Jump to content

தமிழர் காணிகளை பணத்திற்காக சிங்களத்திற்கு தாரைவார்க்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்


Recommended Posts

முத்தையா காணி திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் வினாயகபுரம் 35 ஏக்கர் நிலத்தை தமிழ் அரசியல்வாதிகளின் உதவியுடன் அபகரிப்புக்கு எதிராக திருக்கோவில் பிரதேச சபை நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதாக அதன் தவிசாளர் தெரிவிக்கின்றார்.
 
காணி உரிமையாளர்கள் 1978 ஆண்டு அவுஸ்ரேலியா சென்றுவிட்டார்கள். நீண்ட காலத்திற்கு கருணா குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேருக்கு அதன் உரிமைகள் கைமாற்றம் (pழறநச ழக யவவழசநெல வழங்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இவ்வாறு கைமாற்றம் செய்யப்பட்ட காணி, காணியில்லாத அப்பகுதி தமிழ் மக்களுக்கு ஒரு பகுதி பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் 2004 ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் பேரழிவினால் சிலர் இறந்து விட்டார்கள். அத்துடன், அக்காணிக்கான உரிமைப் பத்திரமும் அழிவடைந்துள்ளது. 
 
பின்னார் நிதர்சன் இவருக்குத்தான் (pழறநச ழக pழறநச ழக யவவழசநெல)  பவர் ஒவ் அற்றோனி வழங்கப்பட்டள்ளது. இவர், அரச மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தில் பணிபுரிவர் இவரை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் நேரு, திருக்கோவில் பிரதேச சபை தவிசாளரிடம் அழைத்துச் சென்று, இவர் மரமுந்திரிகை செய்கை பண்ணப் போகிறார். இதனால் ஒரு சிலருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும், எனவே இந்த காணியினுடாக அமைக்கப்பட்டுள்ள வீதியை அகற்றிக் தருமாறு எழுத்துமான என கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இந்த வீதியானது, சுனாமி தாக்கத்தின் பின்னர், அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றினால் தற்காலியமாக அமைக்கப்பட்டது. இவ்வாறு சட்டரீதியற்ற முறையில் அமைக்கப்பட்ட இவ்வீதியை அகற்ற அனுமதி வழங்கியுள்ளார்.
 
எனினும், இந்த காணியை விற்னை செய்யவா? எனவும் தவிசாளர் கேள்வி எழுப்பியுள்ளார். எனினும் இதனை மறுத்துள்ளார்கள்.
 
இந்த காணி கடற்கரையோரமாக உள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 150பேர் மீன்பிடித் தொழில் ஈடுபடுவதற்காக தற்காலிய கொட்டகைகளை அமைத்துள்ளனர். 
 
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் முகவராக செயற்பட்டு, காணி சிங்களவர்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சிங்களவர் இலண்டனில் வசித்துவருபவர்;. சந்திரகாந்தனும் இலண்டனில் வசிப்பவர். 
 
அதன்பின்னர், காணியை கொள்வனவு செய்த சிங்க இனத்தைச் சேர்ந்தவர், சுற்றிவர வேலி அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
 
இதனால், மீன்பிடியில் ஈடுபட்டவர்களையும் வெளியேறுமாறு தெரிவித்து சுற்றுவேலியை அமைந்துள்ளான். இதனை உடனடியாக தடுக்குமாறு கோரி இந்த மீனவர்கள் திருக்கோவில் தவிசாளரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதையடுத்து, இதனை தடுப்பதற்காக இடைகால தடை உத்தரவை பெற நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
 
இது தொடர்பாக திருக்கோவில் தவிசாளர் புவிராஜ் தெரிவிக்கையில், நான் பதவி ஏற்று குறுகிய காலத்தில் என்னை ஏமாற்றும் நடவடிக்கையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈடுபட்டுள்ளனர்.
 
எவ்வாறாயினும், நகர அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் எனக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அனைத்து நடவடிக்கையையும் எடுத்துள்ளேன் என்றார்.
 
இவ்வாறு, அம்பாறை மாவட்டத்தில் தமிழர்க்குச் சொந்தமான நூற்றக் கணக்கான ஏக்கர் காணிகளில் இன்னும் மீள்குடியேறமுடியாத நிலையில், சிலர் இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசித்துவருவர்களின் காணிகளை, ஊர்க்கு நன்மை செய்வதாக தெரிவித்துக் கொண்டு நேரு சந்திரகாந்தனைப் போன்றவர்களைப் போல சிலர் இவ்வாறு தமிழர்க்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
Link to comment
Share on other sites

காணிக்கு சட்ட ரீதியாக பொறுப்பானவர் அதனை வேறு ஒருவருக்கு சட்டப்படி விற்று இருக்கிறார். பணம் கொடுத்து வாங்கியவர் வேலி போட்டு சட்டவிரோதமாக இருப்பவர்களை வெளியேறுமாறு தெரிவிக்கிறார். 

 

 

 

  • நீங்கள் சட்டவிரோதமாக இருக்கும் ஏழைகளுக்கு உதவ விரும்பினால் வேறு ஒரு காணியை வாங்கி அன்பளிப்பு செய்யலாமே? 

     

     

     

  • சிங்களவர் திருக்கோவிலில் காணி வாங்குவது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் சிங்கள பகுதிகளில் காணி வாங்கும் தமிழர்களை அங்கு வாங்காமல் திருக்கோவிலில் வந்து காணி வாங்க வைக்க உங்களால் முடியுமா?

     

     

 

இவற்றை செய்ய முடியாவிட்டால் நீங்கள் இவை பற்றி குறைப்பட்டு எந்த பயனும் ஏற்படாது.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பாஜகவோட கூட்டணிவைச்ச வாசனுக்கும் தினகரனுக்கும் மட்டும் அவர் கேட்ட சின்னத்தைக் கொடுத்தது என்ன மாதிரியான தேர்ததல் விதிமுறை?பாஜக இந்த முறை 3 வது இடம் பிடிக்கணும் அதுக்காககத்தான் இந்த குழறுபடிகள்.ஆனால் அது நடக்காது. தேர்தலிலே நிற்காத கமலுக்கு டோர்ச்லைற் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.