Jump to content

இந்திய வெளிவிவகாரக் கொள்கையை விளங்கிக் கொள்ளல் - யதீந்திரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய வெளிவிவகாரக் கொள்கையை விளங்கிக் கொள்ளல் - யதீந்திரா

கடந்த பத்தியில், இந்தியாவில் ஏற்படப் போகும் ஆட்சி மாற்றம், இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் ஆச்சரியப்படத்தக்க மாற்றங்கள் எதனையும் ஏற்படுத்தாது என்பதை விளக்கியிருந்தேன். அதனை மேலும் விளங்கிக் கொள்ளும் வகையில் இப்பத்தியில், இந்திய வெளிவிவகாரக் கொள்கை குறித்து பார்ப்போம்.

'தமிழ் தேசியம்' என்னும் சுலோகத்தின் கீழ் இயங்கிவரும் அரசியல் தரப்பினருக்கு முன்னால் அறுபது வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவங்கள் இருந்தபோதிலும் கூட, இந்திய வெளிவிவகாரக் கொள்கையை விளங்கிக்கொள்வதில் அவர்கள் தொடர்ந்தும் வறியவர்களாகவே இருக்கின்றனர். சில தினங்களுக்கு முன்னர், இந்தியா எடுத்திருந்த ஒரு வெளிவிவகார நிலைப்பாடு தொடர்பில் கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சிலர் வெளியிட்டிருந்த அறிக்கைகள், அந்த வறுமை நிலையை தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியிருந்தன. அமெரிக்க அனுசரணையின் கீழ் 2012 மற்றும் 2013இல் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்டிருந்த பிரேரணைகளை ஆதரித்து வாக்களித்திருந்த இந்தியா, இம்முறை கொண்டுவரப்பட்ட பிரேரணையின் போது வாக்களிப்பிலிருந்து விலகியிருந்தது. அதாவது ஆதரவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை என்னும் முடிவை எடுத்திருந்தது. அதுவரை இந்தியாவை புகழ்ந்து கொண்டிருந்த ஒருசிலர் உட்பட, பல தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் இந்தியாவின் மேற்படி முடிவால் அதிருப்தியடைந்தனர். சிலர் இந்தியா தமிழர்களுக்கு மாபெரும் துரோகம் செய்துவிட்டதான பொருளில் அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர். அவ்வாறானவர்களில், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பு அவர்களும் ஒருவர். நாடுகளின் வெளிவிவகார கொள்கை தொடர்பில் தெளிவிருந்திருப்பின் இவ்வாறு ஆவேசப்பட வேண்டிய தேவையிருந்திருக்காது.

இந்தியா ஒரு விடயத்தை ஆதரிக்கும்போது மகிழ்ச்சியடைவதும், பின்னர் ஒரு விடயத்தை தனது வெளிவிவகார நலன்களிலிருந்து எதிர்க்கும் அல்லது நடுநிலை வகிக்கும் போது ஆவேசப்படுவதும் அர்த்தமற்ற செயல்களாகும். இவ்வாறான அர்த்தமற்ற செயல்கள் அரை குறையான புரிதல்களிலிருந்தே பிறக்கின்றன. ஆனால் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவின் முடிவு தொடர்பில் நிதானமான பார்வையை வெளிப்படுத்தியிருந்ததாகவே நான் கருதுகிறேன். அவர் ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கியிருந்த விசேட நேர்காணலில் அந்த விடயங்களை பகிர்ந்திருக்கின்றார். அதாவது இந்தியாவின் முடிவு தமிழ் மக்களுக்கு ஏமாற்றமளித்தாலும் கூட, அதனை தமிழ் மக்களுக்கு சாதகமான ஒன்றாகவும் கூட பார்க்க முடியும் என்னும் பொருளில், சம்பந்தன் தனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்தியிருந்தார். இங்கு ஒரு விடயத்தை அழுத்தம் திருத்தமாக குறித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதாவது, இந்தியா முன்னைய இரு பிரேரணைகளுக்கு ஆதரவாக வாக்களித்திருந்ததும், தற்போது நடுநிலைமை வகித்திருப்பதும் இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட முடிவுகளல்ல. அது முற்றிலும் இந்தியாவின் தேசிய நலன்களில் இருந்து எடுக்கப்பட்ட முடிவாகும். ஒரு நாட்டின் வெளிவிவகார முடிவானது எப்பொழுதுமே குறித்த நாட்டின் நலன்களிலிருந்தே எடுக்கப்படும். இதுவே வெளிவிவகாரக் கொள்கையின் அடிப்படை. இது ஏன் தமிழ் தேசியவாதிகள் என்போருக்கு ஒரு போதும் விளங்குவதில்லை? விளங்கவில்லையா அல்லது விளங்கியும் விளங்காதவர்கள் போல் நடிக்கின்றனரா?

ஒரு நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையானது மூன்று விடயங்களை அடிப்படையாகக் கொண்டு திட்டமிடப்படும். ஒன்று அந்த நாட்டின் 'மக்கள்' (அடையாளம், விழுமியங்கள், எதிர்பார்ப்புக்கள் மற்றும் திறன்) இரண்டு, அந்த நாட்டின் வரலாறு (சூழ்நிலை, வாய்ப்புக்கள் மற்றும் கடந்த காலத்தில் எதிர்கொண்ட நெருக்கடிகள்) மூன்று, அந்த நாட்டின் புவிப்பரப்பு (அமைவிடம், வளங்கள் மற்றும் அயலவர்கள்) பலம்பொருந்திய நாடுகளின் வெளிவிவகாரக் கொள்கை திட்டமிடலானது, மேற்படி மூன்று விடயங்களின் அடிப்படையில்தான் அமைந்திருக்கும். இந்த அடிப்படையில் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையை எடுத்து நோக்கினால், தமிழ்ச் சூழலில் நிலவும் குழப்பங்கள் நீங்கும்.

பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுபட்ட இந்தியாவின் வெளிவிவகார அணுகுமுறையை பனிப்போருக்கு முன் - பனிப்போருக்கு பின் - என்று பிரித்து நோக்கலாம். இரண்டாம் உலகமகா யுத்தத்திற்கு பின்னரான இருதுருவ உலக ஒழுங்கில் இந்தியா சோவியத் முகாமுடன் இணைந்திருப்பதன் மூலம் தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் அணுகுமுறையைக் கைக்கொண்டிருந்தது. இந்தியா, சோவியத் முகாமுடன் இணைந்திருந்த காலத்தில்தான் இலங்கையின் உள்விவகாரத்தில் நேரடியாக தலையீடு செய்தது. இந்த விடயம் வெளித்தோற்றத்தில் ஈழத் தமிழர்களின் உரிமை தொடர்பான விடயமாக நோக்கப்பட்டாலும், உண்மை முற்றிலும் மாறானது. அன்றைய புவிசார் அரசியல் முரண்பாடுகளின் விளைவாகவே இந்தியாவின் நேரடியான தலையீடு நிகழ்ந்திருந்தது. தனது பிராந்திய அதிகார எல்லைக்குள்ளிருந்து விலகிச்செல்ல முற்பட்ட இலங்கைக்கு ஒரு பாடத்தை எடுப்பதும், அதன் மூலம் இப்பிராந்தியத்திலிருக்கும் ஏனைய நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கையைக் கொடுப்பதுமே இந்தியாவின் நோக்கமாக இருந்தது. அன்றைய பனிப்போர் கால சூழலும் அதற்கு உகந்ததாக இருந்தது. ஆனால் 1991இல் சோவியத் முகாம் வீழ்ச்சியுற்றதைத் தொடர்ந்து, இந்தியா அதுவரையான தனது வெளிவிவகார அணுகுமுறையை முற்றிலுமாக மாற்றிக் கொண்டது. சோவியத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து உலகின் ஒரேயொரு வல்லரசாக மேற்கிளம்பிய அமெரிக்க அதிகார மையத்துடன் இணைந்திருப்பதன் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் அணுகுமுறையை இந்தியா தெரிவு செய்தது.

இந்த பின்புலத்தில்தான், 'கிழக்கை உற்றுநோக்குங்கள்' (Look East) என்னும் நிலைப்பாட்டை இந்தியா தெரிவு செய்தது. அமெரிக்காவுடன் இணைந்திருந்த ஆசியாவின் நான்கு புலிகள் என்று வர்ணிக்கப்பட்ட ஹொங்கொங், சிங்கப்பூர், தாய்வான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் அபார வளர்ச்சியை முன்னிறுத்தியே, 'கிழக்கை உற்றுநோக்குங்கள்' என்னும் கொள்கையை இந்தியா முன்னிறுத்தியிருந்தது. இந்தப் பின்னணியில் ஆசியாவில் சீனா மற்றும் யப்பானுக்கு அடுத்து பொருளாதார நிலையில் வேகமாக வளர்ச்சியடைந்துவரும் நாடாக இந்தியாவே நோக்கப்படுகின்றது. இந்த பின்னணியில் நோக்கினால் தனக்கு முன்னால் விரிந்துகிடக்கும் பல்வேறு பிரச்சனைகளை கருத்தில் கொண்டுதான் இந்தியா தன்னுடைய வெளிவிவகார முடிவுகளை எடுக்கும். வெளிவிவகார முடிவுகள் எடுக்கப்படும்போது அதன் உடனடி - நீண்டகால தாக்கங்களை கருத்தில் கொண்டுதான் எந்தவொரு நாடும் தன்னுடைய முடிவுகளை அறிவிக்கும். இந்தியாவைப் பொறுத்தவரையில் கொழும்புடன் அதிக இறுக்கத்தை கடைப்பிடிப்பதன் மூலம் தன்னுடைய அயலுறவுசார்ந்த அணுகுமுறையில் எத்தகைய விளைவுகள் ஏற்படலாம் என்பதை கணித்தே முடிவுகளை எடுக்கும். இந்தியா கொழும்புடன் தொடர்ந்தும் கடுமையாக நடந்து கொண்டால், கொழும்பின் முன் சீனா மட்டுமே ஒரேயொரு தெரிவாகும் நிலைமை ஏற்படும். இலங்கையின் உடனடி அயல்நாடென்னும் வகையில் தன்னுடைய அருகில் இருக்கும் ஒரு நாட்டின் மீது, தன்னுடைய பிடி அதிகம் தளர்ந்து செல்லாதவாறுதான் இந்தியாவால் முடிவுகளை எடுக்க முடியும். இந்த அடிப்படையில்தான் இந்தியா தற்போது எடுத்திருக்கும் முடிவை நோக்க வேண்டும்.

இன்று இந்தியா ஆதரிக்கவில்லையே என்று புலம்புவோர், முன்னர் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட இரண்டு பிரேரணைகளும் இந்திய ஆதரவினால்தான் வெற்றிபெற்றன என்பதை உணரத் தவறுகின்றனர். இந்தியா ஒரு கட்டம் வரைக்கும் அமெரிக்க அழுத்தத்தை கொண்டுவந்து நிறுத்திவிட்டு, அதற்கான பொறுப்பிலிருந்து விலகியிருக்கிறது. இந்தியா முன்னைய பிரேரணைகளின் போது நடுநிலை வகித்திருக்குமாயின், இந்த விடயத்தை தொடர்ந்தும் அமெரிக்காவினால் முன்னெடுக்க முடியாது போயிருக்கும். இந்தியா காலை வாரிவிட்டதே என்று மண்ணை வாரி இறைப்போர், ஒரு கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் - இவ்வாறு இந்தியா விலகியதன் மூலம் தமிழர்களுக்கு அப்படியென்ன பாதிப்பு ஏற்பட்டுவிட்டது? ஒருவேளை இந்தியா வாக்களித்திருந்தால், 23 நாடுகள் ஆதரவளித்திருந்தன என்பதற்கு மாறாக 24 நாடுகள் என்று வந்திருக்கும். இதன் மூலம் தமிழர்களின் வாழ்வில் நிகழப்போகும் அதிசயங்களை பட்டியலிடும் ஆற்றல் உள்ளவர்கள் எவராவது இருக்கின்றனரா?

எனவே, இங்கு விடயங்களை உணர்ச்சிவசப்பட்டு நோக்காமல், அறிவுபூர்வமாக நோக்க வேண்டியதே கட்டாயம். இந்தியா தற்போது நடுநிலை வகித்திருப்பதன் ஊடாக, தமிழர்கள் தொடர்பில் சில விடயங்களை கொழும்பிற்கு வலியுறுத்தக் கூடிய ஏதுநிலையை பெற்றிருக்கிறது. குறிப்பாக 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் சில பரிந்துரைகளை வலியுறுத்துவதற்கான வாய்ப்பு முன்னரை காட்டிலும் இந்தியாவிற்கு கிடைத்திருக்கிறது. எனவே இந்த இடத்தில், தமிழர்கள் கிடைத்திருக்கும் புதிய வாய்ப்பை எவ்வாறு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது என்றே யோசிக்க வேண்டும். தற்போது கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையில் 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் வடக்கு மாகாணசபை தொடர்பில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே இந்த சந்தர்ப்பத்தில் வடக்கு மாகாணசபையை திறம்பட இயக்குவதற்கான உதவியை இந்தியாவிடம் கோரலாம். வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் இந்தியாவின் தொடர்ச்சியான அழுத்தங்களின் விளைவாகவே நடந்தேறியது.

கொழும்பு, இந்தியாவிற்கு எவ்வாறான வாக்குறுதிகளை கொடுத்திருந்தது, அவற்றில் எவற்றையெல்லாம் நிறைவேற்றியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியாவிட்டாலும், 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் தெற்கில் கடும் எதிர்ப்பு கிளம்பிய போதும் கூட, அதனை இல்லாமலாக்கும் முயற்சிகளில் அரசாங்கம் இறங்கியிருக்கவில்லை. அதனை இந்தியாவே தடுத்து நிறுத்தியிருந்தது. இரண்டு, அத்திருத்தச் சட்டத்தின் கீழான வடக்கு மாகாணசபை தேர்தலை வைக்குமாறு இந்தியா அழுத்தியதன் காரணமாகவே, இன்று அந்த மாகாணசபை கூட்டமைப்பின் வசமிருக்கிறது. இது இரண்டும் இந்தியாவினால் நிகழ்ந்த நன்மை என்பதை ஏன் தமிழர்கள் நினைத்துப் பார்க்கக் கூடாது? இதில் பிறிதொரு வாதமுமுண்டு. இந்தியா 13வது திருத்தச் சட்டத்திற்குள் தமிழரின் அபிலாசைகளை சுருக்க முற்படுவதாக சிலர் அபிப்பிராயங்களை வெளியிட்டு வருகின்றனர். மந்திரக்கோல் கொண்டு சுவர்க்கத்தை சிருஸ்டிப்போம் என்றுரைக்கும் மாயாவிகளுடன் மோதும் ஆற்றல் இப்பத்தியாளரிடம் இல்லை. அவர்களை நம்பும் மக்கள் பரிதாபத்துக்குரியவர்கள் என்பதைத் தவிர வேறு ஒன்றும் உரைக்க இல்லை.

இந்தியா எடுத்திருக்கும் முடிவின் வாயிலாக இரண்டு முக்கிய உண்மைகள் தமிழர்களுக்கு கிடைத்திருக்கின்றன. ஒன்று, இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் தமிழ் நாடு எந்தவகையிலும் செல்வாக்குச் செலுத்த இயலவில்லை. இரண்டு, இந்திய வெளிவிவகாரக் கொள்கை, இந்திய அரசியல்வாதிகளின் வசமில்லை. அது முற்றிலும் இந்திய அதிகாரிகள் வசமிருக்கிறது. புதுடில்லியை தளமாகக் கொண்டிருக்கும் இந்திய வெளிவிகாரக் கொள்கை குழாமானது, மூன்று தளங்களில் இயங்குகின்றது. இந்திய பிரதமர் அலுவலகம், சக்தி வாய்ந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் கீழ் இயங்கும் தேசிய பாதுகாப்பு பேரவை, வெளிவிவகார அமைச்சு - ஆகியவையே அந்த மூன்று தளங்களாகும். ஆனால் இவற்றில் அரசியல்வாதிகளின் செல்வாக்கு எதுவுமில்லை.

ஒருவேளை இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் அரசியல்வாதிகள் செல்வாக்குச் செலுத்தக் கூடிய நிலைமை இருந்திருப்பின், ஆளும் காங்கிரஸ் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டிருக்கும் போது, இலங்கை விடயத்தில் நடுநிலைமை வகித்திருக்கும் முடிவை எடுத்திருக்காது. ஆனால் அவ்வாறு நிகழவில்லை. மாறாக, இந்திய தேசிய நலன்களிலிருந்தே முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது, இனிமேலும் எடுக்கப்படும். இவற்றை தமிழ் தேசியவாதிகள் என்போர் தெளிவாக விளங்கிக் கொண்டால்தான் தமிழர்களுக்கு நன்மை.

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=2&contentid=4a2e1c4a-dbab-42a6-afc6-dc3d15f8a0da

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.