Jump to content

மகிந்தவைப் பழி தீர்க்கும் பிரித்தானியா – கிளாஸ்கோ செல்லாததன் இரகசியம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Mahinda-depature.jpg

கொமன்வெல்த் அமைப்பின் தலைவரால், கொமன்வெல்த் நாள் நிகழ்விலோ, கொமன்வெல்த் போட்டிகளிலோ பங்கேற்க முடியாது போனது இதுவே முதல்முறை என்று - சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். 

இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் கார்வண்ணன். 

ஸ்கொட்லாந்தின், கிளாஸ்கோவில் நடைபெறும் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பங்கேற்காததற்கான காரணங்களை விபரித்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அனுப்பியுள்ள கடிதம், இதுவரை வெளிவராத உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. 

சிறிலங்கா அதிபருக்கு எதிரான, புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களை ஒடுக்க, பிரித்தானிய அரசாங்கம் தவிறிவிட்டதாக, அதில் காரணம் கூறப்பட்டிருந்தது. 

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தனது கடிதத்தில், பிரித்தானியாவில், எலிசபெத் மகாராணி முடிசூடி 60 ஆண்டுகளை நிறைவடைந்ததை முன்னிட்டு நடத்தப்பட்ட வைர விழா நிகழ்வில், கலந்து கொண்ட சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் வாகன அணி மீது ஆர்ப்பாட்டக்காரர்கள், வெற்றுப் போத்தல்களையும், கொள்கலன்களையும் வீசியதாக குறிப்பிட்டிருந்தார். 

இதில் பல செய்திகள் இருந்தன. 

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நாடு திரும்பியதும், அவருக்குப் பாதுகாப்பு வழங்கிய பிரித்தானியக் காவல்துறைக்கு சிறிலங்கா அரசாங்கம் அப்போது நன்றி தெரிவித்திருந்தது. 

சிறிலங்கா அதிபரின் பயணத்துக்கு பிரித்தானியக் காவல்துறை பாதுகாப்பு அளிப்பதைக் காட்டும் ஒளிப்படம் உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது. 

அதன் மூலம், புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்புகளையும் மீறி, சிறிலங்கா அதிபருக்கு பாதுகாப்பையும் அங்கீகாரத்தையும் பிரித்தானிய அரசாங்கம் வழங்கியது என்று உள்ளூர் மக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. 

எவ்வாறாயினும், சில ஆண்டுகளுக்குப் பின்னர், சிறிலங்கா அதிபரின் வாகன அணி வெற்றுப் போத்தல்கள் மற்றும் கொள்கலன்களால் தாக்கப்பட்டதாக, அதே அரசாங்கத்தினால் கூறப்பட்டுள்ளது. 

கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் சிறிலங்கா அதிபர் பங்கேற்காதமைக்கு இதுவே காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

மகிந்த ராஜபக்ச கொமன்வெல்த் தலைவராக இருக்கிறார். 

அதன் தலைவரான பின்னர், நடக்கும் முதலாவது கொமன்வெல்த் போட்டி இது. 

கொமன்வெல்த் தலைவராக அவர் தெரிவு செய்யப்பட்ட பின்னர், கொமன்வெல்த் நாள் பிரித்தானியாவில் கொண்டாடப்பட்டது. 

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, கொமன்வெல்த் தலைவரான பின்னர், எலிசபெத் மகாராணியை இன்னமும் சந்திக்கவில்லை. 

கொழும்பில் நடந்த கொமன்வெல்த் தலைவர்களின் கூட்டத்தில் மகாராணி கலந்து கொள்ளவில்லை. 

அவர் தனது பிரதிநிதியாக இளவரசர் சாள்சை அனுப்பியிருந்தார்.

milliband-efegy-burn-colombo-2009.jpg
பிரித்தானியத் தூதரகம் முன்  டேவிட் மில்லிபான்ட்  உருவபொம்மை  எரிக்கப்படும் காட்சி -(2009-05-18)

கொமன்வெல்த் நாள் நிகழ்வுகளின் போது, எலிசபெத் மகாராணியை சந்திக்க மகிந்த ராஜபக்ச எதிர்பார்த்திருந்தார். 

ஆனால், புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்புப் போராட்டங்கள் இடம்பெறலாம் என்பதால், மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்கு 100 வீதம் உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும், நிகழ்வைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் பிரித்தானியா கேட்டுக் கொண்டது. 

கொமன்வெல்த் நாள் நிகழ்வில் பங்கேற்காத, கொமன்வெல்த் அமைப்பின் முதலாவது தலைவராக மகிந்த ராஜபக்சவே இருக்கிறார். 

அந்தச் சந்தர்ப்பத்தில், பிரித்தானியாவை மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டவில்லை. 

தனக்கு மற்றொரு வெளிநாட்டு பயணம் இருப்பதால், கொமன்வெல்த் நாள் நிகழ்வில் பங்கேற்கமாட்டேன் என்றே அவர் அறிவித்தார். 

ஆனால் இந்த முறை, கொமன்வெல்த் போட்டியில் சிறிலங்கா அதிபர் பங்கேற்காதமைக்கு, புலம்பெயர் தமிழர்களை ஒடுக்க பிரித்தானியக் காவல்துறை தவறிவிட்டதே காரணம் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. 

பாதுகாப்புக் காரணங்களுக்காக, இந்தப் பயணத்தைத் தவிர்க்கும்படி, பிரித்தானிய அரசாங்கம் மகிந்த ராஜபக்சவுக்கு அதிகாரபூர்வமற்ற வகையில் ஆலோசனை கூறியிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. 

அதனால் அவர், முன்னர் வெற்றுப் போத்தல்கள், கொள்கல்கள் வீசப்பட்டதாக பிரித்தானிய அரசாங்கத்தின் மீது குற்றம்சாட்டுமாறு, தனது வெளிவிவகார அமைச்சரைப் பணித்திருக்கலாம். 

எவ்வாறாயினும், கொமன்வெல்த் மாநாட்டைக் கொழும்பில் நடத்துவதற்காக, நாட்டு மக்களின் பில்லியன் கணக்கான ரூபா பணத்தை சிறிலங்கா அரசாங்கம் செலவிட்டிருந்தது. 

அது நாட்டு மக்கள் கடுமையாக உழைத்துச் சம்பாதித்த பணம். 

இறுதியில், கொமன்வெல்த் அமைப்பின் தலைவரால், கொமன்வெல்த் நாள் நிகழ்விலோ, கொமன்வெல்த் போட்டிகளிலோ பங்கேற்க முடியாது போனது. 

கொமன்வெல்த் தலைமைப் பதவியை வைத்துக் கொண்டுள்ள சிறிலங்கா இந்தச் சூழலில் அதிகம் சோர்வடைந்து விட்டது. 

கொமன்வெல்த் மாநாட்டை இங்கு நடத்தும், செலவுமிக்க முடிவை எடுப்பதற்கு முன்னதாக, சிறிலங்கா அரசாங்கம் இவற்றையெல்லாம் மதிப்பீடு செய்திருக்கும். 

milliband-efegy-burn-colombo-2009-1.jpg
அப்போதைய பிரித்தானியப் பிரதமர் கோடன் பிரவுண், டேவிட் மில்லிபான்ட் ஆகியோருக்கு புலிச் சீருடை அணிவித்த ஆர்ப்பாட்டக்காரர் -(2009)

2009 மே 18ம் நாள், போர் முடிவுக்கு வந்த நாளன்று சிறிலங்காவை ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரகத்தை முற்றுகையிட்டன. 

அப்போதைய பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட்டை தமிழ்ப் புலியாகச் சித்திரித்து, பாரிய எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. 

ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரித்தானியத் தூதரகத்தின் ஜன்னல்களின் மீது கூழ் முட்டைகளையும். தக்காளிகளையும் வீசியெறிந்தனர். 

அங்கு நடப்பதை ஒன்றும் அறியாதது போன்று சிறிலங்கா அரசாங்கம் பாசாங்கு செய்தது.

இந்தப் பழியைத் தீர்த்துக் கொள்வதற்கு பிரித்தானியாவுக்கு கிடைத்துள்ள வாய்ப்பே இது.

 

http://www.puthinappalakai.com/view.php?20140730110980

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.