Jump to content

பாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண்


Recommended Posts

பாரதியே! உனக்கு
பெண் சுதந்திரத்தில்
நம்ம்பிக்கை இல்லை போலும்!
'புதுமைப் பெண் ' படைத்து
விழிப்புணர்வு ஏற்படுத்தினாய் !
 
வீட்டில் ஒடுங்கிக் கிடந்தவளை
தன் மகிழ்ச்சியை தியாகம் செய்தவளை
ஆணின் கட்டுக்கடங்கியிருந்தவளை
குடும்பத்தில் அடிமையாயிருந்தவளை
உன் கவிச் சாட்டையால் உசுப்பேற்றினாய் !
அதை எதிர்ப்பவர்களை சுட்டுப் பொசுக்கினாய்!
 
சேவல் கூவும் வேளையில் எழுந்து
எறும்பாய் தினமுழைத்து
மாடாய் குடும்பபாரத்தை இழுத்து
கால் செருப்பாய் ஓரத்தில் கிடந்தது
படிப்பு வாசனையில்லாமல் வாழ்ந்து
பிள்ளை பெறும் இயந்திரமாய் இருந்து
சிறைப் பறவையாய் அடைபட்டுக்கிடந்தவளை
பாரதியே! உன் கவிச் சாவியால் தானே
சிறையினைத் திறந்தாய்!
சுதந்திரப் பறவையாய்
பறக்க வழி செய்தாய்!
 
கோலங்கள் போட அவள் தான்
சுடுநீர் சாப்பாட்டுக்கு அவள் தான்
பலசரக்கு காய்கறிக்கு அவள் தான்
சமைப்பது அவள் தான்
சோரூட்ட அவள் தான்
பள்ளி இதரவேலைக்கு அவள் தான்
வீட்டுக் காவலுக்கு அவள் தான்
எல்லாவற்றுக்கும் அவள்
வேண்டும் ! வேண்டும்!
குடும்பத்திற்கு சம்பளமில்லா
வேலைக்காரியாய்
கணவனுக்கு காலம் காலமாய்
கொத்தடிமையாய்
குழந்தைக்கு தாய் உரிமையில்லா
ஆயாவாய்
மொத்தத்தில் அழகுள்ள
பொம்மையாய்
பாரதியே! ஜடமாக நடமாடியவளை உன்
கவியால் உயிரைக் கொடுத்தாய்!
 
 
 
தானாக கிடைக்காத மகிழ்ச்சி
கடனாக கிடைக்குமா ? ஏங்கியவள்
தினமும் விடிந்த பொழுதுகளை பார்த்து
தனது விடிவுக்காக ஏங்கியவள் 
பாரதியே! ரௌத்திரமுள்ள கவியால்
அவளது ஏக்கத்தை தனித்தாய்!
 
அவனுக்கு சுதந்திரமாம் இவளோ அடிமையாம் 
அவனுக்கு மகிழ்ச்சியாம் இவளுக்கு துக்கமாம் 
அவனுக்கு சுகமாம் இவளுக்கு கஷ்டமாம் 
அவனுக்கு அமுதாம் இவளுக்கு நஞ்சாம் 
 
அவனுக்கு வரவாம் இவளுக்கு செலவாம் 
அவனுக்கு உணர்வாம் இவளோ ஜடமாம் 
அவனுக்கு ஆட்சியாம் இவளோ அடங்கியவளாம் 
அவனோ கௌரவமாம் இவளோ அவமானமாம் 
 
அவனுக்கு உரிமையாம் இவளுக்கு வெறுமையாம் 
அவன் தெய்வமாம் இவளோ பக்தையாம் 
பாரதியே! உன் புதுமைப் பெண் கவியால் 
அவனுக்கு இவள் சமமென்று புதுவிதி கொடுத்தாயே!
 
அன்று 
பெண்னென்றால் இழிவாய் பேசியவர்கள் 
இன்று 
பெருமை கொண்ட 
புதுமை பெண்ணாக மறுஜென்மம் 
பெற்றுவிட்டாள் !
 
அவள் பூமாதேவி தான்
பொறுமை மிக்கவள்  தான்
பூப்போல் இதயம் கொண்டவள்
குடும்பத்தை பொறுப்பை நடத்தியவள்
தன சுகத்தை தொலைத்து நின்றவள்
பாரதியே! உன் சக்திமிக்க கவியால்
பெண்ணை எழுச்சி பெறச்செய்தாய்!
 
ஆணுக்கு நிகர் பெண் 
உன் கனவு பலித்துவிட்டது 
இறக்கை கொண்ட 
கூண்டுப் பறவையாய் இருந்தவள் 
சுத்ந்திரப் ப்றவையாக உலகை 
வலம் வருகிறாள் 
உன் கவியல்லவோ  
அவளுக்கு இறக்கை இருப்பதை உணர்த்தியது 
பறக்கும் சக்தியைக் கொடுத்தது.
 
ஆண் பார்க்கும் வேலைகள் 
பலவும் அவள் பார்க்கிறாள் !
பெண் பார்த்த வேலைகளை 
ஆண் பார்க்க வேண்டுமல்லவா!
கற்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் 
பொதுயென்றாய்
வேலைகளும் உணர்வுகளும் 
பொதுவென்று சொல்ல மறந்தாயே!
 
புதுமைப் பெண்ணுக்கு 
பழமை ஆண் 
மனப் பொருத்தம் இல்லையே!
பழமையில் ஊறிய ஆணுக்கு 
புதுமை ஆண் விதியை  யார் வகுப்பது!
 
புதுமை பெண்ணுக்கு 
புதுமை ஆண் தானே வேண்டும் !
பாரதியே! நீர் இருந்தாலும் 
புதுமை ஆண் கட்டாயம் கொடுத்திருப்பாய்!
உன்னை மனதில் எண்ணி 
புதுமை ஆண் வெள்ளோட்டம் விடுகிறேன்.
 
இவன் புள்ளி வைக்க அவன் கோலம் போட வேண்டும் 
இவன் பால் வாங்கிவர அவள் காபி போட வேண்டும் 
இவன் தண்ணீர் பிடிக்க அவள் சுடுநீர் போட வேண்டும் 
 
அவள் காய்கறி வாங்கிவர அவன் நறுக்கித் தரவேண்டும் 
அவள் துணி துவைக்க அவன் காயப் போடவேண்டும் 
அவளை மகிழ்விக்க அவன் அன்பு காட்டவேண்டும் 
 
அவளிடம் பழக அவன் நட்பாய் மாறவேண்டும் 
அவள் சுதந்திரத்திற்கு அவன் ஆதரவு தர வேண்டும் 
அவள் செய்யும் வீட்டு வேலைக்கு அவன் உதவ வேண்டும் 
 
அவள் பூவானால் அவன் மணமாய் மாறவேண்டும் 
அவள் தேனானால் அவன் இனிமையாக வேண்டும் 
அவள் உடலானால் அவன் உயிராய் இருக்கவேண்டும் 
 
அவள் மலரானால் அவள் வண்டாய் இருக்கவேண்டும் 
அவள் கொடுக்கும் குழந்தைக்கு அவன் அரணாக வேண்டும் 
அவளை ஆயுள் முழுதும் காக்க அவன் உறுதி கொள்ளவேண்டும் 
 
அவள் கண்கலங்காமல் இருக்க அவன் இரக்கம் கொள்ளவேண்டும் 
அவளை தன பாதியாக அவன் நினைக்க வேண்டும் 
அவளின் இதயத்திற்கு அவன் துடிப்பாய் இருக்கவேண்டும் 
 
 
 
அவளின் தூய்மை அன்புக்கு அவன்  பொய் கலவாமை வேண்டும் 
அவளைத் தன வாழ்க்கைக்கு எற்றமாய் அவன் நினைக்க வேண்டும் 
அவள் இல்லாமல் நான் இல்லை என்று அவன் உணரவேண்டும் 
 
அவளை அமுதசுரபியாக அவன் நினைக்கவேண்டும் 
அவள் செல்வம் தரும் பொக்கிஷமாய் அவன் நினைக்கவேண்டும் 
அவளை தன பிரச்சனைக்குத் தீர்வாய் அவன் நினைக்கவேண்டும் 
 
அவளை தன குடும்பத்திற்கு குத்துவிளக்காய் அவன் நினைக்கவேண்டும் 
அவளை வாரிசு கொடுக்கும் வள்ளலாய் அவன் நினைக்கவேண்டும் 
அவளை தனது வாழ்க்கைக்கு ஆலமரமாய் அவன் கருதவேண்டும் 
அவளை எல்லாம் கொடுக்கும் காமதேனுவாய் அவன் கருதவேண்டும் 
 
அவளுக்கு இவன் உயிராய் 
இவனுக்கு அவன் உயிராய் 
ஈருயிரும் ஓருயிராய் 
எந்நாளும் இணைந்தே வாழ 
புதுமை ஆணாக புரட்சி வேண்டும்.
 
குடும்ப சச்சரவுகள் களைய 
வேண்டாத் குழப்பங்கள் நீங்க 
சந்தேக பிசாசை விரட்டியடிக்க 
சரிநிகராக மதிப்பளிக்க 
 
வரதட்சணையை வேரறுக்க 
புரிதலை ஓங்குவிக்க 
விவாகரத்து சாத்தானை விரட்ட 
இருவரும் ஓருயிராய் மாற 
 
  வேண்டும் வேண்டும் 
புதுமை ஆண் வேண்டும் வேண்டும் 
புதுமைப் பெண் கொடுத்த பாரதிக்கு 
புதுமை ஆண் பரிசாக தருவோம்.
 
வையகம் வாழ்த்தும்
புதுமை ஆண் புரட்சி படைப்பான்..
 
 
 
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.