Jump to content

'லக்ஸ்' திரையரங்குகளின் தொகுப்பு, சென்னை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் விருது பெற்ற 'தலைமுறைகள்' திரைப்படம் பற்றி இணையத்தில் தேடியபோது சென்னையில் கடந்த சனவரி மாதத்தில் திறக்கப்பட்ட புதிய திரையரங்குகளின் தொகுப்பு பற்றிய இந்த படங்களும், அதனைப் பற்றிய செய்திகளும் கிட்டின.

 

யாழ்கள உறவுகளின் பார்வைக்கு இனி...

 

 

'லக்ஸ்'(LUXE) திரையரங்குகளின் தொகுப்பு, சென்னை.

 

 

10171781_678669908858828_744823714910352

 

 

சென்னை வேளச்சேரி 'பீனிக்ஸ் சிட்டி மாலில்' (Phoenix City Mall) புதிதாக உருப்பெற்றுள்ள மாறுபட்ட , நவீனமான மற்றும் உள்ளம் கவர்கின்ற சினிமா அனுபவத்தை வழங்குவதற்காக அனைத்துப் பாரம்பரிய வழக்கங்களைத் தகர்த்தெறிகிற வகையில் லக்ஸ் திரையரங்க தொகுப்பு  உருவாகியுள்ளது.

11 திரைகள் கொண்ட 4K டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடியவகையில் இந்த 'லக்ஸ் தொகுப்பு' திறக்கப்பட்டுள்ளது. இதில் உணவகம், கஃபே, ரீடெய்ல் ஸ்டோர், ஸ்பா, விளையாட்டு இடம் என பல நவீன வசதிகள் கொண்டுள்ளன. இது படைப்புத்திறன, நவீன ஸ்டைல், வசதி, தரம் என அனைத்தையும் கொண்டு நவீன தொழில்நுட்பத்தில் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

 

வரவேற்பு மண்டபம்:

 

10253792_678670115525474_644330967678026

 

 

கதவைத் திறந்தவுடனே காற்றோட்டமான இடம், இத்தாலி மார்பிள், வெல்வெட் போன்ற சுவர், கிரிஸ்டல் விளக்குகள், அழகிய வடிவங்கள் பதிக்கப்பட்ட கண்ணாடிப் பரப்புடன் பார்வையாளர்களை வரவேற்கிறது. முன்கூட்டத்தின் மையப் பகுதியில் 72 LCDகள் கொண்ட வீடியோ தூண் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.

முன்கூடத்தின் வலதுகை பக்க மூலையில் சற்று உயரமான மேடையில் பெரிய பியானோ ஒன்று வைக்கப்பட்டுள்ளது. ஆட்டோமேட்டட் ஐபாட் உடன் இணைக்கப்பட்ட கருவியிலிருந்து  அனைத்து பிரபலமான இசையமைப்பாளர்களின் ரம்மியான பாடல்களைக் கேட்க வகை செய்யப்பட்டுள்ளது.

 

10256093_678670125525473_867616155976826

 

 

10252046_678670262192126_296686269837807

 

 

10171152_678670395525446_703753426391319

 

 

1514582_678670275525458_5070475988520499

 

 

10168233_678670082192144_675227904902285

 

 

திரையிடும் தொழில்நுட்பம்:

 

அனைத்து திரைகளும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அதிநவீன 4K ரிசொல்யூஷனுடன் பார்கோ(Barco) டிஜிட்டல் புரொஜக்டர்களைக் கொண்டுள்ளன. 4K ரிசொல்யூஷனில் (4906 x 2160) பிரமிக்க வைக்கும் வகையில் படங்கள் தெரிவதுடன், 33,000 (Lumens) வெளிச்சத்தில் துள்ளியமான நிறத்தை வழங்கும் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து அலைவரிசை வகைகளிலும் உயர்ந்த துல்லிய தன்மையைக் கொடுப்பதற்காக உலகில் தலைசிறந்த QSC DCP 300 புராசஸருடன் 4 வழி QSC ஸ்பீக்கர்கள் வசதி கொண்டுள்ளன. அதிக ஒலி தெளிவுத்தன்மை கிடைப்பதற்கு இந்தச் சாதனங்கள் SMPTE தரத்தில் தொனியேற்றப்பட்டுள்ளன. சினிமா ஒலியமைப்பில் அதிநவீனமான டால்பி அட்மாஸ் தற்போது நிறுவப்பட்டுள்ளது.

 

1932455_678669905525495_9088232183154422

 

 

1964826_678669892192163_6674356703518531

 

வடிவமைப்பு:

 

லக்ஸின் ஒட்டுமொத்த உள் வடிவமைப்பையும்(Interiors), லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் காஸ்டர் டிசைன் நிறுவனத்தைச் சேர்ந்த டிசைனர் Giovanni Castor ஆல் உருவாக்கப்பட்டது. Remedios Siembieda என்று அழைக்கப்படும் Chhada Siembieda நிறுவனத்துடன் இணைந்து பல வருடங்கள் பணி புரிந்துள்ளார். மிகப் பிரபலமான நிபுணரான IMPei உடன் இணைத்து நியூ யார்க்கில் பணி புரிந்துள்ளார். மெக்சிகோவிலுள்ள Kacienda de San Antonio, French Polynesiaவிலுள்ள Adrian Zecha’s Arman Resorts-சும், Giovanni Vastorஇல் வடிவமைக்கப்பட்டவை.

 

 

10155980_678670005525485_159564915208034

 

 

கலிஃபோர்னியா Three Architecture உடன் L’Ermitage Beverly Hills, Pei Cobb Freed உடன் the Park Hyatta Taichung, Lohan Associates உடன் Grand Hyatt Mumbai மற்றும் மாலத்தீவில் உள்ள Rangali Island Resort, இவர் உள்ளமைப்பு வடிவமைப்பாளராகப் பணிபுரிந்த இடங்கள். லக்ஸின் உள் அலங்கார அமைப்பில் ஒளியமைப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப் பெறுகிறது. விரிவான ஒளியமைப்பு டிசைன், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த ஒளியமைப்பு வடிவமைப்பாளர் இன்டக்ரேடட் லைட்டிங் டிசைன சேர்ந்த பாபு சங்கரால் நிறைவேற்றித் தரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் அலங்காரம் மற்றும் ஒளியமைப்பு அனைத்திற்கும் சங்கர் மற்றும் ஐஎல்டி நிறுவனமே முக்கிய பொறுப்பாகும்.

 

 

luxe-cinemas-imax-opening-date.jpg

 

 

TH-LUXE_CINEMAS__1844082f.jpg

 

 

நன்றி: https://www.facebook.com/luxeimax

 

 

அடுத்த முறை தமிழகம் சென்றால் நிச்சயம் இந்த திரையரங்கத்திற்கு செல்வதென முடிவெடுத்துவிட்டேன்.. :rolleyes:

 

சென்னை சென்ற டங்கு, வாய்ப்பை தவறவிட்டுவிட்டார் போலுள்ளது. :o

 

நீங்கள் எப்படி? :lol:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொழில்நுட்பம் பற்றி விரிவாக மேலும் சில படங்களுடன் பின்னர் இணைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் ரெடி ...! :D

Link to comment
Share on other sites

இப்படி ஒரு சமாச்சாரம் இருப்பதே தெரியாதே.. :o தெரிந்திருந்தால் கட்டாயம் போயிருப்பேன்..! :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10171781_678669908858828_744823714910352

 

தியேட்டர் நல்ல அழகாக உள்ளது.
கலரியில் உள்ள கதிரைகளே.... லெதர் கதிரைகளாக உள்ளது. :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" - பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்     "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!"   "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?"   "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?"   "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?"   "உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய் உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ? உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம் உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!"   "ஊடல் கொண்டு சென்ற மனைவியால் ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?"   "எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய் எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது எரிவனம் போக எப்படி துணிந்தாய்?"   "ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம் ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம் ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?"   "ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!"   "ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து ஒழுங்காக தினம் செயல்கள் செய்து ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?"   "ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை ஓலம்பாட என்னை வைத்தது எனோ? ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?"   "ஔவை வாக்கை மருந்தாக கொண்டு ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே? ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈறிலி - கடவுள் எரிவனம் - சுடுகாடு ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன் ஓலாட்டு - தாலாட்டு ஔதாரியம் - பெருந்தன்மை ஔரசன் - உரிமை மகன் ஔடதம் - மருந்து     
    • சிறி அண்ணா 50% சரி. ரணில் தன் மினியை பார்க் பண்ணுவது, உதவியாளராக இருக்கும் ஒரு பையனின் வீட்டு கொல்லை புறத்தில்🤣.
    • @goshan_che கேட்ட கேள்விக்கு... நான் பதில் சொல்லி விட்டேன்.  விசுகர், உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். 😂
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]     "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!"   "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!"   "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?"   "ஈடணம் விரும்பா சாதாரண மகனே ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய் ஈமத்தாடி குடி கொண்ட சுடலையில்?"   "உலகத்தில் பரந்து வாழும் பலரின் உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உடன்பாட்டிற்கு வர முடியாமல் உணக்கம் தரையில் விதை ஆனாயோ?"   "ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல் ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?"   "எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து எழுதுகோல் எடுத்து உலகை காட்டி எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?"   "ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல் ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?"   "ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?"   "ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து ஒழிக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!"   "ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?"   "ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈடணம் - புகழ் ஈடிகை - எழுதுகோல் ஈமத்தாடி - சிவன் உணக்கம் - உலர்ந்ததன்மை ஊறு - இடையூறு ஊனம் - உடல் குறை, இயலாமை எய்யாமை - அறியாமை ஏகாகாரம் - சீரான முறை ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு ஏகாந்தம் - தனிமை ஐங்கணைக்கிழவன் - மன்மதன். ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, காமவெறியின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன் ஓகை - உவகை, மகிழ்ச்சி ஔவியம் - பொறாமை, அழுக்காறு ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன் ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை. ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்   [my own eulogy / A tribute written by myself to my death]        
    • ஏன் ராசா ஏன்??  ஆனால் கேள்விக்கு பதில் சொல்லாமல் போவது நன்றன்று. இல்லை இல்லை இல்லை 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.