Jump to content

புலத்தில் வாழும் இலட்சியவாதிகளும், தன்மானத் தமிழர்களும் இணைவதை யாராலும் தடுக்க முடியாது: - கலாநிதி இராம் சிவலிங்கம்


Recommended Posts

புலத்தில் வாழும் இலட்சியவாதிகளும், தன்மானத் தமிழர்களும் இணைவதை யாராலும் தடுக்க முடியாது: - கலாநிதி இராம் சிவலிங்கம் [Monday, 2014-04-14 08:05:44] விலங்குகள் அகற்றப்பட்டு விடுதலையான எம் ஈழத் தாயின் மடியிலே; உங்களோடு சேர்ந்து நானும் அயர்ந்து உறங்க வேண்டும் என்ற ஆவலில்தானே எமது அரசியல் போரை முன்னெடுத்துச் செல்லவல்ல தகமையும், தகுதியும் கொண்ட தன்மானத் தமிழரை இணைந்து செயற்பட வருமாறு பல முறை அறைகூவினேன். நீதி வேண்டும் உலகம் எமக்காக போராடும்போது, எமது பங்கை நாம் செய்யத் தவறினால், எமது சந்ததி எம்மை மதிக்குமா அல்லது மன்னிக்குமா? என் வருந்தியவேளை சிங்கள அரசின் அறிக்கை வெளியானது. பதினாறு அமைப்புக்களையும், அவற்றைச் சார்ந்த நாநூற்றி இருபத்தி நான்கு உறுப்பினர்களையும் பயங்கரவாதிகள் என சித்தரிக்கும் சிங்கள அரசின் பட்டியலில்; தேவை காரணமாக சிலர் சேர்க்கப்பட்டதும், அதிலும் மேலான காரணத்திற்காக பலர் நீக்கக்கப்பட்டதும் ஆச்சரியமானதல்ல. ஆனால், இந்த அறிக்கையும் பட்டியலும், சிங்கள அரசின் பதட்ட நிலையை தெளிவாகக் காட்டியதுதான் ஆச்சரியமானது. எமக்குத் தேவையான அடையாளத்தை முள்ளிவாய்க்கால் தந்து ஐந்து ஆண்டுகளாகியும் தேசமீட்புக்கான எதையுமே செய்யாது , மற்றவர்களையும் செய்யவிடாது, புலம்பெயர் மக்களின் உணர்வுகளை கட்டிப்போட்ட இந்த அணிகளும், அதன் தலமைகளும் பயங்கரமான கில்லாடிகளேயன்றி அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்ற உண்மையைக்கூட இந்த சிங்கள அரசால் புரிய முடியவில்லையா? ஆண்டுக்கு ஒரு மகாநாடும், வருடத்திற்கு இரண்டு இராப்போசனமும் நடாத்துவதே தேசமீட்புக்கான அரசியல் போராட்டம் என் நம்பி செயற்படும் அந்த அப்பாவிகள் பயங்கரவாதிகளா? சிங்கள அரசின் பட்டியலில் குறிப்பிட்ட அமைப்புக்களும், சங்கங்களும் அதில் அங்கம் வகிக்கும் தமிழர்களும் பயங்கரவாதிகளென்றால்; அவர்களுக்கு தஞ்சம் கொடுத்த நாடுக்களையும், அந்த அமைப்புகளை சட்டபூர்வமாக இயங்க அனுமதி வழங்கிய அரசுகளையும் மனிதமே இல்லா சிங்கள அரசு அவமதிப்பதாக உங்களுக்குத் தோன்றவில்லையா? ஐ.நா சபையின் மனித உரிமை மீறலுக்கான சர்வதேச விசாரணை தீர்மானமாகியது கண்டு கலங்கி, தடுமாறி நிற்கும் சிங்கள அரசு, போர்குற்ற விசாரணைக்கான தீர்மானம் ஐ.நா வில் நிறைவேறும்போது என்ன செய்யப்போகிறார்கள்?ஓடி ஒழிவார்களா அல்லது ஓலமிட்டு ஒப்பாரி வைப்பார்களா? வெளிநாட்டு தமிழர்களை பயமுறுத்தி விரட்டிவிட்டு, வாழ்வாதமற்று வாழத் துடிக்கும் எம் ஈழம்வாழ் உறவுகளை தனிமைப்படுத்தி, அடக்குமுறை மூலம், பயங்கரவாதம் என்ற போர்வையிலே அவர்களை அழிக்க சிங்கள அரசு வகுத்த திட்டத்தில் ஒன்றே இந்த அறிக்கையும், பட்டியலுமாகும். இதில், எதுவுமே பலிக்காது என்பதை இந்தக் கொடியவர்கள் அறியும் நாள் வெகு தொலைவில் இல்லை. கலியுக காலம் என்றாலும் அதற்கும் ஓர் எல்லை உண்டல்லவா. தாம் தமிழர் என்பதை அடியோடு மறந்து, ஆங்கிலத்தில் பேசி, சிங்களத்தில் சிரித்து, சிங்களவரோடு சிங்களவராய் வாழ்ந்த கொழும்புத் தமிழர்களுக்கு சிங்கள அரசுகள் கற்பித்த பாடத்தை யாரால் மறக்க முடியும்? தமிழராய் பிறந்,த ஒரே காரணத்திற்காக, இனக்கலவரம் என்ற போர்வையிலே, சிங்கள காடையரின் உதவியுடன், காலத்துக்குக் காலம், சிங்கள அரசும், அதன் படைகளும் நடாத்திய இனஅழிப்பின் எதிரொலியே இன்று நாம் காணும் ஈழம்வாழ் உறவுகளின் இணையில்லா ஒற்றுமை. வெளிநாட்டில் செயற்படும் புலம்பெயர் தமிழர்களையும், அவர்களின் அமைப்புக்களையும் எதிரியாகப் பார்க்கும் இந்த அர்சும் எமக்குள் ஓர் புரிந்துணர்வை/ ஒற்றுமையை கொண்டு வருவது நிட்சயம். புலத்தில் வாழும் இலட்சியவாதிகளும், தன்மானத் தமிழர்களும் இணைந்து செயற்படுவதை யாரால் தடுக்க முடியும்? நன்றி. கலாநிதி இராம் சிவலிங்கம் http://www.seithy.com/breifArticle.php?newsID=107501&category=Article&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த டாக்டரிடம் சான்றிதழ் பெறுவது ...இவர் இலட்சியவாதி,இவர் தன்மான தமிழன்,இவர் துரோகி என்று :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹையா .....வெய்யில் பிடிக்காத இடம் வெள்ளையாய் இருக்கு........!  😂  
    • இதுக்கெல்லாம் ஏன் இப்படி வளைஞ்சு முட்டு கொடுக்க வேண்டும். உலகில் எந்த நாட்டில் தான் களவு இல்லை. அதுவும் டூரிஸ்ட் போகும் நாடுகளில் - இலண்டனில் இல்லாத களவா? திப்பு சுல்தானின் வாளை களவெடுத்து, அதை பார்க்க டிக்கெட் போட்டு காசு பார்க்கும் இராஜ குடும்பத்துக்கு வாழ்க்கை பூரா விசுவாசமாய் இருப்பேன் என சத்தியம் செய்து பிராஜா உரிமை பெற்ற நாம், 1000 ரூபா கொத்தை 1900 ரூபாவுக்கு வித்தமைக்கு ஏன் இவ்வளவு கடுப்பாகிறோம்? நடந்தது இலங்கை என்பதால் மட்டும்? 🤣. இலங்கை மேல் உள்ள ஆத்திரத்தில். இது உங்களுக்கு ஒரு மன நிம்மதியை தராலாம் - வேறு எதுவும் ஆகாது. சிறிலங்லாவை, சொறிலங்கா, இந்தியாவை, ஹிந்தியா என அழைப்பது போல் உங்கள் போன்றோரின் நியாயமான கோவத்தின், சிறுபிள்ளைத்தனமான வெளிப்பாடு இது என்பது வாசிப்போர் அனைவருக்கும் தெரியும். ஆனால் சிங்களவன் கெட்டிக்காரன் - அளுத்கடே நானா மீது வழக்கு பாய்ந்து விட்டது. களுத்தற ஆள் காசை திரும்பி கொடுத்தபடியால் தப்ப கூடும். இதை வைத்தே தாம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பில் கவனம் என பலத்த பிராசாரம் ஆரம்பமாகி விட்டது. புறக்கணி சிறிலங்கா என கூவி விட்டு கள்ளமாய் நெக்டோ இறக்கிய வியாபாரிகள் அல்லவா நாம்? சிறுபிள்ளைதனமாக எழுத, கோவிக்க, கைகை பிசைய சக தமிழன் மீது சேறடிக்க மட்டுமே எம்மால் முடியும். உலகின் மிக மோசமான விஷம். ஆற்றாமையால், கையாலாகதனத்தால் வரும் குரோதப்புத்தி. இந்த விஷம் எவரையும் எதுவும் செய்யாது. வைத்திருப்பவரை சிறு, சிறுக சாகடித்து விடும்.
    • அகவை என்பது ஒரு எண்ணிக்கை  அவ்வளவுதான்!   முக்கியம் வேண்டியது  ஆரோக்கியமும் வலிமையையும்  நல்ல சிந்தனையும் கருத்தாடலும்    அது தான் என் எண்ணம் அது இருக்கும் மட்டும் நீ இளைஞனே    ஆகவே நான் மௌனமாகிறேன் 
    • இங்கே இரவு பாடல் ஆடல் மற்றும் கேள்வி பதில் போட்டிகள் நடக்கும். அவற்றில் என் மக்கள் மற்றும் மருமக்கள் பங்கு பெற்று பரிசுகளையும் பெற்றார்கள். அதனால் பலருக்கும் கோட்டலில் அறிமுகமாகி விட்டனர். இங்கே வந்திருப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு என் குடும்பம் முழுமையாக வந்து நின்று தாயின் பிறந்த நாள் பரிசாக தாமே முழுவதுமாக பொறுப்பெடுத்து செய்வது ஆச்சரியமாக முன்னுதாரணமாக இருக்கிறது. என்னிடம் பலரும் கை கொடுத்து நல்ல வளர்ப்பு படிப்பு பண்புகள் என்று பாராட்டி செல்கின்றனர். அதை நானும் உணர்கிறேன். என் பிள்ளைகள் மட்டும் அல்ல அவர்களுக்கு வாய்த்தவர்களும் அவ்வாறே அமைந்திருப்பது பாராட்டப்பட்டது. நேற்று கரோக்கோ இசையில் எனது இரண்டு மருமக்களும் பாடி அனைவரதும் பாராட்டைப்பெற்றார்கள். (எனது மூன்று பிள்ளைகள் மணம் முடித்து விட்டனர். மூன்றும் காதல் திருமணம். என்னுடைய சம்மதத்துக்காக காத்திருந்து திருமணம் செய்தார்கள். அதுவும் ஒரு பெரிய கதை. நேரம் இருந்தால் பார்க்கலாம்) இன்று சிறிய கப்பலில் கடலில் சென்று குளித்து சாப்பிட்டு கோட்டல் திரும்பினோம்.   நாளை நாடு திரும்புகிறோம்... இந்த தீவு மற்றும் விபரங்களை முடிவுரையில் நாடு திரும்பியதும் எழுதுகிறேன். நன்றி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.