Jump to content

தமிழ்பேசும் மக்களுக்கென தனித்துவமான கல்வி அமைப்பு உருவாக்க வேண்டும்! - முதலமைச்சர் விக்னேஸ்வரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
தமிழ்பேசும் மக்களுக்கென தனித்துவமான கல்வி அமைப்பு உருவாக்க வேண்டும்! - முதலமைச்சர் விக்னேஸ்வரன் photo.png 
[Wednesday, 2014-04-23 18:32:17]
cm-230414-150.jpg

வட மாகாண தமிழ் பேசும் மக்களுக்கென தனித்துவமான கல்வி அமைப்பு உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதை மத்திய அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்று காலை இராஜேஸ்வரி மண்டபத்தில் ஆரம்பமான வடமாகாண கல்வி முறைமை தொடர்பான மீளாய்வு செயலமர்வில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-

  

இதுவரை நாம் பின்பற்றி வந்த கொள்கைகள் இலக்குகள் மற்றும் அவற்றில் காணப்படும் குறைகள் குற்றங்கள் தொடர்பாக அலசி ஆராய இது ஒரு சிறந்த சந்தப்பமாக அமைகிறது. அதே நேரம் எமது கடந்த காலத்தை ஆராய்ந்து அதை நிவர்த்தி செய்வதற்கான களமாக அதனைப் பயன்படுத்தவேண்டும். நாட்டுக்கு ஒரு முழுமையான இணைந்த கல்வி அமைப்பு இருப்பது அவசியம். ஆனால் எமக்கென வட மாகாண தமிழ் பேசும் மக்களுக்கென தனித்துவமான கல்வி அமைப்பு உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதை மத்திய அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். எமது எண்ணங்களையும் எமது பாரம்பரியங்கள் நோக்கங்களையும் புரியாமல் அறியாமல் கல்வி சம்பந்தமான ஆவணங்களைத் தயாரிப்பது ஏமாற்றத்தையே அளிக்கும்.

ஓரிரு தினங்களுக்கு முன்னர் அமெரிக்கப் பேராசிரியர் ஒருவர் மனித இனம் பேசி வந்த மொழி தமிழ் எனறார். அதனை இந்தியாவிலும் இலங்கையிலும் இருந்தோரே முதலில் பேசத் தொடங்கினார்கள் என குறிப்பிட்டுள்ளார். பின்னர் அது பல நாடுகளுக்கும் பரவியது. ஆகவே வட மற்றும் கிழக்க மாகாணங்கள் அவற்றின் தனித் தன்மையையும் தொன்மையையும் தென் பகுதி மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். எம்மைக் குறிப்பிட்ட பெரும்பான்மை வட்டத்தினுள் இழுத்துவிடாதீர்கள் என்பதற்காகவே கல்விக் கொள்கையாளர்களுக்கு நான் இதனைத் தெரிவிக்கிறேன். எமது தனித்துவத்தை தயவுசெய்து மதியுங்கள். பல்வேறு இனங்களிடையே புரிந்துணர்வும் மதிப்பும் எழுந்தால் எமது பிரச்சினைகள் தானாகவே தீர்ந்துவிடும்.

அன்று தொடக்கம் தொடரும் குரு சிஷ்ய பரம்பரைக் கல்வியை இன்று தனியார் கல்வி நிலையங்கள் நடத்துவது மனவருத்தத்துக்குரியது. பரீட்சைக்கு மாணவ மாணவியரை தயார் படுத்த மட்டுமே இந்த நிலையங்கள் உதவுகின்றன. எமது ஆசிரியர்களும் அதேபோலதான் பரீட்சைக்கு தயார் படுத்துவது தவிர வேறெதுவும் தெரியாதவர்கள் போல காணப்படுகின்றனர். இதனால் மாணவ மாணவியரின் போக்குகள் வாழும் முறைகள் என்பன மாற்றமடைகின்றன. வெறும் கேள்வி பதில் என்ற வட்டத்துக்கப்பால் செல்ல முடியாதவர்களாக உருவாகின்றனர்.

பரீட்சைகளில் சித்தியடையவேண்டியது அவசியம் ஆனால் வாழ்க்கைக்கு தயார் படுத்தும் கல்வி மிக முக்கியமானது. இது தொடர்பாக கல்வியாளர்கள் சிந்திக்கவேண்டும். இன்று எமது பெற்றோரின் நோக்கம் மாணவ மாணவியர் பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என்பதுதான். இன்று பெற்றோர்கள் அன்றைய காலம் போல ஒழுக்க விழுமியங்களைக் கற்பிப்பதில்லை. பரீட்சையில் அடி தவறினால் பெற்றோருக்கும் மாணவருக்கும் வாழ்க்கையில் இடி விழுந்தது போலாகிறது. இன்று கல்வி இனாமாகக் கிடைக்கிறது. எல்லாத்தையும் இனாமாகப் பெற எண்ணுகிறோம். இங்கு இனாமாகப் பெற்ற கல்வியை வெளிநாடுகளில் சென்று உழைப்பதே இன்றைய இளைஞர்களது நோக்காகும்.

வெளிநாடுகள் போல தமது கல்விக்காக தம்மையே வருத்தி வாழ்கின்ற நிலைமை வரும் போது மாணவர்களிடையே தன்னம்பிக்கை தானாக வளர்கிறது. பல தொழில் திறமைகளை வளர்க்க வேண்டும். பல் தொழில்களில் பயிற்சி பெறவேண்டிய அவசியம் உள்ளது. எனவே வருங்காலம் பொருளாதார விருத்தியை மையமாகக் கொண்டு உருவாக வேண்டும். அதனை மையமாகக் கொண்டு கல்வி உருவாக்கப்பட வேண்டும். போர்க்கால வாழ்வை வலியுறுத்த இன்றும் வீதியெங்கும் இராணுவம் வியாபித்துள்ளது. அப்படியிருந்தும் நாம் எமது தொழிற்கல்வியில் முன்னேற வேண்டிய அவசியம் உள்ளது. நாம் தொழில்களுக்கு மதிப்பு கொடுக்க முன்வந்தால் எமது மாணவர்கள் தொழிற்கல்வியை நாடிச்செல்வார்கள். இதற்கு எம் சிந்தனைகள் மாறவேண்டும்.

தகைமையற்ற ஒருவனை ஆசிரியரை நியமிப்பதால் பெரும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதிலொன்றுதான் இன்றைய மாணவ சமூதாயத்துக்கு ஆசிரியர்கள் மேல் ஏற்பட்டிருக்கும் மதிப்பற்ற தன்மை. தகைமையற்ற தறுதலைகளை ஆசிரியர்களாக்குவதைக் தவிர்ப்போமாக. தகுதியற்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயத்தை உருவாக்குகிறது என்றார். வடமாகாணத்தில் ஒரு கல்வியை வளர்ச்சியை ஏற்படுத்த இந்த பணிக்கூடம் ஒரு வாய்ப்பாக அமையும் என தெரிவித்தார்.

வட மாகாண கல்வி அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட வட மாகாண கல்வி முறைமை மீளாய்வும் கல்வி ஆலோசனை செயலமர்வும் இன்று காலை 9 மணியளவில் பலாலி வீதியில் அமைந்துள்ள இராஜேஸ்வரி மண்டபத்தில் வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா தலைமையில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மத்திய கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தான கலந்துகொண்டார்.

கல்வி அமைச்சின் செயலாளர் அனுர டி திசநாயக்கா, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், வட மாகாண சபையின் உறுப்பினர் அரியரத்தினம், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன், ஆலோசகர் கலாநிதி எதிர்வீரசிங்கம் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர், மாவட்ட கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளாகள், ஆசிரிய ஆலோசகர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த ஆய்வுப் பட்டறை நாளையும் தொடர்ந்து நடைபெறும்.

 

jaffna-workshop-230414-600.jpg

 

 

jaffna-workshop1-230414-600.jpg

 

http://seithy.com/breifNews.php?newsID=107971&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
    • எழுதுங்க தம்பி.....இன்னும் எழுதுங்க..... உங்களால் முடியாதது எதுவுமில்லை.
    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.