Jump to content

புதுக்குடியிருப்பு மீன் சந்தை கட்டிடவேலை ஒருமாதத்தினுள் ஆரம்பம்


Recommended Posts

மக்கள் செறிவாக உள்ள புதுக்குடியிருப்பு பிரதேச பொதுச்சந்தையின் நிர்மாணப்பணிகள் இன்னும் பூரணப்படுத்தப்படாத நிலையில் மீன்சந்தைக்கான பணிகள் இன்னும் ஒரு மாத காலப்பகுதியில் ஆரம்பிக்கப்படும் என பிரதேச சபையினர் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரனிடம் தெரிவித்தனர். மக்கள் முறைப்பாட்டினை அடுத்து இது தொடர்பில் பிரதேச சபைக்கு சென்று வினவிய போதே அவர்கள் மேற்படி தெரிவித்ததாக அறியவருகிறது.

 இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது,

 கடந்த வாரம் புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் பொதுச்சந்தையின் மீள் கட்டுமானப்பணிகள் இன்னும் பூர்த்தியாகாதது தொடர்பிலான முறைப்பாடுகளை ரவிகரனிடம் முன்வைத்திருந்தனர். மீளக்குடியேறி சில வருடங்கள் உருண்டோடிய நிலையிலும் இன்னமும் கட்டுமானப்பணிகளின் பூரணப்படுத்தப்படாத நிலை தொடர்வதாக வருத்தம் தெரிவித்திருந்தனர்.

 இந்த வருட ஆரம்பத்தில், மக்களின் முறைப்பாட்டினை தொடர்ந்து அங்கு சென்று பொதுச்சந்தையைப்பார்வையிட்ட ரவிகரன் மிகவும் மோசமான நிலையில் குறித்த பொதுச்சந்தை இருப்பதையும் நிரந்தர மலசல கூட வசதிகள் இன்றி காணப்பட்ட நிலையையும் அவதானித்தார்.

 மக்கள் செறிவுள்ள பகுதியில் மோசமான நிலையில் காணப்படும் பொதுச்சந்தையின் மீள் கட்டுமானப்பணிகள் துரித்தப்படுத்தப்படவேண்டும் எனவும் குறிப்பாக கூடிய விரைவில் ஆண் பெண் இருபாலருக்குமான நிரந்தர மலசல கூடம் அமைக்கப்பட வேண்டும் எனவும் பிரதேச சபையிடம் கோரியிருந்தார்.

 கோரிக்கைக்கிணங்க நிரந்தர மலசல கூடம் அமைக்கப்பட்டது. ஆனால் அடுத்த மாதமளவில் மீன்சந்தைக்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிட்டிருந்த போதிலும் இன்று வரை அவை தொடங்கப்படாத நிலையிலேயே சென்ற வாரம் மக்களால் மீண்டும் ரவிகரனுக்கு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அதனை தொடர்ந்து பிரதேச சபைக்கு விஜயம் செய்த ரவிகரன் மீன்சந்தை கட்டுமானப்பணி தொடர்பில் வினவினார். மக்கள் செறிவுடன் காணப்படும் மேற்படி சந்தையின் கட்டுமானப்பணிகள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படுவதன் அவசியம் தொடர்பிலும் கலந்துரையாடியதாக அறியவருகிறது.

 இந்நிலையில் இன்னும் ஒரு மாத காலப்பகுதிக்குள் மீன் சந்தைக்கான பணிகள் தொடங்கப்படும் என ரவிகரனுக்கு பிரதேச சபையினர் உறுதியளித்ததாக தெரியவருகிறது.

 மீன் சந்தைக்கான அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஒரு வாரத்தினுள் அனுமதி கிடைத்துவிடும் எனவும் அதன்பின் கட்டிடம் அமைப்பதற்கான கேள்வி கோரல் செய்யப்பட்டு எப்படியாவது இன்னும் ஒரு மாத காலத்தில் புதுக்குடியிருப்பு மீன்சந்தைக்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுவிடுமெனவும் உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.image4.jpgimage5-1.jpgimage6.jpgimage7-1.jpgIMG_0068-copy.jpgimage8-1.jpg

 

http://www.thinakkathir.com/?p=57938

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இங்கிருந்து செல்லும் சிறிய பென்சன்காரர்கள் இதனால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதா??
    • நல்ல செயல் செய்பவர்கள் உயர்ந்த குலம் , நாசவேலை செய்பவர்கள் செயலால் தாழ்ந்த குலம் . அதைத்தான் குலவழக்கம் என்றேன் . சுமாவினை இன்னும் கேவலமாக தான் நான் சொல்வேன் , பொதுவெளி மரியாதைக்காக இத்துடன் முடிக்கிறேன் .... என் அயல் ஊர் தான் அவர், சந்து பொந்து எல்லாம் தெரியும் அவரை பற்றி. ஒரு நாகரீகத்துக்காக வேண்டாம் .
    • எனக்கு பெரேரா அண்ட் சன்ஸ் களில் நடந்ததில்லை. ஆனால் புதுக்கடையில் இரு பெண்கள், ஒருவர் மத்திய வயது இன்னொருவர் வயசாளி, சாப்பிட்டு கொண்டிருக்கும் போது வந்து கையை நீட்டுவார்கள். அசெளகரியம்தான் ஆனால் aggressive begging என சொல்லமுடியாது. அதே போல் ரோயல் பேக்கரி அடியிலும் ஒரு ஐயா நிரந்தர டியூட்டி. நிற்க, இது 90,2000,2010 களிலும் இருந்தது. எனது கேள்வி -  இப்போ கூடியுள்ளதாக உணர்கிறீர்களா? எத்தனை சதவீதத்தால்? பிகு என்னுடன் இலண்டன் - இலங்கை வந்த நண்பரை இன்று காலை கேட்டேன். 10% அளவில் கூடி உள்ளதாக அவர் நினைக்கிறார். ப் பா….பெரிய ஆள்தான் வாப்போ😀. சும்மா ஊட் போடும் ஷெய்க் கணக்கா கம கமப்பிங்க போல🤣 எத்தனை வருடம் கழித்து போகிறீர்கள் ? யாழ் களத்தில் ஒரு சிட்சுவேஷன் ரிப்போர்ட் போட்டு விடவும்🙏. இனிய பயணமாகட்டும்.
    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.