Jump to content

விமான பயிற்சி பாடசாலையாக மாறப் போகும் மத்தல விமான நிலையம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

maththala_airpot.jpg

மத்தல விமான நிலையத்தை சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுக்கு விமானிகளை பயிற்றுவிக்கும் பாடசாலை ஒன்றை ஆரம்பிக்க வழங்க அரசாங்கம் தயாராகி வருவதாக தெரியவருகிறது.

சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன அண்மையில் வெளியிட்ட தகவல் மூலம் இது தெரியவந்துள்ளது.

சிங்கப்பூர் அரசாங்கத்தின் எரோ ஸ்பேஸ் நிறுவனம் இலங்கையின் சீனேட் நிறுவனம் இணைந்து விமான பயிற்சி பாடசாலை ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக இரு நாட்டு அரசாங்கங்கள் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளதாகவும் இதற்கு இடத்தை ஒதுக்குமாறு மத்தல விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் ஆகியவற்றுக்கு தான் அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் கூறியிருந்தார்.

மத்தல விமான நிலையத்திற்கு சர்வதேச விமானங்கள் வருவதில்லை என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது.

சர்வதேச விமான நிலையம் ஒன்றில் விமான பயிற்சி பாடசாலைகள் நடத்தப்படுவதில்லை. விமானங்கள் பறக்காத பிரதேசத்தில் உள்ள விமான நிலையம் இதற்காக பயன்படுத்தப்படும்.

மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு விமானங்கள் வருவதில்லை என்பதாலேயே அங்கு விமான பயிற்சி பாடசாலை ஒன்றை ஆரம்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆசியாவின் விமானங்களின் கேந்திர நிலையம் என்று கூறி நாட்டு மக்களின் பணத்தை செலவிட்டு நிர்மாணிக்கப்பட்ட மத்தல மகிந்த ராஜபக்ஷ விமான நிலையத்திட்டம் தோல்வியடைந்த திட்டம் என்பது தற்போது உறுதியாகியுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தில் இந்த விமான நிலையம் தொடர்பாக எதிர்க்கட்சிகளிடம் இருந்து முன்வைக்கப்பட கூடிய குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்கும் தந்திரமாக அரசாங்கம் இதனை மேற்கொண்டுள்ளதாகவும் பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

 

http://tamil24news.com/news/archives/175721

Link to comment
Share on other sites

திட்டமிடல் இல்லாமல் மகிந்த தனது இடத்தில் கட்ட வேண்டும் என கட்டிய விமான நிலையம்  ஆட்கள் வராத விமான நிலையமாக பல காலமாக இருந்துள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'மத்தல'யில் சர்வதேச விமான நிலையம் அமைத்ததிற்கு பதிலாக யாழ்ப்பாண பலாலி விமானதளத்தை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தியிருந்தால் ஒருவேளை பயணிகளின் ஆதரவு மெருகூட்டியிருக்கும். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு குழி பறிக்க வேண்டுமென்றால் மட்டும்... வரிந்து கட்டிக் கொண்டு வரும்,
சார்க் நாடுகளின் குட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளான...... இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவு போன்ற நாடுகள் தங்களது விமானத்தை ஆவது மத்தள விமான நிலையத்துக்கு அனுப்பி, மகிந்தவின் ஆசையை பூர்த்தி செய்யலாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
விமான பயிற்சி பாடசாலையாக மாறப் போகும் மத்தல விமான நிலையம்!

 

 

உதுவும் இனி எத்தினை நாளைக்கெண்டு ஆருக்குத்தெரியும்?  :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.