Jump to content

அனைத்து அமைச்சகங்களிலும் உளவாளிகளை வைத்திருந்தார் சோனியா காந்தி: நட்வர் சிங்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அனைத்து அமைச்சகங்களிலும் தனக்கான உளவாளிகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வைத்திருந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங், தனது சுயசரிதை புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

இந்திரா, ராஜீவ் காந்தி குடும்பத்தினருக்கு ஒரு நேரத்தில் மிகவும் நெருக்கமாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங், தனது அரசியல் அனுபவங்களை தொகுத்து ‘ஒன் லைப் இஸ் நாட் எனஃப்' ( One life is not enough - ஒரு வாழ்க்கை போதுமானதல்ல) என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். இதில் அவர் பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்களை சேர்த்துள்ளார்.

அவ்வாறு இடம்பெற்றுள்ள பல்வேறு தகவல்களை கடந்த இரு தினங்களாக ஆங்கில செய்தி சேனல்களுக்கு பேட்டியாகவும் அளித்து வருகிறார் நட்வர் சிங். அதில் ஒன்றாக
சோனியா காந்தி 2004 ஆம் ஆண்டு பிரதமர் பதவியை ஏற்காததின் ரகசியம் என்ன என்பதை அம்பலப்படுத்தினார்.

அப்போது அவர், “தனது உள்மனம் கூறுவதால் பிரதமர் பதவியை ஏற்கப்போவதில்லை என சோனியா காந்தி அறிவித்தார். ஆனால் அதில் உண்மையில்லை. எங்கே தனது  தந்தை ராஜீவ் காந்தியைப் போன்று தாயாரும் கொல்லப்பட்டு விடுவாரோ என்ற பயத்தில் ராகுல் காந்தி தடுத்ததின் பேரில்தான் சோனியா காந்தி பிரதமர் பதவி ஏற்கவில்லை” என தெரிவித்திருந்தார். மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, அரசாங்க கோப்புகள் சோனியா காந்தியின் பார்வைக்கு சென்றதாகவும் அவர் கூறியிருந்தார்.

இதனையடுத்து இரண்டாவது நாளாக நேற்று அளித்த பேட்டியில், இலங்கை தமிழர் பிரச்னையை natwar%20sing%20height.jpgமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சரியாக கையாளவில்லை என்றும், மத்திய அமைச்சரவைக்கு கூட தெரிவிக்காமலும், யாருடனும் கலந்தாலோசிக்காமலும் தன்னிச்சையாக இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி வைக்கும் உத்தரவை பிறப்பித்ததாகவும் நட்வர் சிங் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நட்வர் சிங்கின் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மேலும் சில தகவல்களும் வெளியாகி உள்ளது. அதில், கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்  அனைத்து அமைச்சகங்களிலும் தனது உளவாளிகளை வைத்திருந்ததாகவும் நட்வர் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னாள் பிரதமர்களான நரசிம்ம ராவ் மற்றும் மன்மோகன் சிங் ஆகிய இருவரையுமே சோனியா காந்தி விளிம்பு நிலையிலேயே வைத்திருந்ததாகவும், இருவருமே சோனியாவின் அணுகுமுறை குறித்து தம்மிடம் புலம்பியுள்ளதாகவும், அதிலும் சோனியாவின் அணுகுமுறை காரணமாகவே தனது உடல் நிலை பாதிக்கப்பட்டதாக நரசிம்ம ராவ் தம்மிடம் குறைபட்டுக்கொண்டதாகவும் எழுதியுள்ள நட்வர் சிங், ராகுல் காந்தியை பற்றியும் தலைவருக்கான தகுதி இல்லாதவராக உள்ளார் என்றும் எழுதியுள்ளார்.

" ராகுல் காந்தி நல்லவர்தான்; ஆனால் ஒரு முழு நேர அரசியல்வாதியாக திகழ்வதற்கு தேவையான ஒரு தீ ( fire )
அவரிடம் இல்லை" என்றும் நட்வர் சிங் குறிப்பிட்டுள்ளார்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=30854

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.