Jump to content

மாமரத்துப் பூனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


நாங்கள் சிறியவர்களாக இருந்த காலத்தில் நடந்த சம்பவம் ஒன்று எப்போது நினைத்தாலும் எனக்கு சிரிப்பை வரவழைக்கும். காட்சியைக் காணாது கதையை மட்டும் நீங்கள் வாசிப்பதனால் உங்களுக்கு சிலவேளை சாதாரணமாக இருக்கலாம்.

அயலில் உள்ளவர்கள் நாங்கள் வயது வித்தியாசமின்றி விளையாட்டு நண்பர்களாக இருந்த காலம். எனக்கு ஒரு பத்து வயது இருக்கும். எங்கள் அயலில் ஒரு குடும்பம் இருந்தது. அதில் இருந்த மூத்த மகளுக்கு ஒருவருடன் காதல். அயலட்டை எல்லாம் ஒரே இது பற்றித்தான் கதை. எமக்குப் பெரிதாக விவரம் இல்லாவிட்டாலும் எதோ கொஞ்சமாவது விளங்கும்தானே.

அவர்கள் வீட்டுக்குப் பின்புறமாக என் பெரியம்மாவின் வீடு இருந்தது. பெரியம்மா வீட்டுக்கு சாதாரணமாகச் செல்வதானால் சுற்றுப் பாதையில் செல்லவேண்டும். இவர்களின் வீட்டின் குறுக்குப் பாதையால் சென்றால் உடனே சென்றுவிடலாம் என எல்லோரும் இவர்கள் வீட்டையே பாவிப்பர். அரைவாசி சுற்றிப் போகும்போது பனங்காடு. பேய் ,கீய், முனி என்றெல்லாம் கதைகள் உலாவியபடியால் எனக்கு சுற்றிப் போக சரியான பயம்.

அனேகமாக இரவு ஏழு மணியின் பின்னர் அவர்கள் வீட்டுப் படலையைப் பூட்டிப் போடுவார்கள் . நாங்கள் சிறியவர்கள் மட்டும் படலையைத் தட்டினால் வந்து திறந்துவிடுவர். எமக்கு இருட்டுக்குள் சுற்றிப் போகப் பயம் என்று அவர்களுக்குத் தெரியும்.

அவர்களின் படலைக்குப் பக்கத்தில் மாமரம் ஒன்று இப்பவும் இருக்கிறது. நான் தனியே செல்லும்போது பாத்திருக்கிறேன். எனக்குக் கதவு திறப்பது அந்த அக்கா தான். இரவில என்னத்துக்குத் தனிய வாறாய். வெள்ளன வந்திட்டுப் போறதுதானே என அவர் கூறும்போதெல்லாம் சரி அக்கா என்று கூறுவேன். அப்போது எனக்கு நல்ல பிள்ளை என்ற பெயர் அயலில் இருந்ததால்  திருப்பி கதைப்பதில்லை. சிலநேரம் திரும்பிப் பார்க்கும்போது மாமரத்தின் பின்னே ஒரு உருவம் மறைந்து நிற்கும். ஆனால் அந்த மம்மல் பொழுதில் யார் என்று தெரியாது. யாரிடமாவது கேட்போம் என்றாலும் பயம். 

எனது வயதுடைய ஆனால் என்னிலும் விவரமான இருவர் சாந்தி, மாலினி என்று என் பக்கத்துவீடு. அன்று என்னை வாடி உங்கள் பெரியம்மா வீட்டுக்கு போட்டு வருவம் என்றார்கள். படிக்கச் சொல்லும் அம்மாவின் கொடுமையிலிருந்து கொஞ்ச நேரம் விடுதலை என மகிழ்ந்தபடி அவர்களுடன் சென்றேன்.

அவர்களின் வீடு வந்ததும் படலையைத் தட்டும்படி என்னையே கூறியதால் நானும் தட்டினேன். யார் என்று அந்த அக்காவின் குரல் கேட்டது. நான்தான் என்று என் பெயரைக் கூறினேன். உடனே கதவு திறந்தது. மூவருமாக அவர்களின் வளவு எல்லை வரை சென்றவுடன், நில்லுங்கோடி இண்டைக்கு அது யார் என்று பாக்கவேணும் என்றாள் சாந்தி. வேண்டாமடி என்று உடனே நான் மறுத்தேன். உனக்குப் பயமெண்டால் நீ பெரியம்மா வீட்டை போ என்றாள் மாலினி. எனக்கும் கன  நாட்களாக அது யார் என்று பார்க்கவேணும் என்ற ஆசை அடிமனத்தில இருந்ததுதானே. அதனால நானும் வாறன் எண்டன்.

ஆவலை அடக்க முடியாது அவர்களின் பின்னே செல்ல திடுதிப்பென்று ஓடிப்போய் அவர்களுக்குப் பின்னால் நின்றார்கள் இருவரும். அவர்கள் ஓடுவார்கள் என நான் எதிர்பார்க்காததால் நான் கொஞ்சத் தூரத்திலேயே நின்றேன். பாவம் இருவரும் கையும் களவுமாகப் பிடிபட்டதில் என்ன செய்வது எனத் திகைத்து நின்றனர்.

உடனே அந்த அக்கா, என்ன திரும்ப வீட்டை போறியளோ என்றார். ஓம் என்றுவிட்டு படலையைத் திறக்க, வீட்டை போகாமல் மீண்டும் பெரியம்மா வீட்டுப் பக்கம் ஓட எனக்குத்தான் குழப்பம். அவர்கள் பெரியம்மா வீட்டு மணல் கும்பியில் போய் விழுந்து சிரிக்க, பெரியம்மாவும் மாமியும் என்ன சிரிக்கிறியள்  என்று கேட்க, நான் சொல்ல வேண்டாம் என்று  கண்ணைக் காட்டியதைக் கவனிக்காததுபோல் எல்லாத்தையும் சொல்ல, அதுக்குப் பிறகு எனக்குத்தான் பெரியம்மா வீட்டுக்கு சுற்றிப் போகும் தண்டனை.

சாந்தியினதும் மாலினியினதும் ஓட்டை வாய் சும்மா கிடைக்காமல் கதை எல்லா இடமும் பரவிவிட்டது. அதன்பின் அவர்கள் இருவரும் மாமரத்தடியில் சந்திக்கிறார்களோ இல்லையோ வீதியால் போகும் இளம் பெடியள் கள்ளப் பூனை மாமரத்தைச் சுத்துது என்று பாடிக்கொண்டு போவது வழக்கமாகிப் போனது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளப்பூனை அக்காவையும் சுற்றி மாமரத்தையும் சுற்றியிருக்குது..... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி புத்தன்

Link to comment
Share on other sites

ஊரில கள்ள பூனைகளுக்கு மட்டும் பஞ்சம் இல்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பகிர்விற்கு நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து நல்லவராக இருந்தால் இப்படித்தான் சுமே :D

 

அது சரி  உங்களுக்கு  நண்பர் கூட்டம்  எப்படி இப்படியே  கிடைக்கிறது??? :lol:

 

பகிர்வுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைதந்த உறவுகளுக்கும் கருத்தைப் பகிர்ந்த உறவுகளுக்கும் நன்றி

Link to comment
Share on other sites

பாவம் இருவரும் கையும் களவுமாகப் பிடிபட்டதில் என்ன செய்வது எனத் திகைத்து நின்றனர்.

 

 

 

யார் அவை?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவவுக்கு எல்லாம் விவரமாச் சொல்ல வேணும்.சொன்னா உங்களுக்குத் தெரிஞ்சிடுமே அலை :lol:

Link to comment
Share on other sites

இவவுக்கு எல்லாம் விவரமாச் சொல்ல வேணும்.சொன்னா உங்களுக்குத் தெரிஞ்சிடுமே அலை :lol:

 

 

ம்.................. யாராயிருக்கும் <_<

Link to comment
Share on other sites

பூனை இரவில் வேட்டையாடுகிறதை பார்த்த உங்கள் நண்பிகளுக்கு (பயத்தில்) காய்ச்சல்  வரவில்லையா?  :lol: 

 

 

ம்.................. யாராயிருக்கும் <_<

 

 

கள்ளப்பூனையும் அக்காவும்  :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களைக்கண்டு பேய்களே பயப்படும்போது நீங்கள் பேய்களுக்கு பயப்பட்டிருக்கிறீர்கள் என்பது சற்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது :D .. நன்றி அக்கா பகிர்விற்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களைக்கண்டு பேய்களே பயப்படும்போது நீங்கள் பேய்களுக்கு பயப்பட்டிருக்கிறீர்கள் என்பது சற்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது :D .. நன்றி அக்கா பகிர்விற்கு..

 

இப்ப

என்ன  சொல்ல வருகின்றீர்கள்

சுமே

பேயைவிட பயங்கரம் என்று தானே

ஆண்களின் இந்த தயக்கமே

இன்றைய பேய்களின் பேயாட்டத்துக்கு  முக்கிய  காரணம்....... :lol:  :D  :D  :D

(2  நாள் இந்தப்பக்கம் வரமாட்டேன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களைக்கண்டு பேய்களே பயப்படும்போது நீங்கள் பேய்களுக்கு பயப்பட்டிருக்கிறீர்கள் என்பது சற்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது :D .. நன்றி அக்கா பகிர்விற்கு..

அது பத்து வயதில. இப்ப நீங்கள் சொன்னமாதிரி என்னை கண்டு பயப்பிடும் பே........ய்

இப்ப

என்ன சொல்ல வருகின்றீர்கள்

சுமே

பேயைவிட பயங்கரம் என்று தானே

ஆண்களின் இந்த தயக்கமே

இன்றைய பேய்களின் பேயாட்டத்துக்கு முக்கிய காரணம்....... :lol::D :D :D

(2 நாள் இந்தப்பக்கம் வரமாட்டேன்)

சுபேசைச் சாட்டியாவது சொல்லத் துணிவு வந்துதே அண்ணா உங்களுக்கு. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி எப்ப உங்கள் காதல் கதை எழுதப் போகின்றீர்கள் சகோதரி?

 

உங்கட கதை எழுதிய பிறகுதான் அலை   :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது பத்து வயதில. இப்ப நீங்கள் சொன்னமாதிரி என்னை கண்டு பயப்பிடும் பே........ய்

சுபேசைச் சாட்டியாவது சொல்லத் துணிவு வந்துதே அண்ணா உங்களுக்கு. :lol:

 

 

கண்டு பிடித்து விட்டீர்களே........ :lol:  :D  :D

Link to comment
Share on other sites

இங்கே கள்ளப்பூனையின் வேலையை செய்யாதவர் யார்? :D

Link to comment
Share on other sites

உங்கட கதை எழுதிய பிறகுதான் அலை   :D

 

 

 

சரி சரி உங்கள் கற்பனையை வீணடிக்காமல் அலையைப் பற்றி எழுதுங்கோ!

:D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மான் கொடுத்த சாபம் மாதிரி இவர்கள் உங்களுக்கு கொடுக்கவில்லை, தொடருங்கள்

Link to comment
Share on other sites

 மான் கொடுத்த சாபம் மாதிரி இவர்கள் உங்களுக்கு கொடுக்கவில்லை,

 

 

சாபம் ஆணுக்கு மட்டுமே (பாண்டுவிற்கு).

 

 

 தொடருங்கள்....

 

 

 

பெரியம்மா வீட்டிற்குப் போவது போல் பாசாங்கு காட்டிவிட்டு, இருட்டில் அருகில் இருந்த வாழை மரங்களுக்குள் பதுங்கினேன். பதுங்கி இருந்த படியே இயக்கத்தில் இருந்த குமரன் அண்ணா தந்த Night Vision ஆல் அவர்களைப் பார்த்த போது 
 
பார்த்த.... போது... 
 
பார்த்த... போது... 
 
பார்த்த.. போது....
 
அன்றிரவு தொடங்கிய காய்ச்சல் நாலு நாள் விடவில்லை.  :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சாபம் ஆணுக்கு மட்டுமே (பாண்டுவிற்கு).

 

 

 

 

 

பெரியம்மா வீட்டிற்குப் போவது போல் பாசாங்கு காட்டிவிட்டு, இருட்டில் அருகில் இருந்த வாழை மரங்களுக்குள் பதுங்கினேன். பதுங்கி இருந்த படியே இயக்கத்தில் இருந்த குமரன் அண்ணா தந்த Night Vision ஆல் அவர்களைப் பார்த்த போது 
 
பார்த்த.... போது... 
 
பார்த்த... போது... 
 
பார்த்த.. போது....
 
அன்றிரவு தொடங்கிய காய்ச்சல் நாலு நாள் விடவில்லை.  :D

 

 

அந்த தடியனுக்கு வந்த காய்ச்சல் தானே :D

 

Link to comment
Share on other sites

அந்த தடியனுக்கு வந்த காய்ச்சல் தானே :D

 

 

 

பூனைக் காய்ச்சல். 

 

 

( பண்டிக் காய்ச்சல் மாதிரி )    :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் புல‌வ‌ர் அண்ணா🙏🥰.................................................................
    • ம்....ம்...ம் சொந்த மண்ணினத்தவெனையே பாகுபாடு பார்க்கும் தமிழ்நாட்டில்  இலங்கை பொண்ணு வாக்களிச்சு எத சாதிக்கப்போகுதாம்? 🤣 கவனம். உயிராபத்து நிறைந்த விடயம். 😎
    • இவ‌ர் சொல்வ‌தை கேலுங்கோ.......................... உத்திர‌பிர‌தேஸ்சில் 24  கோடி ம‌க்க‌ளுக்கு மேல் வ‌சிக்கின‌ம் அவ‌ர்க‌ளின் ஓட்டு ச‌த‌வீத‌ம் / புரிய‌ல‌.....................
    • வாக்களிக்க செல்லும் போது இவ்வளவு பணத்தை யாரும் எடுத்து செல்வார்களா? 😂
    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         KKR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         SRH 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         JJ Bumra 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kholi 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Pathiran 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         csk 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.