Jump to content

கொச்சிக்கடையில் காணாமல் போன சிறுமி பற்றி வவுனியாவில் முறைப்பாடு செய்ய வேண்டும்:


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
:
24 ஏப்ரல் 2014
lg-share-en.gif
 

கொட்டாஞ்சேனை பொலிசார் கூறுகின்றனராம்:- குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்-

MahindaPoster_CI.jpg



கொழும்பு கொச்சிக்கடையில் தனியார் வைத்தியர் ஒருவரிடம் மருந்து எடுக்கச் சென்றிருந்த 16 வயது சிறுமி மர்மமான முறையில் இன்று வியாழக்கிழமை காலை  (24.04.14) காணாமல் போயிருப்பதாக அந்தச் சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் அவர் முறையிடச் சென்றபோது, கொழும்பில் அவர்கள் வசிப்பதற்குரிய ஆதாரமாக வாக்காளர் பதிவைக் கொண்டு வந்தால்தான் முறைப்பாட்டடைப் பதிவு செய்யலாம், அல்லது கொழும்பில் வாக்காளராகப் பதிவு உள்ள ஒருவரைக் கூட்டிக்காண்டு வந்தால்தான் முறைப்பாட்டைப் பதிவு செய்ய முடியும் என்று கொட்டாஞ்சேனை பொலிசார் கையை விரித்துவிட்டர்களாம்.  

ஆனால் அவர்களின் சொந்த இடமாகிய வவுனியாவுக்குச் சென்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறு கொட்டாஞ்சேனை பொலிசார் அறிவுறுத்தியுள்ளார்களாம்.

அதேநேரம், இந்தச் சம்பவம் குறித்து காணாமல் போயுள்ள சிறுமியின் நெருங்கிய உறவினர் ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் சென்று நடந்ததைக் கூறி, கொட்டாஞ்சேனை பொலிசார் கூறியதையும் தெரிவித்து சிறுமி காணாமல் போயிருப்பது பற்றிய முறைப்பாட்டைப் பதிவு செய்ய முயன்றிருக்கின்றார்.

கொழும்பில் பொலிசார் அவ்வாறு முறைப்பாட்டைப் பதிவு செய்வதற்கு மறுக்கமாட்டார்கள் என்று கூறிய வவுனியா பொலிசார், அப்படியென்றால், சிறுமியின் தாயாரை நேரடியாக வவுனியாவில் வந்து முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தியிருக்கின்றார்களாம்.

தனியார் வைத்தியசாலைக்குச் சென்ற தாயார், காணாமல் போயுள்ள மகளின் வைத்திய ஆவணங்களை, தாங்கள் தங்கியிருந்த லொட்ஜிலிருந்து எடுத்து வருவதற்காகச் சென்றபோது, மகளை அங்கேயே இருக்குமாறு கூறிவிட்டுச் சென்றுள்ளார், ஆவணங்களை எடுத்துக் கொண்டு திரும்பி வந்து பார்த்தபோது, மகளைக் காணாமல் அவர் பதைபதைத்துப் போனார்.

அங்கிருந்தவர்களிடம் மகளைப் பற்றி விசாரி;த்தபோதும், தகவல் எதுவும் கிடைக்கவில்லையாம். எங்கு போய் காணாமல் போனவரைத் தேடுவது, என்ன செய்வதென்று தெரியாமல், கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் முறையிடச் சென்றபோதே, அந்தத் தாய்க்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கின்றது,

ஒரு சம்பவம் நடைபெற்ற இடத்தி;ல் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யாமல், சொந்த இடத்திற்குச் சென்று முறையிடுவதன் மூலம், உரிய நிவாரணம் உடனடியாக எப்படி கிடைக்கும் என்று பொலிசார் எதிர்பார்க்கின்றார்களோ தெரியவில்லை.

ஒரு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் அந்தப் பகுதியில் வாக்காளராகப் பதிவு செய்திருந்தால் மட்டுமே அந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவரிடமிருந்து அந்தப்பிரதேசத்திறளூ;குப் பொறுப்பான பொலிஸ் நிலையத்தில் முறையிடலாம், முறைப்பாட்டைப் பதிவு செய்யலாம் என்பது எந்த அடிப்படையில் சரியானது என்று தெரியவில்லை.

யுத்தம் முடிவடைந்த பின்னும், நாட்டில் கொள்ளைகள், கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல் என குற்றச் செயல்கள் அதிகரித்துள்ள நிலையில் சட்டம் ஒழங்கை நிலைநாட்ட வேண்டிய பொலிசார் இவ்வாறு நடந்து கொள்வதன் மூலம் நாட்டில் ஒழுங்கு நிலைமையை எவ்வாறு நிலைநிறுத்தப் போகின்றார்கள் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

தமிழர்கள் இந்த நாட்டில் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்படுகின்றார்கள், ஒடுக்கப்படுகின்றார்கள் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் எங்கிருக்கப் போகின்றது? 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/106028/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு இது ஒரு செய்தி  மட்டுமே

16 வயசு பெண் பிள்ளையை தேடும் பெற்றோருக்கு............... :(  :(  :(

Link to comment
Share on other sites

தமிழர்கள் சிறீலங்காவில் இரண்டாம்தரப் பிரசைகளாக நடத்தப்படுகிறார்கள் என்பது தவறு. :icon_mrgreen:

தமிழர்கள் சிறீலங்காவின் பிரசைகளே அல்ல என்பதுதான் அவர்கள் முடிவு. :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு சின்ன முன்னேற்பாடுதான்,

 

கோடைவிடுமுறைக்கு ஊருக்குப்போங்கோ நிச்சயமா புலனாய்வு உங்களைத் தொலைக்கும் அன்றேன் துளைத்தெடுக்கும். தேவையில்லாமல் அங்கத்தப் போலீஸ் நிலையம்போகாதையுங்கோ உங்கட பொண்டாட்டி அல்லது பிள்ளைகளிட்டைச் சொல்லி நீங்கள் வாழும் நாட்டில் முறைப்பாடு கொடுங்கோ.

 

ஏனெண்டால் உங்கட பதிவு உங்கதான் இருக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.