Jump to content

குறிகளை அடையாளம் காட்டும் சிறுமி - தீபச்செல்வன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குறிகளை அடையாளம் காட்டும் சிறுமி - தீபச்செல்வன்

Picture-171-cropped-shadow-boxes.jpg

பள்ளிக்கூடம் செல்ல

ஓர் தெருவைக் காட்டவில்லை

காவலரணற்ற

ஓர் நகரைக் காட்டவில்லை

துள்ளித்திரிய ஒரு புல்வெளியையோ

ஊஞ்சலாட ஒரு பூங்காவையோ காட்டவில்லை

பூர்வீக நிலத்தையும்

மூதாதையரின் வீட்டையும்

காட்ட முடியவில்லை

சிறு அமைதியையோ

அச்சமற்ற ஓர் பொழுதையோ காட்டவுமில்லை

காட்டினோம் பாதுகாப்பற்ற நிலத்தை

அலைகடலையும்

எழும் சூரியனையும்

காயங்களற்ற ஒரு பொம்மையையும்

கிழியாத பூக்களையும்

பறவைகள் நிறைந்த வானத்தையும்

காட்ட முடியவில்லை

எல்லா உறுப்புக்களையும் புணர்பவர்களை

சூழ நிறுத்திவிட்டு

காட்ட முடியாதிருந்தோம்

ஒளியிருக்கும் திசையை

ஈற்றில் வழங்கியிருக்கிறோம்

ஆண்குறிகளை அடையாளம்

காட்டுமொரு காலத்தை.

0

http://deebam.blogspot.co.uk/2014/07/blog-post_25.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது வீட்டிற்கு முன்னாலிருக்கும் வீதியில் இடதுபக்கம் சுமார் ஒரு கிலோ மீற்றர் நடந்தால் பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் வீதியில் நான்காவதாக இருக்கும் பஸ் நிறுத்துமிடமான கிராமக்கோட்டடிச் சந்தியை அடையலாம்.

வலதுபக்கம் போகும்வீதி தூரத்திலிருக்கும் பிரபலமான வல்லிபுரக் கோவிலை நோக்கிச் செல்கிறது. அவ்வீதியில் உடனடியாக இன்னொருவீதி வலதுபக்கமாகப் புட்டளை என்ற இன்னொரு ஊரை நோக்கிச் செல்கிறது.

இவ்வீதிகளில் எதுவழியாகவும் அந்திவரை நடந்தால் எப்படியும் சந்திக்கக் கூடியவர்கள் இப்பகுதிகளின் குடிகாரர்களும் சண்டியர்களுமான நடுத்தரவயதுடைய சுப்பன், கதிர்காமலிங்கம், மணியம், திருநாவுக்கரசு ஆகியவர்கள். கௌரவமாக நடமாட விரும்புபவர்கள் இவர்கள் எங்கே நின்று எதைச் சொல்லி நிந்தித்தாலும் சலனங்காட்டாமல் நடந்துகொண்டேயிருக்கவேண்டும்.

இதைத்தவிர வாலிப வயதினர்களான கணேசலிங்கம், பாலநாதன் ஆகியோர் விடலை வயதுள்ள சிறுவர்களைத் தங்கள் பாலியல் இச்சைகளுக்காகப் பாவிப்பதற்காக அங்கங்கே நின்று தொடர்புகொள்வார்கள் பலவந்தமாகவும் பாவிப்பதற்கு இவர்கள் தயங்கியதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

இன்று சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு எனது ஊருக்குச் சென்றபோது இப்படியானவர்களை எந்தச் சந்தியிலும் காணக்கிடைக்கவில்லை.

சிறீலங்காவின் இராணுவ வீரர்கள் நாலைந்து பேராகத் தமது துவிச்சக்கர வண்டிகளில் அவ்வப்போது உலவுகிறார்கள். மக்கள் பலரிடம் பேசும்போது இந்த இராணுவத்தினரின் நடமாட்டத்தை விரும்பாமை தென்பட்டாலும் ஊரில் சட்டமும் ஒழுங்கும் பேணப்படுகிறது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது, உணரவும் முடிகிறது.

இப்படியிருக்கையில் சிறீலங்காவின் வடக்கில் சட்டம் ஒழுங்கு இல்லாமை நிலவுவதாகவும், பாலியல் வல்லுறவுக்களும், கேவலங்களும் அன்றாடம் கௌபோய் சினிமாக்களில் நடந்ததுபோல நடப்பதாகவும் கதைகட்டிக்கொண்டிருக்கும் வெளிநாடுகளில் வாழும் "ஓடிப்போய் ஒளிந்துவாழும்" ஈழத்தமிழர்கள் என்ன இலாபம் சம்பாதிக்கிறார்கள் என்று சிந்திக்க நாம் தயாரா......

 

 

face book ல் என்க்கு தெரிந்த நண்பர் ஒருவர் மூலம் வந்த இந்த செய்திசரத்தைபார்த்ததும் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை...30 வருடத்தின் பின் போனவர் என்றால் யார் ஆளாக இருப்பர் என்றும் யோசிக்கலாம்...பாவம் அவர் கடித்த எலும்புத்துண்டுக்கு விசுவாசமாக எழுதியிருக்கிறார்...அதை அம்மணி தூக்கிப் பிடித்திருக்கிறா...எல்லாம் ஒரே குட்டயில் ஊறின....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.