Jump to content

சைக்கோமெட்ரிக் தேர்வுகள்: எதனோடும் சேராமல் இருப்பது எது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 தர்க்கரீதியாக யோசித்துச் சரியான பதிலைக் கண்டுபிடிக்க வேண்டியது சைக்கோமெட்ரிக் தேர்வுகளில் ஒருவகை. இதை ‘லாஜிகல் ரீசனிங்’ என்று குறிப்பிடுவார்கள். இதற்கு உங்களுக்கு உடனடியாகவும் விடை தெரிய வேண்டும். விதவிதமாகவும் யோசிக்க வேண்டி இருக்கும்.

 

கீழே உள்ளவற்றில் எது மற்றவற்றிலிருந்து வித்தியாசமாகப்படுகிறது?

 

ஏப்ரல், செப்டம்பர், தை, டிசம்பர்.

இந்தக் கேள்விக்கான விடை உங்களுக்குப் பார்த்தவுட​னேயே தெரிந்துவிடும். தை என்பது தமிழ் மாதம். மற்ற​வையெல்லாம் ஆங்கில மாதங்கள். எனவே ‘தை’ என்பதுதான் விடை.

ஆனால் தர்க்கம் என்பது சில சமயம் பலவிதக் கிளைகளாகப் பிரியும். கேள்வி கீழ்க்கண்டதுபோல் இருந்தால், எதை மற்றவற்றிலிருந்து தனிமைப் படுத்துவீர்கள்?

 

யாஹூ, கூகோல், மில்லியன், கோடி

இந்தக் கேள்விக்கு எது போன்ற பதில் எதிர்பார்க்கப்படுகிறது என்பதில்​ தெளிவு தேவை.

முன்பு கேட்கப்பட்ட கேள்விகளை மனதில் கொண்டு ‘கோடி’ ​என்று விடையை எழுதக் கூடாது. அது மட்டும்தான் முழுமையான தமிழ் வார்த்தை என்றாலும்கூட, இதைவிடச் சிறந்த தர்க்கங்கள் உண்டு என்று யோசித்துப் பார்த்தால் உங்களுக்கே தெரியும். பிற மூன்று வார்த்தைகளும் தமிழில் தோன்றியவை அல்ல. என்றாலும் அவை அப்படியே தமிழிலும் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது அவற்றுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் பயன்பாட்டில் இல்லை. ஆக அவையும் ஒரு விதத்தில் (பங்களா, காப்பி என்பது போல்) ​தமிழ்ச் சொற்களே).

 

அப்படியானால் விடை என்ன? யாஹூ, கூகுள் ஆகியவை கணினியில் தேடுபொறிகளாக (Search engines) பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் மில்லியன், கோடி ஆகியவை எண்கள். ஒருவேளை மில்லியன் என்று புதிதாக ஏதாவது கணினி தேடுபொறி வந்துள்ளதோ? இப்படி யோசிப்பதற்குப் பதிலாக, எதிர்த்திசையில் யோசியுங்கள். (முக்கியமாக, கொடுத்திருப்பது கூகுள் அல்லது கூகோல் என்பதையும் மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்).

மில்லியன் என்றால் 10 லட்சம். கோடி என்பது 100 லட்சம். அப்படியானால் யாஹூ அல்லது கூகோல் ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்று எண்ணையும் குறிக்கிறதே. ஆம். கூகோல் என்பது 1 என்ற எழுத்துக்குப் பின்னால் 100 பூஜ்யங்களைச் சேர்த்தால் கிடைக்கும் எண் (2ஜி, நிலக்கரி நஷ்டத் தொகை கணக்கைக் கேட்பதைவிட இந்த எண் அதிகம் தலைசுற்ற வைக்கிற தில்லையா?). இப்போது உங்களுக்கு ‘யாஹூ’ என்பதுதான் சரியான விடை என்பது விளங்கியிருக்கும்.

 

இப்போது இதே போல பிறவற்றோடு சேராத ஒன்றைத் தேர்ந்தெடுங்கள் என்ற வகையில் மேலும் சில கேள்விகள்.

 

தாமரை, புலி, மயில், சிங்கம், மாம்பழம்

 

1) பிற நான்கு வார்த்தைகளுக்குள் ஓர் ஒற்றுமை இருந்தாக வேண்டும். அந்தப் பொதுவான அம்சம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் வார்த்தையில் இருக்கக் கூடாது. அதுதான் கணக்கு.

அதாவது பிறவற்றில் இல்லாதது ஒன்றில் உண்டு என்கிற வகையில் கேள்விகள் அமைவது அரிது. பிற அனைத்திலும் உள்ள ஒரு பொதுவான அம்சம் ஒன்றில் மட்டும் இல்லை என்கிற வகையில்தான் கேள்விகள் பொதுவாக அமையும்.

 

2) தாமரை பா.ஜ.க.வின் சின்னம். மாம்பழம் பா.ம.க.வின் சின்னம். இந்தக் கோணத்திலும் நீங்கள் யோசித்துப் பயலனில்லை. ஏ​னென்றால் எந்த மிருகம் அல்லது பறவையின் பெயரையும் தேர்தல் சின்னமாக வைத்திருக்க அனுமதியில்லை.

 

3) அப்படியே ஒரு பேச்சுக்குப் புலி, சிங்கம் ஆகிய சின்னங்களில் இரு சுயேச்சைகள் உங்கள் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டிருந்தால்கூட, நீங்கள் மயில் என்பதை விடையாகத் தேர்ந்தெடுக்கக் கூடாது. ஏனென்றால் கேள்விகள் தேர்வு எழுதும் அனைவருக்குமே பொதுவானவை. உங்கள் தொகுதியில் இருப்பதைத்தான் சரியாக விடையாக எழுத முடியும் என்கிற மாதிரி கேள்விகள் வடிவமைக்கப்பட மாட்டாது.

 

இப்போது புதிதாக யோசியுங்கள். சிங்கம்தான் பதில் என்பது தெரியும். மீதியெல்லாம் இந்தியாவின் தேசியச் சின்னங்கள். (தாமரை- தேசிய மலர், புலி – தேசிய விலங்கு, மயில் – தேசியப் பறவை, மாம்ப​ழம் – தேசியக் கனி).

 

வார்த்தைகள்தான் என்றில்லை, எண்களைக் கொடுத்தும் கேள்வி கேட்கலாம்.

 

3, 9, 14, 21, 33

இதில் பொருந்தாத எண் என்பது 14. ஏனென்றால் பிற எண்களெல்லாம் ஒற்றைப்படை எண்களாக இருக்க, 14 மட்டும் இரட்டைப் படை எண்.

இப்போது கேள்வியில் ஒரு சிறு மாற்றம்.

 

3, 9, 12, 21, 32

இப்போது இரண்டு இரட்டைப்படை எண்கள் இருப்பதால், நாம் வேறு விதமாகத்தான் சிந்திக்க வேண்டும். 3, 9, 12, 21 ஆகிய எண்கள் 3 என்ற எண்ணினால் ​முழுமையாக வகுபடு கின்றன. எனவே அப்படி முழுமையாக மூன்றால் வகுபடாத 32 என்பதுதான் சரியான விடை. கேள்வியை மேலும் சிறிது மாற்றிப் பார்க்கலாம்.

 

3, 9, 12, 21, 35

இதில் இரண்டு விதமான விடைகள் கிடைக்கின்றன. ஒரே இரட்டைப்படை எண் 12 என்பதால் அதுவும் சரியான விடைதான். 3 என்ற எண்ணினால் முழுமையாக வகுபடாததால், 35 என்பதும் சரியான விடைதான். எதைத் தேர்ந்தெடுப்பது? இப்படி ஒரு குழப்பம் வந்தால், நீங்கள் எழுதும் தேர்வின் பொதுவான தரம் என்ன என்பதைக் கொஞ்சம் யோசியுங்கள். மிகப் பெரும்பாலானவை எளிமையான கேள்விகள்தான் என்றால், 12 உங்கள் பதிலாக இருக்கட்டும்.

 

கொஞ்சம் அதிகப்படியாக யோசித்து விடைகளை எழுதும்படியான தேர்வு என்றால், 35 என்பது உங்கள் பதிலாக இருக்கட்டும். (பள்​ளித் தேர்வில் இப்படிக் கேட்டால், இரண்டு விடைகளில் எதை எழுதினாலும் மதிப்பெண் கொடுப்பார்கள். ஆனால், மிகப் பலரும் எழுதும் தேர்வுகளில் கணினிகள்தான் மதிப்பளிக்கின்றன என்பதால், ஒரு கேள்விக்கு ஒரு விடைதான் சரியானது எனும் அளவில் அது செட் செய்யப்பட்டிருக்கும்.

சில பொதுத் தேர்வுகளில், இப்படி இரண்டு விடைகள் வரும்படி கேள்வி அமைந்ததை உணர்ந்தால், அந்தக் கேள்வியே கேட்கப் படாததுபோல, கணினியின் நிகழ்ச்சியை மாற்றியமைப்பார்கள். அதாவது இந்தக் கேள்விக்கு என்ன விடை எழுதினாலும் மதிப்பெண்​ கிடையாது.

 

ஆனால் சில பொதுத் தேர்வுகளில் அவர்களின் தர்க்கத்துக்குதான் மதிப்பு என்பது போல் அணுகுமுறை இருக்கும். அதனால்தான் மேற்படி கேள்விக்கான விடையைத் தேர்ந்தெடுக்கும்போது கேள்வித்தாளின் தரத்தையும் – அதாவது எளிமையானதா கடினமானதா எனும் கோணத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். 

 

http://tamil.thehindu.com/general/education/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81/article6256565.ece?homepage=true

Link to comment
Share on other sites

எல்லா interview களிலும் இந்த exam வைச்சு கடிக்கிறாங்கள்....graduate exam கொஞ்சம் பருவாயில்லை ஆனா MSc , MBA எண்டு சொன்ன சோதனை இன்னும் கஷ்டம் ...எதுக்கும் நல்லா prepare பண்ண வேண்டும் ...எல்லா UK companies பாவிகிறது...

http://www.shldirect.com/en/practice-tests

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையன் மைண்ட் வொய்ஸ்:   அப்பாடா .......... பெரியப்பாவுடன்  10 பேர் ஆச்சுது ....... இனி போட்டிக்கு பங்கமில்லை........!  😂 கிருபன் & பையன்.......!  🤣
    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.