Jump to content

ஊரும் உலகும்


Recommended Posts

புளியங்காய் ஒட்டு பட்டம்...பார்த்து 28+ வருடங்கள்....

 

பிரம்பு, வடலி விண் எல்லாம் கிளாசிக் சமாசாரம்..

 

நான் உரப்பை விண் தான் உபயோகபடுதியது...

 

மார்கழி விடுமுறையே எப்படி போகிறது என்று தெரியாது......

 

உரப்பை விண்ணிலே டபிள் நார் போட்ட பழக்கம் இருக்கா? நாங்கள் கூவக்கட்டயை கொஞ்சம் நீளமாக வெட்டி டபிள் நார் போடுவோம். ஒவ்வொரு நாரும் ஒவ்வொரு தொனியில "கதறும்" - டேர்மினோலஜி .

 

Link to comment
Share on other sites

  • Replies 103
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் யாழ் இந்து மைதானத்துக்குள்தான் பட்டம் ஏற்றுவது. எட்டுமூளைப் பட்டம்தான் அதிகமாய் செய்வது. ஒரு ஆள் உயரத்துக்கு.அதை அந்தச் சிறியமைதானத்துள் வைத்து ஏற்றுவதே ஒரு டெக்னிக்தான். பின் அதை வீட்டடிக்கு கொண்டுவாறது ஒரு பெரிய கலை. கிரவுன்ட்ஸ்  மதிலுடன் டெலிபோன் போஸ்டுடன் வயர் போகும். அதன்மேலால்  நூல் பந்தை எறிந்து பின் வீதியில் வைத்து அதைமாத்தி கொண்டுவந்து வேலி மரத்தில் கட்டுவது.அது இரவிரவாக வின் கூவிக்கொண்டிருக்கும். :rolleyes::D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப சுவாரசியமான திரியும், பதிவுகளும் யாழ் மாவட்டதைப்பற்றி அறியக்கூடியதாக இருக்கிறது. ஆனால் உங்களின் வட்டாரச் சொற்கள்தான் சுட்டும் பொருளை பிரித்தறிய குழப்பமாக இருகிறது.

 

ஈழத்தின் பிற பகுதிக்காரகளும் - பொத்துவில்,கதிகாமம் வரை அறிந்தவர்களும் இங்கே எழுதினால் நாங்களும் ஈழம் பற்றிய ஒரு முடிவிற்கு வருமில்லையா? :)

 

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையான் பட்டம் விடுவதிலுள்ள பல அரிய சூட்சுமங்களைச் சொல்லியுள்ளீர்கள். பிராந்து, கொக்கு கட்டுவது இலகுவானதல்ல. நான் ஒருபோதும் கொக்கு கட்ட முயற்சிக்கவில்லை. அதற்கு சிம்புகளைக் கட்டுவது என்பது மிகவும் கடினமான விடயம்.

பிராந்து நீங்கள் சொல்லியபடிதான் கட்டுவது. நேரான பூவரசம்தடியை வெயிலில் காயவைத்தும் குப்பைக்குள் சுட வைத்தும்தான் முள்ளந்தண்டை சரிக்கட்டவேண்டும். நான் வார்னீஸ் போட்டு ஒட்டியதில்லை. ஆனால் சிவப்புப் பட்டத்தாளையும், நீலப்பட்டத்தாளையும் இரண்டு அடுக்காக ஒட்டி ஊதாக் கலரை உருவாக்குவேன். சாடையாகத் தண்ணிகாட்டி காயவிட்டால் ஒட்டு இறுகிவிடும்.

பிராந்துக்கு முச்சை கட்டுவது, சரித்தால் அதற்கேற்ப முச்சையைத் திருத்துவது, தலைப்பாரம் கூடினால் "பெல்லி" வைத்துக் கட்டுவது என்று எத்தனையோ நிபுணத்துவங்களை எல்லாம் பழகித்தான் இருந்தோம். பிராந்தை இன்னொரு பட்டத்துடன் தொடுத்து ஏற்றுவது தெரியும். ஆனால் நாங்கள் அப்படி ஏற்றுவதில்லை. இதற்கென்றே பட்டம் பிடித்துவிட சிறுவர்களைப் பழக்கி வைத்திருந்தோம் :) மேலும் தங்கூசி பாவித்ததில்லை. அதை வாங்குமளவிற்கு காசு இருப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப சுவாரசியமான திரியும், பதிவுகளும் யாழ் மாவட்டதைப்பற்றி அறியக்கூடியதாக இருக்கிறது. ஆனால் உங்களின் வட்டாரச் சொற்கள்தான் சுட்டும் பொருளை பிரித்தறிய குழப்பமாக இருகிறது.

 

ஈழத்தின் பிற பகுதிக்காரகளும் - பொத்துவில்,கதிகாமம் வரை அறிந்தவர்களும் இங்கே எழுதினால் நாங்களும் ஈழம் பற்றிய ஒரு முடிவிற்கு வருமில்லையா? :)

 

நன்றி.

வட்டாரச் சொற்கள் அதிகம்தான். அவை இல்லாமலும் எழுதுவது கடினம். எங்களூர் வட்டாரச் சொற்கள் யாழ்ப்பாணத்தின் பிற பகுதிகளில் இருப்பவர்களுக்கும் புரிவதில்லை.

நேரம் கிடைக்கும்போது வட்டாரச் சொல்லகராதியை அடிக்குறிப்பில் இடுகின்றேன்.

எனக்கும் பிறபகுதிகளைப் பற்றி அறியவேண்டும் என்ற விருப்பம். அதனால்தான் தொடக்கி வைத்தேன். ஆனால் எல்லாரும் பம்முகின்றனர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நகரை என்ற பெயரை நினைவுபடுத்தியதற்கு நன்றி அகஸ்தியன். எங்கோ பக்கத்தில்தான் இருந்திருக்கின்றீர்கள் என்று தெரிகின்றது!!

பெரும்பாலும் நீங்கள் சொல்லும் பட்ட டெக்னிகல் சொல்லுகளே நாங்களும் சொல்லுறுது.

ஆமி பிரச்னை காலத்தில் 751 பேருந்து ஓடுவதில்லை, உங்கட ஊருக்காலை போய் தான் குஞ்சர்கடையில் 750 எடுத்து யாழ்ப்பாணம் போய் வருவோம். குஞ்சர்கடை சந்திக்கு போக முன் ஒரு வீட்டிலை சைக்கிளை விட்டுவிட்டு போவம், முன் பின் அறியாதவர்கள் நல்லவர்கள்.சில வேளைகளில் சைக்கில் இல்லா விட்டால் நடைதான். 750 பஸ்சிலும்

23 ஸ்ரீ வசந்த மாளிகை பஸ்ஸை ராசையா அண்ணை ஓடும் அழகே தனி அழகு.

சாரம் அவிண்டாலும் பட்ட நூலை கை விடோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமுறை போன போது மினகெட்ட பட்டம்.

 

CYMERA_20131210_182833.jpg

தும்பளையான் உங்கள் யாழ் பயண போட்டோக்கள் நன்றாக இருந்தன, அதில் சில பட்டங்களையும் இணைத்து இருந்தீர்கள், இந்த படம் ஒரு ஆள் அளவு உயரம். இதுக்கு நைலான் நூல் பாவித்தால் கையை வெட்டும், குறுலோன் நூல்தான் நல்லது, ஆனால் விலை கூட.

பட்டம் ஊமையாக உள்ளது, விண் பூட்ட வில்லையா ?

Link to comment
Share on other sites

உரப்பை விண்ணிலே டபிள் நார் போட்ட பழக்கம் இருக்கா? நாங்கள் கூவக்கட்டயை கொஞ்சம் நீளமாக வெட்டி டபிள் நார் போடுவோம். ஒவ்வொரு நாரும் ஒவ்வொரு தொனியில "கதறும்" - டேர்மினோலஜி .

 

 

நான்  double நார் போட்டது இல்லை..ஆனால் நண்பர்கள் செய்ய பார்த்திருகின்றேன் ...

கடந்த கிழமை தமிழ்மணம் வலைபதிவில் ஒருவர் தென் தமிழ்நாடில் விடும் பட்டம் என்று ஒரு கோபுர வடிவில் பட்டத்தின் படம் போடிருந்தார்...அந்த பட்டத்தில் வால் எங்களது முறையில் இருந்தது...மற்றும் அவரும் மார்கழியிலே பெரும்பாலும் தாங்களும் பட்டம் விட்டதாக எழுதியிருந்தார்...எங்களது வகை பட்டங்களை நான் இந்தியாவில் (சென்னையில்) இருக்கும் வரை கண்டது கிடையாது...(சென்னையில் வாலாகொடி மாதிரி ஒரு பட்டத்தை ஏற்றி.. நூலில் glass தூள் தடவி ஆட்களை கொல்லுவது தான் மிச்சம்)

 

நீங்கள் பருத்தித்துறையில் இருந்த பொது யாரும் light  பூட்டி பறக்க விட்டார்களா..(இப்போது LED, அது ..இது என்று "ரெக்னோலொயி" ரொம்ப முன்னேரிட்டுது... :) -- பெடியளுக்கு நல்ல அட்டகாசமாக இருக்கும்)

 

சாரம் அவிண்டாலும் பட்ட நூலை கை விடோம்

 

 

Same Blood !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் யாரும் எட்டுமூலைப் பட்டம் கட்டுவதில்லையா..! யாழில் அதுதான் பிரசித்தம். மேலே நட்சத்திரம்போல், கீலே நீளமான வண்டி, நடுவில் விளக்குச் சாரளம்போல் ஒரு ஓட்டை இருக்கும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எட்டு மூலை கட்டி ஏற்றியுள்ளேன். அதற்கு வாலைக் குறைத்து விண்பூட்டிக் குத்தவிட்டுப் பலருக்கு எரிச்சலைக் கொடுத்திருந்தேன். ஆனாலும் படலம், பிராந்தைப் போன்று அதிகம் எட்டுமூலையுடன் மினக்கெடவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டம் கட்டுவதிலும் இத்தனை டெக்னிக் இருக்கா. நான் பெரிய பட்டங்களைக் கண்ட நினைவில்லை எங்கள் ஊரில். சிலவேளை ஆண்கள்தான் அதை உன்னிப்பாகப் பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன்.கேட்கச் சுவாரசியமாக இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எட்டு மூலை கட்டி ஏற்றியுள்ளேன். அதற்கு வாலைக் குறைத்து விண்பூட்டிக் குத்தவிட்டுப் பலருக்கு எரிச்சலைக் கொடுத்திருந்தேன். ஆனாலும் படலம், பிராந்தைப் போன்று அதிகம் எட்டுமூலையுடன் மினக்கெடவில்லை.

கொட்டடிக்காரர் ஒருபக்கம், கோணாந்தோட்டக்காரர் இன்னொருபக்கம், நாவாந்துறைக்காரர் இன்னொருபக்கம்! 

 

எட்டு மூலைப்பட்டம் விடுகிற காலத்தில, 'விண் சத்தம்' ஆக்களை நித்திரை கொள்ள விடாது! :o  

Link to comment
Share on other sites

சுவாரஸ்யமான பழைய ஞாபகங்களை மீட்டும்படியாக திரியொன்றை ஆரம்பித்த கிருபனுக்கு மிக்க நன்றி.

 

விதம் விதமான பட்டம் கட்டுவதிலும், பட்டம் ஏற்றுவதிலும் நிறையச் சூட்டுமங்கள் இருக்கு. அதில் நானும் ஒரு விற்பன்னனாக விளங்கினேன் என்பது எனது அந்தக்கால சாதனைதான். :D

மூங்கிலை நன்கு சீவி பண்படுத்தி அளவுத்திட்டங்கள் எல்லாவற்றையும் கவனித்து ஒரு பட்டத்தின் அடிப்படை உருவமைப்பை அமைத்தபின்னர் அதனை அழகுபடுத்துவதற்காக (என்ன 'ஒட்டு' ஒட்டுறது? என்பார்கள் - கண் ஒட்டு, காத்தாடி ஒட்டு, தூண் ஒட்டு , புளியங்காய் ஒட்டு அல்லது டைமன் ஒட்டு, பூ ஒட்டு, நட்சத்திர ஒட்டு, பிரிட்டிஷ் ஒட்டு, எக்ஸ் ஒட்டு, வரி ஒட்டு என பல பெயர்களில் பல விதமான டிசைன்கள் ) விதவிதமான டிசைன்களில் வர்ணத்தாள் வாங்கி ஒட்டி அலங்காரப்படுத்தி... அதற்கு விண் பூட்டி ....

(பெரிய பட்டங்களுக்கு தேக்குமரத்தில் சீவியெடுத்த விண் வில்லையும் பாவிப்பதுண்டு - கூவக்கட்டை எனப்படும் விண் வில்லின் இருபக்கமும் பொருத்தும் கட்டைகள் செய்வதற்கு மிக உகந்தது காய்ந்த முள்முருக்கு மரத்தண்டுதான் ),

(விண் நார் செயவதற்கு வடலி நார், பார்சல் சுற்றி வரும் நாடா , உரப்பை இழைகள், பேப்பர் றிபன், கதிரை பின்னும் இழைகள் என பலவகை

பொருட்களை பாவிக்கலாம் - இதில் குறிப்பாக செப்புக்கம்பியை தட்டி தட்டையாக்கி விண் செய்தால்... அந்த ஏரியாவில உள்ள வயர்லெஸ் தொடர்பு சாதனங்களை பாவிக்க ஏலாதவகையில் கீ... என்ற சத்தம் வரும்  :icon_idea::lol: )

.....வால்கட்டி, முச்சை கட்டி.... ஏற்றி அழகுபார்ப்பதே ஒரு அலாதி அனுபவம். அதிலும் இரவிரவாக பறக்கவிடுவதும் (இராக்கொடி)... மழைவருதா? நார்ச்சத்தம் தொடர்ந்து கேக்குதா? என இடைக்கிடை முழித்து அவதானிப்பதும், விண் நார்ச் சத்தத்தால்  இரவில் தூங்கமுடியாத சனங்கள் எல்லாம் காலையில் புலம்புவதும்.....  பட்டம் அறுந்துசென்றால் நூலோட்டம் பார்த்து தேடுவதும்..... என சுவாரஸ்யமான அனுபவங்களும் நினைவுகளும் இதில் இருக்கு. :rolleyes::lol::wub:

 

வடமராட்சியில் பருத்தித்துறையிலிருந்து வல்வெட்டித்துறை வரையிலான பகுதியில் ஒக்ரோபர் ஆரம்பம் முதல் - தைப்பொங்கல் நாள் வரைக்கும் (கச்சான் காத்து சீசன் என்பார்கள்) வண்ண வண்ண வடிவில் விதம்விதமான பட்டங்களை பறக்கவிடுவார்கள்.

சென்ற தைப்பொங்கலுக்கும் அங்கு பறந்த பட்டங்களின் புகைப்படங்களை பலர் முகப்புத்தகங்களில் பகிர்ந்திருந்ததைப் பார்க்கையில்... பழைய ஞாபகங்கள் வந்து போயின. மீண்டும் எப்பொழுது அந்த இனிமையான காட்சிகளை நேரில் பார்க்கப்போகின்றோம் என்ற ஏக்கமே எஞ்சி நிற்கின்றன. :(:unsure:

 

 

Link to comment
Share on other sites

தும்பளையான் உங்கள் யாழ் பயண போட்டோக்கள் நன்றாக இருந்தன, அதில் சில பட்டங்களையும் இணைத்து இருந்தீர்கள், இந்த படம் ஒரு ஆள் அளவு உயரம். இதுக்கு நைலான் நூல் பாவித்தால் கையை வெட்டும், குறுலோன் நூல்தான் நல்லது, ஆனால் விலை கூட.

பட்டம் ஊமையாக உள்ளது, விண் பூட்ட வில்லையா ?

 

நான் போன கிழமைதான் பட்டத்துக்கு வர்ணம் பூசி முடித்திருந்தார்கள். இன்னும் முச்சையே கட்டியிருக்கவில்லை. முச்சை கட்டிய பின்னர் தான் விசை பூட்ட வேண்டும். காரணம் விசை மாற்றவேண்டிய காரணம் வந்தால் முஷ்சயைக் கழற்ற வேண்டியதில்லை. விசையில் இருக்கும் விண்ணை பட்டம் ஏற்ற முதல் தான் இறுக்கி ஏற்றிய பின்னர் உடனடியாகக் கழற்றி விடுவொம், இல்லாவிட்டால் விசையின் விசை குறைந்துவிடும், நார் ஈஞ்சு விடும். விசையை இறுக்கமாகக் கட்டாவிட்டால் விசை இடம் வலமாக ஓடித் திரியும் இது நடந்தால் "விசை ஓடீட்டுது" என்பார்கள். இப்பிடி விசை ஓடாமல் இருக்க விசையின் நடுவிலே ஒரு சிறிய நூலை இளக்கமாக கட்டி அதனுள்ளே ஒரு சின்ன பூவரசம் குச்சியைப் போட்டு முறுக்கி விசையுடன் சேர்த்து இன்னொரு நூலால் கட்டி விடுவோம் - இதன் பெயர் விசைக்கட்டை.

 

 

நான்  double நார் போட்டது இல்லை..ஆனால் நண்பர்கள் செய்ய பார்த்திருகின்றேன் ...

கடந்த கிழமை தமிழ்மணம் வலைபதிவில் ஒருவர் தென் தமிழ்நாடில் விடும் பட்டம் என்று ஒரு கோபுர வடிவில் பட்டத்தின் படம் போடிருந்தார்...அந்த பட்டத்தில் வால் எங்களது முறையில் இருந்தது...மற்றும் அவரும் மார்கழியிலே பெரும்பாலும் தாங்களும் பட்டம் விட்டதாக எழுதியிருந்தார்...எங்களது வகை பட்டங்களை நான் இந்தியாவில் (சென்னையில்) இருக்கும் வரை கண்டது கிடையாது...(சென்னையில் வாலாகொடி மாதிரி ஒரு பட்டத்தை ஏற்றி.. நூலில் glass தூள் தடவி ஆட்களை கொல்லுவது தான் மிச்சம்)

 

நீங்கள் பருத்தித்துறையில் இருந்த பொது யாரும் light  பூட்டி பறக்க விட்டார்களா..(இப்போது LED, அது ..இது என்று "ரெக்னோலொயி" ரொம்ப முன்னேரிட்டுது... :) -- பெடியளுக்கு நல்ல அட்டகாசமாக இருக்கும்)

 

சாரம் அவிண்டாலும் பட்ட நூலை கை விடோம்

 

 

Same Blood !!!

 

 

இப்போது பூந்தோட்டங்களில் அழகுபடுத்தப் பாவிக்கும் சிறிய சோலர் பனல்கள் சிலவற்றைப் பொருத்தி விடுகிறார்கள். இருண்டா தன்டபாட்டில வெளிச்சம் பத்தத் தொடங்கி விடிஞ்சா அணைஞ்சு விடும். கீழே இருந்து 240V அனுப்பும் ஆபத்தான அரியண்டம் இல்லை. உதென்ன பெரிய விஷயம், சின்னப் பெடியன் ஒருத்தனே "மேல" அனுப்பி வீடியோ எடுத்திருக்கிறாங்கள். 

 

நீங்கள் யாரும் எட்டுமூலைப் பட்டம் கட்டுவதில்லையா..! யாழில் அதுதான் பிரசித்தம். மேலே நட்சத்திரம்போல், கீலே நீளமான வண்டி, நடுவில் விளக்குச் சாரளம்போல் ஒரு ஓட்டை இருக்கும். :)

 

யாழ்ப்பாணத்தில் வசித்த எனது மச்சான் ஒருமுறை ஊர்வந்தபோது கட்டி ஏத்தினோம். நாங்கள் அதை மணிக்கூட்டுப் பட்டம் என்றுதான் கூப்பிடுவோம். அவன்தான் கட்டி, எங்கள் ஒழுங்கிலே கவன் எறிஞ்சு ஏற்றிவிட்டான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வின்னை இழுத்துக் கட்ட ரீல்கட்டை பாவிப்போம்...!

 

தும்பளை நீங்கள் சொன்னதுபோல் பழைய சுவர் மணிக்கூடு போல்தன் அது இருக்கும். அந்த பிக்பென் மணிக்கூடு அதிகமாய் எல்லா கொஞ்சம் வசதியான வீடுகளிலும் தொங்கும், இரண்டு மூன்றுநாளைக் கொருமுறை சாவி கொடுக்க வேண்டும்...! :rolleyes::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வின்னை இழுத்துக் கட்ட ரீல்கட்டை பாவிப்போம்...!

 

தும்பளை நீங்கள் சொன்னதுபோல் பழைய சுவர் மணிக்கூடு போல்தன் அது இருக்கும். அந்த பிக்பென் மணிக்கூடு அதிகமாய் எல்லா கொஞ்சம் வசதியான வீடுகளிலும் தொங்கும், இரண்டு மூன்றுநாளைக் கொருமுறை சாவி கொடுக்க வேண்டும்...! :rolleyes::D

எனக்கு இந்த மணிக்கூடு,  அரை மணிக்கு மணி அடிக்கிறபோது ஒரு முறை அடித்துவிட்டு, மணியடிக்கிற காலைத் தூக்கிக்கொண்டு அடுத்த அரைமணித்தியாலம் ஒத்தைக்காலில நிக்கும்! :D

 

அதோட மனியடிக்கிறபோது வாற 'கிர்ர்ர்ர்' சத்தமும் நல்லாயிருக்கும்! :icon_idea:

 

இப்போதைக்குச் சாவி மட்டும் தான் தரலாம்! :rolleyes:

IMAG020A.JPG

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணிக்கூட்டையும்  இரவலாய்த் தந்தீங்கள் எண்டால் நான் பகலில் மணிபார்த்துவிட்டு  மறக்காமல்  இரவு தந்து விடுகிறேன், பின்பு காலையில் வந்து வாங்குகிறேன்...! :rolleyes::D

Link to comment
Share on other sites

இந்த கட்டு கொடி தான் ஏற்றுவதற்கும் அமைப்பதற்கும் கடினமானது...

426914_470983322957758_1548243326_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுபோன்ற பட்டத்தை இப்போதுதான் பார்க்கின்றேன்...! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து பட்டம் விட்டுக்கொண்டால் தைப்பூசமும் தாண்டிவிடும். எனவே வேறு ஊர்களையும் அவற்றின் பெருமைகளையும் எழுதுவோமே!

Link to comment
Share on other sites

முன்பு ஒருமுறை இந்தப் பதிவில் நான் புகுந்த ஊரைப்பற்றி எழுதுவதாகச் சொல்லியிருந்தேன் . நான் அங்கு நின்ற நாட்களில் கண்டு கேட்டவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் . இதில் சிலவேளை பிழைகள் இருக்கலாம். யாராவது பருத்தித்துறை வாசிகள் திருத்தினால் நன்றியுடையவனாய் இருப்பேன்.
 

நான் புகுந்த இடம் பருத்தித்துறை , அதில் குறிப்பாக சொல்வதானால் தம்பசிட்டி என்ற சிறிய கிராமம் . பருத்தித்துறை அடிப்படையில் ஓர் துறைமுகப் பட்டினமாகும். ஆரம்பகாலங்களில் இங்கு பருத்தி அதிக அளவில் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செயப்பட்டதால் பருத்தித்துறை என்ற பெயர் வந்ததது . இந்த நகரத்தை ஆங்கிலத்தில் "பொயின்ற் பிட்ரோ"  என்றும் அதையே தமிழில் நேரடியாக மொழிபெயர்த்து " பீத்துறு முனை " என்றும் சொன்னார்கள்  ஆனால் , ஒல்லாந்து கடலோடியான பெட்ரோ இந்த நகரை கண்டுபிடித்தால் பொயின்ற் பெட்ரோ என்று பெயரிட்டதாக வரலாறு சொல்கின்றது .
 

பருத்தித்துறையும் அதனோடு சேர்ந்த தம்பசிட்டியும் தோசை , வடை , அப்பம் , எள்ளுப்பா போன்ற உணவுகளுக்குப் பெயர் பெற்றது . தோசை என்றால் அதற்கு இடி சம்பல் , பொரி சம்பல் , பச்சைமிளகாய் சம்பல் , சிவப்பு மிளகாய் சம்பல் , தோசைக்கறி போன்றவற்றுடன் பரிமாறுவார்கள் . அதுவும் தோசைக்கறி பருத்தித்துறைக்கே சொந்தமானது ஒன்றாகும்.  அதே போல் அப்பதட்டிகளை இங்கே தான் காணலாம். பழைய பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து அம்மன் கோவிலடியால் செல்லும் பொழுது கல்லூரி வீதி வரை இந்த அப்பதட்டிகள் இருக்கும் . இவை பார்பதற்கு விநோதமானவை. வீட்டு மதில்களில் சிறியளவில் ஒரு ஓட்டை வைத்திருப்பார்கள். மதிலுக்கு உள்ளே இருப்பவர்கள் வெளியில் இருப்பவர்களுக்கு தெரியாது. காசுப் பரிமாற்றமும் , பொருளும் இந்த ஓட்டையினாலேயே நடைபெறும். இந்த அப்பத்தட்டிகள் பருத்தித்துறை பெண்களது அன்றாட பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செயக்கூடியதாக இருந்தது. இப்பொழுது புலத்திலே காணப்படுகின்ற " ட்றைவ் இன் " கள் வர முன்பே பருத்தித்துறையில் அப்பத்தட்டிகள் வந்துவிட்டன என்பது குறிப்பிடத் தக்கது ஒன்றாகும் .

பருத்திதுறை பல கல்விமான்களை உருவாக்கிய நகரமாகும் . அதில் முக்கியமானவர் சதாவதானி கதிரவேற்பிள்ளை ஆவார் . மேலும் இங்கு நான்கு பாடசாலைகள் பிரபல்யமானவை. அவையாவன ஹாட்லி கல்லூரி , வேலாயுதம் மகாவித்தியாலயம் ,  மெதடிஸ் பெண்கள் கல்லூரி , வட இந்து மகளிர் கல்லூரி போன்றவை ஆகும் . பிரசித்தி பெற்ற கோவில்களாக ,  பண்டாரி அம்மன் கோவில் , ஆத்தியடி பிள்ளையார் கோவில் , ஆவோலைப் பிள்ளையார் கோவில் , சிவன் கோவில் , கோட்டுவாசல் அம்மன் கோவில் , பத்திரகாளி கோவில் , வல்லிபுர ஆழ்வார் கோவில் , தொப்பிலாவத்தை வைரவர் கோவில் போன்றவை இருக்கின்றன .

 

9yo3.jpg

 

பருத்தித்துறையில் கடற்கரையோரமாக முனையும் துறை முகமும் உள்ளது . முனை சரியாக ஆண் கடலையும் பெண்கடலையும் இரண்டாகப் பிரிக்கின்றது . கோடைகாலத்தில் இங்கு பட்டம் விடுதல் முக்கிய நிகழ்வு . அதே போல் வல்லிபுரக் கோவில் தீர்த்தத் திருவிழாவும் பிரபல்யமானது . வல்லிபுரக் கோவில் கடற்கரையில் இருக்கும் மண் புட்டிகளைக் கடந்து பெருமாளை கொண்டுவந்து கடற்கரையில் தீர்த்தமாட விடுவார்கள். இது பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாகும் . இங்குள்ள வீடுகள் சிலவற்றுக்கு கடற்கரையில் இருந்தே நேரடியாக படகுகள் , சிறிய ரக கப்பல்கள் வருவதற்குப் பாதைகள் இருப்பதாகக் கேள்விப்பட்டு இருக்கின்றேன் .
 

இது பெண் கடல்

 

zut2.jpg

 

இறுதியாக குடிமகன்களுக்கு பிரபல்யமானது கூவில் தவறணையாகும்  :wub:  :D  . கூவில் கள்ளு அடிக்கவே வெளியூர் குடிமகன்கள் இங்கு படையெடுப்பார்கள் :lol:  :D  .

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோ ! பருத்தித்துறையிலும் கூவில் இருக்கா..!  கீரிமலைக்கு அருகேயும் கூவில் உண்டு !

Link to comment
Share on other sites

தம்பசிட்டியில் கண்ணாடி இழைநார் படகு கட்டும் தொழிற்சாலை ஒன்று இருந்தது என நினைக்கிறேன். அங்கே கொட்டப்பட்டிருக்கும் இழை நார்களை எடுத்து வந்து விண்ணில் பூட்டி பட்டம் ஏற்றிய ஞாபகம் சிலருக்கு இருக்கும்.. :D

Link to comment
Share on other sites

தம்பசிட்டியில் கண்ணாடி இழைநார் படகு கட்டும் தொழிற்சாலை ஒன்று இருந்தது என நினைக்கிறேன். அங்கே கொட்டப்பட்டிருக்கும் இழை நார்களை எடுத்து வந்து விண்ணில் பூட்டி பட்டம் ஏற்றிய ஞாபகம் சிலருக்கு இருக்கும்.. :D

 

உங்கட வீட்டடியத் தாண்டித்தானே கூவில் தவறணைக்குப் போக வேண்டும் அண்ணா? :unsure:

 

Link to comment
Share on other sites

உங்கட வீட்டடியத் தாண்டித்தானே கூவில் தவறணைக்குப் போக வேண்டும் அண்ணா? :unsure:

அதை பிரதி செய்து கொள்ளுங்கள் தும்ஸ். :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.