Jump to content

இனியோரு சித்தார்த்தன் பிறாவாதிருக்கட்டும் இப்பூமிப் பந்தினிலே


Recommended Posts

dltd86.png

 

புயல் சுழன்றடித்த பெருந்தீவின்

மாயான அமைதியில்
சலனமில்லா ஊர்களின்
நிசப்தம் தின்று மூச்சடங்கிபோன தெருக்களில்
வீடுறையும் மனிதர்கள் ஒருவரும் இல்லாது
தாழிடப்பட்ட கதவுகளுக்கு பின்னால்
முன்பொரு காலத்தில்
எந்நேரமும் விளையாட்டு சாமான்கள்
விழுந்துடையும் சத்தங்களும்
விண்ணதிரும் வாய்பாடொதும் ஒசையும்
கண்ணுறங்க வைக்கும் தாலாட்டு பாட்டும்
நினைவின் தொகுப்பாய் எஞ்சிய
ஒற்றை நிழற்படம் முன்
சிறுபிள்ளை பிரார்த்தனை

முனுமுனுப்புகளுமிருந்தன
இமைப்பொழுதில் ஒன்றுமில்லாதுபோன
துயரிரவின் பேரமைதியில்
ஊமைநிலத்தில் ஊடுருவிய
புத்தரின் நிலைகுத்திய
காந்த விழிகளுக்கப்பால்

'புயலின் சூன்யத்தை,

கோர பசியை,

தீரா உயிர்வேட்கையை,

மாளா குரூரத்தை,

அழிவின் ஆரோகணத்தை,

ஏதொவொரு பிணத்தை புணர்ந்துவிட்ட
களிப்பின் உச்சாடணத்தை,

பால்சுரக்கும் கொங்கைகளை

உட்புறங் குழிய வைத்த கோரத்தை,

வயிற்றை கிழித்தெடுத்து சிசுவை
தறையொடறைந்து பயங்கரவாதியை
கொன்றுவிட்டோமெனும் புயலின் பிரகடனத்தை'

உங்கள் புலன்களுக்கு
புலப்படவில்லையெனில்
நூற்றாண்டு கால தவத்தின்
சாமாதான புன்னகை
உங்களுக்கே உரித்தானது!
இனி கையில் உள்ள பூக்களை
வைத்துவிட்டு வணங்கி கொள்ளுங்கள்....



~ராஜன் விஷ்வா.

Link to comment
Share on other sites

'புயலின் சூன்யத்தை,

கோர பசியை,

தீரா உயிர்வேட்கையை,

மாளா குரூரத்தை,

அழிவின் ஆரோகணத்தை,

ஏதொவொரு பிணத்தை புணர்ந்துவிட்ட

களிப்பின் உச்சாடணத்தை,

பால்சுரக்கும் கொங்கைகளை உட்புறங் குழிய வைத்த கோரத்தை,

வயிற்றை கிழித்தெடுத்து சிசுவை

தறையொடறைந்து பயங்கரவாதியை

கொன்றுவிட்டோமெனும் புயலின் பிரகடனத்தை '

உங்கள் புலன்களுக்கு

புலப்படவில்லையெனில்

நூற்றாண்டு கால தவத்தின்

சாமாதான புன்னகை

உங்களுக்கே உரித்தானது!

~ராஜன் விஷ்வா.

 

இவற்றில் எவற்றைக் கண்டாலும் போலி சமாதானவாதிகளாககத் தம்மைக் காட்டிக் கொள்ளவேனும் தங்கள் புலனுக்கு இவை புலப்படவில்லை என்றே சொல்லும் கூட்டம் எம்மில் உள்ளது. ஒடுக்கியவனை விட ஒடுக்குமுறைக்கு எதிராக போராடியவனை குற்றம் கண்டு பிடித்து ஒடுக்கியவன் பக்கம் சாயும் கூட்டத்திற்குத்தான் இன்று  சமாதான புன்னகை உரித்தாகின்றது.

 

கவிதைக்கு நன்றி நண்பா.

Link to comment
Share on other sites

கவிதை அழைத்துச்செல்கிறது கரைகளை உடைத்து தொடருங்கள் 

Link to comment
Share on other sites

இவற்றில் எவற்றைக் கண்டாலும் போலி சமாதானவாதிகளாககத் தம்மைக் காட்டிக் கொள்ளவேனும் தங்கள் புலனுக்கு இவை புலப்படவில்லை என்றே சொல்லும் கூட்டம் எம்மில் உள்ளது. ஒடுக்கியவனை விட ஒடுக்குமுறைக்கு எதிராக போராடியவனை குற்றம் கண்டு பிடித்து ஒடுக்கியவன் பக்கம் சாயும் கூட்டத்திற்குத்தான் இன்று சமாதான புன்னகை உரித்தாகின்றது.

கவிதைக்கு நன்றி நண்பா.

தம்பி என்றே கூப்பிடுங்கள். வாழ்த்திற்கு நன்றிகள் அண்ணா.
Link to comment
Share on other sites

கவிதை அழைத்துச்செல்கிறது கரைகளை உடைத்து தொடருங்கள்

மண்ணின் வலிகளே எழுத வரிகள் தருகின்றன. வாசிப்பிற்கும் வரவிற்கும் நன்றிகள் அண்ணா...
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

----

சலனமில்லா ஊர்களின்

நிசப்தம் தின்று மூச்சடங்கிபோன தெருக்களில்

வீடுறையும் மனிதர்கள் ஒருவரும் இல்லாது

தாழிடப்பட்ட கதவுகளுக்கு பின்னால்

முன்பொரு காலத்தில்

எந்நேரமும் விளையாட்டு சாமான்கள்

விழுந்துடையும் சத்தங்களும்

விண்ணதிரும் வாய்பாடொதும் ஒசையும்

கண்ணுறங்க வைக்கும் தாலாட்டு பாட்டும்

நினைவின் தொகுப்பாய்

------

 

~ராஜன் விஷ்வா.

 

வேண்டாம்..... இனியொரு புத்தன், பிறவாதிருக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டாம் இவ்வுலகில் ஞானிகளும் ,மனிதசாமிகளும்......அவர்களை தூக்கிபிடிக்கும் மக்கள்கூட்டமும்....கவிதைக்கு நன்றிகள் ராஜன்விஷ்வா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றிகள் தொடருங்கள்
புத்தர்கள் பிறந்துகொண்டேஇருப்பார்கள்
அவர்களுக்குப் பக்தர்கள் இருக்கும்வரை
 

Link to comment
Share on other sites

ஒற்றை நிழற்படம் முன்
சிறுபிள்ளை பிரார்த்தனை முன்முனுப்புக்களுமிருந்தன
கணப்பொழுதில் ஒன்றுமில்லாதுபோன.

 

வலிகள் தான் வாழ்க்கை என்றாகி போகுது கவிதை தொடருங்கள் .

Link to comment
Share on other sites

வேண்டாம்..... இனியொரு புத்தன், பிறவாதிருக்கட்டும்.

 அதுவே நம் அனைவரின் வேண்டுதலாக உள்ளது... வரவிற்கு நன்றிகள் சிறியண்ணா...

வேண்டாம் இவ்வுலகில் ஞானிகளும் ,மனிதசாமிகளும்......அவர்களை தூக்கிபிடிக்கும் மக்கள்கூட்டமும்....கவிதைக்கு நன்றிகள் ராஜன்விஷ்வா

கருத்திற்கும் வரவிற்கும் நன்றிகள் புத்தன் அண்ணா.... 

கவிதைக்கு நன்றிகள் தொடருங்கள்

புத்தர்கள் பிறந்துகொண்டேஇருப்பார்கள்

அவர்களுக்குப் பக்தர்கள் இருக்கும்வரை

 

தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது காசாவிலும்....   மனித உயிர்கள் மலிவாய் போய்விட்டது... கையாலகாத ஐ.நா சபை செத்த பின்பு பால் ஊற்ற தான் ஆகும் போல...

 

வரவிற்கு நன்றிகள் வாத்தியார் அண்ணை ...

ஒற்றை நிழற்படம் முன்

சிறுபிள்ளை பிரார்த்தனை முன்முனுப்புக்களுமிருந்தன

கணப்பொழுதில் ஒன்றுமில்லாதுபோன.

 

வலிகள் தான் வாழ்க்கை என்றாகி போகுது கவிதை தொடருங்கள் .

எப்போதாவது தான் எழுதுகிறேன்... பொதுவாக எழுதும் ஆற்றல் எனக்கிருப்பதாக தோன்ற வில்லை.. எப்போதாவது மனம் அதிகம் கணக்கும் போதே எதையாவது எழுத வருகிறது....
 
வரவிற்கு நன்றிகள் அஞ்சரன் அண்ணை .. :)
 
எழுத்துப்பிழை சரி செய்து விட்டேன். 
Link to comment
Share on other sites

கவிதைக்கு நன்றி, விஸ்வா.

வாழ்த்தியமைக்கு நன்றிகள் நுணா அண்ணை .. :)

அருமை

கருத்திட்டமைக்கு நன்றிகள் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனமான  வலி  சுமந்த விதைக்கு நன்றி, தம்பி விஸ்வா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல வலிகலின் ஊடே ஒரு பிரசவம்  நிகழ்ந்துள்ளது...!

Link to comment
Share on other sites

கனமான  வலி  சுமந்த விதைக்கு நன்றி, தம்பி விஸ்வா.

நன்றிகள் அண்ணா... 

பல வலிகலின் ஊடே ஒரு பிரசவம்  நிகழ்ந்துள்ளது...!

தாமாதமாகவேனும் நீங்கள் வருவீர்கள் எனன்று நினைத்திருந்தேன். வரவால் மகிழ்ச்சி சுவியண்ணா... :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.