Jump to content

குர்ஆன் அவமதிப்பு: பொது பல சேனாவிடம் விசாரிக்க பொலிஸ் முஸ்தீபு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

index(825).jpg
முஸ்லிம்களின் புனித குர்ஆனை அவமதித்ததாக  கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் உட்பட அவ்வமைப்பின் உறுப்பினர்கள் சிலரிடம் பொலிஸார் விசாரணை நடத்தவுள்ளனர். 

ஜன பல சேனா அமைப்பின் ஏற்பாட்டாளர் வட்டரக்க விஜித்த தேரரினால் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் கொழும்பில் ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொதுபல சேனா அமைப்பினர் அத்துமீறி நுழைந்து பிரச்சினையை ஏற்படுத்தியிருந்தனர். 

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாகவே மேற்படி முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. 

ஜன பல சேனாவுடனான பிரச்சினையைத் தொடர்ந்து பொலிஸாருக்கு வாக்குமூலமளித்துள்ள பொது பல சேனா அமைப்பினர் அதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முஸ்லிம்களின் புனித குர்ஆனை அவமதித்தனர் என்று கொம்பனித்தெரு, வொக்ஷல் வீதியைச் சேர்ந்த நூர்தீன் மொஹமட் தாஜுதீன் என்பவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். 

இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார். 

 
Link to comment
Share on other sites

புத்த பகவானை,பைபிளை, பகவற்கீதையை அவமதித்ததாக சவுதி அரேபியாவில் வழக்கு போட முடியுமா? புனித ஷரியாத் என்று அவர்களால் கூறப்படும் சட்டத்தில் அதற்கு இடமுண்டா? இது தொடர்பான அறிவுடையவர்கள் தயவு செய்து பதிலளிக்கவும்.

Link to comment
Share on other sites

இதெல்லாம் பிரச்சினையா? எதோ 13 வயது இஸ்லாமிய குமரியை கடத்தியது போல் புலம்புகிறார்கள்.

குரான் ஒரு புத்தகம். அதை தொடரும் மனிதரிடம் தான் புனிதத்தை எதிர்பார்க்க முடியும்.

Link to comment
Share on other sites

புத்த பகவானை,பைபிளை, பகவற்கீதையை அவமதித்ததாக சவுதி அரேபியாவில் வழக்கு போட முடியுமா? புனித ஷரியாத் என்று அவர்களால் கூறப்படும் சட்டத்தில் அதற்கு இடமுண்டா? இது தொடர்பான அறிவுடையவர்கள் தயவு செய்து பதிலளிக்கவும்.

 

எனது தந்தையார் ஒருமுறை பஞ்சாங்கத்தை கொண்டுபோயுள்ளார். முன்பக்கத்தில் சாமிப்படம் உள்ளதைக் கண்டுவிட்டு குப்பையில் தூக்கிப் போட்டுவிட்டார்களாம்.

 

ஆனால் அமெரிக்க படைத் தளங்களுக்குள் கிறீஸ்தவ மத அடையாளங்களுக்கு அனுமதி உண்டாம்.. பலமுள்ளவனுக்கு மட்டும் மரியாதை..  :wub:

 

பொதுபலசேனா தாஜுதீனுக்கு முதுகில் இரண்டு அப்பு அப்ப வழக்கு வாபஸ் பெறப்பட்டுவிடும்..  :icon_idea: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

முஸ்லிம்களின் புனித குர்ஆனை அவமதித்ததாக  கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் உட்பட அவ்வமைப்பின் உறுப்பினர்கள் சிலரிடம் பொலிஸார் விசாரணை நடத்தவுள்ளனர். 

-----

 

சிலோன் பொலிஸில்.... அதிக‌ள‌வு முஸ்லீம்க‌ள் சேர்க்க‌ப் ப‌ட்டுள்ள‌தையே, இந்த‌ச் செய்தி தெரிவிக்கின்ற‌து.

இனியும்... பொதுப‌ல‌ சேனா, வாய் மூடி மௌனியாக‌ இருக்காம‌ல், த‌ன‌து ந‌ட‌வ‌டிக்கையில்... இற‌ங்க‌ வேண்டும்.

 

த‌மிழ‌னும், சிங்க‌ள‌வ‌னும்... எப்போதாவ‌து சகோத‌ர‌னாக‌ இருக்க‌லாம்.

ஆனால்... இலங்கை முஸ்லீம்க‌ள், எந்த‌க் கால‌த்திலும், எவ‌ருட‌னும்.. ஒத்து வ‌ர‌ மாட்டார்க‌ள்.

இது... அனுப‌வ‌ பூர்வ‌மான‌ உண்மை.

 

Link to comment
Share on other sites

அப்படியே, வட - கிழக்கில் உள்ள அனைவரையும் பௌத்தர்களாக மாற்றவும் பயங்கரவாதிகளிடம் இருந்து விடுதலை பெற்றுத்தந்த இராணுவத்துக்கு சேவை செய்ய மாணவ மாணவிகளை பயிற்றுவிக்கவும் புது பல சேனாவை நிரந்தரமாக வடக்கு கிழக்கின் ஆட்சியாளராக நியமிக்க வேண்டும் என்றும் யாழ் களத்தினர் கோரிக்கை விடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே, வட - கிழக்கில் உள்ள அனைவரையும் பௌத்தர்களாக மாற்றவும் பயங்கரவாதிகளிடம் இருந்து விடுதலை பெற்றுத்தந்த இராணுவத்துக்கு சேவை செய்ய மாணவ மாணவிகளை பயிற்றுவிக்கவும் புது பல சேனாவை நிரந்தரமாக வடக்கு கிழக்கின் ஆட்சியாளராக நியமிக்க வேண்டும் என்றும் யாழ் களத்தினர் கோரிக்கை விடுக்க வேண்டும்.

 

யாழ் களத்தினர் வேண்டுகோள் விடுப்பதை... மூலையில், இருத்தி விட்டு...

சும்மா... தொண‌,தொண‌ என்று கொண்டிருக்காம‌ல்,

நடை முறையில்... நடக்கும், செயல்களை திருத்த... உங்களிடம் "ஐடியா" இருந்தால்.. தாருங்கள்.

அதனை வரவேற்க.... யாழ் களம், என்றும்... தயங்காது. :) 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுபலசேனாவினால் சிறுபான்மை இனங்களுக்கு பிரச்சினை வந்துகொண்டுதான் இருக்கப்போகிறது. இப்போது முஸ்லீம்களுக்கு நடப்பது நாளையே இந்துக்களுக்கும், கிறீஸ்த்தவர்களுக்கும் நடக்கலாம். ஆனால், தமிழின அழிப்பில் சிங்களத்திற்கு உற்றதுணையாக இருந்த இஸ்லாமியர்களையே சிங்களப் பவுத்த பேரினவாதம் வாட்டி எடுக்கும்போது சந்தோசப்படாமலும் இருக்கமுடியவில்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.    
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
    • வ‌ங்க‌ளாதேஸ் எப்ப‌டி த‌னி நாடான‌து...............இத‌ற்க்கு ப‌தில் சொல்லுங்கோ மீண்டும் விவாதிப்போம் பெரிய‌வ‌ரே..........................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.