவும் ஒரிஜினல் சாமான்கள்.
 
எல்லாம் made in usa  :D
 
Link to comment
Share on other sites

ஆஹா.... இந்தியாவுக்கு, இப்பவாவது  தன்மானம் வந்ததே.....

மோடி வாழ்க. மோடி ஜிந்தாபாத்.

 

இந்தியாவுக்கு... வேறு அலுவல்கள் இல்லாததால்.....

இவ்வளவு நாளும், ஈழத் தமிழர் பிரச்சினையில்... குழப்பியடித்துக் கொண்டிருந்தவர்கள்.

இனி அதுக்கு... நேரம் இருக்காது. :)

அங்கதான் நீங்க தப்பு பண்ணுரிங்க சிறி, அவிங்களை பத்தி உங்களுக்கு தெரியாது எங்ககட பிரச்னையை குழப்பவெண்டே ஒரு குழு அலையுது... அதுக்கு சுப்புதான் இப்போதைக்கு தலிவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறையும் ஏவி முடிந்ததும் இந்தப்பக்கம் ஓடி வந்துவிடவேணும்.. :D

இசை,உங்கள் comment ஐஅ பார்த்து சிரித்து சிரித்து வயிறு நோகிறது....

This is very best comment I ever see.... Weldone...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறையும் ஏவி முடிந்ததும் இந்தப்பக்கம் ஓடி வந்துவிடவேணும்.. :D

 

இப்படி எல்லாம் நக்கல் அடிக்கப்படாது. சுப்பிரமணியம் சுவாமி.. வாயாலேயே.. ஆறை.. 12 ஆக்கி.. 12.. 24 ஆக்கி.. அடிச்சுக்கிட்டு இருப்பார். என்ன நினைச்சீங்க.. ஹிந்தியாவைப் பற்றி. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை பார்த்த பின்னுமா இந்தியா மீது சந்தேகம்?

 

https://www.youtube.com/watch?v=WJJxy8PV4FU

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிறுத்தினது ஒரு ஆறு நாளுக்கு விழாமல் நின்றாலே போதும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை பார்த்த பின்னுமா இந்தியா மீது சந்தேகம்?

https://www.youtube.com/watch?v=WJJxy8PV4FU

இந்த youtube.. மட்டும் உண்மையென்றால், இந்தியா தன்னுடைய வல்லரசு கனவை கைவிடுவது மேல்.... ஆனால் இந்தியா மட்டும் மங்கலயான் விண்கலத்தை செவ்வாய் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக விட்டால் அவர்களை பிடிக்கமுடியாது. இப்போதே அவர்களின் கர்வம் தலைக்கு மேலே விட்டது..தங்கள் செலவு அமெரிக்காவின் maven mission ஐ விட 10மடங்கு குறைவால்..அதுமட்டுமல்லாமல் if India insert the satellite into the mars orbit successfully, இந்தியா தான் முதல்தடவையிலே வெற்றிகரமாக mission ஐ பூர்த்தி செய்த நாடஆகும். Insertion in mid September 2014

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த youtube.. மட்டும் உண்மையென்றால், இந்தியா தன்னுடைய வல்லரசு கனவை கைவிடுவது மேல்.... ஆனால் இந்தியா மட்டும் மங்கலயான் விண்கலத்தை செவ்வாய் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக விட்டால் அவர்களை பிடிக்கமுடியாது. இப்போதே அவர்களின் கர்வம் தலைக்கு மேலே விட்டது..தங்கள் செலவு அமெரிக்காவின் maven mission ஐ விட 10மடங்கு குறைவால்..அதுமட்டுமல்லாமல் if India insert the satellite into the mars orbit successfully, இந்தியா தான் முதல்தடவையிலே வெற்றிகரமாக mission ஐ பூர்த்தி செய்த நாடஆகும். Insertion in mid September 2014

 

இதில் உள்ளது இந்தியப் படைகள் அல்ல. ஒரிஜினல் காணொளியில் தாய்லாந்து இராணுவம் என்றே இருக்க கண்ட ஞாபகம். மீள் ஏற்றுகைகளின் போது.. பார்வையாளர்கள் தங்கள் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப தலைப்பிடுகிறார்கள். அந்த வகையில்.. இந்திய இராணுவத்தின் மீது நம்பிக்கை இழந்தவர்களாக மக்கள் பலர் இருக்கிறார்கள் என்பதற்கு.. இந்தக் காணொளித் தலைப்பும் காணொளியும் சாட்சி. :icon_idea::)

Link to comment
Share on other sites

இசை,உங்கள் comment ஐஅ பார்த்து சிரித்து சிரித்து வயிறு நோகிறது....

This is very best comment I ever see.... Weldone...

நன்றி.. :D என்ன செய்யிறது.. இவங்களை நினைச்சால் அதுவா வருது.. :o:lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.