Jump to content

கிளாஸ்கோ பயணத்தைக் கைவிட்டார் ஜனாதிபதி மஹிந்த!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிளாஸ்கோ பயணத்தைக் கைவிட்டார் ஜனாதிபதி மஹிந்த! 

[Tuesday 2014-07-22 20:00]
Mahinda-Rajapaksa-200.jpg

கிளாஸ்கோவில் நாளை ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்க மாட்டார் என ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் விஜயத்திற்கு புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில், அவர், கிளாஸ்கோ சென்றால் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தப்படக் கூடுமெனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், இவ்வாறான அழுத்தங்களுக்கு அஞ்சி ஜனாதிபதி கிளாஸ்கோ விஜயத்தை ரத்து செய்யவில்லை என மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

  

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தவிசாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 2010ம் ஆண்டிலும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதியினால் ஆற்றப்படவிருந்த விசேட விரிவுரை எதிர்ப்பு காரணமாக இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=113593&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பயம் இருக்கணும்.
ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளுக்கு போறதெண்டால்.... நாலு தரம் யோசிக்கணும்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அந்தப் பயம் இருக்கட்டும், 
ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளுக்கு செல்கிற எண்ணம் கனவில் கூடவரக்கூடாது. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அந்தப் பயம் இருக்கட்டும், 
ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளுக்கு செல்கிற எண்ணம் கனவில் கூடவரக்கூடாது. 

 

 

Mahinda-Rajapaksa-200.jpg

 

அந்தாளுக்கு... அந்த எண்ணம், ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அனுபவத்துக்குப் பிறகு கனவிலும் வாறதில்லை.

அந்தாளை... சுத்தியிருக்கிறவங்க்கள் தான், சும்மா....  உசுப்பேத்தி  விடுறாங்கள். :D

Link to comment
Share on other sites

அந்தப் பயம் இருக்கட்டும்,

ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளுக்கு செல்கிற எண்ணம் கனவில் கூடவரக்கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Mahinda-Rajapaksa-200.jpg

 

அந்தாளுக்கு... அந்த எண்ணம், ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அனுபவத்துக்குப் பிறகு கனவிலும் வாறதில்லை.

அந்தாளை... சுத்தியிருக்கிறவங்க்கள் தான், சும்மா....  உசுப்பேத்தி  விடுறாங்கள். :D

நியு ஜெர்ஸ்சிக்கு போனாலும் போவார் அங்கைஒருதர் இலங்கையர் ஒன்றுகூடல் என்று ஒரு கூத்தடித்து மனுசிக்கு கன்னத்திலை மஹிந்தரின் பொட்டும் வைத்து மற்றவைக்கும் அந்தபொட்டுக்களைவைத்து சிங்களவனுடன் கொண்டாட்டம் னடத்தி சில எலும்பு சூப்பும் தமிழரையும் இணைத்து படம் காட்டுறார்...அடுத்த நிகழ்வில் இன்னும் நல்லா செய்வினமம் ..அப்ப மஹிந்த அடுத்த சமருக்கு தம்மி வீட்டிலைதான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியு ஜெர்ஸ்சிக்கு போனாலும் போவார் அங்கைஒருதர் இலங்கையர் ஒன்றுகூடல் என்று ஒரு கூத்தடித்து மனுசிக்கு கன்னத்திலை மஹிந்தரின் பொட்டும் வைத்து மற்றவைக்கும் அந்தபொட்டுக்களைவைத்து சிங்களவனுடன் கொண்டாட்டம் னடத்தி சில எலும்பு சூப்பும் தமிழரையும் இணைத்து படம் காட்டுறார்...அடுத்த நிகழ்வில் இன்னும் நல்லா செய்வினமம் ..அப்ப மஹிந்த அடுத்த சமருக்கு தம்மி வீட்டிலைதான்...

 

அடுத்த  Summerக்கு , மகிந்தர் நியு ஜெர்ஸ்சிக்கு வந்தால்....

அவருக்கு நல்ல பாடப் கற்பிக்க..... நுணாவிலான், மருதங்கேணி, ஈழப்பிரியன், ஜஸ்டின் ஆகியோர் உசாராக இருப்பார்கள் என்று நம்புகின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கிளாஸ்கோ பயணத்தைக் கைவிட்டார் ஜனாதிபதி மஹிந்த!

 

எங்கு வந்தாலும் ஓட ஓட விரட்ட வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேதனைக்கு மருந்து தந்த தமிழ் சிறீக்கு நன்றிகள் பல... நியு ஜெர்சி காரருடைய படம் காட்டலையும் அவருடைய எழுத்து நடையயும் அவர் யார் என்பதை சிறு பிள்ளைகூடவிளங்கும்...பொது எதிரி யாரென்பதை தெரிந்தும்...பொட்டுவைத்து குடைபிடிப்போரை இனம் காணவேண்டும்...இவர்களால் பாதிக்கப்பட்ட எம்மினத்திற்குகிடைக்கும்  சிறிய  வாய்ப்பைகூட தட்டிப் பறிக்க அனுமதிக்கக் கூடாது..

Link to comment
Share on other sites

அவரை வரவேற்க இங்கு தடல்புடலாக வேலை நந்து வரும் நிலையில் மகிந்தவின் முடிவு ஏமாற்றம் தருகிறது.

 

https://www.youtube.com/watch?v=mCQDySTqIuU

 

இப்படி வரமாட்டன் எண்டு ஸ்கொட்லான்ட் போற சனங்களை நிப்பாட்டி போட்டு, 
நாங்க ஆயத்தம் இல்லாத நேரத்தில வந்திறங்கினால்? 
Link to comment
Share on other sites

ஆஹா.... எந்தளவு பெரிய்ய்ய வெற்றியைப் பெற்று விட்டோம். தமிழீழ போராட்டத்தில் இது ஒரு மைல் கல்.

 

மஹிந்தவை கிளாஸ்கோவிற்கு வரவிடாமல் செய்தததால் இனி தாயகத்தில் பொது மக்களின் நிலங்களை அபகரித்து இராணுவ முகாம் ஆக்குவதை  ஆமி அப்படியே நிறுத்தி விடப் போகின்றார்கள். துப்பாக்கி முனையில் நிகழும் பாலியல் வல்லுறவுகள் இனி நடக்கப் போவதில்லை. இனி பிரித்தானியா வரவிடமாட்டார்கள் என்பதால் மகிந்த பயந்து போய் வடக்கு கிழக்கு இணைப்பையும் நடத்தப் போவதாக கதை அடிபடுகின்றது. தினம் தினம் தம் உறவுகளை இழந்து கண்ணீரும் துயருமாக வீதிகளில் அலையும் காணாமல் போனவர்களின் உறவுகளிற்கு இனி போராட வேண்டிய தேவையை மகிந்த கொடுக்கமாட்டார் என்றும் காணாமல் போனவர்களை விடுவிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படியே விசேட விமானத்தில் போய் ஐ.நா மன்றத்தின் முற்றத்தில் மகிந்த போர்க் கைதிகளை ஒப்படைக்கப் போவதாகவும் சொல்கின்றனர்.

 

இனி என்ன, எல்லாம் சுபமாகப் போகின்றது. வெற்றி எமக்கே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ மறப்போம் மன்னிப்போம் என்று சொல்கிறீர்களா நிழலி.நாங்கள் எதிர்ப்பைக்காட்டாமல் விட்டால் நீங்கள் சொன்னதை எல்லாம் மகிந்த நிறைவேற்றுவாரா??????எல்லாம் நல்லபடியாக நடக்குமா????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சமர்(summer)) ஆட்களை மாத்திப்போட்டுதுபோலை...

Link to comment
Share on other sites

சொந்த நிலத்தில் இருந்து தமிழர்களை துரத்தி புலம்பெயர வைத்து விட்டு மகிந்தர் வர புலத்தில் உள்ளவர்கள் அனுமதிப்பினமோ ?

நிச்சயமாக இல்லை கொலைகாரனை ஓட ஓட துரத்த வேண்டும் 

Link to comment
Share on other sites

நா ங்க   இங் கயல்  லாம் நல்ல நல்ல வேலை   செயுறது.   இது புலம் பெர்ந்து வாலும் தமிலருக்கு புரியல...
மதிந்தா

Link to comment
Share on other sites

புலம்பெயர் தமிழர்களுக்கு கிடைத்த முதல் வெற்றி,
இதனூடாக அவருக்கு ஒரு முக்கிய செய்தி ஒன்று சொல்லப் பட்டுள்ளது தமிழர்களுக்கு அரசியல் தீர்வு ஒன்றை வழங்காமல் போர் குற்றங்களுக்கு பொறுப்பு கூறாமல் இவரால் இனிவரும் காலங்களில் புலம்பெயர் தேசங்களுக்கு வருவது சாத்தியப்படாது என்பதினை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது 

நா ங்க   இங் கயல்  லாம் நல்ல நல்ல வேலை   செயுறது.   இது புலம் பெர்ந்து வாலும் தமிலருக்கு புரியல...
மதிந்தா

தமிழருக்கு புரியாதது இருக்கட்டும் நீங்கள் சொல்லவாற விடயத்தை தெளிவாக சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நா ங்க   இங் கயல்  லாம் நல்ல நல்ல வேலை   செயுறது.   இது புலம் பெர்ந்து வாலும் தமிலருக்கு புரியல...

மதிந்தா

பாவம் இப்பதான் அரிவரிக்கு போற செக் கிடைத்ததுபோல விட்டிடுங்க பிழைச்சுப் போகட்டும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த தமிழருக்கு எதிரான மனித உரிமை மீறல்களில் தான் குற்றவாளி அல்ல ,தமிழருக்கு தீர்வை கொடுப்பதில் பின்னிற்க்கவில்லை எனும் கருத்துக்கள் மகிந்த வந்தால் அடிபட்டு போயிருந்திருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.