Jump to content

இலங்கையில் வெளியார் தலையிட இந்தியா அனுமதிக்காது! - என்கிறார் சுப்பிரமணிய சுவாமி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
இலங்கையில் வெளியார் தலையிட இந்தியா அனுமதிக்காது! - என்கிறார் சுப்பிரமணிய சுவாமி. 
[Thursday 2014-08-21 09:00]
SUBRAMANIAN-SWAMY-150.jpg

இலங்கையின் உள்ளூர் விடயங்கள் தொடர்பாக தலையீடுகளை மேற்கொள்ளவோ, இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு சர்வதேச விசாரணைக்கோ இந்தியா ஒரு போதும் ஒத்துழைக்காது என்று இந்திய பாரதீய ஜனதாக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்தார். இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்திருந்த நான்காவது பாதுகாப்பு கருத்தரங்கின் இறுதி நாளான நேற்று பிரதான உரை நிகழ்த்திய சுப்பிரமணியம் சுவாமி மேலும் உரையாற்றுகையில்,

  

இந்தியாவை பொறுத்த மட்டில் தேசிய மட்டத்திலான நலனை கருத்திற் கொண்டே தனது வெளிநாட்டு மற்றும் தேசிய கொள்கையை வகுக்குமே தவிர பிராந்திய அல்லது ஒரு தரப்பினரின் தேவையை கருத்திற் கொண்டல்ல என்று தெரிவித்த அவர், இலங்கையும் இதனை அடிப்படையாகக் கொண்டு செயற்பட வேண்டும். தமிழ் நாட்டிலுள்ள சிலரது அழுத்தங்கள் காரணமாகவே இலங்கையுடனான இந்தியாவின் நிலைப்பாட்டில் சில மாற்றங்கள் அப்போது காணப்பட்டன என்றாலும் எப்போதும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்திய மக்கள் புலிகளுக்கு ஆதரவு வழங்கவும் இல்லை. ஒத்துழைக்கவும் இல்லை. இதனை இந்தியாவில் நடைபெற்ற சகல தேர்தல்களின் போதும் மக்கள் நிரூபித்து காண்பித்துள்ளனர்.

தற்பொழுது இந்தியாவில் பலமான அரசாங்கம் பதவியேற்றுள்ளது. எனவே எந்த அழுத்தங்களுக்கும் அடிபணிய தேவையில்லை. ஏனெனில் இலங்கை - இந்திய உறவு மிகவும் பழைமையானது. நரேந்திர மோடியின் தலைமையிலான புதிய அரசாங்கம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தவே எதிர்பார்க்கிறது. எனவேதான் தனது பதவியேற்பு நிகழ்வுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு கொடுத்தார். இதன் மூலம் புதிய உறவின் ஆரம்பத்தை தற்பொழுது காணமுடிகிறது.

சிலருக்கு புரிந்துணர்வு இல்லாமையினாலேயே இலங்கை - இந்திய நிலைப்பாட்டில் மாற்றங்கள் காணப்பட்டன. இந்திய மக்கள் சகல சந்தர்ப்பங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்த்துள்ளனர். தமிழ் நாட்டிலுள்ள ஒரு சிறிய குழுவினர் மாத்திரமே பயங்கரவாதத்திற்கு ஒத்துழைக்கின்றனர். அது ஒரு பாரிய விடயமல்ல. எனவே தான் புலிகளுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவே ஆதரவழித்த சகலரையும் மக்கள் தோற்கடித்துள்ளனர். புலிகள் சிங்கள தலைவர்களைவிட அதிகமாக தமிழ் தலைவர்களையே கொலை செய்துள்ளனர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்த நாள் இன்றாகும். இன்றைய தினம் எனது கருத்துக்களை பரிமாறிக் கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு நான் சந்தோசமடைகின்றேன். அவர் எனது நண்பராவார். புலிகளுக்கு இந்தியாவில் பயிற்சியளிக்க தனது தாயான இந்திரா காந்தி ஆரம்பத்தில் மேற்கொண்ட தீர்மானம் வரலாற்று தவறாகும் என பல தடவைகள் கூறியுள்ளார்.

இலங்கையில் நடைபெற்றது இன அழிப்பு என்று ஐ.நா. ஒரு போதும் கூறவில்லை. மாறாக பிரித்தானிவிலுள்ள புலிகள் சார்பு அரச சார்பற்ற நிறுவனங்களே இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளது என்றும் இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறிவருகின்றனர். இதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் சரியோ பிழையோ இந்த சம்பவத்தில் அதிகமான சிங்களவர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே இதனை இன அழிப்பு என கூற முடியாது. தமிழ் மக்களின் உளவியலை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஏனெனில் மோடியின் பதவியேற்பு நிகழ்வுக்கு தன்னுடன் வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வட மாகாண முதலமைச்சரை அழைத்த போது அதனை மறுத்த அவர் அவ்வாறு வருவது தான் தமிழ் சமூகத்திற்கு செய்கின்ற அநீதி என்று கூறியிருந்தார். மற்றும் சிலர் இராணுவத்திற்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறிவருகின்றனர். இந்நிலையில் அதே இராணுவத்தின் முன்னாள் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஜனாதிபதி அபேட்சகராக தேர்ந்தெடுத்து அவருக்கு வாக்களித்தனர்.

அதிகாரம் தொடர்பில் பேசுகின்றனர். வடபகுதி மக்களுக்கு தேவையான சகல அதிகாரங்களையும் தான் வழங்கியுள்ளதாக இதற்கு முன்னர் மேற்கொண்ட பல விஜயங்களின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னிடம் தெளிவுபடுத்தினார். குறித்த மாகாணத்தில் தேர்தலை நடத்தினால் நாம் தோல்வி அடைவோம் என்று தெரிந்தும் அதிகாரத்தை பகிர வேண்டும் என்பதற்காக வடமாகாண தேர்தலை ஜனாதிபதி நடத்தி முடித்துள்ளார். அந்த தேர்தலின் மூலம் முதலமைச்சர் ஒருவரும் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார். உலகில் எந்த ஒரு தலைவரும் செய்யாத வேலை இது வென்றும் அவர் தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=115354&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

932514616cartoon21082014.jpg

Link to comment
Share on other sites

 இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்த நாள் இன்றாகும். இன்றைய தினம் எனது கருத்துக்களை பரிமாறிக் கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு நான் சந்தோசமடைகின்றேன். அவர் எனது நண்பராவார்

 

 

 

 
Crucial evidence linking Chandraswami to the Rajiv case went missing from Rao's PMO. Outlookinvestigates.
 
 
 

 

 

  • File containing intercepted messages from foreign intelligence agencies, said to be addressed to Chandraswami and Janata Party president Subramanian Swamy, destroyed by senior officials in the PMO.

  •  

     

     

    The crucial third category, say sources, contained wireless intercepts of messages from foreign intelligence agencies to Chandraswami and Subramanian Swamy. These were passed on by RAW to the Cabinet Secretariat. A RAW official confirmed to the Jain Commission that the transcripts had indeed been passed on by the intelligence agency.

    What did some of these missing files have? Intelligence sources say one file contained intercepted messages as well as details of the movements of Subramanian Swamy and Chandraswami on assassination day.

     

     

    Interestingly, in a statement before the commission, R. Velusami, the then president of the Tamil Nadu unit of the Janata Party, contended that Subramanian Swamy had checked into the Trident Hotel in Madras while Chandraswami was lodged at the Sindoori Hotel owned by Apollo Hospitals on May 21, the day Rajiv was assassinated. Both left for Bangalore by car through Sriperumbudur before reaching Delhi on a special flight.

     

     

     

    http://www.outlookindia.com/article/The-Deadly-Duo/204614

     

     

     

     

     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில்.... தனித்து நின்று போட்டியிட்டோ, கூட்டாகவோ.....
வெற்றி பெற பலம் அற்ற  ஒருவர், இந்தியா சார்பாக.... அறிக்கை விடுவது தான் வேடிக்கை.
இவரின் வெளிநாடு சம்பந்தமான அறிக்கைகளை..... மத்திய அரசும் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பது, இந்தியாவில் மட்டுமே நடக்கும்.

 

 

 

Link to comment
Share on other sites

வைக்கல் பட்டடை நாய் என்கிறார் போல   :D

Link to comment
Share on other sites

அப்படி என்றால் சு.சு இலங்கையை எப்படியும் காக்க என்னவென்றாலும் செய்வேன் என்று சபதம் எடுத்துள்ளார் என தெரிகிறது.. இந்தியா வரும் சம்பந்தர் ஐயாவிடம் இந்தியா= சு.சு =இலங்கை என்பதிலிருந்து இலங்கையை காப்பாற்றவேண்டும் என்று கட்டளை இடுமா? இப்போது அவசரமாக போவது தமிழர் நன்மைக்கே என்ற ஒரு நிழல் தோற்றம் தான்..எப்படி தமிழர்களை ஏமாற்றலாம், சிங்களத்தை காக்கலாம் என்பது தான் இன்றைய அரசியல்.. இன்னும் எத்தனையோ இருக்கு.. இலங்கை டெல்லி அரசியலில் சு.சு, சுவாமா போன்றவர்கள் மூலம் நிரந்தரமாக ஆழமாக கால் ஊன்றிவிட்டது. மோடி வந்தால் என்ன? எந்த கேடி வந்தால் என்ன? சு.சு வின் நரித்தந்திரம் தான் வேலை செய்யப்போகிறது.. இந்த நரிகளை எப்படி அமுக்கலாம் என்பது தான் தமிழர்களின் அறிவிற்கு வேலை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்த நாள் இன்றாகும். இன்றைய தினம் எனது கருத்துக்களை பரிமாறிக் கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு நான் சந்தோசமடைகின்றேன்
இதையும் சிங்களவர்கள் நம்பினார்கள் என்றால்.....இந்தியாவின் செல்வாக்கில் சிறிலங்கா செல்வதை யாரலும் தடுக்க முடியாது

தமிழ் மக்களின் உளவியலை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் மோடியின் பதவியேற்பு நிகழ்வுக்கு தன்னுடன் வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வட மாகாண முதலமைச்சரை அழைத்த போது அதனை மறுத்த அவர் அவ்வாறு வருவது தான் தமிழ் சமூகத்திற்கு செய்கின்ற அநீதி என்று கூறியிருந்தார். மற்றும் சிலர் இராணுவத்திற்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறிவருகின்றனர்
பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள் எங்களுக்குத்தான் அதன் வலி புரியும்.....
Link to comment
Share on other sites

இலங்கையில் வெளியார் தலையிட இந்தியா அனுமதிக்காது! - என்கிறார் சுப்பிரமணிய சுவாமி.

தனது தொழிலுக்கு பாதிப்பு வந்திடும் என்று பயப்புடுராப்ள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையில் வெளியார் தலையிட இந்தியா அனுமதிக்காது! - என்கிறார் சுப்பிரமணிய சுவாமி.

 

 

இத்தனைக்கும் இவர் ஒரு இந்திய உத்தியோகபூர்வ பிரதிநிதியா?  :unsure:

Link to comment
Share on other sites

இத்தனைக்கும் இவர் ஒரு இந்திய உத்தியோகபூர்வ பிரதிநிதியா?  :unsure:

 

எங்களுக்கு சார்பாக மூத்திர சந்திலிருந்து ஒரு முன்னுசாமி சொல்வதை உலகமே சொல்வது போல நாங்கள் build-up செய்வதில்லையா...அது மாதிரி சிங்களவனும் இந்த ஆளை தூக்கிபிடிக்கலாம்..

 

சூ.சாமி ஒரு மாமாப்பயல்...ஆகவே இலங்கையிலிருந்து regular payment வருவதற்காக எதுவும் செய்யலாம்......

 

வெளிநாடுகளில் பார்த்திருப்பீர்கள் பெரிய பதவிகளில் இருந்து ஒய்வு பெற்றவர்கள் ஒரு "consulting" ஆபீஸ் / "research" சென்ட்டர் நடத்துவது போல் இந்த ஆளும் செய்யலாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு சார்பாக மூத்திர சந்திலிருந்து ஒரு முன்னுசாமி சொல்வதை உலகமே சொல்வது போல நாங்கள் build-up செய்வதில்லையா...அது மாதிரி சிங்களவனும் இந்த ஆளை தூக்கிபிடிக்கலாம்..

 

சூ.சாமி ஒரு மாமாப்பயல்...ஆகவே இலங்கையிலிருந்து regular payment வருவதற்காக எதுவும் செய்யலாம்......

 

வெளிநாடுகளில் பார்த்திருப்பீர்கள் பெரிய பதவிகளில் இருந்து ஒய்வு பெற்றவர்கள் ஒரு "consulting" ஆபீஸ் / "research" சென்ட்டர் நடத்துவது போல் இந்த ஆளும் செய்யலாம்...

 

எங்களுக்கு சார்பாக மூத்திர சந்திலிருந்து ஒரு முன்னுசாமி!!!
 
முன்னுசாமியெண்டு இப்ப ஆரை சொல்லவாறியள்?
Link to comment
Share on other sites

 

எங்களுக்கு சார்பாக மூத்திர சந்திலிருந்து ஒரு முன்னுசாமி!!!
 
முன்னுசாமியெண்டு இப்ப ஆரை சொல்லவாறியள்?

 

 

from Hillary Clinton to any insignificant person like "Simon"

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

from Hillary Clinton to any insignificant person like "Simon"

 

 

இந்த குமாரசாமிக்கு இங்கிலிஸ் தெரியாதெண்டு எந்தப்பண்டாரம் உங்களுக்கு சொன்னது? 

Link to comment
Share on other sites

இந்த குமாரசாமிக்கு இங்கிலிஸ் தெரியாதெண்டு எந்தப்பண்டாரம் உங்களுக்கு சொன்னது? 

 

தெரிந்திருக்கும் என்று தானே அப்படி எழுதினான்...

 

நான் மற்றவர்கள் "உறுதிப்படுத்தும் மட்டும்" அவர்களை குறைவாக மதிப்பிடுவதில்லை... :)

எப்போ யாழ் பயணம்..நல்ல பாணும் தேங்காய்சம்பலும் சாப்பிட்டுவிட்டு..சைக்கிளில் கோயில் குளம் என்று சென்று வேண்டுதலை நிறைவேற்றிவிட்டு...இங்கு படங்களை பிரசுரிக்கவும்.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
    • வணக்கம் வாத்தியார் .........! ஆண் : உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு ஆண் : என் சுவாசக் காற்று வரும்பாதை பாா்த்து உயிா்தாங்கி நானிருப்பேன் மலா்கொண்ட பெண்மை வாராமல் போனால் மலைமீது தீக்குளிப்பேன் என் உயிா் போகும் போனாலும் துயாில்லை கண்ணே அதற்காகவா பாடினேன் வரும் எதிா்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன் முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன் ஆண் : காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு பெண் : ஓா் பாா்வை பாா்த்தே உயிா்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பாா்க்கவே என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே பெண் : மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன் மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன் உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன் .......! --- உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு ---
    • ஏன் பழனிச்சாமி வாக்குகளைப் பிரிக்கிறார் என்றும் சொல்லலாம்தானே. இந்த முறை நிரந்த சின்னம் கிடைக்குமளவுக்கு வாக்கு சதவீதம் இருக்கும். யாழ்கள திமுக ஆதரவாளர்களுக்கு இது எரிச்சலாக இருக்கும். எதற்கும்  பான் ஓன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
    • உன்மேலே கொண்ட ஆசை .......!  😍
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் புல‌வ‌ர் அண்ணா🙏🥰.................................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.