Jump to content

மனதை கவர்ந்த face book பதிவுகள்


Recommended Posts

டிமிட்ரி இவ்நோவ்ஸ்கி

40 நிமி. ·

இத்தன வருசமா இங்க குப்ப கொட்னதுக்கு அசிஸ்டன்ட் டைரக்டராவாவது அலைஞ்சிருக்கலாம். தேவயானில ஆரம்பிச்சு டிடி வரைக்கு அவனுகதான் கவ்விட்டு போறானுக

Link to comment
Share on other sites

  • Replies 171
  • Created
  • Last Reply

சிகா பார்த்திபன்

1 மணிநேரம் முன்பு

Hussain Thala Rasigan

என்ன ஒரு வில்லத்தனம்...?.

கணவன் - செல்லம் எந்திரிடா

நம்பள பாக்க அப்பா அம்மா வந்திருக்காங்க

மனைவி - (கடுப்புடன்) கல்யாணம் ஆகி

தனிக்குடித்தனம் வந்து ஒரு மாசம் கூட ஆகல

அதுக்குள்ள வந்துட்டாங்களா ?

வா்றவங்க ஒரு போன்

பண்ணிட்டாவது வரலாம்ல

இனி காலையில டிபன், மதியம்

சாப்பாடுன்னு மூணு நேரமும்

வடிச்சி கொட்றத்துகுள்ள என் உசுரு போயிடும்

கணவன் - ஏய் கொஞ்சம் மெதுவா பேசு நீ

பேசுறத கேட்டு

கோவிச்சிகிட்டு அவங்க போயிடப் போறாங்க...

மனைவி - போனா போவட்டும்

அப்டியாவது புத்தி வருதான்னு பாக்கலாம்

(ஐந்து நிடங்கள் கழித்த)

கணவன் - உண்மையாலுமே அவங்க

போயிட்டாங்கடி..

மனைவி - ஐயா....! ஜாலி

கணவன் - போறப்ப அத்தையையும்

மாமாவையும்

பாக்கவே ரோம்ப கஷ்டமா இருந்தது

மனைவி -- (சற்று அதிர்ச்சியுடன்)

வந்தது எங்க அப்பா அம்மாவா ?

கணவன் -- (மனசுக்குள் சிர்த்துக்கொண்டே)

ஆமா

Link to comment
Share on other sites

Parthiban Viru JS Roshi

25 நிமிடங்களுக்கு முன்பு

உன் நெற்றியில் வியர்க்கும்போதுதான் நான் நினைத்தேன்.. அடடா நிலவிலும் நீர் இருக்கிறதென்று"......................!!

:D :d

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிகா பார்த்திபன்

1 மணிநேரம் முன்பு

Hussain Thala Rasigan

என்ன ஒரு வில்லத்தனம்...?.

கணவன் - செல்லம் எந்திரிடா

நம்பள பாக்க அப்பா அம்மா வந்திருக்காங்க

மனைவி - (கடுப்புடன்) கல்யாணம் ஆகி

தனிக்குடித்தனம் வந்து ஒரு மாசம் கூட ஆகல

அதுக்குள்ள வந்துட்டாங்களா ?

வா்றவங்க ஒரு போன்

பண்ணிட்டாவது வரலாம்ல

இனி காலையில டிபன், மதியம்

சாப்பாடுன்னு மூணு நேரமும்

வடிச்சி கொட்றத்துகுள்ள என் உசுரு போயிடும்

கணவன் - ஏய் கொஞ்சம் மெதுவா பேசு நீ

பேசுறத கேட்டு

கோவிச்சிகிட்டு அவங்க போயிடப் போறாங்க...

மனைவி - போனா போவட்டும்

அப்டியாவது புத்தி வருதான்னு பாக்கலாம்

(ஐந்து நிடங்கள் கழித்த)

கணவன் - உண்மையாலுமே அவங்க

போயிட்டாங்கடி..

மனைவி - ஐயா....! ஜாலி

கணவன் - போறப்ப அத்தையையும்

மாமாவையும்

பாக்கவே ரோம்ப கஷ்டமா இருந்தது

மனைவி -- (சற்று அதிர்ச்சியுடன்)

வந்தது எங்க அப்பா அம்மாவா ?

கணவன் -- (மனசுக்குள் சிர்த்துக்கொண்டே)

ஆமா

 

உப்புடி உங்கை கன வீடுவளிய நடக்குது.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதிரி பட்டாசு கொளுத்தி 'விழுப்புண்' பெற்றுருக்கிறீர்களா? :lol:

 

https://www.facebook.com/photo.php?v=10203864897927560&set=vb.1374055902&type=2&theater

 

பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா...! மத்தாப்பு லுங்கி கட்டி ஆடட்டுமா...!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதிரி பட்டாசு கொளுத்தி 'விழுப்புண்' பெற்றுருக்கிறீர்களா? :lol:

 

https://www.facebook.com/photo.php?v=10203864897927560&set=vb.1374055902&type=2&theater

 

பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா...! மத்தாப்பு லுங்கி கட்டி ஆடட்டுமா...!!

சுவரில் இருக்கும் படத்தை, அகற்றி விட்டுப் பார்த்தால், எல்லாமே 'யாழ்ப்பாணம்' மாதிரி தான் கிடக்குது! :lol:

 

சீன வெடி கொழுத்துபவரின் ' சண்டிக்கட்டு' உட்பட! :D

Link to comment
Share on other sites

கல்யாணத்துக்கு அப்புறமும்

ஒரு பொண்ணு தன்னோட செல் நம்பர்

மாத்தாம அதே சிம் கார்டு யூஸ்

பண்ணுன அவள் தான் கலியுக சீதை என அறிக......!

Link to comment
Share on other sites

உன் பெயரை நானும்

என் பெயரை நீயும்

ஒரே மரத்தில்

ரகசியமாய்

செதுக்கி வைத்ததில்

ஊர் முழுக்க

"கிசு கிசு" ஆகிப் போனது

நம் காதல் !!!!

Link to comment
Share on other sites

வெங்கடேஷ் ஆறுமுகம்

5 மணிகள் · தொகுத்தது ·

‪#‎பந்திக்கு_முந்துங்க‬

ஒரு கோப்பை இட்லி..! (மதுராந்தகம் ஹை-வே-இன் ஓட்டல்)

சென்னை மதுரை நெடுஞ்சாலையில் பிரயாணிப்பவர்களே (சொந்த வாகனத்தில்) உங்களுக்கு ஒரு வரப்பிரசாதம் மதுராந்தகத்தில் அமைந்துள்ள ஹை-வே-இன் ஹோட்டல்.! பொதுவாக வெளியூர் பயணங்களில் நல்ல ஓட்டல் அமைவது கர்ணப் பரம்பரையில் பிறந்தவர்க்கு கூட அமையாது அதற்கு ஸ்பெஷல் புண்ணியங்கள் செய்து இருக்க வேண்டும்.!

இந்தக் கடை உண்மையில் அந்த புண்ணியம் செய்தவர்க்கு அமைந்த கடை.. உயர்தர சைவக்கடை என இவர்கள் எழுதலாம் ஆனால் இவர்கள் அப்படி ஏதும் தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை.. பெரு நகரத்தின் உயர்தர சைவ உணவகங்களை விட விலை குறைவு... உணவின் தரமும் அதன் சுவையும் அதை தயாரிக்கும் நேர்த்தியும் பாராட்டத்தக்கது..!

எண்ணெய் குடிக்காத பூரி மசித்த உருளைக்கிழங்கு மசால், நெய் மணக்கும் குழைந்த முந்திரி வெண்பொங்கல், புளிக்காத பொன்னிறத்தில் வார்த்த தோசை, மிளகும் முந்திரியும் சேர்த்த ரவா தோசை, முறுகலான மசால் தோசை, சுடச்சுட கிடைக்கும் ஸ்பெஷல் வடை இப்படி பல இருந்தாலும் ஹை லைட் ஒரு கோப்பை இட்லி தான்!அதென்ன கோப்பை இட்லி

இட்லி எப்படி கோப்பையில் வரும் என்று கேட்கிறீர்களா.. ஆம் அது தான் அக்கடையின் பிரசித்தமான சாம்பார் இட்லி..! ஹை-வே-இன் ஓட்டலின் சிறப்பே அதன் சாம்பார் தான்.. பொதுவாக நல்ல சாம்பாரை வைத்தே அந்த ஓட்டலின் இதர உணவுகளைப் பற்றி சொல்லி விடலாம்.. சாம்பார் வைப்பது ஒரு கலை..அதை ரசித்து செய்பவரே சிறந்த மாஸ்டர்..!

மிகச் சிறப்பாக சாம்பார் வைப்பவர் தான் எல்லா உணவுகளையும் சிறப்பாக செய்வார் என்பார் என் தந்தை.. எங்கள் கடைக்கு வேலைக்கு வரும் மாஸ்டர்களுக்கு முதல் பரீட்சையே அதுதானாம்..! சாம்பார் சிறப்பாக அமைந்து விட்டால் உணவுக்கு தனி ருசி வந்துவிடுமாம்..!

அந்த சாம்பாரில் தான் எத்தனை வகை..! சாப்பாட்டு சாம்பார் வேறு டிபன் சாம்பார் வேறு..!

கொஞ்சம் தண்ணீராக நிறைய காய்கறிகள் இருந்தால் அது சாப்பாட்டு சாம்பார்.. அதாவது இலையில் ஊற்றினால் ஓடுவது சாப்பாட்டு சாம்பார்.. டிபன் சாம்பார் அப்படி அல்ல கெட்டியாக இருக்க வேண்டும்..இலையில் ஊற்றினால் ஓடாமல் மெதுவாக பாயாசம் போல பரவவேண்டும் ஒரிரு காய்கள் தான் இருக்கும்.. நிறைய காய்கள் இருக்காது..!

பொதுவாக டிபன் சாம்பார் சிவாஜி மாதிரி... சிங்கம் சிங்கிளாக வரும் என்பது போல ஒரு காய் சாம்பாராக தான் செய்வார்கள் வெங்காய சாம்பார், பூசணி சாம்பார், முருங்கை சாம்பார், பருப்பு சாம்பார், தக்காளி சாம்பார் என ஏதாவது ஒரு காயை மட்டுமே சார்ந்திருக்கும்..! இதற்கெல்லாம் பேரரசனாக ஒரு சாம்பார் உள்ளது.. !

அதுதான் அரைத்துவிட்ட சாம்பார்..! அதாவது கையால் மசாலா அரைத்து வைப்பது.. இதற்கு தான் ஈடு இணையில்லை.. சரியாக அமையாவிட்டால் சமையலும் சொதப்பிவிடும்.. பொதுவாக அரைத்த சாம்பாரில் சின்ன வெங்காயம் பரங்கிக்காய் போடுவார்கள்.. அதை சாப்பிடும் போது சிணுங்கும் குழந்தையின் பிடிவாதம் போல மெல்லிய இனிப்பு இருக்கும்.!

ஆனால் ஹை-வே-இன் ஓட்டலின் சிறப்பே அந்த இனிப்பு சுவை இல்லாது.. சாம்பார் நல்ல சுவையுடன் மணமாக இருப்பது தான்.. அவர்கள் பூசணி பயன் படுத்துவதில்லை சின்ன வெங்காயம், முருங்கை, அவரை என்று பயன் படுத்துகிறார்கள்.. சின்ன வெங்காயத்தை சாப்பிடும் போது கூட அந்த இனிப்பு தெரியாத அளவு பக்குவமாக சமைக்கிறார்கள்..!

ஒரு பெரிய கோப்பையில் சூடாக 3 இட்லிகள் கோப்பை நிறைய சாம்பார் ஒரு ஸ்பூன் நெய்.. அதிலும் சாம்பாரின் சூடு அபாரமாக இருக்கும்.. மெல்ல ஸ்பூனால் அதை விண்டு சாம்பாரில் நனைத்து ஊதி ஊதி முதல் வாய் சுவைப்பது முதல் காமத்திற்கு ஈடானது.. அவ்வளவு ருசி.! சூடான உணவு எப்போதும் சுவையாக இருக்கும் அதிலும் இந்த காம்பினேஷன் சூப்பர்..!

இதற்கு தரும் தேங்காய் சட்னி.. பெரிய ஹீரோ படத்தில் நடித்த ஹீரோயின் போல.! அதிக ஸ்கோப் இருக்காது..யாரும் அதை தீண்ட மாட்டார்கள்.. ஆனால் கூடுதலாக சாம்பார் வாங்காமல் சாப்பிடுபவர்கள் அரிது.! இந்த சாம்பார் இட்லி ஜோடியை சிவாஜி -பத்மினிக்கு இணையாக சொல்லும் அளவிற்கு மிகச் சிறப்பாக இருக்கும்..!

இங்கு எந்த அரசுப் பேருந்தும் நிற்பதில்லை எனும் போதே இதன் தரம் உங்களுக்கு தெரியும்..! தென்னிந்திய வட இந்திய உணவுகளும் சூப்பர் என்றாலும் இந்த ஓட்டலின் ஹீரோ - ஹீரோயின் சாம்பார் இட்லி தான் காலை 10 மணிக்கு மேல் கிடைக்காது.. என் பயணங்கள் சரியாக அங்கு ஒன்பது மணிக்கு இருப்பதை போல திட்டமிட்டு போவேன்..!மாலையிலும் கிடைக்கும்...

அடுத்த முறை மதுராந்தகம் வழியாக சென்றால் ஹை-வே-இன்னின் சாம்பார் இட்லியை சுவைக்க மறக்காதீர்கள்..!

மொதலாளி அந்த தொழில் ரகசியம் என்னன்னா..!

சமையலுக்கு தேவையானவை:

அரைத்த சாம்பார் 5 அல்லது 6 பேருக்கு சமைக்க..

துவரம் பருப்பு - 100கி... க.பருப்பு - 25 கி... வரகொத்தமல்லி - 20கி... வரமிளகாய் - 20 கிராம்... ஒரு முழு கேரட்... ஒரு சிறிய அல்லது பாதி முருங்கைக்காய்... பரங்கிக்காய் துண்டு சிறியது... உரித்த சின்ன வெங்காயம் 10... அரைமூடி துருவிய தேங்காய்... தக்காளி 3... ஒரு ஸ்பூன் நெய்... நல்லெண்ணெய் 50 மிலி... முழு மிளகு & சீரகம் - இரண்டும் தலா ஒரு சிட்டிகை.. கருவேப்பிலை கொத்தமல்லி கடுகு உளுத்தம் பருப்பு - தாளிக்க... உப்பு -தேவைக்கு... காய்கறிகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்...

சமைக்கும் முறை : துவரம் பருப்பை நன்கு குழைவாக வேக வைத்து எடுத்து தனியாக வைத்து.. பிறகு வாணலியில் 25 ml எண்ணை விட்டு மிளகு,க.பருப்பு, வரகொத்தமல்லி, வரமிளகாய் போட்டு நன்கு சிவக்க வறுக்கவும்.. சிவந்த பின்பு அடுப்பை அணைத்து விட்டு துருவி வைத்த தேங்காயை இதில் கொட்டி வறுக்கவும்.. தேங்காய் சேர்க்கும் போது அடுப்பு எரியக்கூடாது தேங்காயும் நன்கு கலந்தவுடன் கடைசியாக சீரகம் சேர்த்து இறக்கி வைக்கவும்.. இதை நன்கு ஆற வைத்து மிக்சியில் தேவையான தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.. இப்போது மீண்டும் வாணலியில் கடுகு உளுத்தம்பருப்பு,கருவேப்பிலை கொத்தமல்லி போட்டு தாளித்து வெட்டி வைத்துள்ள முருங்கை, தக்காளி, பரங்கி காய்கறித்துண்டுகளை வாணலியில் கொட்டி வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காய்கறிகளை வேக வைக்கவும்.. காய்கறிகள் வெந்ததும் மிக்சியில் அரைத்த கலவையை சேர்த்து கொதிக்க விடவும்... நன்கு கொதித்ததும் து.பருப்பை சேர்த்து கிளறி நுரை அடங்கும் அளவில் உப்பு சேர்த்து நெய்விட்டு இறக்கி விடவும்.. சுவையான அரைத்த சாம்பார் ரெடி..! இட்லி, தோசை, வெண்பொங்கல், உப்புமா, பணியாரம் அனைத்திற்கும் ஏற்றது..!

Link to comment
Share on other sites

கட்சியினர் சுய பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும் - கருணாநிதி

// இருக்குற காசையெல்லாம் எடுத்து உண்டியில்ல போடு உடன்பிறப்பே .. சுசகமா நடந்துக்கோங்க

:D :d

Link to comment
Share on other sites

பகுத்தறிவு என்றால் என்ன?

கள்ளை ஒழிப்பதற்காக, நன்றாக வளர்ந்திருக்கும் தென்னந்தோப்பையே வெட்டி வீழ்த்துவதற்கு பெயர் தான் ‪#‎பகுத்தறிவு‬

Link to comment
Share on other sites

பகுத்தறிவு என்றால் என்ன?

கள்ளை ஒழிப்பதற்காக, நன்றாக வளர்ந்திருக்கும் தென்னந்தோப்பையே வெட்டி வீழ்த்துவதற்கு பெயர் தான் ‪#‎பகுத்தறிவு‬

 

பகுத்து அறிவது பகுத்தறிவு. பெரியார் சொன்னார் என்கிற காரணத்தினால் அச்சொல்லை வெறுப்பது எப்படி சரியாகும்?  :rolleyes:

 

ராஜபக்ச திருப்பதிக்குப் போய்விட்டார் என்பதற்காக தமிழர்கள் போகக்கூடாதா? :D

Link to comment
Share on other sites

பிரதி பலன் எதிர்பாராமல் செய்கின்ற உதவி மட்டுந்தான் ...

உங்கள் புண்ணிய கணக்கில் சேரூம் ...

Link to comment
Share on other sites

இயக்குனர் ஸ்ரீதர் அவரின் படத்துக்கு இசையமைக்க

தொடர்ந்து ஆறு முறை வந்தார் ..

அத்துனை படங்களுக்கு எம் எஸ் வி இசையமைத்து விட்டு என்னிடம் வருவது எனக்கு ஏற்புடையதாக தெரியவில்லை !

நிச்சயம் அவர் இசையினை மதிப்பிட முடியாது..

.

ஐந்து முறை தவிர்த்து வந்த நான் ஆறாவது முறையாக சொல்லிவிட்டேன்..

சார்,, உங்களுடைய 56 படங்களுக்கு எம் எஸ் வி அண்ணா இசையமைத்துள்ளார்.. அதில் எங்கும் எதிலும் எந்த தொய்வும் இருந்ததில்லை.. எல்லாமே சிறப்பான பாடல்கள்..!

.

உங்கள் அவசரத்துக்கு பாடல்களை போட்டு கொடுத்துவிட்டு. அதை போல அல்லாமல்

ஸ்ரீதர் பட பாட்டு கெட்டு விட்டது என்று அந்த கெட்ட பேரை நான் வாங்கி கொள்ள தயாரில்லை..இசையமைக்க முடியாது என்று மறுத்து விட்டேன்..!

>

அங்கே இருந்த பாரதிராஜா , அமர் எல்லாமே நீ சரியான மண்டைக்கனம் பிடித்தவன் என்று திட்டினர்.. அவர்களை போலவே பலரும்.!

>

ஆனால் அன்றிரவு நான் நிம்மதியாக தூங்கினேன்..

>

அதன் பின்னர் எம் எஸ் வி அவர்களை சந்தோசமாக சந்திக்க முடிகிறது..

நவராத்திரி நாளில் வந்த எம் எஸ் வி இடம் இதை சொன்ன போது ஆச்சரியமாக கேட்டார்..

>

நான் இப்படித்தான் .. எதற்காக ஒத்துக்கொள்வேன்.. ஏன் மறுக்கிறேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும்..

சில சமயங்களில் எனக்கே கூட தெரியாது.. .

>

பாஸ்கரும் , அமரும் , பாரதிராஜாவும் போல மண்டைக்கனம் என்று சொன்னாலும் ..ஆமாம் என்று சொல்லிவிட்டேன்.!

>

அன்றிரவு நிம்மதியாக தூங்கினேன் !

‪#‎இளையராஜா‬ !

Link to comment
Share on other sites

அடுத்தவனுக்கு கிடைத்தது

என்று சக மனிதன்

பொறாமைப்படாத ஒரே

விஷயம் ‪#‎மரணம்‬ மட்டுமே

‪#‎படித்ததில்_உரைத்தது‬

Link to comment
Share on other sites

வி. சபேசன்

2 மணி நேரம் முன்பு

இன்று கலைஞருக்கு 91 வயதாகிறது.

ஈழத்தமிழர்களின் முள்ளிவாய்க்கால் அழிவுக்கு கலைஞரை பலர் குற்றம் சாட்டுகிறார்கள். இதற்கு அறியாமை, மனப்பிறழ்வு, கயமைத்தனம் என்று நிறையக் காரணங்கள் இருக்கின்றன.

கலைஞர் மீதான வெறுப்பு எந்தளவிற்கு இருக்கிறது என்றால், தமிழ்நாட்டு அரசியலில் கலைஞரின் பக்கம் நிற்கிறார்கள் என்பதற்காக, எங்களோடு மிகக் கடினமான காலங்களில் எல்லாம் துணையாக நின்று ஆதரவு தந்த ஐயா வீரமணி, ஐயா சுபவீரபாண்டியன் போன்றவர்களை வசைபாடுகின்ற அளவிற்கு மனப்பிறள்வு முற்றிப் போய்க் கிடக்கின்றது.

எங்கள் பக்கத்தில் நடந்த தவறுகளை மறைக்கின்ற கயமைத்தனமே இதில் முக்கியமானது. எங்களின் தவறுகள் பேசப்படுவதில்லை. மேற்குலக நாடுகளின் பங்கு இதில் என்ன என்பது பற்றி பேசப்படுவதில்லை. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் முதற் குற்றவாளி ஆக்கப்பட்டு விட்டார்.

போர் முடிவதற்கு பத்து நாட்களின் முன்னர் நடேசன் தமிழக வார இதழ் ஒன்றிற்கு பேட்டி அளிக்கிறார். அதில்தான் தீபன் போன்ற தளபதிகள் வீரச்சாவு அடைந்து விட்டார்கள் என்பதையும் அறிவிக்கின்றார்.

அதில் நடேசன் போரின் நிலைமை பற்றி சொல்கின்ற போது 'இராணுவத்தினர் பலத்த அழிவை சந்தித்து விட்டார்கள், களைத்துப் போய் விட்டார்கள், நாங்கள் நடந்து போயே அவர்களை விரட்டி அடிக்கின்ற நிலையில் நிற்கின்றோம்' என்பதாக சொல்கின்றார்.

உண்மையில் போராட்டம் அழியப் போகிறது என்கின்ற செய்தி கலைஞருக்கு சரியான முறையில் தெரிவிக்கப்பட்டதா என்கின்ற கேள்வி இங்கே இருக்கின்றது. அப்படி தெரிவிக்கப்பட்டிருந்தால், அழிவை தடுப்பதற்காக கலைஞர் தெரிவித்த ஆலோசனைகள் கவனத்தில் எடுக்கப்பட்டதா என்கின்ற இன்னொரு கேள்வியும் இருக்கின்றது.

கலைஞர் தமது பதவியை ராஜினமா செய்திருந்தால், தமிழ்நாட்டில் திமுக இயக்கம் கடுமையாக ஒடுக்கப்பட்டிருக்கும். ஜெயலலிதா ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வாயே திறந்திருக்க மாட்டார். புலிகளால்தான் மக்கள் அழிகிறார்கள் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருந்திருப்பார்.

முள்ளிவாய்க்கால் முடிவு எக்காரணம் கொண்டும் மாறியிருக்காது.

ஈழத்தில் ஒரு இன விடுதலைப் போராட்டம் நடக்கிறது என்றால், அதே போன்று தமிழ்நாட்டில் ஒரு சமூக விடுதலைப் போராட்டம் ஆண்டாண்டு காலமாய் நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் அதில் திமுக கட்சியினதும் கலைஞரினதும் பங்களிப்பும் தேவையும் இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

கலைஞர் வாழ்க!

Link to comment
Share on other sites

வி.சபேசன் சார்.. நல்லாவே சமாளிக்கிறீங்க... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வி. சபேசன்

2 மணி நேரம் முன்பு

இன்று கலைஞருக்கு 91 வயதாகிறது.

ஈழத்தமிழர்களின் முள்ளிவாய்க்கால் அழிவுக்கு கலைஞரை பலர் குற்றம் சாட்டுகிறார்கள். இதற்கு அறியாமை, மனப்பிறழ்வு, கயமைத்தனம் என்று நிறையக் காரணங்கள் இருக்கின்றன.

கலைஞர் மீதான வெறுப்பு எந்தளவிற்கு இருக்கிறது என்றால், தமிழ்நாட்டு அரசியலில் கலைஞரின் பக்கம் நிற்கிறார்கள் என்பதற்காக, எங்களோடு மிகக் கடினமான காலங்களில் எல்லாம் துணையாக நின்று ஆதரவு தந்த ஐயா வீரமணி, ஐயா சுபவீரபாண்டியன் போன்றவர்களை வசைபாடுகின்ற அளவிற்கு மனப்பிறள்வு முற்றிப் போய்க் கிடக்கின்றது.

எங்கள் பக்கத்தில் நடந்த தவறுகளை மறைக்கின்ற கயமைத்தனமே இதில் முக்கியமானது. எங்களின் தவறுகள் பேசப்படுவதில்லை. மேற்குலக நாடுகளின் பங்கு இதில் என்ன என்பது பற்றி பேசப்படுவதில்லை. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் முதற் குற்றவாளி ஆக்கப்பட்டு விட்டார்.

போர் முடிவதற்கு பத்து நாட்களின் முன்னர் நடேசன் தமிழக வார இதழ் ஒன்றிற்கு பேட்டி அளிக்கிறார். அதில்தான் தீபன் போன்ற தளபதிகள் வீரச்சாவு அடைந்து விட்டார்கள் என்பதையும் அறிவிக்கின்றார்.

அதில் நடேசன் போரின் நிலைமை பற்றி சொல்கின்ற போது 'இராணுவத்தினர் பலத்த அழிவை சந்தித்து விட்டார்கள், களைத்துப் போய் விட்டார்கள், நாங்கள் நடந்து போயே அவர்களை விரட்டி அடிக்கின்ற நிலையில் நிற்கின்றோம்' என்பதாக சொல்கின்றார்.

உண்மையில் போராட்டம் அழியப் போகிறது என்கின்ற செய்தி கலைஞருக்கு சரியான முறையில் தெரிவிக்கப்பட்டதா என்கின்ற கேள்வி இங்கே இருக்கின்றது. அப்படி தெரிவிக்கப்பட்டிருந்தால், அழிவை தடுப்பதற்காக கலைஞர் தெரிவித்த ஆலோசனைகள் கவனத்தில் எடுக்கப்பட்டதா என்கின்ற இன்னொரு கேள்வியும் இருக்கின்றது.

கலைஞர் தமது பதவியை ராஜினமா செய்திருந்தால், தமிழ்நாட்டில் திமுக இயக்கம் கடுமையாக ஒடுக்கப்பட்டிருக்கும். ஜெயலலிதா ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வாயே திறந்திருக்க மாட்டார். புலிகளால்தான் மக்கள் அழிகிறார்கள் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருந்திருப்பார்.

முள்ளிவாய்க்கால் முடிவு எக்காரணம் கொண்டும் மாறியிருக்காது.

ஈழத்தில் ஒரு இன விடுதலைப் போராட்டம் நடக்கிறது என்றால், அதே போன்று தமிழ்நாட்டில் ஒரு சமூக விடுதலைப் போராட்டம் ஆண்டாண்டு காலமாய் நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் அதில் திமுக கட்சியினதும் கலைஞரினதும் பங்களிப்பும் தேவையும் இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

கலைஞர் வாழ்க!

 

தமிழகத்தின் முதலமைச்சராக  எத்தனை முறை  இருந்தார்....??

இதைக்கூட தெரிந்து கொள்ளாமல்..........???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் முதலமைச்சராக  எத்தனை முறை  இருந்தார்....??

இதைக்கூட தெரிந்து கொள்ளாமல்..........???

 

 விசுகர்! நரம்பில்லாத நாக்கால் எப்படியும் கதைக்கலாம் என்பதற்கு இவர்கள்தான் உண்மையான உதாரண புத்திரர்கள்.
Link to comment
Share on other sites

calculator வந்தது ..வாய் கணக்கு மறந்தது ..cellphoneல் message text செய்து வார்த்தைகள் சுருங்கியது.... smartphone வந்தது ... spelling மறந்தது... மொத்தத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நம் மூளையை முடக்கியது...

Link to comment
Share on other sites

காதல்ங்கிறது ஒரு ‪#‎competition‬. அதுல நீ முதல்ல ஏமாத்துறியா, இல்ல அவ முதல்ல ஏமாத்துறாளாங்க்றது தான் போட்டியே .......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல்ங்கிறது ஒரு ‪#‎competition‬. அதுல நீ முதல்ல ஏமாத்துறியா, இல்ல அவ முதல்ல ஏமாத்துறாளாங்க்றது தான் போட்டியே .......

உங்களுக்கான சந்தர்ப்பம் மிக மிக குறைவு
Link to comment
Share on other sites

முகநூளில் காதல் கண்டியில் சம்பவம் 65 வயது தாத்தா 17 வயது பொண்ணு கூட loves செய்தி கேள்வி படலியா? உங்க வயசுக்காரங்களுக்கே சந்தர்பம் இருக்கும் போது நமக்கு இருக்காதா என்ன...:D

Link to comment
Share on other sites

உலகத்துலயே ரொம்ப சீரியஸான விஷயம் காமெடி பண்றது.,

உலகத்துலயே ரொம்ப காமெடியான விஷயம் சீரியஸா இருக்குறது...

Link to comment
Share on other sites

கல்லடுப்புல கறிக்கொழம்பு வச்சப்ப கரி புடிக்கிற குண்டா மூஞ்சிங்களா, அடுத்தவன தாழ்த்தி பேசாம, உங்கள உயர்த்தி காமிக்கவே மாட்டீங்களா.............?

:D :d

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.