Jump to content

ஆட்கடத்தல் தளமாக தென்னிந்தியா மாறுவதற்கு அனுமதிக்க கூடாது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

3c546ab95d88a777f4fefd5605c7f25a.jpg

 புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் ஆட்கடத்தல் காரர்களுக்கான தளமாக தென்னிந்தியா  மாறுவதற்கு அனுமதிக்க கூடாது என இந்தியாவிற்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பட்ரிக் சக்ளிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 
வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்தும் நடவடிக்கை தென்னிந்தியாவில் ஆழமாக வேருன்றினால் அது பயங்கரவாதம் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச்செயல்களுக்கு வழிவகுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
நீண்ட காலமாக இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்கள் அவுஸ்திரேலியாவிற்கு சட்ட விரோதமாக நுழையும் பட்சத்தில் அவர்களை மீண்டும் தனது நாட்டிற்கு திருப்பி அனுப்புவதை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.   
 
ஒரு சில புகலிடக் கோரிக்கையாளர் படகுகளே அவுஸ்திரேலியாவிலிருந்து வருவதாக இந்தியாவிற்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பெட்ரிக் சக்லீங் தெரிவித்துள்ளார்.
 
எனவே சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுக்கான மாற்று இடமாக இலங்கையை கருத முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
கடந்த ஆறு மாத காலப்பகுதியில் ஒரு படகு கூட இந்தோனேசியாவிலிருந்து அவுஸ்திரேலியாவை சென்றடையவில்லை எனவும் மிகவும் சொற்பளவான படகுகள் இலங்கையிலிருந்து சென்றடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்காவிட்டால் வேறு வழியிலான பிரச்சினைகள் தவறுகள் இடம்பெறக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

 

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=793323282601105704

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.