Jump to content

பதக்கடச் சாக்கு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பதக்கடச் சாக்கு...



பட்டுச் சேல
பள பளக்க..
பொட்டிக்குள்ள
கம கமக்க - புள்ள
புரிசனுக்கு - நீயும்
சோறு கறியா
கொண்டு போறாய்...?

வெயில்ல ஒம்புரிசன்
புழுங்கிப் புழுங்கி
நிப்பாருண்டு
குலுங்கிக் குலுங்கி நீயும்
ஓடோடிப் போறாய் போல...

சும்மாடு பிரியிற
அளவுக்கு - நீயென்ன
கோழிக் கறியா
கொண்டு போவாய்...?



ஆசக்கி
அறுத்தாப்புக் கெழங்கும்
பொட்டியான்
பொரியலுந்தானே..!
பொச்சாப்பொல - நீயும்
பொரிச்சிக்
கொண்டு போவாய்...

மாட்டின் சேட்டையிம்
மருதமுனச் சாறனையிம்
மடிச்சி மச்சான்
பொரயில
போட்டுப்பொட்டு
வீடியும் வாயுமா
மம்பட்டியும் கையுமா
வெம்பி வெம்பி
நிப்பாருண்டு
தேம்பித் தேம்பிப்
போறாய் போல...

புது மாப்புள
புறு புறுப்பாருண்டு
புசு புசுன
சமச்செடுத்து
சட்டுப் புட்டுன
பொறப்புட்டுக்கு



சலங்க சல சலக்க - நீயும்
கிளு கிளுப்பாப்
போறியோ...!

புதுத் தூப்பானுல்லவா..?
நல்லாத்தானே தூக்கொணும்
என்னதான்
பத்திப் பதறி
நொந்து வெந்து
வேகா வெயிலுக்க
வேருவ சிந்தி
வேல செஞ்சாலும்
பதக்கடச்
சாக்குதாங் கா - புள்ள
நம்மளுக்கு...

மெய்தானா கா..
வக்கட ஒண்டு போனதுக்கு
பதக்கடச் சாக்குலொன்டக்
கொறப்பனுண்டு
சொன்னாராமே
பொல்லாத போடியாரு...
எலிப் பாழிய விட
தனிப்பாழி நல்லம் புள்ள...



காக்கா...!


உப்பட்டி பெரட்டுற
பொண்டுகாள் - போடியார்
பொரயில படுக்காராம் ஒங்களப்
பொறத்தியால
கொஞ்சம் வரட்டுமாம்
கவலப்படோணாதாம்
கட்டுல ஒண்டக்
கண்ண மூக்கப்
பாத்துத்தாறாராம்...



கண்ண மூக்கக்
காட்டி நான்
கற்ப வித்துப் பொளெக்கணுமன்டா
நானேங் காக்கா
கதிரு பொறக்க வரோணும்..?
சொதமயா நானிருந்து
சொகமாச் சோறு திம்பனே...!

கதிரு பொறக்கியாவது
கற்பொட வாழொனுண்டா காக்கா
சொணயப் பாத்தமண்டா
சொறண கெட்டுப்
பெய்த்துருண்டா காக்கா...



எப்புடிப் புள்ள பொளப்பெல்லாம்...



எப்புடிப் புள்ள
பொளப்பெல்லாம்..?

ஆதங்காக்கா
அத ஏங்காக்கா
கேக்காய்.. - என்ட
அல்லச வட்டயெல்லாம்
என்னக் கை கழுவி
அல்லல் பட
வெச்சாலும் - என்ட
கொமருகள நான்
அநாதயா அலைய
உடமாட்டங் காக்கா..

என்ட புரிசந்தான்
என்னையிம்
எம் புள்ளையளையிம்
கைகழுவி உட்டுப்பொட்டு
கண்கெட்டுத்
தொறாவித் திரிஞ்சாலும்
என்ட கொமருகள
அல்லோல கல்லோலமா
அலஞ்சி திரிய - நான்
உட மாட்டங் காக்கா...



தொறாவித் தொறாவி
தெராயும் பொன்னானும்
கிள்ளி வித்துப் பொளப்பு
நடத்துறங் காக்கா...

ஆதங்காக்கா
ஆருமென்ன செய்யிற..?
தொல்லதாங்; காக்கா...
கல்ல காயப்படாதே
இதுக்காகவாவது
பல்லக் கடிச்சிக்கி
புல்லப் பூண்டப் புடிங்கி
நெல்லக் கதிரப் பொறக்கி
காலத்த நான்
கடத்துறங் காக்கா...

செல்லப் பேசக்
கொமருகளும்
நாலஞ்சி - அதால
அஞ்சியஞ்சி
வாழ்றங் காக்கா...

அதுக்குள்ள
நெஞ்சி வருத்தம் வேற..



மிஞ்சி மிஞ்சிப் போனா
அரிசப் பொடவய நாம தேடலாம்
ஆதனவாதனந் தேடலாமா காக்கா..?
நாமளும் போனா
இதுகளுக்கு கஞ்சி ஊத்துற
ஆரு காக்கா...?

நம்மளுக்கிட்ட
காசி பணமென்ன
பன்னப் பாயப் போல
கட்டுலயா கெடக்கு
சீதனத்த ஆதனத்தக்
குடுத்தாவது
கல்யாணத்த முடிக்க..

எவந்தான் வந்து
கொமருகளக்
கரசேக்கப் போறானோ...!

வசதி இல்லாமப்
பொறந்தாலும் - நல்ல
வைராக்கியத்தொட
பெத்திரிக்கங் காக்கா...




என்ன செய்ற
நம்ம சந்தக்குல
போகும் வரெக்கிம்
அட்ட ஏறினாலும்
பாம்பு கடிச்சாலும்
அல்லைக்க போய்
பன் புடுங்கிப் பாயௌச்சி
விப்பமுன்டு
வாறங் காக்கா...

இதுக்கு மேலயிம் நம்மளால
என்ன காக்கா செய்யேலும்...?

ஆதங் காக்கா வாவங் காக்கா..
இருந்து வாய்க்க
போட்டுக்குப் போகலாம்...




கொச்சயாத் தெரியல்லியா புள்ள...



பள்ளிக் கடப்படிய
நிக்கிறியே புள்ள - ஒனக்குப்
பதினாறு வயசி போல..

பச்ச அழகோட பிச்ச எடுக்குறது
கொமரே..,என்ட கோதும மாவே..,
கொதறத்து மேஞ்ச கிளியே - ஒனக்குக்
கொச்சயாத் தெரியலியோ! - இல்ல
சொல்லித்தர சாதி சனம்
கூட இல்லியோ..?



கத்துறத உட்டுப் போட்டுக்
கதயக் கொஞ்சம் கேளு புள்ள..

கலியாண வயசொனக்கு
கலங்காம கண்ணத் தொற புள்ள..
கவலய உடு புள்ள..
காக்கா வந்திருக்கன் - ஒன்ட
கதயக் கொஞ்சம் சொல்லு புள்ள...

மாளிகைக் காடு - என்
ஊரு காக்கா..
மங்காத பாத்தும்மா
பேரு காக்கா..
கடக்கர ஓரம் - எங்கட
ஊடு காக்கா..
களப்புக் கர - என்ட
சொத்து காக்கா..
கருவாடு காய வெக்கிற
தொழில் காக்கா..
தம்பி தங்கச்சோட - நாங்க
அஞ்சி பேரு காக்கா..
உம்மா வாப்பா - என்ட
உசிரு காக்கா..
உதுமாலெவ்வ - எங்க
வாப்பாட பேரு காக்கா..



பீத்தக்குடிசயில இருந்தாலும்
எங்க வாப்பா - மவுத்தாப் போன
தங்க வாப்பா வயிறு காய
வழக்கல்ல காக்கா...

உப்புத் தண்ணி வந்து
ஊரோட என்ட
உறவுகளயெல்லாம்
ஒட்டு கூட இல்லாம
ஒழிச்சிப் போட்டுப்
பெயித்து காக்கா...

வசதி ஒண்டும்
இல்ல காக்கா..
கூலிக்கு வல இழுத்துக்
குடுக்கிற மீன வாங்கி
வாற வழியில - ஆராலும்
தாற காசிக்கி
குடுத்துப் போட்டு
கூழக் குறுணலக்
குடிச்சாவது
குடும்பத்தோட
ஒண்டா மண்டாக்
கெடந்தங் காக்கா..



ஆனா இப்ப...
பராமரிக்க உம்மா இல்ல
பசி போக்க வாப்பா இல்ல
பாசத்துக்கு - கூடப்
பொறந்தவர்களுமில்ல
படுக்குறத்துக்குக் குடிலுமில்ல
பத்தஞ்சி காசிமில்ல
பாக்கக் கேக்க ஆளுமில்ல
பட்டினி என்றாலும் பறவாயில்ல
பத்தினியா இரிப்பமிண்டு
பக்குவமா நானிரிக்க
அல்லச வட்டயெல்லாம்
அசிங்க அசிங்கமா
வம்பு தும்புக் கதயால - வெறும்
வதந்திதான் பரவுது காக்கா...
வகுத்தில என்னமோ
வளருதுண்டு வாயில கைய
வெக்காளுகள் காக்கா...

பல நூறு காசிக்கி
பாய நான் விரிச்சிரிந்தா
ஒண்டு ரெண்டு ரூபாய்க்கி
சம்மாந்துறச் சந்தியில
சந்தி சிரிக்க நானும்
பள்ளிக் கடப்போரம்
கை விரிச்சி நிப்பனா காக்கா...?



நாயிம் கறிச்சட்டியிம்...


குடில் கட்டிக்
குறுணல் களவெடுத்து
குஞ்சிச் சோறாக்கி
குந்தியடிச்சான்
விளையாடினத - நீ
மறந்துட்டியோ...!

கருவாடு களவெடுத்து
கடவெச்சி விளையாட
கடனுக்கு வாங்கி வந்து
கலவனாப் போட்டு
முருங்க லெக்கறி சுண்டி
மூசி மூசினத் திண்டத - நீ
மறந்துட்டியோ...!



விளையாட்டாய் சம்மந்தம் பேசி
மல்லிகையால்மணப்பந்தல் செய்து
ஆட தோடயால அலங்கரிச்சி
வாழ நாரால தாலிகட்டி
நானொன்னக்
கலியாணம் முடிச்சதயிம் - நீ
மறந்துட்டியோ...!

புது மாப்புள
பொண்ணுன்டு - நம்மள
தனியான அறெக்குள்ள
பூட்டி வெக்க
ஆளாள் முகம்பாத்து
சிரிச்சி மகிழ
சீவன் போய்
சீவன் வந்தத - நீ
மறந்துட்டியோ...!

புரிசன் பொஞ்சாதிண்டு
பூசி மினிக்கி - நாம ரெண்டு பேரும்
வாருவக்கட்டு வண்டியிலேறி


வடிவா ஒரு கை
சந்தப் புடிக்க - மறு கை
சள்ளயில இரிக்க
சாதிசன சந்தியெல்லாம்
சுத்தியடிச்சித் திரிஞ்சதையிம்..,
வேலியில காஞ்ச
வெலா ஊட்டுக் காறிட
பாவாடய - நீ
களவெடுத்து வந்து காட்டி
அவரு வாங்கித் தந்த..
அவரு வாங்கித் தந்தண்டு
சும்மாச் சும்மா
சொல்லுவியே அதையிம் - நீ
மறந்துட்டியோ...!

ஒளிச்சி விளையாட
நீயென்னக் கண்ட போதும்
காணாத மாதிரிக்
காட்டிக் குடுக்காமப் போனதயிம்
தும்பி புடிச்சதயிம்
வண்ணாத்தி புடிச்சதயிம்
வாய்க்கால் வழிய
வால் மோக்க புடிச்சதயிம்


வெளவாலக் கண்டு
வால் தெறிக்க
ஓடினதயிம் - நீ
மறந்துட்டியோ...!

கப்பல் தும்பி - உன்
கையக் கடிச்சி ரெத்தம் வர
கை விரல நான் சூப்பினதயிம்..,
கள்ள மாங்கா
களவெடுக்க
காலைக் காறன் கண்டு
கட்டிப் போட
கடப்படிய நிண்டு கத்தினதயிம் - நீ
மறந்துட்டியோ...!

செரட்டப்பம் சுட்டதயிம்
நொண்டி விளையாடினதயிம்
நொந்துராம நாம
நகமும் சதையிம் போல
நாயிம் கறிச் சட்டியிம்
விளையாடினதயிம் - நீ
மறந்துட்டியோ...!




பன மாடு கட்டினதயிம்
பம்பரம் சுத்தினதயிம்
பட்டம் உட்டதயிம்
நூலறுந்து போக - நீயென்ட
கையக் கடிச்சதயிம்
பல்லப் பதிச்சதயிம் - அதயே நான்
பரிசா நெனச்சதையிம்
பதிவப் பாத்து - நீ
பதறியழுததையிம்
மறந்துட்டியோ...!

மழையில நலஞ்சதயிம்
மண் கட்டி விளையாடினதயிம்
கணிதக் கொப்பியக்
கப்பலுட்டே முடிச்சதயிம்
அடி வாங்கி அழுததையிம்
மூக்கோடி வர
நாக்கால நானத நக்க
அதப்பாத்து - நீ சிரிச்சதயிம்..
பனம் பழம் நீ சூப்ப
பல்லிடுவலில் தும்பு பொறுக்க
கை விரல் விட்டு நானதக்
கந்தப் பாத்ததையிம் - நீ
மறந்துட்டியோ...!



“வட்டத்தில் எத்தின பேர்”
என்று நான் கேட்க
“ஆயிரம் பேர்”
என்று மற்றவர்கள் சொல்ல
“ஆரப் புடிக்க”
என்று நான் கேட்க
“என்னப் புடி”
என்று நீ மட்டும் சொன்னதையிம்
நானுன்னப் புடிக்க - நீயோ
கல்லா மலையா
நிண்டதையிம் - நீ
மறந்துட்டியோ...!

“வாழ மரத்துலேறுவேன்”
என்று நான் சொல்ல
“வழிக்கி உழுவாய்”
என்று மற்றவர்கள் சொல்ல
“தென்ன மரத்திலேறுவேன்”
என்று நான் சொல்ல
“தெறிச்சி உழுவாய்”
என்று மற்றவர்கள் சொல்ல
நீயொருத்தி மட்டுமவர்களை
துரத்தித் துரத்தித்
துப்பினதைத்தான் - நீ
மறந்துட்டியோ...!




அடியேய் வாயாடி...


தாக்கத்தி வாயாடி
தரமான கததான்டி
தாப்பரியம் தெரியாம
தல குனிய வெக்கியாடி...?

தங்கூசி நாக்காடி
தறுதலப் பேச்சாடி
தங்க மச்சான் என்ன
தவி தவிக்க வெக்கியாடி...?

வெள்ளாம நீயாடி
வேலியோரம் நிப்பாய்டி
வெளியால நான் வந்தா
வெளங்காமப் போறியாடி...?

முள்ளிக்காய் மூக்காடி
முனு முணுத்த வாயாடி
முகத்த நீ காட்டாம
முட்டியால மறெக்கியாடி...?


வெங்காயக் குரலாடி
வெத்தலாக்கு நானாடி
வெக்கம் தொறந்து கேட்டா
வெசறொழும்ப வெக்கியாடி...?

பதினெட்டு வயசாடி
பனங் கருக்கு உதடாடி
பாழான சிரிப்பால
பண்ண கொலய வெக்கியாடி...?

கருவண்டுக் கண்ணாடி
கடங்காறன் நானாடி
கண் சிமிட்டி நீயென்ன
கதி கலங்க வெக்கியாடி...?

வண்ணக் கிளி நீயாடி
வயசுக்கு வந்திட்டியாடி
வயித்துல என்ட
வாரிச நீ சுமக்கியாடி...?

சொறிக் கல் இதயமாடி
சொண கெட்ட மனமாடி
சொந்த மச்சான் நான் கேட்டா
செருப்பால அடிப்பியாடி...?



மீ . கதீசா உம்மா..



கதீசா உம்மா - நீ
கடும் ஆளாமே..!
காரியத்துல
கண்ணும் கருத்துமா
கரிசனையா இருப்பியாமே..!
கிராமத்துல
கீரச் சேனபோட்டு
ஊரெல்லாம்
கொடுப்பியாமே..!
கீரக் கறிக்குள்ள
கார மீன் கருவாட்டப் போட்டுக்
கடஞ்சி ஆக்குவியாமே..!
இப்படிதாங் கா ஊரெல்லாம்
பேசிக்கிறாங்க...!

மீன் புடிக்கிற
இசிமாலெவ்வதான்
ஒண்ட புரிசனென்டாலும்
மீ . கதிசா உம்மா
ஊருக்க ஒனக்கு
ஒரு மௌசு இருக்குதாமே..!
கிராமத்துல கீர்ற
புள்ளடிக்கெல்லாம் நீதானாமே
இது செய்வியாம் - இதால
இலக்கிசன் காலத்துல
ஒன்ட இதே வேறயாமே..!
இப்படிதாங்கா ஊரெல்லாம்
பேசிக்கிறாங்க...!


கேள்விப்பட்டன் மெய்தானா கா..
ஒண்ட மகள் மூணாவது
வருத்தமாக் கெடக்காமே..!
என்னகா செய்ற
காலமெல்லாம் கெட்டுப் போச்சி
மூடக் கொள்கயெல்லாம்
முத்திப் போச்சி
செய்வின சூனியமெல்லாம்
விஞ்சிப் போச்சி
எல்லாமவண்;ட சோதன கா..!

கொளறாமக்
கண்ணத் தொற கா..!
நீயே கொளறினா..
தொற..தொற.. இஞ்சப்பாரு.. ஆ..
வீரமா இருக்கணுங் கா...
வீண் வம்பு வந்தாலும்
வீரமா இருப்பியாமே..!
இப்படித்தாங்கா ஊரெல்லாம்
பேசிக்கிறாங்க...!

மறுகா மருமகனும்
மாறிட்டானாமே..
ஆறேழு வருசமா அவன்ட
புள்ளயளும் ஒனக்குட்டதானாமே..
எப்படி கா அந்தப்
பண்ணைய ஒதறாமப் பதறாமப்
பாதுகாக்காய்..?
பத்தினிதாங்கா நீ..!
ஆறேழு மரெக்கால


அண்டக்கே ஆக்குவியாமே..!
அல்லச வட்டயெல்லாம்
அள்ளியள்ளிக் குடுப்பியாமே..!
இப்படித்தாங்கா ஊரெல்லாம்
பேசிக்கிறாங்க...!

அந்தக் காலத்துல
வண்டி கட்டி
வயலுக்குப் போய் நாத்து நட்டுக்
கள எடுத்து - வெட்டிக் கட்டி
சூடும் அடிப்பியாமே..!
காடு வெட்டிக்
கண்டமும் புடிப்பியாமே..!
அப்பஞ் சுட்டு அரிசி வித்து
அடுப்படி அடுக்கௌயில
அடுக்கி வெச்ச காசயெல்லாம்
படிப்புக்குப் புள்ள கேட்டா
படிப்படியாக் குடுப்பியாமே..!
படிக்க வெச்ச பலந்தாங்கா
ஒண்ட புள்ளயளெல்லாம்
யூனிசிட்டி போய்
பட்டம் வாங்கி நிக்கிதுகள்..
பட்டணத்துல மாப்புளயிம்
காட்டிக் குடுத்திட்டியாமே..!
இப்படித்தாங்கா ஊரெல்லாம்
பேசிக்கிறாங்க...!

நல்ல கிழவிதாங்கா நீ
இல்லாம தள்ளார்ற வயசிலயிம்
தவழுற பேரன நீ பேதலிக்க


உட்டுராம ஒம்புள்ளயா நெனப்பியா கா..?
இருந்தாலும் கதீசா உம்மா
ஒண்ட கெழவனோட ஏதோ
கிசு முசுச் சண்டயாமே..
கோபத்தப் பாரு!
மூக்க நீட்டி ஏங்கா
முனுமுணுக்காய்..
சுண்ணாம்புச் சூழையில சுட்ட
நாக்கக் காட்டி ஏங்கா நாருரிக்காய்..
பல்லயேன் பட படக்க
நீ கடிக்காய் - கோவ் சும்மா
பல்லாகாயிது போயிலயால பூசி மினிக்கி
வெத்தலயச் சாறாக்கி
பாக்கக் கடிச்சிப்
பதக்கம் வெண்ட பல்லுலவா..?
கடிப்பாய் கா.. கடிப்பாய்
புரிசனக் கெழவனுண்டு
சென்னத்துக்கே இம்பட்டுக்
கோபமா கா..!

பின்ன என்ன கா..
சும்மாவா ஒன்னப் பாத்தாரு
காட்டுடும்புக் கறியும்
முயல் மொளகாணமும்
மானும் கூட சுட்டு வருவாராமே..!
கொக்கும் காடாவும்
கொரச்சி நெறயக்
கொண்டு வருவாராமே..!
களப்புக் கொக்குச்சானும் வெராலும் வெலாங்கும்
வாலக்கர்ர ஆத்துல வேளக்கி வேள



புடிச்சி வருவாராமே..!
இப்படித்தாங்கா ஊரெல்லாம்
பேசிக்கிறாங்க...!

வயசான காலத்துலயிம்
வடிச்சல் மீனும்
வாய்க்கால் வள்ளலும்
ஆத்தோரப் பொன்னானும்
பொழுதோட கிள்ளி வருவாராமே..!
இறுக்கு மாங்காய சாறனுல
இறுக்கி வருவாராமே...!
களப்புல வந்தவரு
கழா இறுத்துப்போட்டு வாறத்துக்கெடையில
பொட்டியானப் பொரிச்சிம்
சுங்கானச் சுண்டலுக்க போட்டு
சுண்டியிம் - வெப்பியாமே..!
புளி மாங்காயும் போட்டுப்
புரிசனுக்குப் பாலாணமும்
காச்சி வெப்பியாமே..!
எனக்கென்னகா தெரியிம்..?
இப்படித்தாங்கா ஊரெல்லாம்
பேசிக்கிறாங்க...!

மனுக் கனத்துட்டு கா..
ஒலகமினி அழிஞ்சிரும்
ஊடல உட்டுப் போட்டு புரிசனோட
கூடியிரிகா.. மீ.கதீசா உம்மா..!
உசிரு கெடந்தா
இன்சா அல்லாஹ் புரிசனோடதான்
அச்சிக்கிம் போகணும்...



வரட்டுமந்த வளப்புணி...


வாப்போவ் வாப்பா...
நம்மட ஊட்ட - ஏஏ..
வெள்ளச் தாறனும்
தேட்டும் போட்டுக்கு ஏஏ..
சிக்கிலட்டும்
குடிச்சிக் குடிச்சி
செவத்த.. ஏஏ.. செவத்த
மொட்டச் சைக்கில்ல
ஒரு மாமா வாறல்லவா...?


அவரு வந்து ஏஏ..
எனக்கி டொவி
தந்தேய்... மறுகா...
நம்மட மூத்த லாத்தாட...
மொகத்தில..
பருப் பொக்களமாமிண்டு
ம்மோவ்... ம்மோவ்....
பாவம்... பாவமிண்டு
தொறாவியிம்
பாத்தகாப்பா...

என்ன நல்ல மாமா ஏஏ..

ஆரடியவன் வரட்டுமந்த
வளப்புணி கணுவுல
கட்டிப்போட்டு கசையடி
குடுக்கிறத்துக்கு

ஏ..ங்காப்பா... அந்த
மாமாக்கு
ஏசிறிங்க...?


ïகாக்காட காட்டவுலியா...



எங்க காக்கா போறாய்..?
காத்தாண்ட வட்ட
காட்டவுலியா சியாரத்துக்கு
கந்தூரி திங்கயா போறாய்..?
கடும் பாவங் காக்கா..
கதயக் கொஞ்சம் கேளு காக்கா...

கழி நெலத்துல
கால் பதிச்சி - நீ
நெடிய சிறுவாலோட நிண்டு
மொலப் பால்
மறந்ததுல இருந்து
வேகா வெயிலுக்க
வேருவ சிந்தி
வெயில் பால் குடிச்சி
வெள்ளாம வெளஞ்சது
ஆரால காக்கா..?
காட்டவுலியாட
கபுராலயா..?
படியளக்குற - அந்த
றெப்பின்ட கபூலாலதானே..!
ஓதி ஒனக்கித
ஒங்கம்மா தரலியா காக்கா..?
பாதி வாழ்க்கைய
பாழாக் கழிச்சிட்டியே..!




கல்லாத கொணந்தாங் காக்கா..
கல்லறைய வணங்குறாய்..!
கல்லால - நீ
கபுரக் கட்டி
குத்து வெளக்கேத்தி
மணக் குச்சி கொழுத்தி
மந்திரம் ஓதி
மடத்தனமா இண
வெக்காத காக்கா..
ஆகுறத்துல ஒனக்குத் தோடுதொண
இல்லாமப் பெயித்துரும்...

மய்யதீன் ஆண்டவரா காக்கா..
அயாத்து நபியா காக்கா..
மஸ்தாரு வாப்பாவாம்
சீலக்கர மஸ்தானாம்
சாஹ{ல் அமிது வலியுல்லாவாம்
கலந்தர் காசீம் அப்பாவாம்
நாப்பது மொழத்துல
அவுலியாவாம்..
நம்புறியா காக்கா -நீ..!
நல்ல கததான்
நாசமாப் பெயித்துருவாய்..!
இனியாவது
தௌபாச் செய் காக்கா..
தயாள நாயன்
தாராளமாப் பொழபொறுப்பான்.. .





பாத்துகா பாத்தும்மா
பாத்து.. .


வாதக் காலோட ஏங்கா..
வட்ட வழிய போறாய்..?
கள எடுத்தே.. ஒண்ட
காலம் போகுது கா..!
பாத்துகா
பாத்தும்மா பாத்து...!



களச்சே பெய்த்தாய் கா..
கவலயாத்தான் இருக்குது கா..
ஒண்டமனிசன்
ஒமறுக் காக்கா இருந்திருந்தா
ஒனக்கிப்புடி ஆயிருக்குமா கா..?
ஓடி ஓடி ஒன்ன
ஒசத்தியாத்தானே
வெச்சிருந்தாரு..!
வண்டி மாட்ட விட
நாயோட்டமும்
சில்லறப் பாச்சலுமா
அவருக்குத்தாங்கா ஓட்டங்கூட
நாயாப் பேயா அலஞ்சொன்ன
நல்லாத்தானே பாத்தாரு
என்னகா செய்ற..
கஸ்டந் தெரியாம
காத்துப் போல அவரு
காலஞ் சென்டு பெயித்தாரு
கக்கிசமெல்லாம்
ஒனக்குத்தாங்கா...!

இளம் பிள்ள வாதமோ - ஒண்ட
கடைசி மகன் கறுவலுக்கு..
அவனச் சிறுவாலோட கண்டங் கா..
கடப்படிய அவன்
சவுத்த ஒடம்போட



சட்டயிமில்லாம
சக்கப் பணிய கெடந்துக்கிட்டு
வாற போற ஆக்களுக்கிட்டயெல்லாம்
மாமா மாமாண்டு
மடிப்பிச்ச கேட்டாங்கா..!
என்ட சேப்புக்கயிம்
சல்லிச் சதக் காசிமில்ல
ஒண்டையும் நெனச்சிக்காத கா..
சோலியாப் போயிருந்தன்
சோகமா இருந்திச்சி கா..
பாத்துகா பாத்தும்மா பாத்து...

மூத்த மகன் மம்மது
கல்லறுக்கப் போறான் போல
காசொரு சதமும் தாறலியாமே !
கஞ்சாக் காசினோட
காலெக்க கண்டங் கா..
கள்ளெறக்குற
காவாலியளோட சேந்து கந்தறுந்து
களிசறபத்திப் பெயித்துருவாங் கா..
கவனமாப் பாத்துக்ககா...

பொம்புளப் புள்ளயளெல்லாம்
தலப் பர்ற காலங்கா..
வேலியக் கொஞ்சம்
வெலகாமக் கட்டிவெய் கா..



பீத்தக் கிடுகுகள
பிச்செறிஞ்சி போட்டு
பெசகாமக் கிடுகௌச்சி
பெலக்கயாக் கட்டி வெய்கா..
ஆருமில்லாத நேரத்துல
ஊரா மாடு வந்து
பச்சப் பயிர எல்லாம்
மேஞ்சி போட்டுப் பெயித்துருங் கா..
கவனங்கா.. கவனம்;
ஆண் தொண இல்லாத ஊட்ட
அரச காணி போல
வந்து மொய்ப்பானுகள்...

அது செரி கேள்விப்பட்டன்
மெய்தானா கா..!
கடக்கிப் போன ஒண்ட
மூத்த மகள் கதீஜாவ
கடனுக்குச் சாமான் தாறனுண்டு
கடக்காறக் கவுறு
கையடிக்கப் பாத்தானாமே..!
கவனங்கா பாத்தும்மா கவனம்..!
கன் பெஞ்சாதி வளத்தா
களிசறண்ட நெனப்பு போல
ஊரானுக்கு...!




முட்டக் கோப்பி.. .




மச்சி நானொன்ன
மாலா மகரி ஒகுத்து
மனசால நெனச்சி வந்தன்
மாமாட மாடு குத்தி - என்ன
மகுத்தாக்கப் பாத்திச்சி கோ...!

வாங்கு பறிய மட்டும்
கதச்சிக்கி நிப்பமுண்டு
கடுவன் நான்
கடவலோரம் வந்தன்
ஒங்க வாப்பாவோ - என்னக்
கடவலோட
கதச்சனுப்பப் பாத்தாரு..!
கதிசம்பெங்கண்டு
கருசனயாக் கேட்டன்
வுழுச் செய்தாய் போல
செம்போட நீ
கெணத்தடிய இண்டாரு..

எண்ட றகுமானே !
என்ன கத செல்லுறண்டு
எனெக்கின்டா வெளங்கல்ல கோ..!



..ம்மா சென்ன நாளெக்கி
மாவுடிக்கிறயாம் மாமிய
மறந்துராம வரட்டுமாமுண்டு
இடியுளுந்த பொய்யச் சென்னன்...
சூடடிச்ச நெல்லுக் கெடக்காம்
வந்தொங்களக்
கட்டிக்கிப் போகட்டுமாம் இண்டு
கட்டி நல்ல பொய்ய உட்டன்...
வாப்பாட கத்தமாம்
றொட்டி சுட்டுப் பகுரோணுமாம்
புதிருச் சாப்பாடாம்
புதூட்ட குடி பூர்ரயாம் இண்டு
புசு புசுனப் புளுகித் தள்ளினன்...

பல்லுக்கலப்ப வாயன்
அரவடிச்ச மொட்டத் தலயன்
சேனவட்டச் சொத்தக் காறன்
ஓடு தண்ணி மூளக்காறன் - ஒங்க வாப்பா
எண்ட உணர்சியளொன்டும்
புரியல்ல கோ...!
வருவாய் வருவாய் இண்டு
வாசல் வழிய சுருண்டு நிண்டன்
சுருட்டத் தலையன்
சுறுட்டு வாயன் ஒங்க வாப்பா
காலொடஞ்ச நாயப் போல
கதவோரம் நிண்டுக்குட்டான்...


தேயிலக் கறண்டியால அசிப்புக் காட்டி - நீ
கண்ணடிச்சாய் !
சலங்கக் கால் நடயால - நீ
சுகம் விசாரிச்சாய் !
முட்டக் கோப்பிக்குள்ள - ஒன்ட
முளுமனசப் போட்டுத் தந்தாய் !
கொடத்த மூடி நீ - என்ன
வழியனுப்பி வெச்சாய்...

அடியே கோப்பிய மட்டுமில்ல அதின்ட
அடிக் கூழையிம் நான்
குடிச்சிப்புட்டன்
அடியோட மறந்துருண்டு
குடிகாறன் ஒங்க வாப்பா சென்னாலும் - ஒன்ன
முடிக்கிறது நிச்சயங் கோ...!
மகரோட நான் வாறன்
மணமகளா இரிபுள்ள..!

அசலயிம் ஆட்டாமப்
பெசலயிம் ஆட்டாம
அம்மிய ஆட்டாம - நீ
கொழவிய ஆட்டுறது
கொடுப்பனவு இல்ல மச்சான்...
கொழவியில பூண்டரச்சா
மை வராது மச்சான்
மண்கவ்வ வேண்டி வரும்....!



சோலியில்லாத சொறி நாய்...


ஒனக்கென
ஒருத்தி வருவா
ஒலக்கயும் கையுமா
வருவாடா தம்பி...

தானுந் தடியிமா
வீணும் விரையமுமா
வீடியிம் கையிமா திரியிற
ஒண்ட வெரல அகப்பயால கொத்த
ஒருத்தி வருவா...
சூது விளையாடி
சொகந் தேடித் திரியிறியா..?
சொறிக்கல் மனைக்க


சொகமா நீயும் கள்ள
இளனி குடிக்கியா..?
கஞ்சா அடிச்சி
காசக் கரெக்கியா..?
கள்ளுக் குடிச்சி நீயும்
காட்டு வழிய
படுத்துத் திரியிறியா..?

சாராயம் குடிச்ச
வெறியில ஒண்ட - எலச்ச
வாயின் மப்புத் தீர்க்;க
உரிச்ச வெங்காயமும்
பொரிச்ச கொச்சிக்காயிம்
வறுவலுக்கு வல்லாள்ள
கோழிப் போடுமா தேவப்படுது...

வருவாடா தம்பி
ஒனக்கென ஒருத்தி வருவா..
சோலியில்லாம சொறிஞ்சி திரியிற
சொறி நாயின்ட வால
ஒட்ட நறுக்கி
ஒண்ட மத்தாப்புக்கெல்லாம்
ஒத்தாப்பெறக்கித்
தாப்புப் போட்டு - ஒனக்கு
ஆப்பு வெக்க
காப்புப் போட்ட ஒருத்தி
வருவாடா தம்பி வருவா...?


ஒண்ட
எகத்தாளத்த எல்லாம்
பகத்தாளமாக்கி
மூக்கு நுணிக் கோபத்துக்கு
மூக்குணாங் கயிறிட்டு
முட்டாள் தனத்தயிம்
முறிச்சிப் போட்டு
எரிச்சிப் போட ஒருத்தி
வருவாடா தம்பி வருவா...!

சேல நுணிய
இடுப்புல செருகி ஒண்ட
மண்டய ஒடச்சி
மண் சட்டியில போட
கெண்டக் கால் தெரிய
பொடவ கட்டின
வாய்ச் சலங்கக்
காறியொருத்தி
வருவாடா தம்பி வருவா...!

ஒண்ட
களிசற வேலய எல்லாம்
கால்கழுவி உட்டுப் போட்டு
நாலு காசையிம்
நல்ல பேரையிம்
நாலு சனத்துட்ட இருந்து
சம்பாதிக்கிற
வேலயப்பாருடா தம்பி...



புள்ளட வாப்பா...


கோவ்.. .
புள்ளட வாப்போவ்...!

காண்டு மூண்டு
வேலயப் பாக்காம
சுறுட்டக் குடிச்சிக் குடிச்சி
சுடு சாம்பல்ல படுக்குற
என்னத்தையோ போல
சுறுட்டிக்கா கா..
நீ படுக்காய்..
இஞ்ச வகுறு பத்துது கா...

எண்ணக் கட
எசதின் தேடி வந்தான்..
புல்லுப் புடுங்கின சொச்சக் காச
அனுப்பட்டாம் இண்டு
கொறுக்காப் புளியர்ர


நல்லாள் வெசேகளம்
அநுப்பியிருந்தாள்..
கூழாவடித் தேயிலக் கடயில
வீடிக்கணக்கும் கெடக்காமே..
இந்த அடுக்குல ஒனக்கு
கஞ்சாக் கவுறுக்கிட்டையிம்
கடனா கா..?
கண்ணத்திண்ட மனிசா...!

புள்ளையள மட்டும்
ஒண்டுக்குப் பொறகால
ஒண்டா அன்னா இன்னா
இங்குறத்துக்கெடயில
ஒண்டர டசினப்
பெத்துப் போட்டாய்
சும்மா படுக்க உட்டியா கா..?
செல்றத்தக் கேட்டாத்தானே...!

அடுக்கடுக்காப்
பெத்துப் போட்டா
மட்டும் போதுமோ..?
காறிக்காறி நீ படுத்தா
கஞ்சூத்துற ஆராம்
செல்ற ஏதும் இந்தச் செகுட்டு
மனிசனுக்குக் கேக்குதா..


அதெல்லாம் அடுக்கா
அந்தாளுக்குக் கேட்டிருந்தா
நாமயேன்
இப்புடி இரிக்கோணும்..?

போடியார்ர ஊட்ட
நக்கிப்போட்டு வந்து
குக்கிக் குக்கி
குப்பறக்க நீ படுக்காய்...
வெறும் வகுறும் வேக்காடுமா
எம் புள்ளயள் படுக்குதுகள்
ஒனக்கென்ன
பொண்டாட்டியா புள்ளயளா..?

கோவ்... .. .
கொமரு குட்டி
இரிக்கிற எடங்காயிது
வாற வளப்புணியள்
இல்லண்டாப் போறானே..
வாயோட்டிக்கி
என்னத்துக்கு இஞ்ச வாற..?
வளிசலுகளுக்கு ஒழுப்பம்
வாய விரிச்சி வெசேகளம்
சென்னாப் போதுமே..
பல்ல இளிச்சிளிச்சி



பாய விரிக்க
வந்துருவானுகள்...

வரட்டும் களிசறையள்
வாருவக் கட்டால
வழிச்சித் தொறச்சி
அடிச்சிக் காட்டுறன்..

புள்ளட கையில
என்ன தேமலுண்டு
புடிச்சிப் பாத்தானாம்..!
புல்லுப் புடுங்குற
பொண்டுகள்ள கையில
தேமல் போடாம
பூணாரமா போட்டிரிகிம்..!
வளையல் வாங்கித்தாறன்
வாறியாண்டு கேட்டானாம்..!
வக்கத்த நாயள் அவனுகள்ள
பொண்டாட்டிமாருக்கு
வாங்கிப் போட்டுர்றானே...!

புள்ளட வாப்பா கோவ் கையெடு
என்ன ஓசரியேரியா..
எவளவு கதெச்சாலும்
ஏர்றல்ல இந்த மனிசனுக்கு...




கமாலுக்கென்ன தெரியிம்...


கம்மோவ்.. கம்மா..
காகம் கத்துது கம்மோவ்
காக்கா நம்மளுக்கு
கடிதம் போட்டிரிக்காரோ - இல்ல
செல்லாமப் பேசாம கார்ல வந்து
எறங்கப் போறாரோ..
எனக்கித் தெரியாப்பா...

எங்க காக்கா
எனக்கி வெளிநாட்டுல இருந்து
ஆமி உடுப்பும்
வெளயார்ற தொவக்கும்
வெளிநாட்டுச் சுவிங்கியமும்


டொவியிம் மறுகா..
ஈச்சம் பழமும் சம்சங் கெணத்துத்
தண்ணியிம் கொள்ளயாக்
கொண்டருவாரு...
நான் கொள்ளயாத் திம்பன்..
ஒத்தருக்குந்
தரயிம் மாட்டேன்...

கலவரத்துல
காக்காவக்
கடத்திக்கிப் போய்
காவாலியள் கந்தொட்டியள்
களிசறயள் கடப்புலியள்
கண்ணத் திண்றுவானுகள்
காலக் கைய
கழுத்த வெட்டிக்
காக்கா கன்னாளே
காலஞ் சென்டு
பெயித்தாருண்டு
கைப்புள்ளயா இருந்த
கமாலுக்கென்ன தெரியிம்...

அப்ப காக்காயினி
வரயிம்மாட்டரா கம்மா...?




இரும்புப் போடி...


வந்துட்டாரு பாரு
சாச்சா இரும்புப் போடியாரு
ஆதங்காக்காட பொழப்புல இனி
மண்ணள்ளிப் போட்டு
அவ்வா லாத்தாட
வயகுத்துல அடிச்சி
கல்லயில கால் வெச்சி
எரணத்துல
ஏறி மிரிக்க
வந்துட்டாரு பாரு
சாச்சா இரும்புப் போடியாரு...

ஆறியமந்து
அஞ்சொகுத்தும்
தொழுது தொழுது
அழ எடுக்குற
ஆதங் காக்கா அன்னா
ஆல மரத்தடிய
அடி வகுறு பத்தி எரிய
அண்ணாந்து பாத்து
நிக்காரு சாச்சா
நக்குவார நாயந்த
இரும்புப் போடியால...


வெட்டிக் கட்டி சூடடிக்க
வெளஞ்சி வாற நெல்லெடுத்து
ஹலாலான சோறு திண்ட
ஆதங் காக்கா அன்னா
அக்குத் தொக்கில்லாம
அலஞ்சி திரியிறாரு
கொலவடுவங் கட்டின அந்த
இரும்புப் போடியால...

பொடவ கசங்குற
பொளப்பு தேவல்லண்டு
காலக் கைய உசுப்பி
கதிரடிச்சிக் காலங் கடத்துற
கஸ்ஸா லாத்தா அன்னா
கதிகலங்கி நிக்கா சாச்சா
கண்ணத்திண்ட அந்த
இரும்புப் போடியால..

ஊரான்ட வாயால
வேச தோற தேவுடியாள் இண்டு
உருவனியங் கேக்காம
உப்பட்டி பெரட்டி
உழுந்த நெல்ல வறுகியெடுத்து
பண்ண வளத்த மக்குழுவன்ட
பரிதா அன்னா
பண்ண தெறிக்க நிக்கா சாச்சா
பண்டி வெட்டின அந்த
இரும்புப் போடியால...



பொதயாமப் போடியாரு
பட்டிச் சப்பாத்தோட வாறாரு
பூந்து பொறப்புட்டு
ஓரஞ்சாரமெல்லாம்
ஒட்டுமுடாம வெட்டியெடுக்க
வந்துட்டாரு சாச்சா
இரும்புப் போடியாரு...

சேனக்காடா
சின்ன நேந்தலாவா
வட்டிவுட்டியா வங்களாவடியா
கொச்சிக்கலாந்தா கொக்கனாரையா
உம்மாரிப்பத்தா
உடங்கா வட்டையா
ஒண்டுமே கொறச்சலில்ல சாச்சா..
ஒளவாரம் புடிச்ச இந்த
இரும்புப் போடியாருக்கு..

வம்பனே தும்பனே
வக்கத்த நாயே
வங்குசந் தெரியா இரும்பனே
வழப்பிணியே வழிசலே
வட்டய உட்டு வெட்டக்கெறங்கு
இல்லண்டா எங்கட
வகுத்த மிரிச்சிப் பீயாக்கு...


செக்கொலக்க...


மாடு கட்டி வண்டி கட்டி
பொட்டி கொண்டு
வாறன் மைனி..
மாமி மகன்
மச்சான் நான்
மாப்புளயா வாறன் மைனி...

மச்சானுந் தேவயில்ல
மாப்புளையிம் தேவயில்ல
மடத்தனமாக் கதெக்காம
மாடுகளப் பாரு மச்சான்...

ராவயில வரமாட்டன்
போர்வய நான் சோரமாட்டன்
சொண கெட்ட வேல ஒண்டும்
சொல்லாமச் செய்ய மாட்டன்..



சன்மார்க்கம் படிச்சிருக்கன்
சத்தியத்தத் தெரிஞ்சிருக்கன்
சத்தியமா நானொன்ட
சம்மதமேயில்லாம
சந்துல கூட கை
வெக்கமாட்டங் கா மைனி...!

கலியாணம் முடிக்கு முன்ன
காள மாடுகள்ள
கதயெல்லாம் இப்படித்தான்..
கலியாணம் முடிச்சிக்
கண்டொன்டு போட்டுப்புட்டா
கக்கிசமெல்லாம்
கண்டு போட்ட நாகுக்குத்தாங் கா..
கள்ள மச்சான்...!

அடியே மைனி..
அப்புடி நீ நெனக்காத
அனாவசியமாக் கதெக்காத
அருமையான மச்சான் நான்
அடுப்படிய உடமாட்டன்
ஆக்கியவிச்சி நான் தருவன்
மா இடிச்சி வறுத்து வெப்பன்
பணியாரஞ் சுட்டு வெப்பன்
நெல்லவிச்சிக் குத்தி வெப்பன்



நேசமாக வெச்சிக்கிவன்
நோக நானோ உடமாட்டன்..!

அட்டி போட்டு அழகு பாப்பன்
வளையல் போட்டு வடிவு பாப்பன்
அடம் புடிக்காத கா மைனி - நான்
அடுத்த ஊட்டுக் காறனுமில்ல
மாமி மகன் மச்சான்டி
மாப்புளயா நாந்தான் வருவன்...

வக்கட வாயால
வடிவாத்தான் கதெக்காய் கோ..
நீ சென்னதக் கேட்டு நானோ
மறுமொழி சொல்லிவிட
சொண பறந்து நிக்கெல்ல கோ..
செக்கொலக்க நானுன்டு
செக்கு மாடு போல நீ
சிக்கு வெச்சிக் கதச்சொடன
மனமுருகி எண்ண வர - என்ட
மனமொண்டும்
தேங்காக் கட்டி இல்ல கோ..
செக்கலான நேரமிது
செல்லங் கதெக்க நாளிரிக்கி
செரியான ஆம்புளன்டா
வாசலுக்கு வந்து பாரு...!



செட்டியார் பரம்பரயாளோ - நீ
செக்கர்ர பேத்தி செலகா தானே
வாசலுக்கென்ன மைனி
வாடியே போட நான்
வண்டிகட்டி வந்துர்றன்
வடிவாகப் பாயௌச்சி
படுக்கக்கி நீ போடு
தலையணையா நீயிருந்தா
தாய் மாமனுக்கு என்ன கொற...

வாடி போட நீ
வாசலுக்கு வந்துபாரு
வாருவக்கட்டாலயிம்
வாருபிஞ்ச செருப்பாலயிம்
சாப்பாடொனக்குத் தந்து
வெழக்குமாத்தால
வெழுத்து நான் வெரசாட்டி
செக்கர்ர பேத்தி
செலகா நானில்ல மச்சான்...

மாமி மகன் மச்சான் நான்
மனமிரங்கி வந்ததுக்கு
மாசல நீ காட்டுறியோ..
மாப்புளயா நான்
மனமிரங்கி வந்திராட்டி



கலியாணமாகாம நீ
கன்னியாவே ஒண்ட
காலத்தப் போக்கணுங் கோ..
கர்வமாக் கதெக்கிறத்த
களத்தி நீ எறிஞ்சிபொட்டு
கண்ணியமா வந்து
கரத்தையில ஏறு மைனி..
கடல கச்சான் வாங்கித்தாறன்
கட்டில் மெத்த போட்டுத்தாறன்
கலங்காம நானொன்ன
காலமெல்லாம் வெச்சிக்கிறன்...

வெச்சிரிக்க நானொன்டும்
வேச தோற இல்ல மச்சான்
முட்டிப் பாக்க நீ கிட்ட வந்துராத
முட்டியால ஒண்ட
மொகறய நான் ஒடச்சிருவன்..
மொறச்சிப்பாக்காத ஒன்ட
மொறட்ட நான் கடிச்சிருவன்..
மாடு மேக்கிற மம்மதுன்டாலும்
மச்சான் ஒண்ட
மமதெக்கொண்டும்
கொறச்சலில்ல கோவ்...




ஆசியத்தோ..
அச்சிம்மாவோ...


அஞ்சி வகத் தட்டுல நான்
சட்டி பான வெச்சிருக்கன்
ஆசியத்துப் பொண்ண நானும்
அருமயாத்தான் பெத்திருக்கன்
வட்டா தட்டு குத்தியெல்லாம்
வண்ணமா நான் வெச்சிருக்கன்..

இளங் குருத்துப் பனயில
சீரான ஓல வெட்டி


அஞ்சி வகப் பொட்டியையிம்
அத மூர்ற தட்டையிம் நான்
எளச்சிக் களச்சௌச்சிக்
கூரையில கொழுவிருக்கன்..

வரிச்சங் கம்பு கட்டி அது நடுவே
களிய உறுட்டி வெச்சி
உசும்பாமச் சுவரொழுப்பி
குடும்பம் நடத்த நல்ல
குடில் வேற கட்டிரிக்கன்..
விண்ணாங்கு மரத்துல நான்
விடிய விடியக் கம்பெடுத்து
கூர வேலி கட்டிரிக்கன்..

பதினெட்டு வண்ணத்துல
பன்னால பாயௌச்சிப்
படுக்கைக்குப் போட்டிருக்கன்..
கலியாணங் காட்சி
கந்தூரி கத்தமுண்டா
கால் மடிச்சி இரிக்க
நெடிய பாயப் பின்னி நானோ
அசவு மேல வெச்சிருக்கன்..
வட்டா படிக்கம்
வடிவான செம்பு - முட்டி கொடம்



தட்ட தழுகப் பீங்கானெல்லாம்
தரந் தரமா வெச்சிருக்கன்..

கதிரறுக்கத் தாக்கத்தி
காடு வெட்ட அரு வாக் கத்தி
பெசகாத கூரோட பெசாக்கத்தி
செப்பமாக சீர் செய்ய
பிக்காசி மொங்கான்
அலவாங்கு - எல்லாம்
கூப்பனரிசி வித்து
வாங்கி வாங்கி வெச்சிருக்கன்..

பூண்டரெக்க
அம்மி கொளவிரிக்கி
மாவுடிக்க மருமகனே
ஒரலொலக்கரிக்கி
றொட்டி தோச சுட்டுத் தர
றொக்கமான பொண்ணிரிக்கி
கடல கச்சான் வறுத்துத் தந்து
கலகலண்டு வெச்சிருக்க
ஆசியத்துப் பொண்ணிரிக்கி..

அருமையான மருமகனே..
ஆறியமந்து
ஆறு மாசம் சோறு திங்க



ஒரு போகம் வெளஞ்ச
ஓரவண நெல்ல - மெல்ல..,
ஒமல் நெறய வெச்சிருக்கன்..

மூத்த மகள் ஆசியத்த
அருமயா நீ கை புடிச்சி
கலியாணம் முடிச்சியண்டா
இத்தனையும் நானுனக்கு
கக்கிலியாத் தந்துருவன்
கக்கிசம் மறந்து நீ போவாய்
கருத்திலெடு மருமகனே...!

மூத்த மகள் ஆசியத்தோ
முடியாது மாமியாரே..
கடுங் கறுப்பி
முண்டக் கண்ணி
முடிச்சித் தலச்சி
மூக்குறச்சி அவளெனக்கி
வேணாம் மாமி...!

எழய புள்ள
அச்சிம்மாண்டா
ஆசயா நான் கட்டிக்கிவன்
ஆதன வாதனந் தேவயிமில்ல
ஆளமட்டும் தந்தாப் போதும்...!



தங்கச்சிப் புள்ள...


தெருவோரம் நிக்கிறியே
தங்கச்சிப்புள்ள ஒனக்கு
தெகரம் பொறுக்கலியோ..?

படிக்கிற வயசில நீ
படிக்கல்லு தூக்குறியே
பஞ்சமும் பசியிம்
பாழான பட்டினியிம் ஒன்னப்
பண்ண கொலய வெச்சி
பாதையோரம் தெரத்தினிச்சோ...
தெகரம் பொறுக்கலியோ..?
தங்கச்சிப்புள்ள ஒனக்கு

வாட்டுல ஒங்க வாப்பா
வருத்தமாக் கெடந்து
மௌத்தாப் பெயித்தாராமே..
இத்துப்போன கிடுகு போல..
இத்தாவுல ஒங்கம்மா
முறிஞ்ச காலும்
மூச்சி வருத்தமுமா
ஆஸ்துமா நோயால


அவஸ்த்தப்பட்டு
சாகப்பொழக்க கெடக்காவாமே..
தெகரம் பொறுக்கலியோ..?
தங்கச்சிப்புள்ள ஒனக்கு

மருந்து மாத்திரக்கி
மடிப்பிச்ச கேக்காம
கருவாட்டுக் கடயில நீ
காகம் வெரசிக்
கைக் கூலி வாங்குறியே..
கழாவுலயிம் ஒன்ட தலையிலயிம்
எழுதின எழுத்திதுதான் போல

என்ன செய்ற தங்கோம்..
பத்தஞ்சி வயசில நீ
பத்தஞ்சி சம்பாதிக்க
பாதையோரம் நிக்கிறியே
பரிதாபமா இரிக்கி தங்கோம்...

கருவாட்டு மேனியோட நீயும்
“காக்கா வாங்க...காக்கா வாங்க...
வாங்க வாங்க...
காறாத்தல் கருவாடு
பத்துறுவா.. பத்துறுவா..”
எண்டு நீ தொண்ட
கிழியக் கத்துறியே..
தெகரம் பொறுக்கலியோ..?
தங்கச்சிப்புள்ள ஒனக்கு..


வெறும் மேனி கண்டு
வெராலுன்டு எண்ணி ஒன்ன
வெலபேச நெனக்கிறாங்க
கொறட்டண்டு நெனச்சொன்ட
பறட்டத் தலையப்
பாக்குறாங்க - ஆனா
பரிதாபப்பட ஆருமில்லியே..
என்ன செய்யலாம் தங்கோம்..
எக்கிப் போய்
எலும்n;பல்லாம் தெரியிதே
கஞ்சி குடிச்சி எத்தன நாளோ..?

கசிஞ்ச கண் ஒண்ட
கவலயக் காட்டுது தங்கோம்..
கிழிஞ்ச சட்ட ஒண்ட
கக்கிசத்தக் காட்டுது தங்கோம்..
மழல மறக்காத
பிஞ்சிவயசில - நீ
கஞ்சிக்கிக் கக்குசப்பர்றியே
காணக் கதி
கலங்குது தங்கோம்...

இன்னா இத்தாவுல ஒங்கம்மாவும்
மௌத்தாகிப் பெய்த்தாவாம்
“இன்னாலில்லாஹி
வயின்னாயிலைஹி ராஜிஊன்..”
கத்துறதுக்கு ஆளில்லியாம்
டக்குன வரட்டாம் தங்கோம்...




வேகாத வேர்க்கெழங்கு...



பல்பொடிப் பல்லழகி
நாகப்பழ நாக்கழகி
பாவப்பழ உதட்டழகி
பப்பாளி முகத்தழகி
முந்திரிகை மூக்கழகி
வரப் பீக்கை முடியழகி
சிறகவரைக் காதழகி
குறிஞ்சிப்பூக் கண்ணழகி


வெண்டிக்காய் விரலழகி
பயித்தங்காய் மொழியழகி
கிண்ணம் பழக் கன்னழகி
மாதுளம் பூத் தோடழகி
நாடங்காய் இடையழகி
நெல்மணிப் பேச்சழகி
நெல்லிக் காய்க் குழியழகி...

அடியே...
உனதித்தனையும் அழகாயிருக்க
உன்னுள்ளம் மட்டுமென்ன
வேகாத வேர்க் கெழங்கோ...?

பைத்தங்காய் கையழகன்
கத்தரிக்காய் கண்ணழகன
வட்டுக்காய் மூக்கழகன்
விளாங்காய் தலையழகன்
சுரக்காய் வயிறழகன்
கல் மூஞ்சிக் கரியனுக்கு
காதலொண்டும்
கொறச்சல் போல...

அடியே...
முதிரமர முதுகழகன்
மதுரமர மாரழகன்


கருங்காலிக் காலழகன்
மூங்கில் முகத்தழகன்
பாலமரப் பருவழகன்
கட்டுமரக் கட்டழகன்
தேக்கமரத் தேகழகன்
தெவிட்டாத குணத்தாண்டி
தேவையில்லியோ
மாமனொனக்கு...

வேகா வெயிலுக்க - நீ
வெரசி வெரசித் திரியிறியே
வெறியேதும் புடிச்சிருக்கோ
மாமா ஒனக்கு...

முறுக்கு மீசரிக்கி
திருக்குக் கௌறிரிக்கி
வீச்சு வாளிருக்கி கூட
வீச்சு வலையிமிரிக்கி
கரப்பும் கண்ணியிம் கட்டியிரிக்கி
கரப்பன நீ காட்டாத கோவ்...

அத்தாங்கிரிக்கி நல்ல
அலவாங்கும் கூடரிக்கி
குந்தக் குடிலிரிக்கி


குரக்கன் வயலிரிக்கி
குளிக்கக் குளமிரிக்கி
குளிரான தோப்பிரிக்கி
கயித்துக் கட்டிலிரிக்கி
கூடத் தொட்டிலும் பத்திரிக்கி
பட்டுப் பட்டாத் துணியிரிக்கி
கூடவே கனக்கத் துணிவுமிரிக்கி
துணிஞ்சி நீ வந்தா
தணிஞ்சி நான் போவன்
ஒன்னக் குனியவும் உடமாட்டன்
கக்கக்கனிய நான் பாத்துக்குவன்.. .

வாய்ப்பேச்சு மட்டும்
வாழ்க்கையா ஆகாது மாமா
வந்த வழியப் பாத்து நீயிப்ப
போகோணும் ஆமா.. .

கையில நல்ல பெலனிரிக்கி
மனசில நெறயத் தெம்பிரிக்கி
மனிசியா நீ வராட்டி
மகுசறிலயிம் நான் மறிப்பன்
மனமிரங்கி வாயேன்டி
மாப்புளயா நான் வாறன்
புள்ள குட்டி நான் தாறன்.. .






கத்தறொட்டி.. .



கத்த ஊட்டு றொட்டி
மனசாளே...!
பெருத்த நல்ல
பெலாச்சொழ
நாக்காளே...!
உரிச்ச நல்ல வாழப்பழ
மூக்காளே...!
புளிஞ்ச வெள்ளத்
தலப்பால் பேச்சாளே...!

ஒனொக்குப் புரிசனாத்தான்
வந்துராட்டியிம்
ஒன்ட ஊட்டு
அரிசிக்குள்ள நான்
நெல்லாவோ இல்ல
கல்லாவோ
கெடக்கப் போடாதா...?



------------------------------------------------------------------------------------------




பிரதேச வழக்குச் சொற்கள்..



பதக்கடை - அரைகுறை விளைச்சல் கொண்ட நெல்.

கம கமக்க - தாளித்த உணவுகளில் இருந்து வரும் மிகையான வாசனை.

சும்மாடு - சுமக்கும் போது தலையில் சுத்தி வைத்துக் கொள்ளும் துணி.

அறுத்தாப்புக் கெழங்கு - உருளைக் கிழங்கு.

பொச்சாப்புல - குறித்த அளவு.

பொரையில (புரை) - வயல் வெளிகளில் இளைப்பாறுதற்கான ஓர் அமைவிடம்.

தேம்பித் தேம்பி - மூச்சுத் திணறித் திணறி அழுதல்.

புறு புறுத்தல் - விளங்கியும் விளங்காமலும் ஏசுதல்.

புசு புசுன - விரைவாக.

சட்டுப் புட்டுன - அவசர அவசரமாக.

கிளு கிளுப்பு-மனம் பூரித்தல், ஆண்பெண் இடையேயான சிலிர்ப்பான உணர்ச்சி.

சாக்கு - கோணிப் பை.

வக்கடை - நீர் பாய்வதற்காக வயல் வரப்பில் வெட்டி விடப்படும் ஓடை.

உப்பட்டி - கதிர்க் கொத்து அல்லது கும்பம்.

பொறத்தி - பின்பக்கமாக.

சொதமை - சொந்தமாக அல்லது நிரந்தரமாக.

சொண (சுணை) - இலை காய்களின் மேலுள்ள சிறு முட்கள்.

சொறண (சுறணை) - மானம் மரியாதை.

அல்லச வட்டை - அண்மித்த பகுதியினர்.

கல்ல - உண்ணும் பாத்திரம்.

ஆதன - காணி.

வாதனம் - சீலை.

கபுறு (கபறுஸ்தான்) - இறந்தவர் உடலை அடக்கம் செய்யும் இடம்.

கொச்சை - கேவலம்.

பீத்தல் - ஓட்டை.

ஒட்டு கூட இல்லாம - எதுவுமேயற்ற வெறுமை.

வம்பு தும்பு - குறை கூறிச் சரசம் பண்ணுதல்.

கடப்பல் - புகு வழி.

குஞ்சிச் சோறு - சிறு பிள்ளைகள் விளையாட்டாக சமைத்துண்ணும் உணவு.

கலவன் - கறி சமைக்கும்போது ருசிக்காக சேர்க்கும் கருவாடு மாசி போன்றன.

மூசி மூசின - அவசர அவசரமாக.

வால் தெறிக்க ஓடுதல் - அச்சத்தோடு கலந்த ஓட்டம்.

தாக்கத்தி - கதிர் அறுக்கும் கத்தி.

முட்டி - நீரைத் தேக்கி வைக்கும் மண்ணாலான பாத்திரம்.

பண்ண கொலைதல் - குடும்ப அமைதி குலைதல்.

ஒதறாமப் பதறாம - வெறுத்தொதுக்காமல்.

மரெக்கால் - தானியங்களை அளக்கும் ஓர் அளவு வகை.

அடுக்களை - பாத்திரங்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தல்.

வடிச்சல் மீன் - அறுவடைக் காலங்களில் வெளியேற்றும் நீரில் பிடிக்கும் மீன்.

பொழுதோடு - இருளுக்கு முன்.

கழா - நேரம் பிந்திய வணக்க வழிபாடு.

மனுக் கனத்தல் - மக்கட் தொகை அதிகரித்தல்.

இன்சா அல்லாஹ் - இறைவன் நாடினால்.

அச்சி (ஹஜ்) - முஸ்லிம்கள் மக்காவிற்கு மேற்கொள்ளும் புனிதப் பயணம்.

வழப்புணி - கெட்ட நடத்தை கொண்டவன்.

மனிசன் - கணவன்.

ஒசத்தியாக - வசதி வாய்ப்பாக.

நாயோட்டமும் சில்லறப் பாச்சலும்- கடுமையாக அலைந்து உழைத்தல்.

நாயாப் பேயா - மிகவும் மோசமாகக் கஸ்டப்படுதல்.

கக்கிசம் - கஸ்டம்.

சிறுவால்- முழங்கால் மறைய அணியப்படும் கரையில்லாத ஆண்ஆடை.

சக்கப் பணிய - தரையில் வசதியாக அமர்ந்திருத்தல்.

சேப்பு - சட்டைப் பை.

கால - ஒதுக்குப் புறம்பான தோட்டப் பகுதி.

காவாலி - ரௌடி.

கந்தறுந்து போதல் - சொத்து சுகம் அனைத்தையும் இழந்து போதல்.

களிசறை - பெண்களுடன் வீண் வம்பு செய்பவன்.

தலப்பர்ற காலம் - பூப்படையும் காலம்.

பெசகாமல் - ஒழுங்கு தவறாமல் அல்லது நழுவாமல்.

பெலக்கயா - இறுக்கமாக.

கன் பொஞ்சாதி - கணவனை இழந்தவள்.

சியாரம் - அவுலியாக்களின் அடக்கஸ்தலம்.

கந்தூரி - மறைந்த மகானின் நினைவாக ஆண்டு தோறும் முஸ்லிம்கள் கொண்டாடும் விழா.

படியளத்தல் - உணவளித்தல்.

றெப்பு - இறைவன்.

கபூல் - ஏற்றுக் கொள்ளல்.

இணை (வெய்த்தல்) - ஒன்றுக்கொன்றை நிகராக்குதல்.

ஆகுறத்து - மரணத்துக்குப் பிந்திய வாழ்க்கை.

அவுலியா - இறை நேசர்.

தௌபாச் செய்தல் - பாவ மன்னிப்புக் கோரல்.

தயாள நாயன் - இரக்கம் மிக்க இறைவன்.

தானுந் தடியிமா - தன்னந் தனியே.

வல்லாள் - தன் குடும்பமல்லாத பிறர்.

புள்ளட வாப்பா - தகப்பன்.

வெசேகளம் - வாய்மொழி மூலம் செய்தியைக் கூறுதல்.

அன்னா இன்னா - விரைவாக அல்லது வேகமாக.

அடுக்கா - ஒழுங்காக.

நக்குதல் - பிறர் வீட்டில் உண்ணல், குடித்தலாகிய பழக்கம்.

வழிசல் - பாலியல் தொடர்பான கெட்ட குணமுடயவன்.

இளித்தல் - அர்த்தமில்லாமல் சிரித்தல்.

வழிச்சித் தொறச்சி - மிகுதி எதுவும் இல்லாமல்.

பூணாரம் - ஆபரணம் அல்லது அணிகலன்.

வக்கத்த - தகுதியற்ற.

ஓசரி - தொல்லைப் படுத்தல்.

கம்மோவ் (உம்மா) - தாயை விழித்து அழைத்தல்.

சம் சம் தண்ணி - மக்காவில் மட்டும் கிடைக்கும் புனித நீர்.

கன்னாள் - கடந்த காலத்தைக் குறிக்கும் சொல்.

வண்டில் - இரன்டு மாடு பூட்டப்பட்ட வாகனம்.

கரத்தை - ஒற்றை மாடு பூட்டப்பட்ட வாகனம்

பொட்டி கொண்டு போதல் - பெண் வீட்டிற்கு எடுத்துச் செல்கின்ற சீர்வரிசை.

செண்டித்தனம் - முரட்டுத்தனம்.

பணியாரம் - பலகாரம்.

வக்கட வாயன் - அளவுக்கு அதிகமாகக் கதைப்பவர்.

செக்கொலக்க - முட்டாள் தனமாக நடப்பவர்களைக் குறிப்பிடல்.

மௌத்தாதல் - மரணித்தல்.

கிடுகு - ஓலைக்கீற்று.

இத்தா - கணவனை இழந்த முஸ்லிம் பெண்கள் குறிப்பிட்ட காலம் கடைப்பிடிக்கும் துக்க அனுஸ்டானம்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன் - துன்பகரமான செய்தி கேட்டதும் முஸ்லிம்கள் உச்சரிக்கும் அறபுப் பதம்.

டக்குன - சடுதியாக அல்லது விரைவாக.

கரப்பு - மீன் பிடிக்கும் கூடு.

கண்ணி - பறவைகளைப் பிடிக்கப் பயன்படும் கைப் பொறி.

அத்தாங்கு - மீன் பிடிக்கும் சிறு உபகரணம்.

கக்கக்கனிய - சகல வசதியுடனும்.

மகுசர் - மறுமை நாளில் விசாரணை செய்யப்படும் இடம்.

கத்தம் - மரணித்தவர்களுக்காகச் செய்யப்படும் சடங்கு.

அசவு - பாய்களை பாதுகாப்பான முறையில் வைப்பதற்காக அமைக்கப்படும் ஓர் இடம்.

அம்மிக் கொளவி (குளவி) - மசாலா முதலிய பொருட்களை அரைக்கப்பயன்படும் கல்லாலான உபகரணம்.

ஒரலொலக்க (உரல், உலக்கை) - அரிசி முதலான தானியங்களை இடிக்கப்பயன்யடும் மரத்தாலான உபகரணம்.

ஓரவணம் - முப்பது மரெக்கால் கொண்ட அளவுத்திட்டம்.

ஒமல் - பன்னாலான பொதிகட்டும் பை.

பொழப்பு - தொழில்.

எரணம் (இரணம்) - உணவு.

ஒகுத்து (வொக்து) - குறிப்பிட்ட கால நேரம்.

அழ - பயிர் நிலங்களில் நீர் வடிந்தோடுவதற்கான ஓர் அமைப்பு.

ஹலால் - ஆகுமாக்கப் பட்டவை.

அக்குத் தொக்கில்லாம - எந்தவொரு பொறுப்புமில்லாத நிலை.

கொலவடுவங் கட்டிருவான் - சாபமிடும் சொல்.

வேச, தோற, தேவுடியாள் - கீழ்த்தனமான நடத்தை கொண்டவர்களைக் குறிக்கும் சொல்.

உருவனியம் - மோசமான வார்தைகள், தூசனம்.

ஒளவாரம் - ஒரு வகையான வியாதி;.


------------------------------------------------------------------------------------------



பதர்களையெல்லாம் உதறிப்பார்த்து நாடிபிடித்து நெல் மணியென்று நல்ல விமர்சனம் செய்த தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் றமீஸ் அப்துல்லாஹ் அவர்களோடும்.
நாட்டார் கவி மரபின் தாக்கம் கிழக்கிலங்கை முஸ்லீம்களின்
கிளை மொழியால் பளிச்சிடுவதாக நல்ல தமிழில் நல்ல விமர்சனம் செய்த மொழித்துறை விரிவுரையாளர் க.ரகுபரன் அவர்களோடும்.
குறிப்பாக சில குறிப்புகள் தந்த கவிஞர் நேஹா அவர்களோடும்.
இந்தத் தம்பியின் வழவுக்குள்ளும் குருத்து
மணல்களைக் கொட்டி நல்ல கருத்து விதைகளைப் போட்ட
காக்கா, கவிஞர் சோலைக்கிளி அவர்களோடும்.
தெம்பு தந்த தந்தை புரட்சி மாறன் யூ. செயின் அவர்களோடும்.
கவிக்கதிர்களைக் கொஞ்சம் வெழுத்துக் கூழனகற்றித் தந்த கலைத்
தொண்டன் மௌலவி அமானுள்ளா அவர்களோடும்.
புத்தகவாக்கத்துக்கு புத்தூக்கமளித்த அஸ்சேஹ் இத்ரீஸ்,
நண்பர் நஜீம், பர்சாட், எம்.எம்.சர்ஹீன் மற்றும் இலக்கிய உயிர் ஈழநிலா அஸ்மின் அவர்களோடும்.
அன்புத்தோழன் அன்பு நிலா பஷ்றியோடும்.
இலக்கியம் தந்த உயிர் வாசக உறவுகளோடும்.
சாகித்திய மண்டல விருது வழங்கி கொரவம் தந்தவர்களோடும்.
இவை எல்லாவற்றிற்கும் மேல் என்னுயிர்த் தாய் தந்தையர்களோடும் என்னருமைச் சகோதரங்களோடும்.
இன்னும் பெயர் செல்லப்படாத, சொல்ல முடியாத என் பேரன்புக்குரியவர்களோடும்.


------------------------------------------------------------------------------------------



மிச்சம் பெரிய உபகாரம் காக்கா..


நான் போய்ட்டு வாறன்.. .

http://noolaham.net/project/17/1630/1630.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டார் பாடல்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கிராமத்துச் சொல் வழக்கின் செருக்களியாமல் இருக்கின்றன. பகிர்வுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி உடையார்.

Link to comment
Share on other sites

பதக்கடச் சாக்கு...

மாட்டின் சேட்டையிம்              ( MARTIN Shirt )

மருதமுனச் சாறனையிம்

 

 

 

 

லேட்டா வந்தாலும்
லேட்டஸ்ட்டா வந்த பாடலா இருக்கு உடையார்.  :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழக கலை நிகழ்ச்சி ஒன்றில், பேராசிரியர் மௌனகுரு அவர்களின் நாட்டார் பாடல் நிகழ்ச்சி ஒன்றினை பார்த்தேன்.
அவ்வளவு அருமையாக இருந்தது. அதன் பிறகு நாட்டார் பாடல் நிகழ்ச்சியை பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவே... இல்லை.
 
நல்ல ஒரு பகிர்விற்கு... நன்றி உடையார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிச்சம் பெரிய உபகாரம்..... உடைஸ்!

 

கவிதை....வித்தியாசமா இருக்கு...!

 

இதை வாசிக்கும் போது  ' நெடுந்தீவுத் தமிழின்' தனித்துவத்தையும் நினைத்துப் பார்க்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் மக்களின் சொல்வழக்குடன் இந்தப் பாடல்களை படிக்கும்போது நன்றாக இருக்கின்றது. கபடமில்லாத பேச்சு நடை...!

 

நன்றி உடையார்...! :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.