Jump to content

வடமாகாண முதல்வருக்கு நம்பிக்கை தரும் செய்தியை மேல்மாகாணசபை அனுப்ப வேண்டும்! - கன்னி அமர்வில் மனோ கணேசன் உரை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண முதல்வருக்கு நம்பிக்கை தரும் செய்தியை மேல்மாகாணசபை அனுப்ப வேண்டும்! - கன்னி அமர்வில் மனோ கணேசன் உரை. 

[Wednesday, 2014-04-23 10:24:40]
Mano-Ganesan-230414-150.jpg

தேசிய இனப்பிரச்சினை தீர்வின் முதற்புள்ளியாக, மாகாணசபை முறைமையின் மீது நம்பிக்கை தரும் செய்தியை மேல்மாகாணசபை, வடமாகாணசபை முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அனுப்ப வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். நேற்று நடைபெற்ற ஆறாவது மேல் மாகாணசபையின் கன்னியமர்வில் மனோ கணேசன் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார். அங்கு மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

  

இங்கே என்னுடன் எங்கள் மாகாணசபை உறுப்பினர் குகவரதன் நமது கட்சியை பிரதிநிதித்துவம் செய்கிறார். நமது கட்சி மேல்மாகாணத்தில் வாழும் நான்கு இலட்சம் தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்கின்றது. நாங்கள் எத்தனை பேர் இந்த சபையில் இருக்கின்றோம் என்பது முக்கியம் இல்லை. நாங்கள் இங்கே என்ன செய்ய விளைகிறோம் என்பதுதான் முக்கியமானது.

பெரிய கட்சிகளின் அதிகாரப் பல, பண பல வரப்பிரசாதங்கள் எம்மிடம் கிடையாது. நமக்கு இவற்றை எவரும் தருவதும் கிடையாது. நாம் நமது இந்த 51,000 ஆயிரம் வாக்குகளை பெரும் சவால்களின் மத்தியிலேயே பெற்றோம். 1999ல் வெறும் 3,200 விருப்பு வாக்குகளை மாத்திரம் இந்த மேல்மாகாண சபைக்கு, கொழும்பு மாவட்ட பிரதிநிதியாக வந்த நான், இந்த 2014ம் வருடத்தில் 51,000 மேல்மாகாண தமிழர்களின் பெருவாரியான வாக்குகளுடன் இந்த மேல்மாகாணசபைக்கு அதே கொழும்பு மாவட்ட பிரதிநிதியாக, குகவரதனையும் கூட்டிக்கொண்டு வந்துள்ளேன். எமது வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. கண்ணை திறந்து பார்ப்பவர்களுக்குத்தான் எங்கள் தனித்துவ வளர்ச்சி புரியும்.

மேல்மாகாணத்தில் வாழும் தமிழர்களின் அபிலாஷை, தேவை, எதிர்பார்ப்பு, துன்பம், கோபம் ஆகிய அனைத்தையும் நாம் இந்த சபையில் உரத்த குரலில் முன்வைப்போம். ஆனால், அது ஒரு நாளும் தமிழ் இனவாத குரலாக இருக்காது. நான் இனவாதி இல்லை. தமிழர்களின் துன்பங்களை பற்றி சளைக்காமல் பேசி குரலெழுப்பும் அதேவேளையில், நாம் சிங்கள சகோதர மக்களுடன் ஐக்கியமாக வாழ ஒவ்வொரு நிமிடமும் முயற்சி செய்து, ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி வருகிறோம்.

அதன் அடையாளமாகத்தான் நான் இங்கே இன்று சிங்கள மொழியிலும் உரையாற்றுகின்றேன். எங்கள் இன உரிமைகளை நான் ஒருபோதும் விட்டுக்கொடுக்கவும் மாட்டேன். அதேவேளை சகோதர இனத்து, மதத்து மக்களுடன் உறவு கொள்ளவும் தயங்கமாட்டேன். இது நமது கட்சியின் கொள்கை.இந்த நாட்டில் யார் என்ன சொன்னாலும், மூடி மறைக்க பார்த்தாலும், முதலாவது பிரச்சினை, தேசிய இன பிரச்சினையாகும். அதிலிருந்துதான் மற்ற எல்லா பிரச்சினைகளும் ஆரம்பமாகின்றன. ஆகவே அந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்த சபை முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்.

இந்த மேல்மாகாணசபையில் நாங்கள் 13 ப்ளஸ் என்ற நிலைபாட்டில் இருக்கிறோம். இங்கு சிலர் 13 மைனஸ் என்ற நிலைப்பாட்டிலும், இன்னும் சிலர் 13ஐ அப்படியே வைத்து கொள்வோம் என்ற நிலைப்பாட்டிலும் இருக்கிறார்கள்.இந்த பட்டியலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி என்பவை உள்ளடங்கும். இது தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் நாம் ப்ளஸ், மைனஸ் என்பவைகளை பற்றி பேசலாம். நிர்வாக அதிகாரங்களை பரவலாக்குவோம் என்று சொல்லும் ஜே.வி.பி.யுடனும் பேசலாம். ஆனால், 13ம் திருத்தமே வேண்டாம், மாகாணசபையே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு இந்த மாகாணசபையில் இருப்பவர்களுடன் பேச முடியாது. அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

முதன்முறையாக வட மாகாணசபை முதல்வர் சீ.வி.. விக்னேஸ்வரன், யாழ், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் பங்கு பற்றியுள்ளார். இது தேசிய நல்லிணக்கத்துக்கான நல்ல சமிக்ஞை. அந்த சமிக்ஞைக்கு பதிலாக இந்த சபையிலிருந்தும், வடமாகாணசபைக்கு நம்பிக்கை தரும் நல்ல செய்தி போக வேண்டும். இந்த நோக்கத்துக்கு ஒத்துழைக்கும்படி அனைத்து கட்சிகளையும் நான் வேண்டுகிறேன்.

இறுதியாக நமது நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஐ.நா சபை செயலாளர் நாயகத்துடன் இணைந்து 2009ம் வருடம் மே மாதம் வெளியிட்ட கூட்டறிக்கையை நான் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். 13ம் திருத்தத்தை அமுல் செய்து அதை மேன்மேலும் அபிவிருத்தி செய்வதாக, அதாவது 13 ப்ளஸ் என்ற இலக்கை நோக்கி நகர போவதாக நமது ஜனாதிபதி ஐ.நா சபை செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் உடன்பாடு செய்துள்ளார். இந்த உறுதிமொழி செயல் வடிவம் பெற நாம் உறுதியுடன் உழைப்போம் என அவர் தெரிவித்தார்.

http://seithy.com/breifNews.php?newsID=107959&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.