Jump to content

"நானும் சுயசரிதை புத்தகம் எழுதுவேன்; அப்போது உண்மை தெரியும்!"- நட்வர் சிங்கிற்கு சோனியா காந்தி பதிலடி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லி: உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், சோனியா காந்தியை பிரதமர் பதவியை ஏற்கவேண்டாம் என தடுத்தவர் அவரது மகன் ராகுல் காந்திதான் என முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் தெரிவித்துள்ள நிலையில், தானும் சுயசரிதை புத்தகம் எழுதப்போவதாகவும், அப்போது உண்மை என்னவென்று அனைவருக்கும் தெரியவரும் என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை பிடித்தபோது, பிரதமர் பதவியை சோனியா ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வெளிநாட்டவர் என்ற அடிப்படையில் பா.ஜனதா தரப்பில் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் பதவியை தாம் ஏற்கப்போவதில்லை என அறிவித்த சோனியா, மன்மோகன் சிங்கை அப்பதவியில் அமர்த்தினார்.

தனது உள்மனது கூறியதாலேயே தாம் பிரதமர் பதவியை ஏற்கவில்லை என சோனியா காந்தி அப்போது கூறியிருந்தார். ஆனால்  ஒரு காலத்தில் இந்திரா - சோனியா குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங், 'ஒரு வாழ்க்கை போதாது: ஒரு சுயசரிதை' ( 'One Life is Not Enough: An Autobiography') என்ற தலைப்பில் என்ற புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

இதில் தனது அரசியல் வாழ்க்கையில் தான் சந்தித்த அனுபவங்கள் மற்றும் சம்பவங்களை தொகுத்து அவர் எழுதியுள்ள அந்த புத்தகத்தில், வெளியில் தெரியாமல் இருந்துவந்த பல்வேறு அரசியல் ரகசியங்கள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி குறித்தும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவல் அறிந்ததாலோ என்னவோ, சோனியா காந்தியும், பிரியங்கா வதேராவும் அண்மையில்natwar.jpg நட்வர் சிங்கை சந்தித்து, இந்த புத்தகத்தை வெளியிட வேண்டாம் என்றும், ஒருவேளை வெளியிட்டாலும், தங்களது குடும்பத்தினர் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டதாக கடந்த வாரம் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் தனது புத்தகம் வெளியாக இருப்பதையொட்டி தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்த நட்வர் சிங்,  2004 ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை பிடித்தபோது, சோனியா காந்தியை பிரதமர் பதவியை ஏற்கவேண்டாம் என தடுத்தவர் அவரது மகன் ராகுல் காந்திதான் எனக் கூறினார். அவரது இந்த கூற்று, தனது உள்மனது கூறியதாலேயே தாம் பிரதமர் பதவியை ஏற்கவில்லை என சோனியா காந்தி தெரிவித்ததற்கு மாறாக உள்ளது.

மேலும் சோனியா காந்தி ஒரு சூப்பர் பிரதமர் போல் செயல்பட்டதாகவும், அவரது இல்லத்திற்கு அரசாங்கத்தின் முக்கிய கோப்புகள் அனுப்பிவைக்கபட்டதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக செயல்பட்ட சஞ்சய் பாரு கூறிய குற்றச்சாட்டு உண்மைதான் என்றும் நட்வர் சிங் அந்த பேட்டியில் கூறியிருந்தார். மேலும் இதுபோன்ற மேலும் பல தகவல்கள் அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே நட்வர் சிங்கின் மேற்கூறிய பேட்டி மற்றும் சுயசரிதை புத்தகம் ஆகியவற்றினால் அவர் மீது கடும் கோபமடைந்துள்ளார் சோனியா காந்தி.

இந்நிலையில் நட்வர் சிங்கின் பேட்டி குறித்து ஆங்கில செய்தி சேனல் ஒன்று, சோனியாவிடம் இன்று கருத்து கேட்டபோது, " நானும் எனது சுயசரிதையை எழுதி புத்தகமாக வெளியிடுவேன். அப்போது உண்மை என்னவென்று அனைவருக்கும் தெரியும்.

இதுபோன்ற தாக்குதல்களால் நான் வேதனையடைந்துவிட மாட்டேன். எனது மாமியார் துப்பாக்கி தோட்டாக்களால் துளைக்கப்பட்டதையும், எனது கணவர் இறந்ததையுமே நான் பார்த்துவிட்டேன். அப்படி இருக்க இதுபோன்ற விஷயங்களால் என்னை காயப்படுத்திவிட முடியாது. அவர்கள் தொடர்ந்து இதுபோன்று செயல்படட்டும். அவை என்னை பாதிக்காது" என்று பதிலளித்தார். 
  

http://news.vikatan.com/article.php?module=news&aid=30803

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உறவே,  இப்படியே  போனால் எம்மை இறுதியில் பச்சடி போட்டுவிடுவார்கள் என்பதை முன்னமே துல்லியமாக கணிப்பிட்டு  உயிரைக் காப்பாற்ற ஓடி வந்த நீங்கள் உட்பட்ட நாம் அனைவரும் அறிவு ஜீவிகள் தான். 😂   
    • @goshan_che மீண்டும் உங்களை கண்டது மகிழ்ச்சி… ஆனால் 2 (?) வார விடுமுறையில் மக்களின் வாக்களிக்கும் தன்மையை தீர்மானிக்க முடியுமா? நீங்கள் குறிப்பிட்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றிற்கு மக்கள் வாக்களிக்க போவதில்லை என்ற முடிவிற்கு எவ்வாறு வந்தீர்கள்? 
    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.     சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ? சீமானை பற்றி வந்த நல்ல செய்தி ஆங்கில மோகத்தால்  தனது மகனுக்கு தமிழ்நாட்டில் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பது 🤣  
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.