Jump to content

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகள் காலம் தாழ்த்தப்பட்டுகிறது சர்வதேச மன்னிப்புச் சபை:-


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகள் காலம் தாழ்த்தப்பட்டுகிறது சர்வதேச மன்னிப்புச் சபை:-
22 ஆகஸ்ட் 2014

 

amnesty_CI.jpg

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகள் காலம் தாழ்த்தப்பட்டு வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்படும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைளுக்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நடத்தப்படும் விசாரணைகளுக்கும் இலங்கையில் நடத்தப்பட்டு வரும் உள்நாட்டு விசாரணைகளுக்கும் இடையில் தொடர்பு ஏற்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இரண்டு தரப்பினரும் ஒத்துழைப்புடன் விசாரணைகளை நடத்தினால் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவித்துள்ளது.

நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே மிகவும் முதன்மையானது என தெரிவித்துள்ளது.

யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தராதரம் பாராது தண்டிக்கப்பட்டால் அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளது.

பாகிஸ்தான் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதேச பிரகடனங்களுக்கு மதிப்பளிக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழு உறுப்பினர்களுக்கு இலங்கை விஜயம் செய்ய அனுமதிக்கப்பட்டால் விசாரணைகள் காத்திரமான முறையில் முன்னெடுக்க வழியமைக்கும் என குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110806/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.