Jump to content

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்... மக்கா சோள தத்துவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்... மக்கா சோள தத்துவம்

 
corn.jpg
அவர் ஒரு அமெரிக்க விவசாயி. ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய நிலத்தில் சோளம் பயிரிடுவார். சிறந்த ரக சோளத்தை விளைவிக்கும் விவசாயிகளுக்கான போட்டியில் மறக்காமல் பங்கேற்பார். ஒவ்வொரு ஆண்டும் முதல் பரிசை தவறாமல் வென்று வருவார்.

அவரிடம் ஒரு வித்தியாசமான குணம்.. தான் பரிசு பெறக் காரணமான, தரமான சோள விதைகளை தனது அக்கம்பக்கத்து நிலத்தினருக்கும் தயங்காமல் அளித்து வந்ததுதான் அது.

தொடர்ந்து இதைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு அதிகாரிக்கு ஆச்சரியம்! ‘தன்னோடு போட்டி போடுபவர்களுக்குக்கூட யாரவது உதவி செய்வார்களா?’ அந்த விவசாயியிடமே அதைக் கேட்டுவிட்டார்.

“தரமான சோள விதைகளை நீங்கள் மட்டும் பயிரிட்டு விவசாயம் செய்வதால்தான் உங்களுக்கு ஆண்டுதோறும் முதல் பரிசு கிடைக்கிறது. ஆனால், அதை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொண்டால், உங்களுக்கு முதல் பரிசு கிடைக்கும் வாய்ப்பு குறைந்துவிடாதா? அவர்களும் உங்களோடு போட்டியில் கலந்து கொள்பவர்கள்தானே!”

அதிகாரியை பார்த்து புன்னகைத்த விவசாயி சொன்னார்.

“இயற்கையாகவே, முற்றின சோளமணிகள் காற்றின் மூலம் பரவி, ஒரு நிலத்தில் இருந்து மற்றொரு நிலத்துக்குப் போய் விழும் என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே! என் வயலைச் சுற்றியுள்ள விவசாயிகள் தரம் குறைந்த சோளத்தை பயிரிட்டிருந்தால், அவை காற்றின் மூலம் என் வயலில் வந்து விழும் வாய்ப்புள்ளது. அப்படி விழுந்தால், கலப்பினப் பெருக்கத்தின் மூலம், என் வயலில் வரும் விளைச்சல் தரம் குறைந்த்தாகி விடாதா? நான் தரமான சோளத்தை விளைவிக்க நான் உதவ வேண்டும் இல்லையா? அதைத்தான் நான் செய்கிறேன்!”

பக்கத்து நிலங்களில் விளையும் சோளத்தின் தரம் மேம்படாவிட்டால், தன் சோளத்தின் தரமும் மேம்படாது என்ற விவசாய அரிச்சுவடியை நன்றாகப் புரிந்து வைத்திருந்தார் அந்த விவசாயி!

இந்த விதி விவசாயத்துக்கு மட்டும்தானா?

சமாதானத்தையும் நிம்மதியையும் விரும்பும் ஒருவன், தன்னைச் சுற்றியுள்ளவர்கள் நிம்மதியாக இருக்க உதவ வேண்டாமா? நன்றாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர், தன்னைச் சுற்றியுள்ளவர்களும் நன்றாக வாழ உதவ வேண்டாமா? சந்தோஷமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள், தன்னைச் சுற்றியுள்ளவர்கள் சந்தோஷமாக இருப்பதற்கு உதவ வேண்டாமா?

வாழ்க்கையில் எந்த ஒருவரது நலனும் மகிழ்ச்சியும் அந்த தனி மனிதரை மட்டுமே சார்ந்த விஷயம் அல்ல. அது அவரை சுற்றியுள்ளோரின் நலனையும் மகிழ்ச்சியும் பொறுத்தே அமைகிறது.

இதைத்தான் தமிழில் அழகாய் சொல்லியிருக்கிறார்கள் "ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும்".

 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருமான வரி என்ற, நவீன காலத் தத்துவமே... நீங்கள் கூறிய நமது பழமொழியிலிருந்து தான் தோன்றியிருக்க வேண்டுமென நினைக்கிறேன், பெருமாள்!

 

செல்வம் எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கப் படவேண்டும்.....!

 

வரப்புயர நீருயரும், நீருயர நெல்லுயரும்... நெல்லுயரக் குடி உயரும்... குடி  உயரக் கோன் உயர்வான்...!

 

இந்தக்காலத்தில குடி உயர முந்தியே... கோன் உயர்ந்து கொள்கிறான் என்பது வேறு கதை...!

 

நன்றிகள் பெருமாள்... அடிக்கடி வாருங்கள்! :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம் அடிப்படைவாதிகளால் பாதிக்கபட்ட அடக்கி ஒடுக்கபட்ட முஸ்லிம் மதத்தை சேர்ந்த நல்ல உள்ளம் கொண்டோரும் இருக்கின்றனர். இஸ்ரேலின் மீதான முல்லாக்களின் தாக்குதலை விரும்பாத ஈரானியர்கள் வெளிநாட்டில் இருக்கின்றனர் அவர்களை விடுவோம் ஈரானிலும் எல்லோ இந்த தாக்குதலை விரும்பாத ஈரானியர்கள் இருக்கின்றனர் .ஆனால் நீங்கள் குறிப்பிட்ட இலங்கை  தமிழ் நாட்டு முஸ்லிம்களுக்கு முல்லாக்களின் இந்த தாக்குதல் இஸ்ரேலின் அழிவு ஆரம்பம் முஸ்லிம்களின் வெற்றி  என்று கற்பனை செய்து வெற்றி கொண்டாட்டம் தானே
    • தாய்வானில் கூட நான் சீனாவை குறை சொல்ல மாட்டேன். நாடு முழுவதும் மாவோவின் கீழ் வீழ - எஞ்சிய முதாளிதுவ தீவு அது. அதை கேட்பது ஒரு வகையில் நியாயமே. திபெத், உகிர் அட்டூழியங்கள் மிக மோசமனாவை. ஆனால் உலக அளவில் ? ஆதிக்க விரிப்பு, வர்த்த ஆளுமை - எல்லாரும் செய்ய முனைவதுதானே? அது பொருட்டே இல்லை. விலை ஒன்றே கருதுபொருள்.
    • அதுதானே உலகத்திலை இல்லாத பிரச்சனையா சிலோனிலை இருக்குது? மிண்டு கொடுத்து வாழ்பவர்களுக்கு சகலதும் சகஜம்.😂 இலங்கையில் எவ்வித பிரச்சனையுமே இல்லை என நிறுவ ஒரு கூட்டம் யாழ் இணையத்தில் உள்ளது யாவரும் அறிந்ததே.🤣
    • நீங்கள் விரைந்து குணம் பெற எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறோம். அத்தோடு வைத்திய ஆலோசனைகளை சரியாக பின்பற்றத் தவற வேண்டாம்.. அதேவேளை வைத்தியர்களின் அலோசனைக்கு ஏற்ப உடல் தன்னை சரிப்படுத்திக் கொள்ளவில்லை என்றால்.. உடல் உளம் சொல்வதை வைத்தியரிடம் சொல்லாமல் இருப்பதையும் செய்ய வேண்டாம். 
    • இல்லை பொதுவாக வில்லனும் வில்லனும் ஒன்றாவது சகஜம்தானே. அமெரிக்காவுக்கு சோவியத் காலம் தவிர ரஸ்யா வேறெப்போதும் எதிரி இல்லைத்தான்.  ஆனால் கிழக்கு ஐரோப்பிய சிறிய தேசிய இனவழி நாடுகள், பின்லாந்து இவையின் நிலமை எப்போதும் முதலை குளத்தில் நீர் அருந்தும் மான்களின் நிலைதான். ரஸ்யாவில் ஒரு பீட்டர் த கிரேட், அல்லது அவன் த டெரிபிள், அல்லது கத்தரீன் த கிரேட், அல்லது ஸ்டாலின், அல்லது புட்டின் இருந்தால் இவர்கள் இரையாவது நிச்சயம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.