Jump to content

மகாபாரத விமர்சனங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மகாபாரதம் என்பது புகழ்ச்சி இகழ்ச்சி என்ற இருபக்க நாணயம் மாதிரி.எனவே யாராவது விமர்சனம் ஏதாவது வைக்க விரும்பினால் இங்கே எழுதவும்.

 இங்கு ஈழப்பிரியன் தான் இணைக்க வேண்டுமென்றல்ல யாராவது நேரம் இருக்கும் போது வரிசையாக இணைத்து விடவும்.

உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் விரும்பிப்பார்க்கும் தொடர் ..

 

இணைப்புக்கு நன்றி ஈழபிரியன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பார்ப்பேன்!

சகுனியின் பல்லையே காட்டுகினம், விதுரன் வில்லொடிப்பதை விட்டிட்டினம்...!(பாரதத்தில் அதுவும் முக்கியமான இடம்.) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் விரும்பிப்பார்க்கும் தொடர் ..

 

இணைப்புக்கு நன்றி ஈழபிரியன். 

 

வணக்கம் தமிழரசு மகாபாரதத்தை யாழில் பலர் பார்த்தால் யாழுக்கு பெருமை சேரும் என்ற எண்ணத்தில் தொடங்கிவிட்டேன்.நீங்களும் நேரமிருக்கும் போது இணையுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பார்ப்பேன்!

சகுனியின் பல்லையே காட்டுகினம், விதுரன் வில்லொடிப்பதை விட்டிட்டினம்...!(பாரதத்தில் அதுவும் முக்கியமான இடம்.) :)

 

இப்போது தான் பார்க்கிறேன்.இதனால் நல்லது கெட்டது சொல்லத் தெரியவில்லை.ஆனாலும் மகாபாரதம் கர்ணனுக்கு துரோகம் செய்தது மாதிரி கதைப்பார்கள்.இதைப் பார்க்க சரி போலவே இருக்கும் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தமிழரசு மகாபாரதத்தை யாழில் பலர் பார்த்தால் யாழுக்கு பெருமை சேரும் என்ற எண்ணத்தில் தொடங்கிவிட்டேன்.நீங்களும் நேரமிருக்கும் போது இணையுங்கள்.

நிச்சயமாக நேரம் கிடைக்கும்போது இணைக்கின்றேன் ஈழபிரியன்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகாபாரதம் கதையை வாசிக்கும் போதோ அல்லது திரையில் பார்க்கும் போதோ இப்படி ஒரு நிகழ்வு இடம்பெற்றதா என்ற கேள்விக் குறியுடன் உங்கள் மன நிலை இருக்கக்கூடாது.
நடந்தவை நடப்பவை நடக்கப் போகின்றவை என எல்லாம் உணர்ந்த கண்ணன் மகாபாரதப் போரை வழி நடத்தும் முறையையும் நாம் அலசக் கூடாது. கண்ணன் பல இடங்களில் போர் விதிகளை மீறினாலும் நடப்பவை எல்லாம் நமைக்கே என்கின்றான்: :D

 

அதே போல நாமும் மகா பாரதத்தில் உள்ள நல்ல ஒழுக்க முறைகளையும்  மன்னர்கள் குடிமக்களை வழி நடத்தும் பண்புகளையும் மற்றும் அண்ணன் தம்பி உறவுகள் எப்படி வாழ்ந்தார்கள் போன்ற நல்ல உதாரணங்களை எடுத்துக் கொண்டு மற்றைய விடயங்களை வாசித்த பின்னர் எமக்குச் சரியென்று படாவிட்டால் விட்டு விடலாம்.
தாயின் எதேச்சையான வாக்குக்கு மதிப்பளித்து பாண்டவர்கள் ஐந்து பேரும் பாஞ்சாலியை மணம் முடிக்கும் செயல் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டதானாலும் சகோதர ஒற்றுமையை முன்னிறுத்துகின்றது.

சரித்திரத்தில் இப்படி ஒரு போர் நிகழ்ந்ததா எனக் கேட்டால் இல்லை எனக் கூறலாம். ஆனால் இந்தக் கதைக்குக் கருவாகச் சில சம்பவங்கள் நடந்திருக்க வாய்ய்ப்புக்கள் உள்ளன.
சில இடங்களில் வாசகர்களுக்கு மிக அதீதமாகத் தோன்றும் நிகழ்வுகளையும் பாரதத்தில் அடக்கியுள்ளார்கள். இப்படியான சம்பவங்கள் மகாபாரத்ததின்  உண்மைத் தன்மையை இல்லாமற் செய்து விடுகின்றன.

 

உங்கள் இணைப்புக்களுக்கு நன்றி சஜீவன்

 

Link to comment
Share on other sites

இது ஒரு கோமாளித்தனமான தொடர்.  :o  :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.