Jump to content

இந்திய அரசாங்கம் உத்தியோகபூர்வ அழைப்பு எதனையும் விடுக்கவில்லை – மாவை சேனாதிராஜா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

mavai_CI.jpg

இந்திய அரசாங்கம் உத்தியோகபூர்வ அழைப்பு எதனையும் இதுவரையில் விடுக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்வரும் நாட்களில் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. எனினும், இந்திய மத்திய அரசாங்கம் தமது நாட்டு;க்கு விஜயம் செய்யுமாறு இதுவரையில் உத்தியோகபூர்வ அழைப்பு எதனையும் விடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சம்பந்தன் தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய பிரதிநிதிகள் ஆகஸ்ட் மாத முதல் பகுதியில் இந்தியா விஜயம் செய்வார்கள் என எதிர்வு கூறப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் முதல் தடவையாக தமி;;ழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளனர். தமிழர் பிரச்சினைகள் குறித்து இ;ந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110017/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.