Jump to content

மகேந்திரன் பிறந்தநாள்: ஜூலை 25 - யதார்த்த சினிமாவின் ஆசான்


Recommended Posts

Nx400x7_2022033g.jpg.pagespeed.ic.KgASJN

 

564xNx8_2022034g.jpg.pagespeed.ic.ZjTaJA

‘ஜானி’ படப்பிடிப்பில் ரஜினியுடன் மகேந்திரன்.

 

“இன்றைய நமது சினிமா, காட்சிகளையும், ஒலியையும் உயிரோட்டமாகக் கொண்ட ஒரு மீடியா என்பதே சரியாகப் புரிந்துகொள்ளப்படாமல் இருக்கிறது என்று கருதுகிறேன். வசனமே இல்லாமல்கூட ஒரு படத்தை ரசனைக்கு உரியதாகப் படைக்க முடியும். ஆனால், அத்தகைய முயற்சியில் ஈடுபடும் ஒரு கலைஞனுக்குக் கற்பனைத் திறன் அதிகமாகத் தேவைப்படுகிறது” - மகேந்திரன்.

தமிழ் சினிமாவில் சாதனை படைத்த படைப்பாளிகளில் மகேந்திரன் குறிப்பிடத் தகுந்தவர். தமிழ் சினிமாவில் யதார்த்தமான படங்கள் எப்போதாவது ஒருமுறை வருவதுண்டு. அவற்றில் 1970-கள் வரை குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை: ஏழை படும் பாடு (1950), அவன் அமரன் (1958), பாதை தெரியுது பார் (1960), கலைக்கோவில் (1964), உன்னைப் போல் ஒருவன் (1965), ஆலயம் (1967), புன்னகை (1971) எனச் சில. 1978-ல் முள்ளும் மலரும் என்ற மிகச் சிறந்த படைப்பின் மூலம், யதார்த்தப் படங்களுக்கு ஒரு சிறந்த பாதையை அமைத்துக் கொடுத்தவர் இயக்குநர் மகேந்திரன். இன்று பிறந்தநாள் காணும் அவரை யதார்த்த சினிமாவின் ஆசான் என்று வாழ்த்துவது தகும்.

டைரக்டர் எரி வான் ஸ்ட்ரோஹிம் 1920-களில் (படம்: தி கிரீடு, 1923) தொடங்கிவைத்த பாணி, ஒரு கற்பனைக் கதையை, யதார்த்தப் பாணியில் படமாக்குவது. ஏறத்தாழ 55 வருடங்களுக்குப் பிறகு, அதைத் தமிழ் சினிமாவில் கடைப்பிடித்து, தொடர்ந்து 12 படங்களை அதே பாணியில் தந்தவர் மகேந்திரன்.

மகேந்திரன் 1977வரை கதை-திரைக்கதை-வசனகர்த்தாவாகப் பல படங்களில் பணியாற்றியவர். தங்கப்பதக்கம் (1974), வாழ்ந்து காட்டுகிறேன் (1975), வாழ்வு என் பக்கம் (1976) போன்ற வெற்றிப் படங்கள் இதற்கு உதாரணங்கள். பெயர் பெற்ற வசனகர்த்தாவான அவர் இயக்கிய முதல் படத்தில் வசனங்களே குறைவு என்பதே அவர் எப்படிப்பட்ட படம் எடுக்க ஆசைப்பட்டார் என்பதை விளக்குகிறது.

அவர் இயக்கிய 12 படங்களில் (முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, நண்டு, மெட்டி, அழகிய கண்ணே, கை கொடுக்கும் கை, கண்ணுக்கு மை அழகு, ஊர் பஞ்சாயத்து மற்றும் சாசனம்) பல தேசிய அளவில் பாராட்டப்பட்டவை. முள்ளும் மலரும் (1978), உதிரிப் பூக்கள் (1979), மற்றும் நெஞ்சத்தைக் கிள்ளாதே (1980) ஆகியவை 30 வருடங்களுக்கும் மேலாகத் தமிழ் சினிமாவில், யதார்த்தப் படங்களுக்கான வழிகாட்டிகளாக இருந்துவருகின்றன. இந்த மூன்று படைப்புகளுடன், ஜானி (1980), நண்டு (1981), சாசனம் (2006) ஆகியவை என்னுள் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

 

முள்ளும் மலரும்

சினிமா ஒரு விஷுவல் மீடியம் என்பதைத் தமிழ் சினிமா மறந்து, பாடல்களிலும், பக்கம் பக்கமாக வசனங்கள் பேசுவதிலும் திளைத்தது. 47 வருடங்கள் இப்படிக் கடந்த பின், குறைவான வசனங்களுடன், காட்சிப் படைப்பின் மூலமும், பின்னணி இசை மூலமும் கதையை நகர்த்தி, மாபெரும் புரட்சியைச் செய்தது இப்படம். தேசிய விருதுகளுக்கு இப்படம் அனுப்பப்படாவிட்டாலும், இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்டு, பெரும் பெயரைப் பெற்றது.

 

உதிரிப் பூக்கள்

யதார்த்தமும் அழகியலும் கலந்த இப்படம், நூற்றாண்டு கால இந்திய சினிமாவின் 100 சிறந்த படங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டது. சாடிஸ்டான ஒருவனை முன்னிறுத்தி, கடைசிவரை அவனின் கதாபாத்திரத் தன்மையை மாற்றாமல், அதற்கான தண்டனையை அவன் பெறுவது ஒரு புதுமை. மிகக் குறைந்த வசனங்களுடன், பின்னணி இசை மூலம் ஒரு சிக்கலான மனநிலை சம்பந்தப்பட்ட படத்தைத் தந்தது மகேந்திரனின் சிறப்பான இயக்கத்துக்குச் சான்று. இப்படமும் தேசிய விருதுகளுக்கு அனுப்பப்படவில்லை. ஆனால், இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்டுப் பெயர் பெற்றது.

 

நெஞ்சத்தைக் கிள்ளாதே

தேசிய விருதுக்கு அனுப்பப்பட்ட மகேந்திரனின் முதல் படம், மூன்று விருதுகளைப் பெற்று வந்தது. காட்சிப் படைப்பும், ஒளிப்பதிவும், பின்னணி இசையும் ஒரு படைப்பை உன்னத இடத்துக்குக் கொண்டுசெல்ல முடியும் என்று மகேந்திரன் மீண்டும் ஒருமுறை நிரூபித்தார். தன்னம்பிக்கை உள்ள பெண்ணின் காதலைக் கவிதையாகச் சொல்லி, அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். வணிக வெற்றியுடன், பல விருதுகளைக் குழுவினருக்குப் பெற்றுத் தந்த இப்படம், உயர்ந்த தரத்திற்காக என்றென்றும் பேசப்படும்.

 

ஜானி

இரட்டை வேடங்கள் உள்ள இப்படத்தில் இரண்டையுமே நல்ல கதாபாத்திரங்களாகப் படைத்து, அதில் ரஜினிகாந்தின் சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்தார் மகேந்திரன். தேவியின் பண்பட்ட நடிப்பிலும், காட்சி அமைப்பிலும், அற்புதமான ஒளிப்பதிவிலும், இசையிலும் மிளிர்ந்த இந்தப் படம், அழகான வெகுஜனக் கவிதை.

 

நண்டு

வடக்கத்தியக் கலாச்சாரத்தையும், இந்தி மொழியையும் (இரண்டு முழுமையான இந்தி பாடல்களைப் படத்தில் வைத்து) தைரியமாகவும் அதே சமயம் சரியாகவும் உபயோகப்படுத்திய படம். நோய்வாய்ப்பட்ட ஒருவன் தனக்கான ஆதரவையும் காதலையும் தமிழ்நாட்டில் பெறுகிறான். சொந்த ஊரில் இது அவனை எவ்வாறு பாதிக்கிறது என்பதை மகேந்திரன் அழுத்தமாகச் சொல்லியிருப்பார்.

 

சாசனம்

செட்டிநாடு என்கிற சமூகத்தின் பழக்கவழக்கங்களையும், வாழ்க்கையும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்த படம். குறைந்த செலவில், நிறைவாக எடுக்கப்பட்ட இப்படம், சரியான நேரத்தில் வெளிவந்திருந்தால், பல சாதனைகளைச் செய்திருக்கும்.

இவருக்கு, இதுவரை, தேசிய அளவில் பத்ம விருது அங்கீகாரம் தராதது வருத்தம் தருகிறது. பிறமொழிகளில் இவரை விடவும் குறைவான சாதனைகள் புரிந்தவர்கள் பத்ம விருதுகளைப் பெறும்போது, தமிழ் சினிமாவின் தரம் உயர அதிகம் பங்களிப்பு செய்த இவருக்கு அத்தகைய அங்கீகாரம் விரைவில் கிடைக்க இந்த நேரத்தில் பிரார்த்திக்கிறேன்.

அவரின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக, சினிமா துறையில் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள, அவரின் புத்தகமான ‘சினிமாவும் நானும்’ என்ற புத்தகத்தையும் குறிப்பிடலாம். சினிமா துறையில் நுழைய விரும்புபவர்களும், அதில் உள்ளவர்களும், கண்டிப்பாகப் படிக்க வேண்டிய புத்தகம்.

 

இந்தப் புத்தகத்தில், “மறக்க முடியாத பெருமைக்குரிய படங்கள் என்பவை, வெற்றியும் கண்டு, காலத்தால் அழியாதவையாக மக்கள் மனத்தில் நிலைத்து நிற்கும். அத்தகைய பெருமைக்குரிய படங்கள் நமது மண்ணின் பெருமையையும் கலாச்சாரத்தையும், நம் மக்களின் நிஜமான வாழ்வையும் பிரதிபலிப்பவையாக இருக்கும். அவை நமது மண் சார்ந்த இதர கலைகளின் மகிமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும்” என்று மகேந்திரன் சொல்லியிருக்கிறார்.

இந்த ஆசானின் படைப்பாற்றலைத் தமிழ் சினிமா மீண்டும் ஒரு திரைப்படம் மூலம் காணப் போகிறது என்ற செய்தி மகிழ்ச்சி தருகிறது.

படங்கள் உதவி: ஞானம்

 

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-25-%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/article6248250.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.