Jump to content

ராஜபக்ஷவினரின் பெருந்தொகைப் பணம் பாகிஸ்தான் செல்வந்தர்கள் மூலம் வெளிநாட்டில் முதலீடு? - சர்வதேச விசாரணைக்குழு கண்டறிந்துள்ளதாம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
ராஜபக்ஷவினரின் பெருந்தொகைப் பணம் பாகிஸ்தான் செல்வந்தர்கள் மூலம் வெளிநாட்டில் முதலீடு? - சர்வதேச விசாரணைக்குழு கண்டறிந்துள்ளதாம். 
[Wednesday 2014-07-23 18:00]
mahinda-gotabaya-150.jpg

விடுதலைப்புலிகளின் சொத்துக்கள், புதையல்கள் மற்றும் தரகுப் பணம் மூலம் ராஜபக்ஷவினர் பெற்ற பெருந்தொகையான பணம் பாகிஸ்தானை சேர்ந்த இரண்டு செல்வந்தர்கள் ஊடாக முதலீடு செய்யப்பட்டுள்ளதாக ராஜபக்ஷவினரின் கறுப்பு பணம் பற்றி விசாரணை நடத்தும் சர்வதேச குழுவொன்று கண்டறிந்துள்ளது. இந்த செய்தியை வெளியிட்டுள்ள சிங்கள இணையத்தளம் ஒன்று விசாரணை நடத்தும் குழுவின் பெயரை தற்போது வெளியிட முடியாது எனக் கூறியுள்ளது. மேற்படி பாகிஸ்தான் செல்வந்தர்களில் ஒருவர் சில காலம் பாகிஸ்தான் அமைச்சராக இருந்த சலீம் மெண்டிவிவாலா ஆவார், இவர் பாகிஸ்தான் முதலீட்டுச் சபையின் தலைவராகவும் இருந்துள்ளார்.

  

மற்றைய பாகிஸ்தான் செல்வந்தர் அமெரிக்க பிரஜையும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நெருங்கிய ஆதரவாளருமான இமாத் சுபைர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ராஜபக்ஷவினரின் கறுப்பு பணம் அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் செல்வந்தர் மூலம் அமெரிக்காவில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. சலீம் மெண்டிவிவாலா பாகிஸ்தான் அரச பதவிகளில் இருந்து ஒய்வுபெற்று சர்வதேச ரீதியில் பல தொழிற்துறைகளை நடத்தி வருகிறார்.இவரை அலரி மாளிகையில் அடிக்கடி காண முடியும் என கூறப்படுகிறது.

இதனிடையே ராஜபக்ஷவினரின் கறுப்பு பணம் இலங்கையில் உள்ள நான்கு முக்கிய செல்வந்த வர்த்தகர்கள் மூலமாக நிதிய ஒப்பந்தம் மூலம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக விசாரணை நடத்தி வரும் குழு கண்டுப்பிடித்துள்ளது. அதேவேளை ஆயுத கடத்தல், போதைப் பொருள் வர்த்தகம், கப்பம், பொது நிதி உட்பட பலவற்றில் இருந்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கொள்ளையிட்ட பணம் நூற்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் ஊடாக முதலீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் ராஜபக்ஷ அரசாங்கம் மக்கள் பணத்தை கொள்ளையிட்டு அதனை எந்த விதத்தில் மறைக்க முயற்சித்தாலும் உலகத்தில் தனியான குழுவொன்று அது குறித்து உன்னிப்பாக அவதானித்து வருகிறது.அந்த பணம் எந்த பெயரிலோ, யாருடைய நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டிருந்தாலும் அதனை பொது உடமையாக்குவதற்கான சர்வதேச சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

இதற்கு சிறந்த உதாரணம் எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக், அவர் கொள்ளையிட்டு சேர்த்த சகல பணம் மற்றும் சொத்துக்கள் பொது உடமையாக்கப்பட்டுள்ளன. முபாரக் குடும்பத்தினர் கறுப்பு பணத்தை வைப்புச் செய்திருந்த கணக்குகள், சொத்துக்கள், உறவினர் மற்றும் நண்பர்களின் பெயர்களில் இருந்து சொத்துக்கள் என அனைத்து உடமைகளும் ஒரு சில மணி நேரங்களில் முடக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=113646&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 52 வீதமான மக்கள் போரை விரும்பவில்லை என்று எனக்கு விளங்குகிறது. 74 வீதமான மக்கள் போரை வீரும்பவில்லை என்று உங்களுக்கும் கபிதானுக்கும் விளங்குகிறது.  🙂
    • ஆஹா.... "கொல்லைப்புறம்". 😂 சிரித்து வயிறு நோகுது.  
    • அங்கே என்ன நடந்தது? 1. "ரேடாரில் மாட்டாமல் தாழப் பறக்கும் நுட்பத்தை முதலில் பயன்படுத்தியது இஸ்ரேல்" என்று நான் எழுதினேன் (கவனியுங்கள்: அமெரிக்கா அல்ல, இஸ்ரேல்). 2. நீங்கள் வந்து "ஜப்பான் காரர் இதை பேர்ள் ஹாபரில் செய்து விட்டார்கள், சொம்பு, முட்டு, பொங்கல், அவியல்" என்று குதித்தீர்கள். ஆதாரம் கேட்டேன், மௌனமாகப் போய் விட்டீர்கள் (ஏனெனின், ஜப்பான் காரன் கூட தான் இதைச் செய்ததாக எங்கும் சொல்லி நான் அறியவில்லை). 3. பின்னர் நான் ரேடாரில் ஜப்பான் விமானங்கள் தெரிந்தமை, ஏன் அமெரிக்கா தவற விட்டது என்று வரலாற்று நூல்களில் இருந்த தகவல்களைச் சொன்னேன். 4. இன்னொரு உறவு, விமானங்கள் ரேடாரில் தெரிந்ததை உறுதிப் படுத்தும் ஒரு ஆதாரப் பதிவை இணைத்தார் (கவனியுங்கள்: நீங்கள் எதுவும் இணைக்கவில்லை😎!) அதே ஆதாரத்தை , தாழப் பறந்து வந்து ஜப்பானியர் தாக்கியதன் ஆதாரமாக எனக்கு நீங்கள் சிவப்பெழுத்தில் கோடிட்டுக் காட்டியிருந்தீர்கள் (மீண்டும் கவனியுங்கள்: "ஆங்கிலம் ஒரு மொழியேயொழிய, அது அறிவல்ல!" - எங்கேயோ கேட்ட குரல்😎!) எனவே, இது வரை ஜப்பானியர் தாழப் பறந்து வந்து ரேடாரில் இருந்து தப்பினர் என்பதற்கு ஒரு ஆதாரமும் நீங்கள் தரவில்லை (இல்லாத ஆதாரத்தை எப்படித் தருவதாம்😂?).   இனி உங்கள் பிரச்சினைக்கு வருவோம்: நீங்கள் உட்பட யாழில் ஓரிருவரின் பிரச்சினை "மேற்கு எதிர்ப்பு" என்ற ஒரு உணர்ச்சி. அந்த உணர்ச்சிக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம், அதை மறுக்க யாருக்கும் உரிமையில்லை. ஆனால், அந்த உணர்ச்சி மட்டுமே உலகத்தை, சம்பவங்களைப் புரிந்து கொள்ளப் போதாது. அப்படி உணர்ச்சி மட்டும் வைத்து "நாசா சந்திரனுக்குப் போகவில்லை" என்று கூட வாதாடும் நிலை இருக்கிறது பாருங்கள்? அந்த முட்டாள் தனத்தைத் தான் நான் சவாலுக்குட் படுத்துகிறேன். இனியும், தவறாமல் செய்வேன் - நீங்கள் சொம்போடு குறுக்கே மறுக்கே ஓடினாலும், நான் நிறுத்தாமல் செய்வேன்! ஏன் இப்படி சவலுக்குட்படுத்துவது முக்கியம்? இந்த மேற்கு எதிர்ப்பு உணர்ச்சி மயப் பட்டு, பொய்த்தகவல்களை உங்கள் போன்றோர் பரப்புவதால் மேற்கிற்கு ஒரு கீறலும் விழாது. ஆனால், எங்கள் தமிழ் சமுதாயத்தில், குறிப்பாக புலத் தமிழ் சமுதாயத்தில், இதனால் ஒரு முட்டாள் பரம்பரை உருவாகி வரும் ஆபத்து இருக்கிறது. எனவே, உங்கள் போன்றோரை அடிக்கடி இப்படிச் சவாலுக்குட்படுத்துதல் அவசியம். உங்களுக்கு முடிந்தால், இந்த சவால்களை ஆதாரங்களை இணைத்து எதிர் கொள்ளலாம். இல்லையேல் சொம்போடு நின்று விடலாம், இரண்டும் எனக்கு சௌகரியமே!
    • Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict.   இதில் யாருக்கு விளக்கமில்லை?? இன்னுமொன்று புரிகிறதா? கூட்டுநாடுகள் இல்லையென்றால் இஸ்ரேல் பாடு அதோகதிதான்!!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.