Jump to content

உணர்வுகள் கொன்றுவிடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
முன்பெல்லாம் வானத்தில் நட்சத்திரங்கள் தெரியாவிட்டாலும் கூட நீலமற்ற வெண்சாம்பற் புகைகளாய்த் தெரியும் வானத்தைப் பார்த்தபடி இருக்க அருணா எப்போதும் சலித்ததில்லை. எமது ஊர் போல் வவ்வால்களும் பறப்பதில்லைத்தான். ஒரு குருவி கூடவா பறக்கக் கூடாது என்னும் ஆதங்கம் இன்று அவளுக்கு எழத்தான் செய்தது. மனதில் எழுந்துள்ள சோர்வின் வெளிப்பாடுதானோ இது என்று அவள் மனம் எண்ணியது. அங்குகூட இப்போதெல்லாம் வவ்வால்கள் பறப்பதில்லை என்று அங்கு சென்றபோது பக்கத்து வீட்டு ஜீவா கூறியது நினைவில் வந்தது. எல்லாமே கொஞ்சக் காலத்துக்குத் தானோ? மனிதர்கள் போல் பறவைகளும் மாற்றிடம் தேடிக்கொண்டு செல்லவாரம்பித்து விட்டன என எண்ணிக்கொண்டாள்.
 
நிர்மலன் இப்பொழுதெல்லாம் நன்றாகவே மாறிவிட்டான். வேலை முடிந்து ஆவலாக வீடு வருபவன் இப்போதெல்லாம் பிந்தியே வருகிறான்.  கேட்டால் வேலை அதிகம் என்கிறான். இரண்டு வயதாகும் ஆரணியுடன் கூடக் கொஞ்சிப் பேசுவதில்லை. எதோ கடனுக்கு அதன் தலையைக் கைகளால் தடவி விட்டபடி நிற்பான். பின் தன் அலுவல் பார்க்கப் போய்விடுவான். மகளும் தூக்கக் கலக்கத்துடன் அப்பா அப்பா என்று சொல்லிவிட்டுத் தூங்கிவிடும். அவள் அவனுக்கு உணவை எடுத்து வைக்க, அவளுடன் எதுவும் பேசாது ஹோட்டலில் உண்பதுபோல் உண்டுவிட்டு நல்லதா இல்லையா என்று கூடக் கூறாது எழுந்துவிடுவான்.
 
முன்பு சிறிது நாட்கள் அவன் வேலையால் வந்தவுடன் அவனுக்கு உணவு பரிமாறியபடியே அன்று நடந்த விடயங்கள் எல்லாம் இவள் சொல்ல அவனும் ஆர்வமாகக் கேட்டபடி உண்பான். போகப்போக அவள் ஏதும் சொன்னாலும் அதை அக்கறையுடன் கேட்காது "தொணதொணக்காதே. நான் களைச்சுப்போய் வந்திருக்கிறன்" என்று எரிந்து விழுந்தபின் இவள் அவனுக்கு எதுவும் சொல்வதை நிறுத்திவிட்டாள். இருவரும் படுக்கையைப் பகிர்ந்து கொண்டும் நிறைய நாட்களாகி விட்டன. இத்தனைக்கும் இருவரும் காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டனர்.

************************************************************************************************************************************************************************
 
இவளின் அண்ணனுடன் தான் இவள் டொராண்டோவில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவந்தாள். அண்ணனும் இவளுமே குடும்பத்தில். அதனால் அண்ணன் பாசத்துடன் தங்கையை கனடாவுக்கு எடுத்துத் தன்னுடனேயே வைத்திருந்தான். இவள் கணணித்துறையில் நன்றாகப் படித்துச் சித்தியெய்தி வங்கிக் கணக்காளராக வேலைக்கும் சேர்ந்து ஒரு வருடத்தின் பின்னரே நிர்மலனை முதல் முறை வங்கியில் சந்திக்க வேண்டி வந்தது. வேறொரு வங்கியின் வேலையிலிருந்து இவளது வங்கிக்கு மேலாளராக மாற்றலாகி வந்தவனை எல்லோரும் போலத்தான் இவளும் எதிர்கொண்டது. அனாலும் முதல் சந்திப்பிலேயே இவளை அவன் பார்த்த பார்வையில் ஒரு வசீகரம் அவனிடம் இருப்பதை அவள் அவதானித்ததுதான். இவளைக் காணும் நேரங்களில் எல்லாம் அவனது கண்ணில் தோன்றும் பிரகாசத்தையும் அவதானித்தபடி இருந்தவளை அவன்தான் முதலில் கேட்டான் என்னை உனக்குப் பிடிச்சிருக்கா என்று. 
 
இப்படி அவன் நேரே கேட்டது அவளுக்கு மகிழ்வாக இருந்ததுதான் என்றாலும் எதற்குப் பிடிக்கவேண்டும் என்றாள் இவள் தன்னை வெளிக்காட்டாது. பிடிக்காவிட்டால் எப்படித் திருமணம் செய்வது என்று அவன் கேட்ட உடனே இவளுக்கு பதைப்புடன் மகிழ்ச்சியும் எட்டிப் பார்த்தது. முகம் உடனே செம்மை படர்ந்து தன் பூரிப்பைக் காட்டியபோதும் இவள் உடனே தன் சம்மதத்தைக் கூறாது அண்ணாவைக் கேட்கவேண்டும் என்றாள். மச்சான் மாட்டன் என்றால் என்னை கலியாணம் கட்ட மாட்டீரோ என்று அவன் கேட்டது மகிழ்வாக இருக்க இவள் சிரித்தபடி அண்ணாவை கேளுங்கள் என்றுகூறிவிட்டு நகர்ந்தாள். மச்சானின் போன் நம்பர் தராமல் எப்பிடிக் கேக்கிறது என்று அவன் சிரிக்க இவள் ஒரு தாளில் அதை எழுதி தமையனின் பெயரையும் தாசன் என்று எழுதிக் கொடுத்தாள்.
 
அடுத்த நாளே அவன் தாசனுடன் போனில் என்ன கதைத்தானோ தாசன் மாலை வீட்டுக்கு வரச் சொல்லிவிட்டான். இவளுக்கு மனம் நிறைந்து யாருக்கும் அதைப் பகிரவும் முடியாது கால்கள் நிலத்தில் நிற்கமுடியாது தாவின. உனக்கு நிர்மலனைப் பிடிச்சிருக்கா அருணா என்று தமையன் கேட்க ஓமண்ணா என்று வார்த்தைகள் தொண்டையில் சிக்கி வெளிவந்தன.
 

இவளுக்கு நண்பிகள் கிடையாது. படிக்கும் காலத்திலேயே பெரிதாக யாருடனும் பேசாது பொம்மை போல தன் படிப்புடன் இருப்பாள். கனடா வந்த பின்னும் மற்றவருடன் பெரிதாகத் தமையனும் பழகுவதில்லை. அதுவே அவளுக்கும் பழகிவிட்டது. மாலை நிர்மலன் இவளுக்கு ஒரு கொத்துப் பூக்களுடன் வந்து இவள் கையில் கொடுத்துவிட்டு என்னையே நினைத்தபடி இருக்கிறாயா என்று கேட்டவுடன், என் முகம் மகிழ்வைக் காட்டிக் கொடுக்கிறதா எனத் தன்னையே கேட்டபடி வாங்கோ என்று அவனை உள்ளே இருத்திவிட்டு அண்ணனின் அறைக்குள் எட்டிப்பார்த்து அவர் வந்துவிட்டார் அண்ணா என்றுவிட்டு குசினிக்குள் சென்று ஒரு வாசில் நீர் நிரப்பி அவன் கொண்டுவந்த பூக்களை அதில் அழகாக வைத்து வரவேற்பறையில் அவன் முன் இருந்த மேசையில் வைத்தபடி தாங்ஸ் என்று கூறிவிட்டு உள்ளே செல்ல இருந்தவளை, இரு அருணா என்று தமையன் கூற அவனுக்கெதிரில் கதிரையில் அமர்ந்தாள்.

முதல் நாளே தாசனும் அவனும் எல்லாம் கதைத்திருப்பார்கள் போல. முன்பே எல்லாம் தெரிந்தவர்கள் போல் கதைத்துச் சிரித்ததில் தன் திருமணம் நிட்சயமாகிவிட்டது புரிந்தது. ஒரே நாளில் எப்படி அண்ணன் ஒருவனை நம்பினான் என்று இவளுக்கு ஆச்சரியம் ஏற்பட அண்ணனை நிமிர்ந்து பார்த்த பார்வையில் அண்ணனும் இவள் மனம் புரிந்து நிர்மலனை என் நண்பன் அகிலன் குடும்பத்துக்கு நல்லாத் தெரியுமாம். நேற்றே எல்லாம் விசாரிச்சுப்போட்டுத்தான் இண்டைக்கு இவரை வரச்சொன்னனான் என்றுவிட்டு இருவரையும் பார்த்துச் சிரித்தான். அதன்பின் ஒரு மாதத்திலேயே திருமணம். நிர்மலனுக்கு தாய்தந்தை இல்லை. தமக்கை மட்டும் இலங்கையில். இங்கும் பெரிதாக யாரும் இல்லாததால் மிகச் சிக்கனமாகவே திருமணம் முடிந்தும் விட்டது. அவனின் நண்பர்கள் கொஞ்சமும் தாசனின் நண்பர்களும் இரண்டு மூன்று உறவினர்களும் மட்டுமே திருமணத்துக்கு. கோவிலிலேயே எல்லா ஏற்பாடுகளும். அதனால் இவர்களுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் திருமணம் முடிந்தது.

இவளின் திருமணம் நடந்து ஒரு வாரத்தின் பின்னரே தான் அமெரிக்காவில் இருக்கும் ஒரு பெண்ணை விரும்புவதாகவும் தானும் அங்கேயே போய்விடப்போவதாகவும் தாசன் கூற, ஓ இத்தனை நாள் ஒழித்துவிட்டீர்களே அண்ணா என்று அண்ணனும் வாழ்க்கையில் இணையப்போகிறான் என்னும் மகிழ்வில் பூரிப்புடன் அருணா கூறினாள். அதன்பின் நிர்மலனுடனான அவளது வாழ்வு சொர்க்கமாகவே இருந்தது. இவளைத் தாங்கினான் என்றுதான் சொல்லவேண்டும். வயிற்றில் ஆரணி உருவானவுடனேயே வேலையை விடச் சொல்லிவிட்டான் அன்புக் கணவன். அவளுக்கும் அலைந்துகொண்டு வீட்டுக்கும் வேலைக்குமாகத் திரிய அலுப்பாகத்தான் இருந்தது.

குழந்தை பிறந்தது ஒருமாதம் லீவு எடுத்துவிட்டு இவளை ஒன்றும் செய்யவிடாமல் .... இப்ப நினைக்க கண்களில் நீர் எட்டிப் பார்த்தது. அண்ணன் திருமணமாகி அமெரிக்காவில் வசிக்க ஆரம்பித்த பின்னர் நிர்மலன் இரண்டு வார விடுமுறையில் அவளையும் அழைத்துக்கொண்டு அங்கு சென்றுவந்தான். அண்ணனின் வீட்டின் பிரமாண்டத்தைப் பார்த்து இவளுக்கு வாய் அடைத்தது. அண்ணா கட்டடக் கலைஞன் என்பதனால் திட்டமிட்டு அழகாக வீட்டைக் கட்டியிருந்தான். அண்ணி சுபத்திரா கூட நன்றாகத்தான் பழகுகிறாள். இவளுக்கு அண்ணனை எண்ணப் பெருமையாக இருந்தது. அண்ணா நன்றாக இருக்கிறது வீடு என்றாள் கள்ளங்கபடம் இன்றி. எல்லாம் உன் அண்ணியின் விருப்பப்படிதான். அவளே எல்லாம் தெரிவு செய்தாள். என் காதல் பரிசு இது அவளுக்கு என்று தாசன் சொல்ல பெருமிதமாய்ச் சிரித்துக்கொண்டு அண்ணி நின்றாள்.

அண்ணனின் நினைவு வந்து அவளுக்கு இன்னும் கண்ணீரைப் பெருக்கியது. அண்ணனிடம் மனம்விட்டுச் சொல்லிப் பார்ப்போமோ என்று எண்ணியவள், வேண்டாம் இன்னும் கொஞ்ச நாட்கள் பார்ப்போம் என்று மனதை அடக்கிக்கொண்டு படுக்கை அறைக்குச் செல்ல எழுந்தாள். அடுத்த அறையில் கணவன் கணனியில் மும்மரமாக இருக்க, துவண்ட மனதுடன் சென்று தூங்கவாரம்பித்தாள்.


**************************************************************************************************************************************************************************



கணவன் சொன்னவற்றைக் கேட்டு அதிர்ச்சியில் நின்றாள் அருணா. அவனுக்கு இங்கு வேலை செய்வது பிடிக்கவில்லையாம். அதனால் வேறொரு வேலை தேடிக்கொண்டு அமெரிக்காவுக்குச் செல்கிறானாம் என்றவுடன் ஏன் இங்கு உங்களுக்கு என்ன பிரச்சனை என்று இவள் ஆரம்பிக்க முன்னரே எனக்கு இங்கு பிடிக்கவில்லை. கொஞ்சநாள் அங்க இருந்து பார்க்கப் போறன் என்று கத்துமாப்போல் சொல்பவனை வாயடைத்துப் பார்க்க மட்டுமே இவளால் முடிந்தது. நீயும் பிள்ளையும் இங்க இருங்கோ. நான் போய் பிறகு உன்னைக் கூப்பிடுறன் என்பவனை எதுவும் சொல்லாது பார்த்துக்கொண்டிருந்துவிட்டு அவன் வேலைக்குச் சென்றதும் தமையனுக்குத் தொலைபேசி எடுத்து தன் உள்ளக்கிடக்கையை எல்லாம் கொட்டி அழுது தீர்த்தாள். தமையனும் யோசனையுடன் நான் நிர்மலனுடன் கதைக்கிறன் என்றுவிட்டு போனை வைக்க, தனியாகக் காட்டில் அகப்பட்டவளாய் கலங்கும் மனதுடன் ஏதுமற்று இருக்க மட்டுமே அவளால் முடிந்தது.

அடுத்தநாள் தாசன் போன் செய்து, மச்சான் எதோ குழப்பத்தில இருக்கிறார். கொஞ்சநாள் விட்டுப்பிடிப்பம். இங்க வந்து என் வீட்டிலேயே நீங்கள் தங்கலாம் என்று சொல்ல அவர் சம்மதித்துவிட்டார். ஆனபடியால் பெரிதாக ஏதும் இருக்காது நின்மதியாய் இரு என்று அண்ணனின் ஆறுதல் வார்த்தைகள் மனதுக்குத் தெம்பூட்டின.

அவன் அமெரிக்கா சென்ற பின்னர் கூட விழுந்துகட்டி இவளுடன் போனில் பேசவோ அன்றி சுகம் விசாரிக்கவோகூட இல்லை. இவள்தான் அண்ணனுக்குப் போன் செய்து தன் ஆதங்கத்தைக் கொட்டுவாள். தாசனும் தான் என்ன செய்வது. கொஞ்ச நாளைக்கு நீ பேசாமல் இரு. என்ன செய்கிறான் பார்ப்போம் என்று கூறியபின் இவள் அண்ணனையும் தொந்தரவு செய்வதில்லை.

முன்பு அண்ணனும் பின்னர் கணவனும் இவளின் தேவைகளை எல்லாம் பூர்த்திசெய்வதால் இவள் பெரிதாக எதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதில்லை. இப்போ எல்லா வேலைகளையும் இவளே செய்ய வேண்டியதாகிவிட்டதில் இவளது நேரங்கள் அதில் கரைந்தனதான் எனினும் இரவில் மகள் தூங்கியபின் இவள் தூங்காது பலதையும் எண்ணி குமைந்ததில் உடல் இளைத்து பாப்பதற்கு நோயாளி போலானாள். தங்கையை ஆறுதல்ப் படுத்த வந்த அண்ணன் இவள் நிலை கண்டு கலங்கித்தான் போனான். அருமைத் தங்கை. யாருக்கும் கேடு எண்ணாதவள். ஏன் நிர்மலன் இவளிடம் பிடிப்பற்றுப் போனான் எனக் குழம்பியதில் தான் திரும்பிச் சென்றவுடன் அவனிடம் தெளிவாகவே பேசி இதுக்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று எண்ணினான்.


*********************************************************************************************************************************************************************

உணர்வு மழுங்கி உயிர்த்துடிப்பு அடங்கி யாருமற்ற உலகில் தன்னந்தனியனாக நிற்கும் உணர்வு ஏற்பட்டது தாசனுக்கு. இன்னுமே கூட எதையும் கிரகித்துக்கொள்ள அவனால் முடியவில்லை. ஐயோ அருணா இதை எப்படித் தாங்கிக் கொள்ளப் போகிறாள் ??? எப்பிடி இதை நான் அவளிடம் சொல்வேன் என்று எண்ணி அழுதபடி எத்தனை நேரம் இருந்தானோ தெரியவில்லை. ஆண்கள் அழுவதில்லை என்றும் அழக்கூடாது என்றும் சொல்வார்கள். ஏன் ஆண் மனிதன் இல்லையா??அல்லது மனமே இல்லாதவனா ??? என மனதில் எழுந்த நினைவில் அழுகையில் சிரிப்பும் வந்தது. தொடர்ந்து அவனது தொலைபேசி அடித்ததில் மனம் கலைந்து சிரமத்துடன் எழுந்து சென்று போனை எடுத்தான். வேலை இடத்திலிருந்து இவனைக் காணவில்லை என்ற விசாரிப்பு. எனக்கு எழும்பவே  முடியாது வருத்தம். ஒருவாரம் விடுப்பு வேண்டும் என்றுவிட்டுத் தொலைபேசியை வைத்தபின்னும் என்ன செய்வது என்றே தெரியாத நிலை.

முந்தநாள் கனடாவில் இருந்து வந்ததும் தங்கை கணவனை இருத்திவைத்து அவன் அப்படி இருப்பதற்கான காரணத்தைக் கேட்டான். என்னால் உடனே பதில் சொல்ல முடியாது. நாளை கூறுகிறேன் என்று மேற்கொண்டு இவனுடன் பேசாது எழுந்து செல்லும் நிர்மலனை எதுவும் கூறாது பார்த்துக்கொண்டு இருக்கவே இவனால் முடிந்தது. அடுத்தநாள் எப்போது விடியும் என்று சிறுபிள்ளை போல் காத்திருக்க மட்டுமே அவனால் முடிந்தது. அடுத்த நாள் காலை விடியாமலே இருந்திருக்கக் கூடாதா என்று இப்ப எண்ணம் எழ, பெருமூச்சு மட்டுமே பதிலானது.

நேற்றுக் காலை அவன் வேலைக்கு வெள்ளனவே செல்லவேண்டிய தேவை இருந்ததில் நிர்மலன் எழும்ப முதலே சென்றுவிட்டான். மாலை இருந்த வெளி வேலைகளை எல்லாம் ஒரத்தில் வைத்துவிட்டு தங்கையின் கணவன் என்ன சொல்லப் போகிறானோ என்ற பதைப்பில் வெள்ளனவே வீட்டுக்கு வந்துவிட்டான். சுபத்திராவும் அன்று வெள்ளனவே வந்துவி விட்டாள் என்பதை அவள் படுக்கை அறையில் படுத்திருந்ததிலே தெரிந்தது. என்னப்பா ஏதும் வருத்தமே என அக்கறையாக அருகில் சென்று விசாரித்தவனை, "சரியான தலையிடி. அதுதான் குளிசையைப் போட்டுக்கொண்டு படுத்திருக்கிறன்" என்று கண்ணைக்கூடத் திறக்காது அவள் சொன்ன விதம் அவளின் தலை வலியின் அளவை அவனுக்கு உணர்த்த, அவள் பாவம் படுக்கட்டும் என்று எண்ணியபடி உடைகளை மாற்றிக்கொண்டு வரவேற்பறைக்கு வந்து நிர்மலனுக்காகக் காத்திருக்கவாரம்பித்தான்.

இவனுக்குப் பசித்ததுதான் எனினும் நிர்மலனும் வரட்டும் சேர்ந்து சாப்பிட்டபடி கதைத்தால் இறுக்கம் குறையலாம் என்ற நப்பாசை எழவே மேசையில் கிடந்த ஒரு மகசினைப் புரட்டியபடி காத்திருந்தான். நிர்மலானோ வழமையாக வரும் நேரத்துக்கு வரவே இல்லை. தொலைபேசி எடுத்துப் பார்ப்போமோ என்று எண்ணியவன், அவன் என்ன சின்னப் பையனா ஏன் இன்னும் வரவில்லை என்று கேட்பதற்கு என எண்ணி அந்த நினைப்பைத் தள்ளி வைத்துவிட்டு தொலைக்காட்சியை இயக்கிவிட்டு அதில் தன் மனதைச் செலுத்தத் தொடங்கினான்.

எத்தனை நேரம் தூங்கினானோ தெரியவில்லை நிர்மலன் இவன் தோளைத் தொட்டு உலுப்ப திடுக்கிட்டு விழித்தான். வாங்கோ சாப்பிடுவம் என்று அவன் அழைக்க இவனுக்கும் அப்போது தான் பசி தெரிய ம் என்றபடி அவனைத் தொடர்ந்து உணவு அறைக்குள் வந்து இருக்கையில் அமர்ந்தான்.

சுபத்திராவும் எழுந்து உணவுகளைச் சூடாக்கிக்கொண்டிருந்தாள். தலையிடி குறைஞ்சிட்டுதே என இவன் அக்கறையாகக் கேட்க ம் என்பதே அவளின் பதிலாக வந்தது. மூவருமே பசியுடன் இருந்தவர்கள் போல் உண்பதிலேயே கவனமாக இருந்தனர். யாரும் யாருடனும் பேசவில்லை. சுபத்திரா வழமையாக ஏதாவது பேசியபடி தான் சாப்பிடுவாள். அவளின் கதைகளுக்கு நிர்மலன் சிரித்துப் புரையேறியதும் உண்டு. இன்று தலைவலியின் தாக்கம் அவளுக்கு என எண்ணியபடி அவளுடன் இவனும் எதுவும் பேசாது சாப்பிட்டு முடித்தான்.

மூவரும் வரவேற்பறையில் வந்து அமர்ந்ததும் நிர்மலன் தான் பேசவாரம்பித்தான். தாஸ் உங்களுக்கு விளங்கும் எண்டு நினைக்கிறன் நான் சொல்லுறது. எனக்கு அருணாவோட வாழ இனிச் சரி வராது என்று நிர்மலன் முடிக்கும் முன்னரே ஏன் சரிவராது என்று இவன் சிறிது கோபத்துடனேயே கேட்டான். எனக்கு சரிவராது. என்றான் நிர்மலன் எதுவுமே நடக்காததுபோல். நீர்தானே வலிய வந்து அருணாவைச் செய்யப் போறன் எண்டு கேட்டுக் கலியாணம் செய்தனீர். ஒரு குழந்தையும் பிறந்தபிறகு.... யோசிச்சுத்தான் கதைக்கிறீரோ நிர்மலன் என்றான் இவன் குரலை உயர்த்தி.

நானும் சுபத்திராவும் வடிவா கதைச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறம் என்று நிர்மலன் சொல்ல சுபத்திராவோட என்ன கதை நான் தானே அவளிண்ட அண்ணன். என்னோட கதையும் என்று மரியாதையிலிருந்து ஒருமைக்கு மாறினான் தாசன். I am so sory. நானும் நிர்மலனும் ஒரு வருடமா முகப்புத்தகத்தில பழக்கம். நானும் அவரும் சேர்ந்து வாழப்போறம். எங்களை மன்னிச்சிடுங்கோ என்று கூறும் சுபத்திராவை அதிர்ச்சியுடன் வானே இடிந்து தன்மேல் விழுந்ததான எண்ணத்துடன் அவமானம் மேலிட வார்த்தைகளின்றிப் பார்த்துக்கொண்டிருந்தான் தாசன். இவ்வளவு கேவலமானவளா நீ. உன்னாலத்தான் என் குடும்பத்தில் இருவரின் வாழ்வில் இடியா என அவன் மனம் அலறியபடி இருக்க எதுவும் பேசாது எழுந்து தோட்டத்துக்கு நடந்தான் தாசன்.






















 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பத்தில் குழப்பங்கள் வருவதுசகஜம்  அதுவம் இப்படியா .?.. புலம்பெயர்தேசத்தில் எதுவும்  நடக்கலாம். 

 

 

  திருமணத்தி ன்  புனிதம் இப்படியாக    போகிறது ... உணர்வுகளைக் கொன்று  விடு .. என வந்தால் இன்னும் நன்று .

 

 

.கற்பனைக்கு   பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கற்பனை இல்லை அக்கா. அருணாவின் சித்தி எனக்குத் தெரிந்தவர். இங்கு இருக்கிறார். எனக்கு ஒருநாள் கதைக்கும்போது சொன்னதுதான் இது. அவர் கோபத்தில் அவர்களின் உண்மைப் பெயரையே போடும்படி சொன்னார். நன் தான் போடவில்லை. இப்பிடி எத்தனையோ இப்போதெல்லாம் நடந்துகொண்டுதான் இருக்கு. நன்றி அக்கா வரவுக்கு.

Link to comment
Share on other sites

உண்மைக்கதையா???? :o  நான் வாசித்துவிட்டு இப்படி நடந்திருக்காது என்று நினைத்தேன். இப்படியானவர்களை என்ன செய்யலாம்??? :mellow::huh:

 

நன்றாக எழுதியுள்ளீர்கள் சுமோக்கா.

Link to comment
Share on other sites

ச்சா.. என் மனுசிக்கு ஒரு ஆண் சகோதரம் இல்லை என்ற குறை இப்பதான் தெரியுது.... ஹ்ம்ம்ம்

 

கதை சொல்லும் பாணி நன்றாக இருக்கின்றது சுமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விட்டுடுங்கோ இது எல்லாம் தற்போது பஷன் என்று சொல்வார்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைக்கதையா???? :o  நான் வாசித்துவிட்டு இப்படி நடந்திருக்காது என்று நினைத்தேன். இப்படியானவர்களை என்ன செய்யலாம்??? :mellow::huh:

 

நன்றாக எழுதியுள்ளீர்கள் சுமோக்கா.

 

நன்றி தமிழினி வரவுக்கும் கருத்துக்கும்.

 

Link to comment
Share on other sites

நிர்மலனும், சுபத்திராவும் அண்ணன் தங்கச்சியல்லோ.. என்ன கொடுமை சார் இது?! :blink::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ச்சா.. என் மனுசிக்கு ஒரு ஆண் சகோதரம் இல்லை என்ற குறை இப்பதான் தெரியுது.... ஹ்ம்ம்ம்

 

கதை சொல்லும் பாணி நன்றாக இருக்கின்றது சுமே

 

இனிக் கட்டுற மனிசி ஆண்சகோதரம் உள்ளவராப் பாருங்கள் :D

நிர்மலனும், சுபத்திராவும் அண்ணன் தங்கச்சியல்லோ.. என்ன கொடுமை சார் இது?! :blink::D

 

என்ன நீங்கள் குழப்புறீங்கள் ???

 

விட்டுடுங்கோ இது எல்லாம் தற்போது பஷன் என்று சொல்வார்கள்...

 

அரைவாசி  தம் காலில் நிக்கும் துணிவும் சமூக பயம் அற்றதுமேதான் காரணம்.

 

Link to comment
Share on other sites

கல்யாணம் கட்டியபிறகு அப்படித்தானே முறை வரும்.. :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது நடந்து ஏறக்குறைய பத்து வருடங்கள் இருக்குமென நினைக்கிறேன். இவர்களது உறவினர் ஒருவர் என்னுடன் வேலை செய்யும்பொழுது இக்கதையை சொல்லக் கேட்டிருக்கிறேன். இருவருக்கும் பிள்ளைகள் இருப்பதாகச் சொன்னார். பெற்றவர்களின் இத்தகைய போக்கினால் பாதிக்கப்பட்டது பிள்ளைகள்தான்.. சுமே உங்கள் எழுத்தோட்டம் மிகவும் நன்றாக இருக்கிறது. தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமேயின் எழுத்து நடை, வழமையை விடவும் நன்றாக உள்ளது...!

 

கதையின் கருப்பொருள், நம்மால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாதது!

 

இப்படியம் சில மனிதர்கள் என்று தான் நினைக்கத் தோன்றுகின்றது!

 

எனக்கும் பாரதியாரின்... 'விடுதலை..விடுதலை..விடுதலை..' பாட்டு சிலவேளைகளில் நினைவுக்கு வந்து போகும்!

 

சில நிமிடங்களில்... தானாகவே அந்தப் பாடல்... சிறிது காலத்துக்கு, நினைவிலிருந்து மறந்தும் போய் விடும்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணம் கட்டியபிறகு அப்படித்தானே முறை வரும்.. :huh:

 

 

 

 

நீங்கள் சொல்வது சரி ... மச்சானின் மனைவி  சகோதரி ...முறை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் நிர்மலனும் ஒரு வருடமா முகப்புத்தகத்தில பழக்கம்
முகப்புத்தகத்தை இதுக்கும் பயன்படுத்தலாம் என்பது எனக்கு தெரியாமல் போய்விட்டதே......சுமே கதைக்கு நன்றிகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது நடந்து ஏறக்குறைய பத்து வருடங்கள் இருக்குமென நினைக்கிறேன். இவர்களது உறவினர் ஒருவர் என்னுடன் வேலை செய்யும்பொழுது இக்கதையை சொல்லக் கேட்டிருக்கிறேன். இருவருக்கும் பிள்ளைகள் இருப்பதாகச் சொன்னார். பெற்றவர்களின் இத்தகைய போக்கினால் பாதிக்கப்பட்டது பிள்ளைகள்தான்.. சுமே உங்கள் எழுத்தோட்டம் மிகவும் நன்றாக இருக்கிறது. தொடருங்கள்.

 

நல்ல காலம் அக்கா. நீங்களும் இப்படியான சம்பவம் கேள்விப்பட்டது. அலாட்டில் என் கற்பனை என்றும் மனதுள் எண்ணுவார்கள் உறவுகள். :) எப்போ நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா.

 

கல்யாணம் கட்டியபிறகு அப்படித்தானே முறை வரும்.. :huh:

 

அதுசரி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமேயின் எழுத்து நடை, வழமையை விடவும் நன்றாக உள்ளது...!

 

கதையின் கருப்பொருள், நம்மால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாதது!

 

இப்படியம் சில மனிதர்கள் என்று தான் நினைக்கத் தோன்றுகின்றது!

 

எனக்கும் பாரதியாரின்... 'விடுதலை..விடுதலை..விடுதலை..' பாட்டு சிலவேளைகளில் நினைவுக்கு வந்து போகும்!

 

சில நிமிடங்களில்... தானாகவே அந்தப் பாடல்... சிறிது காலத்துக்கு, நினைவிலிருந்து மறந்தும் போய் விடும்! :D

 

இதைவிட இன்னும் எத்தனை இருக்குப் புங்கை. உது பழைய பாட்டெல்லோ எத்தினை புதுப்பாட்டுகள் இருக்கு.

 

நீங்கள் சொல்வது சரி ... மச்சானின் மனைவி  சகோதரி ...முறை

 

மச்சானின் மனைவி சகோதரி என்று நீங்கள் சொல்லத்தான் தெரிகிறது. புலம்பெயர் தேசங்களில் உறவு முறைகள் எல்லாமே மறந்துகொண்டு வருது அக்கா.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகப்புத்தகத்தை இதுக்கும் பயன்படுத்தலாம் என்பது எனக்கு தெரியாமல் போய்விட்டதே......சுமே கதைக்கு நன்றிகள்

 

முகப்புத்தகக் கணக்கு இல்லையாக்கும் :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை சொல்லும் பாங்கு நன்றாய் உள்ளது மெசொபொத்தேமியா சுமேரியர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரன் கலாச்சாரம் எங்களுக்குள் பரவிக் கனகாலம் ஆகிவிட்டது. இப்படியான முடிவை யாரும் எதிர்பார்க்கவில்லை என்பது தெரிகின்றது. முகப்புத்தகத்தால் அண்ணன் தம்பி காதலித்த கதைகளும் உள்ளது.

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் சுமே ,மனத்தில் பட்டத்தை சொல்லுகின்றேன் .

போலியாக நல்ல கதை என்று எழுதமனம் இடம் தரவில்லை .

கரு- -எத்தனையோ மிக அழகான விடயங்கள் உலகில் இருக்கு அதைவிட்டு முறைதவறிய உறவுகளை எவ்வளவு காலத்திற்கு கட்டிப்பிடித்துக்கொண்டு  குண்டு சட்டியில் குதிரை ஓட்ட போகின்றீர்கள் .

 

எழுத்துநடை -இதுவும் அடுத்த படிக்கு போகவேண்டியிருக்கு ,மினக்கெட்டு நேரத்தை செலவழிகின்றீர்கள் எனவே நல்ல கதை சொல்லியாக மாற இப்படியே தட்டையாக எழுதிக்கொண்டு இருக்க முடியாது .எழுத்தில் ஒரு சிறிய வர்ணனை ,சிலாகிப்பு ,கொமடி,வலி ,சரித்திரம் ,புவியியல் ,விஞ்ஞானம் எல்லாம் கலந்து அடிக்கலாம் .

வாசிப்பவருக்கு என்ன சொல்ல வருகின்றிர்கள் என்பது தெளிவாகவும் அதே நேரம் வாசிக்க ஆவலையும் கொடுக்கவேண்டும் .

 

எல்லோரும் ஜெயகாந்தன் ஜெயமோகன் அசோகமித்திரன் மாதிரி ஆக முடியாது ஆனால் சிவசங்கரி முத்துலிங்கமாக ஆகலாம் .இப்போது வண்ணநிலவன் சிறுகதைகள் வாசித்துக்கொண்டு இருக்கின்றேன் .Häagen-Dazs  ஐஸ்கிறீம் சாப்பிடுவது போலிருக்கு .

ஒரு சின்ன உதாரணம் எமது  டி ஜே யின் "ஹேமா அக்கா " கதையின் ஆரம்பம் இப்படி இருக்கு,

 

"பின்னேரம் நான்கு மணியிருக்கும் .வெயிலில் குளித்தபடி விளையாடிக்கொண்டிருக்கும் போதுதான் ஹேமா அக்கா கிணற்றுக்குள்ளே குதிப்பதை பார்த்தோம் .மலைகளும் நதிகளுமில்லாத யாழ்பாணத்தில் கிணறுகள் தான் நீர் சார்ந்த தேவைகளுக்கு அமுதசுரபி . இந்திய இராணுவம் வந்த கால கட்டத்தில் கூட ,  அள்ள அள்ள குறையாத நல்ல தண்ணியும் ,தாரளாமாய் லக்ஸ் சோப்பும் கிடைக்கும் போது என்ன சனியனுக்கு நீங்கள் சண்டை பிடிக்கின்றீர்கள் என்று சனத்தை ஆமிக்காரன் செக் போயின்டில் கேட்டானாம் ."

சிம்பிளாக வாசிக்க ஆவலாக இருக்கு .

தொடர்ந்து விடாமல் எழுதுங்கள் .எனது கருத்தில் தவறு இருந்தால் மன்னித்துவிடுங்கள் . :icon_mrgreen:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்...ம்...! :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை சொல்லும் பாங்கு நன்றாய் உள்ளது மெசொபொத்தேமியா சுமேரியர்.

 

நன்றி பெருமாள் வரவுக்கும் கருத்துக்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரன் கலாச்சாரம் எங்களுக்குள் பரவிக் கனகாலம் ஆகிவிட்டது. இப்படியான முடிவை யாரும் எதிர்பார்க்கவில்லை என்பது தெரிகின்றது. முகப்புத்தகத்தால் அண்ணன் தம்பி காதலித்த கதைகளும் உள்ளது.

 

 

இப்போ வெள்ளைக்காரர்கள்  நம்மவர்களை விட எவ்வளவோ மேல்.மற்றவர்களைப் பார்த்து அவர்கள் திருந்திக் கொண்டு வந்துள்ளார்கள்,

நம்மவர்கள் அவர்களை விட பல மடங்கு கற்று இருக்கிறார்கள்....சாதரணமாக ஒரு விடையத்தைக் கேட்டால் கூட நட்புக்களாக பழகுபவர்களுக்கும் பிடிப்பதில்லை..எத்தனை விடையங்களில் மௌனித்து நிற்க வேண்டி இருக்கிறது..

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி பெருமாள், வாத்தியார், அர்யுன். 

 

எனது கதையை வாசித்த பலரிடமிருந்து விமர்சனங்கள் பொதுவெளியில் வந்துகொண்டிருந்தன. அதில் யேர்மனியில் பிறந்து வளர்ந்த பதினெட்டு வயதுப் பருவ மங்கையிடமிருந்தும் "எனக்கு வாசிச்சு முடிக்கும் மட்டும் நித்திரை வரேல்ல. வாசித்த பிறகு ஒரு வாரம் கதைகள் கண் முன்னே ஓடிக்கொண்டிருந்தன" என்று விமர்சனம் வந்த போது மகிழ்வாக இருந்தது. அது என் கதைகளில் வெற்றி என்றே நான் எடுத்துக்கொண்டேன். பல பெண்கள் தொடர்ந்தும் இப்படியான கதைகளை எழுதுங்கள் என்று கூறினார்களே தவிர எழுத வேண்டாம் என்று கூறவில்லை. விமர்சனம் செய்த சாம் பிரதீபன் கூட புலம்பெயர் தேசங்களில் இப்படித் துணிவுடன் கதைகளை எழுதுபவர்கள் குறைவு. அதுவும் எல்லாக் கதைகளும் தோற்றுப்போனவர்கள் பற்றியது. எனவே இவரது கதைகள் பாராட்டப்பட வேண்டியது என்றார்.

 

அர்யுன் ஏன் நீங்கள் இப்படி ஒரு விமர்சனம் வைத்தீர்கள் என்று புரியவில்லை. உங்களுக்கு .Häagen-Dazs பிடிக்கும். பலருக்குப் பிடிக்காமலும் இருக்கலாம். ஆனாலும் என் எழுத்துநடையை மெருகூட்ட முயன்றுகொண்டே இருப்பேன்.


உண்மைதான் யாயினி மேல்நாட்டவர் பரவாயில்லை எம்மவருடன் ஒப்பிடும் போது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.