Jump to content

டக்ளஸ் இடையூறு விளைவிப்பதாக வடமாகாண அமைச்சர்கள் குற்றச்சாட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

dug(3).gif
-எம்.றொசாந்த் 

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, தனது அமைச்சுத் தவிர்ந்த ஏனைய விடயங்களிலும் மூக்கை நுழைத்து தங்களுக்கு இடையூறாகவிருப்பதாக வடமாகாண அமைச்சர், உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

வடமாகாண சபையின் மாதாந்தக் கூட்டத்தொடர் (14 ஆவது) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் வியாழக்கிழமை (21) இடம்பெறுகின்றது. இதன்போதே, மேற்படி விடயம் தொடர்பில் உறுப்பினர்கள் பரஸ்பரம் கருத்து கூறினார்கள்.

இது தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் இமானுவல் ஆர்னோல்ட் கூறியதாவது,  

வடமாகாணத்தில் விளையாட்டுத்துறை அமைச்சு ஒன்று இருக்கின்ற போதும், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் விளையாட்டுத்துறை சார்ந்த ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அந்த அமைச்சின் அனுமதி பெறப்படாமல் நடக்கின்றன. 

குறிப்பாக, யாழ்ப்பாணம் பழைய பூங்காவிற்கு அருகில் உள்ளக விளையாட்டரங்கை அமைக்கும் பணியை சிறுகைத்தொழில் அமைச்சர் மேற்கொண்டுள்ளார். இது தொடர்பில் வடமாகாண சபைக்கு எந்தவித அறிவித்தல்களும் அனுப்பப்படவில்லை. அது அவருடைய (டக்ளஸ்) அமைச்சுடன் தொடர்புபட்ட விடயமும் இல்லை என தெரிவித்தார். 

இது தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் கூறியதாவது,  

சிறு கைத்தொழில் அமைச்சர் தனது அமைச்சுத் தவிர்ந்து கல்வி, விளையாட்டு மற்றும் விவசாயம் ஆகிய நடவடிக்கைகளிலும் தலையிடுகின்றார்.

இதனால் அது தொடர்பிலான நடவடிக்கைகளை ஒழுங்குமுறையில் செய்யமுடியாத நிலை காணப்படுகின்றது என்றார். அத்துடன், எமது வடமாகாண சபையின் கீழுள்ள திணைக்களங்களின் அலுவலர்களிடம் இருந்து தகவல்களை கேட்பதாகவும் அவர்களை தகவல் கொடுக்கும்படி அறிவுறுத்துவதாகவும் அறிந்தேன் என கூறினார்.

இது தொடர்பில் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவிக்கையில், 

வடமாகாண சபையின் ஒவ்வொரு அமைச்சின் அலுவலர்களையும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் அழைப்பதாகவும் அலுவலர்கள் அதற்கு ஏற்றாற்போல் செல்கின்ற நடவடிக்கையும் இடம்பெறுகின்றன. 

ஆனால், எனது அமைச்சின் கீழுள்ள அலுவலர்களை நான் அவ்வாறு செல்ல அனுமதிப்பது இல்லை. அமைச்சர் இவ்வாறான அழைப்புக்களை மேற்கொள்வதற்கு ஒரு படிமுறை இருக்கின்றது. அந்தப் படிமுறையைப் பின்பற்றியே அவர் செயற்பட வேண்டும். 

படிமுறையின் பிரகாரமே அலுவலர்களை அழைக்க வேண்டிய நடைமுறை இருக்கின்றது. இதனை சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் உணர வேண்டும்.  இல்லாதுவிடின், நிர்வாக ரீதியில் அமைச்சருடன் மோதுகின்ற நிலைமை ஏற்படும் என ஐங்கரநேசன் குறிப்பிட்டார்.  

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.