Jump to content

குளுகோஸ் எப்படி சக்தியாக மாறுகிறது ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாம் சாப்பிடும் உணவானது நமது உணவுக் குழாயில் குளுகோஸாக மாறி இரத்தத்தில் கலக்கிறது என்று முந்தைய பதிவுகளில் பார்த்தோம். இந்த குளுகோஸ் இரத்தத்தின் மூலமாக நமது உடம்பின் ஒவ்வொரு திசுக்களுக்கும் சென்று அடைகிறது. (மனித உடலில் சுமார் 10 லட்சம் கோடி திசுக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்).

ஒவ்வொரு திசுவும் ஒரு ரசாயனத் தொழிற்சாலை போல செயல்படுகிறது. இரத்தத்தின் மூலம் இவைகளுக்கு மனிதனின் எரிபொருளான குளுகோஸ் மற்றும் பிராணவாயு சென்று அடைகின்றன. இரத்தத்திற்கு பிராணவாயு நுரையீரலிலிருந்து கிடைக்கிறது என்ற ரகசியம் உங்களுக்கு முன்பே தெரியும்.

நாம் நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் விறகு எரிதலைப் பார்த்திருக்கிறோம். அதிலுள்ள ரசாயன மாற்றத்தைப் பற்றி எத்தனை பேர் சிந்தித்திருப்போம? விறகில் உள்ளது கரிமம் அதாவது கார்பன். அது எரிகின்றபோது ஆகாயத்தில் உள்ள பிராணவாயுவுடன் சேர்ந்து கரியமலவாயுவாக மாறுகிறது.  கூடவே உஷ்ணமும் வெளி வருகிறது. இந்த உஷ்ணத்திற்காகத்தான் நாம் விறகை எரிக்கிறோம்.

ஒரு உண்மையைப் பாருங்கள். விறகு வெட்ட வெளியில் கிடக்கிறது. வெட்ட வெளியில் தேவையான பிராணவாயுவும் இருக்கிறது. ஆனால் விறகு எரிவதில்லையே? ஏன்? விறகு எரிய ஆரம்பிக்க முதலில் ஒரு தூண்டுதல் வேண்டும். ஒரு சிறிய நெருப்பினால் அந்த விறகில் தீ மூட்ட வேண்டும். பிறகு அந்த விறகு தானாக எரியத் துவங்கும்.

நம் உடலிலும் ஏறக்குறைய 24 மணி நேரமும்  இந்த மாதிரி ஒரு எரிதல் நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால் நாம் அதை உணர்வதில்லை. ஏனெனில் இந்த எரிதல் அமைதியாகவும் ஆர்ப்பாட்டமில்லாமலும் நடக்கிறது.

நாம் சாப்பிட்ட உணவு குளுகோஸாக மாறி நம் உடம்பிலுள்ள அனைத்து திசுக்களுக்கும் இரத்த ஓட்டத்தின் மூலமாக எடுத்துச் செல்லப்படுகிறது என்று பார்த்தோம். இந்த குளுகோஸ் திசுக்களை அடைந்ததும் சில என்சைம்கள் இந்தக் குளுகோஸை இரண்டு துண்டாக்குகின்றன. பிறகு இந்த இரண்டு துண்டங்களும் வேறு என்சைம்களினால் தாக்கப்பட்டு பிராணவாயுவுடன் சேர்க்கின்றன. இவ்வாறு சேரும்போது சக்தியும், உஷ்ணமும், கரியமலவாயுவும் உண்டாகின்றன.

விவரமாகத் தெரிந்து கொள்ள இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் படங்களைப் பார்க்கவும். தலை சுற்ற ஆரம்பிக்கும்போது நிறுத்திவிடவும்.




Citric_acid_cycle_with_aconitate_2.svg.p
 
 
krebs.gif
 

இவ்வாறு உண்டாக்கப்பட்ட சக்தி ஒரு வேதியல் மூலகத்தில் இருக்கும். இந்த சக்தி உடலின் எந்தப் பகுதிக்குத் தேவையோ அங்கு இரத்தத்தின் மூலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. சக்தி தேவையில்லாத சமயத்தில், அதாவது தூங்கும்போது பெரும்பாலான திசுக்கள் ஓய்வெடுத்துக்கொள்ளும். தூங்கும்போது தேவைப்படும் குறைந்த அளவு சக்தியே உற்பத்தியாகும்.


இந்த ஒழுங்குகள் எல்லாம் நம்முடைய எண்ணம் இல்லாமல் தானாகவே நடக்கின்றன. இந்த வேலைகள் நின்றுபோனால் நம் உடலை எரியூட்டவேண்டி வரும்.

இப்படி உற்பத்தியாகும் சக்திதான் நாம் வேலை செய்யும்போது பயன்படுத்தப்படுகின்றது.

http://swamysmusings.blogspot.com/2014/07/blog-post_22.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

விவரமாகத் தெரிந்து கொள்ள இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் படங்களைப் பார்க்கவும். தலை சுற்ற ஆரம்பிக்கும்போது நிறுத்திவிடவும்.

Citric_acid_cycle_with_aconitate_2.svg.p
 
 
krebs.gif
 

 

படங்களை பார்த்தவுடன்,  எமக்கு தலையை சுற்ற ஆரம்பிக்கும் என்று, எப்படி சரியாய்.... கண்டு பிடித்தீர்கள்? :rolleyes:

பதிவுக்கு நன்றி பெருமாள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்களை பார்த்தவுடன்,  எமக்கு தலையை சுற்ற ஆரம்பிக்கும் என்று, எப்படி சரியாய்.... கண்டு பிடித்தீர்கள்? :rolleyes:

பதிவுக்கு நன்றி பெருமாள். :)

:D  :D வரவுக்கு நன்றி தமிழ்சிறி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.