Jump to content

பிளாஸ்டிக் கோப்பைகள் புற்றுநோய் உருவாக்கும்: ஆய்வில் தகவல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 
Posted Date : 08:46 (31/07/2014)Last updated : 12:22 (31/07/2014)

Untitled%204(273).jpgநியூ யார்க்: தேநீர், காபி குடிப்பதற்கு பயன்படும் பிளாஸ்டிக் கோப்பைகளின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் 'ஸ்டைரீன்' என்ற வேதி பொருள் மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தக் கூடும் என்று அமெரிக்க அறிவியலாளர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் தேசிய ஆய்வு அமைப்பு ஒன்று வேதியியல், நச்சு வேதி பொருள் கண்டறியும் அறிவியல் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளை சேர்ந்த 10 நிபுணர்களை கொண்டு ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், வேதி பொருளான 'ஸ்டைரீன்' மனிதர்களிடையே புற்றுநோயை உண்டாக்க கூடிய ஆற்றலை கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளது.

ஆய்வின் தலைவர் டாக்டர் ஜேன் ஹென்னே கூறும்போது, இது துன்பம் விளைவிக்கும் ஒன்று என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டியது அவசியமான ஒன்று என தெரிவித்துள்ளார். அவரது கூற்றின்படி, அறிவியல் பூர்வமான தகவலின் அடிப்படையில், 'ஸ்டைரீன்' புற்றுநோயை உண்டாக்குவதற்கான சான்றுகள் உள்ளன. ஆனால், சில மாற்று விளக்கங்களும் இருக்கின்றன.

அவை வாய்ப்பு, ஒரு பக்க சார்பு நிலை மற்றும் சில காரணிகள் ஆகும் என்று ஹென்னே தெரிவித்துள்ளார். எங்களது அறிக்கை இந்த வேதிபொருள் பிரச்னைக்குரிய ஒன்று என தெரிவிக்கிறது. ஆனால், அவற்றின் அளவு, பயன்பாடு, ஆபத்திற்கான பண்புகள் ஆகியவற்றை குறித்து ஆய்வு செய்ய வேண்டியது மிக அவசியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், உணவுகளை பாதுகாப்பாக விற்பதற்காக அடைத்து வைக்கப்படும் நிலையில் பயன்படும் வேதிபொருள்களில் 'ஸ்டைரீன்' உட்பட 170 அபாயகரமான வேதிபொருள்கள் சட்டபூர்வமான பயன்பாட்டில் உள்ளன என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். உணவுகளை டின்கள் அல்லது பெட்டிகளில் வைப்பதற்காக பயன்படும் வேதிபொருள்களில் நச்சு உருவாக்க கூடிய பொருட்களும் காணப்படுகின்றன.

அவை புற்றுநோயை உருவாக்க கூடும் என்றும், மரபணுக்களில் மாற்றத்தை தோற்றுவிக்க கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஹென்னே தலைமையிலான ஆய்வின்படி, பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய 175 வேதிபொருள்களை கண்டறிந்துள்ளனர். அந்த பொருட்கள் ஆணின் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுத்துதல், உறுப்புகள் பாதிப்புடன் உருவாதல் மற்றும் உடலில் ஹார்மோன் உற்பத்தியில் பாதிப்பு ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன என கண்டறிந்துள்ளனர்.

எனினும், உணவு தர கழகமானது, ஐரோப்பிய தரத்தின் கீழ் உணவு பேக்கிங் செய்யப்படுவதால் அதில் இருக்கும் வேதிபொருட்கள் ஒழுங்குகள் மற்றும் விதிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் பயன்படுத்தப்படும்பொழுது அவற்றை குறித்து கருத்தில்கொள்ள வேண்டியதில்லை என்று விளக்கம் தருவதுடன் அவற்றை நுகர்வோர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

அதே சமயம் அமெரிக்க வேதியியல் அமைப்பு, ஸ்டைரீன் வேதிபொருள் குறித்து சாதகமாக கூறுகையில், "உணவு பொருட்கள் உற்பத்தியில் குறிப்பாக, காபி கோப்பைகள், சாலட் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் டின்கள் ஆகியவற்றில் 50 வருடங்களுக்கும் மேலாக பாலிஸ்டைரீன் பிளாஸ்டிக் பயன்பாட்டில் உள்ளது. இந்த வேதிபொருள், ஒழுங்குமுறை அமைப்பால் மறு ஆய்வு செய்யப்பட்டு, உணவு தொடர்பான பயன்பாட்டில் பாதுகாப்பானது"  என்று  தெரிவித்துள்ளது.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=30784

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிளாஸ்டிக் கோப்பைகளின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஸ்டைரீன் என்ற வேதி பொருள் மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்த கூடும் - அமெரிக்க அறிவியலாளர்கள் ஆய்வு தகவல்

தேநீர், காபி ஆகியவற்றை குடிப்பதற்கு பயன்படும் பிளாஸ்டிக் கோப்பைகளின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஸ்டைரீன் என்ற வேதி பொருள் மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்த கூடும் என்று அமெரிக்க அறிவியலாளர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். 

அமெரிக்காவின் தேசிய ஆய்வு அமைப்பு ஒன்று வேதியியல், நச்சு வேதி பொருள் கண்டறியும் அறிவியல் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளை சேர்ந்த 10 நிபுணர்களை கொண்டு ஆய்வு ஒன்று நடத்தியது. அதில், வேதி பொருளான ஸ்டைரீன் மனிதர்களிடையே புற்றுநோயை உண்டாக்க கூடிய ஆற்றலை கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இது துன்பம் விளைவிக்கும் ஒன்று என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டியது அவசியமான ஒன்று என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அறிவியல்பூர்வமான தகவலின் அடிப்படையில், ஸ்டைரீன் புற்றுநோயை உண்டாக்குவதற்கான சான்றுகள் உள்ளன. ஆனால், அவற்றின் அளவு, பயன்பாடு, ஆபத்திற்கான பண்புகள் ஆகியவற்றை குறித்து ஆய்வு செய்ய வேண்டியது மிக அவசியமானது என்றும் அவர்கள் கூறுகின்றனர். 

உணவுகளை பாதுகாப்பாக விற்பதற்காக அடைத்து வைக்கப்படும் நிலையில் பயன்படும் வேதிபொருள்களில் ஸ்டைரீன் உட்பட நூற்றுக்கணக்கான அபாயகரமான வேதிபொருள்கள் சட்டபூர்வமான பயன்பாட்டில் உள்ளன என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவை புற்றுநோயை உருவாக்க கூடும் என்றும், மரபணுக்களில் மாற்றத்தை தோற்றுவிக்க கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு பொருட்கள் உற்பத்தியில் குறிப்பாக, காபி கோப்பைகள், சாலட் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் டின்கள் ஆகியவற்றில் 50 வருடங்களுக்கும் மேலாக பாலிஸ்டைரீன் பிளாஸ்டிக் பயன்பாட்டில் உள்ளது. இந்த வேதிபொருள், ஒழுங்குமுறை அமைப்பால் மறு ஆய்வு செய்யப்பட்டு, உணவு தொடர்பான பயன்பாட்டில் பாதுகாப்பானது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

http://jayanewslive.com/world/world-america-foamcups-contain-cancer-causing-chemicals-styrene-human-carcinogen_24040.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிளா,தட்டுவம்,கல்லை,தாமரை இலை,சிரட்டையின்ரை அருமையள் போகப்போக தெரியும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிளா,தட்டுவம்,கல்லை,தாமரை இலை,சிரட்டையின்ரை அருமையள் போகப்போக தெரியும். :D

லண்டனில் சபைகளில் மறுபடியும் தலைவாழையிலை போட்டு உணவு பரிமாறுவது  லிமோ, ஹலியை விட பெருமைமிக்க விடயமாயிட்டுது. விசயம் தெரியாமல் ரசமும் பாயசத்துக்கும் ஆசைபட்டு புது உடுப்பை அநியாயமாக்கி ஆத்துகாரியிடம் வேண்டி கட்டினதுதான் மிச்சம். :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.