Jump to content

கைக்கு எட்டியது வாய்க்கு ?


Recommended Posts

தனிமையில் அதுவும் பாரில் இருந்து குடிப்பது என்பது மிகவும் அசவுக்கியமான ஒரு விடயம். கதைக்க ஆளில்லாமல் தண்ணியடிப்பது கண்ணை கட்டி கடலுக்க விட்டது போல, இன்று அந்த நிலை தான் நகுலனுக்கு, ஏனடா இதற்குள் தனியே வந்தம் என்றிருந்தது அவனுக்கு . நாலு பியரை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு போனால் தொலைக்காட்சியில் ஒரு நல்ல சினிமா படத்தையோ அல்லது பிரகாஷ்ராஜ் இன்  நீங்களும் வெல்லலாம்  ஒரு கோடியை பார்த்துக்கொண்டு தனது இந்திய சினிமா, பொது அறிவையும் செக் பண்ணிக்கொண்டு இருந்திருக்கலாம்.

 

ஒவ்வொரு வெள்ளி பின்னேரமும் வேலை முடிய வேலையிடத்து நண்பர்களுடன் டாப்ஸ் ரெஸ்டோரண்டில் இல் போய் இரண்டு பியர் அடித்துவிட்டுத்தான் வீட்டிற்கு போவது நகுலனின் வழக்கம். வேலை செய்யும் பல்லின நண்பர்களுடன் இந்த பழக்கம் பழகி நகுலனுக்கு பத்து வருடங்ககளுக்கு மேலாகின்றது .

வின்டரில் பாருக்கு உள்ளேயும் சம்மர் வர வீதியோரம் அவர்கள் விரிக்கும் குடைக்குள் இருந்து நாலு கதைகள் பேசியபடி பியரை அடிப்பதிலும் இருக்கும் சுகம் வேறு எதிலும் இல்லை மாதிரி அந்த  தருணங்களில் அவனுக்கு  இருக்கும். விளையாட்டு ,சினிமா ,அரசியல் என்று ஒரு சீரியசுமில்லாமல் கதைத்து, சிகரெட்டும் பத்தி விடைபெறும் போது ஆளுக்கு ஆள்  கட்டி பிடித்து  வாரவிடுமுறை நன்றாக இருக்கட்டும் என்று விட்டு போகும் அந்த வெள்ளைநிற, கயனிஸ் நண்பர்களை நகுலனுக்கு நன்கு பிடித்து போயிற்று . வெள்ளிகிழமை இந்த ஒன்றுகூடல் கட்டயாய விதியாகி இருந்தாலும் இடையில் கூட  சிலவேளை எட்டிப்பார்பார்கள். ரேஸ்ரோரண்டிற்கு குடிக்க போவது எத்தனை மணியாக இருந்தாலும் மாலை  ஏழு  மணிக்கு மேல் எவரும் அங்கு இருப்பதில்லை வீடுகளுக்கு ஓடிவிடுவார்கள்.

 

இன்று நீண்ட வார விடுமுறை என்பதால் வேலை இரண்டு மணிக்கே முடிந்துவிட்டது .நண்பர்கள் பலரும் காம்பிங் ,கொட்டேஜ் என்று போக திட்டம் போட்டதால் டாப்ஸ் ரெஸ்ட்டோரன்ட்  போகும் பிளான் கை விடப்பட்டு இருந்தது .நகுலனின்  மனைவி வேறு வெள்ளி என்றால் வேலையால் தனது தம்பியுடன் இருக்கும் தாயாரிடமும் போய்விட்டு இரவு பத்து பதினோரு மணிக்குத்தான் வீடு திரும்புவார்.

 

வேலை முடிய இன்று வீட்டிற்கு போய் வீட்டுதோட்டத்தில் வேலை செய்யவவேண்டும் என்று இருந்தவன் டாப்ஸ் பாரைஐ தாண்டும் போது ரீனா பாருக்குள் நடந்துபோவதை  கண்ணாடிக்குள்ளால் பார்த்துவிட்டான் .எதற்கும் ஒரு பியரை அடித்துவிட்டு ரீனாவிற்கும் கலோ சொல்லி விட்டு போவம் என்று காரை திருப்புகின்றான் .

ரீனா டாப்ஸ் பாரில் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக வேலை செய்யும் வெயிடர்ஸ் .ரீனா வேலைக்கு வந்த முதல் வார வெள்ளியே மறக்கமுடியாத ஒரு நாள்தான் .வேலை முடிய நகுலனுடன் சேர்த்து  ஒரு பத்து பேர்கள் போய் வழக்கமாக இருக்கும் இடத்தில குந்தினால் நாலாம் நம்பர் மேசைக்கு உடன் ஓடிவரும் வெள்ளை நிற கண்ணாடி போட்ட எல்லாம் திறந்துவிட்ட நிகோல் இல்லாமல் ஒரு ஸ்பானிய முகத்துடன் ஒருத்தி வந்து தன்னை அறிமுகம் செய்கின்றார் .நான்தான் ரீனா இனிமேல் நாலாவது மேசைக்கு உபசரிக்கபோகின்றவள் .

 

ஸ்பானிஸ் பெண்கள் எல்லோருமே ஜெனிபர் லோபெஸ் மாதிரி இருப்பது ஏன் என்று இன்றுவரை நகுலனுக்கு  விளங்காமல் இருக்கு .உடற்கட்டும் சரி முகமும் சரி ஒரு இறுகிய தன்மை.கை கால் எல்லாம் சொல்லி செய்தது மாதிரி இருக்கும் .ரீனாவின்  முன்பக்கம் மட்டும் சொல்லாமலே  செய்தது போலிருக்கும்  .இந்த வேயிட்டேர்ச்கள் டிப்ஸ் இற்காகவோ என்னவோ மேற்சட்டை பட்டன்களை போடுவதேல்லை .இவர்கள் குனிய நிமிர குடித்தவன் வெறி முறிந்து இன்னமும் இரண்டு மேலதிகமாக குடிப்பார்கள் .முதலாளி இதற்கென்றே அவர்களை வேலைக்கேடுத்து உடுப்பும் கொடுக்கின்றான் போல கிடக்கு என்று நகுலன் நினைக்காத நாளில்லை.

 

ரீனா டாப்ஸ் இல் வேலைக்கு சேர்ந்த நாளில் இருந்து நகுலனது வேலையிடத்திலும் ரீனா ஒரு கதை பொருள் ஆகியிருந்தாள்.அவள் போடும் ஆடைகளில் இருந்து அவளின் அங்கங்களின் அளவை பற்றி ஒரு பட்டி மன்றமே நடக்கும். அவள் கண்ணுக்கு முன்னே மேசையில் இருக்கும் நாப்கினில் ரோசா படம் வரைந்து கொடுத்தவர்களும் கிறிஸ்மஸ் ,புது வருடங்கள் வரும் போது பரிசுகள் என்று கொடுத்தவர்களும் பலர். எல்லோருடனும் சிரித்து சிரித்து அவள் வளைய வருவதால் ஒரு நாளைக்கு எப்படியாவது கொத்திக்கொண்டு போக வேண்டும் என்ற நல்ல  எண்ணம் தான் எல்லோர் மனதிலும்  இருந்தது ஆனால் அந்த ஆசை  ஒருவருக்கும் இதுவரை ஈடேறவில்லை. ஆனால் அவனவன் மீண்டும் மீண்டும் முயற்சி செய்வதில்  மட்டும் விக்கிரமாதித்தன்கள் ஆக இருந்தார்கள் .

 

அவளுக்கு ஒரு காதலன் இருப்பதும் அவன் குடி ,கஞ்சா ,போலிஸ் கேஸ் என்று அலைவதுமாக இருப்பதாக அவளே சொல்லியிருக்கின்றாள் .தான் கொலம்பியாவில் இருந்து கனடாவிற்கு குடிபுகுந்த நேரம் அவன் தான் முழு உதவிகளும் செய்ததால் தன்னால் அவனை விட்டு பிரியமுடியவில்லை என்றும் அடிக்கடி சொல்லுவாள்.அவள் சொல்லுவது எவர் காதிலும் ஏறியதாக நகுலனுக்கு ஒரு போதும் பட்டதில்லை .அவர்களுக்கு அவளை எப்படியாவது மடக்குவது என்ற கருமமே தான் கண்ணே ஒழிய மற்றவைகள் எல்லாம் இரண்டாம் பட்சம் .

 

நகுலனுக்கும்  ரீனாவின் அழகில் ஒரு வித மயக்கம் இருந்தது உண்மை.ஆனால் தனது நிறத்தாலும் முற்றாக சிலருக்கு எடுத்தவுடன்  விளங்காத தனது ஆங்கிலத்தாலும் எப்போதும் சற்று தள்ளியே இந்தவிடயத்தில் இருப்பான். இருந்தாலும் குடித்து முடிய தாராளமாக டிப்சை வைத்து அவளின் கவனத்திற்கு தன்னையும்  கொண்டுவந்திருப்பதாக மனதிற்குள் நினைப்பான் .வெள்ளைகள் எல்லாம் மிக பகிரங்கமாக அவளை பற்றி பேசும்போது நான் மணமுடித்தவன் இதிலெல்லாம் ஆர்வம் இல்லை என்பதுபோல மிக அலட்சியமாக  காட்டிக்கொள்ளுவான். இருந்தாலும் ரீனா உடுக்கும் உடையில் இருந்து அவளின் ஒவ்வொரு அசைவும் அவனுக்கு அத்துப்படி. ஒரு நாள் சற்று அதீதவெறி மயக்கத்தில் இவ்வளவு அழகான வாளிப்பான ஒரு பெண்களை எல்லாம் யார் தான் அனுபவிக்கின்றார்களோ தெரியாது, நான் என்றால் தொடக்கூட மாட்டன் பார்த்துக்கொண்டே இருப்பன் என்று வாய் தடுமாறி சொல்லிவிட்டான் .

 

அடுத்தநாள் வேலையில் நண்பர்கள் நகுலன் ரீனா உடுப்பை கழட்டினால்  அதை பார்த்து ஓவியம் மட்டும்தான் வரைவார்  என்று சொல்லி சிரிக்கத் தொடங்கிவிட்டார்கள். தனக்கு அப்படி வரைய தெரியாது ஆனால்  ஒரு பிக்காசோவை பிடித்து  அவளை வரைய வேண்டும் என்று ஆசை இருக்கு என்று கதையை மெல்ல திசை திருப்பிவிட்டான் .அவன் மனதில் இருக்கும் ரீனாவின் மீதான அந்த ஈர்ப்புத்தான் இன்று அவனை தனியாக அந்த  ரேச்டோரண்டிற்கு இழுத்துக்கொண்டு போனது .

ரீனாவிடம் ஹாய் சொல்லி ஒரு ரெட்ரிகாட் லாகரை வெளிமேசைக்கு கொண்டுவர ஆர்டர் பண்ணிவிட்டு வெளியில் போய் ஒரு குடைக்குள் கீழருந்து  சிகரெட்டை எடுத்து பற்ற வைக்கின்றான்.  பியருடன் வந்த ரீனா,

 

“என்ன இன்று தனிமையில் “

 

“மற்றவர்கள் நீண்ட வாரவிடுமுறை என்று ஓடிவிட்டார்கள் ,எனக்கும் பல அலுவல்கள் இருக்கு இருந்தாலும்  ,அதற்கு முதல் ஒரு பியரையும் அடித்து அப்படியே உன்னையும் பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தேன் “

 

“பியர் அடிப்பது சரி பிறகென்ன என்னை பார்ப்பது என்று”

 

“ஏனோ அப்படி இன்று தோன்றியது அதுதான் வந்தேன் “

 

“நல்லது.என்னை பார்த்துவிட்டாய் ஒரு பியரை குடித்துவிட்டு போய்விடு “

 

“நீ சொன்னாலும் சொல்லாவிடாலும் இந்த பியருடன் நான் போகத்தான் போகின்றேன் “

 

நன்றி என்றபடி ரீனா ரேஸ்டோரண்டிற்குள் போய்விட்டாள். பியரை மெல்ல குடித்துமுடித்துவிட்டு ஒரு சிகரெட்டை பற்றிக்கொண்டு நகுலன் எழும்பும் போது

 

“எனக்கு ஒரு சிகரெட் தருவாயா “ என்றபடி ரீனா வருகின்றாள் .

 

“அப்ப எனக்கு இன்னமும் ஒரு பியர் கொண்டுவா ,நான் ஒரு சிகரெட் தருகின்றேன் “

 

சிரித்தபடி உள்ளே போய் பியரை கொண்டுவந்தவள் அவனருகில் இருந்து அவன் கொடுத்த சிகரெட்டை பற்றிகொண்டு

“இன்று எனக்கு நாலு  மணிக்கு வேலை முடிகின்றது .என்னை கென்னடி சப்வேயில் ஒருக்கா இறக்கிவிட முடியுமா “

 

மணிக்கூட்டில் நேரத்தை பார்த்த நகுலன்

“உனக்காக எனது அலுவல்களை பின் போட்டு இன்னமும் ஒரு மணித்தியாலம் இங்கு இருந்து விட்டு உன்னை கொண்டுபோய் இறக்கிவிடுகின்றேன் ,அதற்கு நீயாக விரும்பி ஏதாவது தரலாம் .அது டிப்ஸாக இருக்க கூடாது “

 

“ஏன் அதை இப்போதே தந்துவிடுகின்றேன் “ என்ற படி ஒரு சின்ன கட்டிப்பிடிப்புடன் உள்ளே போய்விட்டாள்.

 

நகுலனுக்கு பிசாசுபோல ஒன்று நரம்பெங்கும் புகுந்து  பேயாக ஊரத் தொடங்கியது. இனி குடிக்க கூடாது சிலவேளை அப்படி ஏதாவது  சந்தர்ப்பம் கிடைத்தாலும் சொதப்பிவிடுவம் என்று கள்ள உள்ளுணர்வு சொல்லுகின்றது .மனதிற்குள் ஒருமுறை  ரீனாவின் காதலன் கென்னடி சப்வேயில் கஞ்சா பற்றியபடி வந்து தனது முகத்தில் குத்துவதுபோலவும் ஏனோ வந்து போனது .

 

தனது வேலை உடுப்பை மாற்றி பலவர்ண நிறத்தில் ஒரு கைக்குட்டையளவு சட்டையுடன் ரீனா வருகின்றாள்.

 

“என்ன எக்ஸ்ட்ரா பெரிசா இருக்கே”

 

“எதை சொல்லுகின்றாய் “

 

“என்ன உடுப்பையா சொல்கின்றேன் “

 

“எடு காரை போவம் நகுல் “

 

காசியரில் போய் பில்லை கட்டிவிட்டு ரீனாவுடன் போய் காரில் ஏறுகின்றான் நகுல். காரை மார்க்கம் வீதியில் ஏற்றியபடியே,

 

.”நீ எங்கே இருக்கின்றாய் ரீனா “

 

“என்ன குரல் ஒரு மாதிரி மயங்குது .அது ஒரு மணித்தியால ஓட்டம் ,என்னை கென்னடி சப்வேயிலேயே இறக்கிவிட்டால் போதும்  “

 

“பரவாயில்லை. உன்னை நான் உனது வீட்டிலேயே பாதுகாப்பாக ? இறக்கி விடுகின்றேன். எங்கே என்று சொல்லு.”

 

“இப்ப பெருந்தெரு எடுத்து மேற்கிற்கு போ. வீடு பிராம்டனில் இருக்கு ”

 

“விலாசத்தை சொல்லு கதைத்துக்கொண்டே போகலாம் “

 

நகுலனின் கார் ரீனாவின் அப்பாட்மேன்ட்டின்  முன் நிற்கின்றது .

 

“நன்றி நகுல் .எனது காதலன் இங்கு போலிஸ் தேடுவதால் வன்கூவர்  போய்விட்டான். நான் தனியாத்தான் இருக்கின்றேன். அடுத்த வாரம் எனக்கு ஒரு சோதனை இருப்பதால் படிக்க வேண்டும். அதனால் தான் வேலையை முன்னதாகவே முடித்தேன் .இவ்வளவு தூரம் வந்து என்னை  இறக்கியதற்கு  நன்றி. நான் போய் வருகின்றேன்"

 

“இவ்வளவு தூரம் உன்னை கூட்டி கொண்டு வந்ததற்கு நன்றி மட்டும்தானா ரீனா  “

 

காரை விட்டு இறங்கிய ரீனா காரை சுற்றி வந்து திறந்திருக்கும் காரின் கண்ணாடி யன்னல் ஊடாக முகத்தை நீட்டி நகுலனுக்கு  ஏதோ சொல்கின்றாள்.

 

என்ன சொன்னாள் என்பது அடுத்த பதிவில் ............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நகுலன் நல்லாய் அவியப்போறார் போலை கிடக்கு.....

Link to comment
Share on other sites

முடிவை தலைப்பே சொல்லி விட்டது போலுள்ளது.என்றாலும் எதுவும் நடக்கலாம். ஸ்பானிய பெண்ணல்லவா!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சாதாரண மனிதனின் மனதில் ஓடுகின்ற நினைவுகள் அவ்வளவையும் அழகாக வடித்திருக்கின்றீர்கள், அர்ஜுன்!

 

கதையை விட்டிட்டுப் போன இடம், நகுலனிலும் பார்க்க நமக்குத் தான், கடுப்பேத்திற மாதிரிக்கிடக்கு! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு நாளைக்கு எப்படியாவது கொத்திக்கொண்டு போக வேண்டும் என்ற நல்ல எண்ணம் தான் எல்லோர் மனதிலும் இருந்தது
நகுலன் கொத்திப்போட்டானோ???......எவன்டாப்பா தொடர் கதையை கண்டுபிடிச்சவன்?மனுசரை டென்சன் ஆக்கிறாங்கள்:D
Link to comment
Share on other sites

கதை சாதாரண கதையாக இருந்தாலும், எழுதிய விதம் அடுத்து என்ன நடக்குமோ என்ற ஆவலைத் தூண்டுகிறது.

 

வயிறு பத்துது.  ரீனா நகுலனுக்கு 'bye' சொல்லி அனுப்பியதாக கதையை முடிங்கோ. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையாக கதையை நகர்த்தியுள்ளீர்கள் அர்யுன். எங்களைக் காக்க வைக்காது மிகுதியையும் எழுதிவிடுங்கோ.

Link to comment
Share on other sites

பின்னோட்டம் இட்டவர்களுக்கு நன்றி .நாளை மிகுதி எழுதிவிடுகின்றேன் .

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ரீனா காரை சுற்றி வந்து கண்ணாடி யன்னலுக்குள்ளால் முகத்தை விட்டு நகுலை பார்த்து ,

 

“வேலையிடத்து உறவுகளை  நான் வேலையிடத்துடனேயே விட்டுவிடுவேன் ,நீ என்னில் தனி கவனம் எடுப்பது  கூட எனக்கு எப்பவோ தெரியும், உன்னில் எனக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் இருக்கு, அதை கெடுக்கமாட்டாய் என்றால் காரை பார்க் பண்ணிவிட்டு மேலே வா ஒரு கொலம்பியன் கோப்பி குடித்துவிட்டுபோகலாம்.”

 

ரீனாவின் உறவை தொடர்ந்தும் தக்கவைக்க எதற்கும் நல்ல  பிள்ளையாக ரீனாவின் இருப்பிடத்திற்கு ஒருமுறை போய் வருவம்  என்ற எண்ணத்துடன் நகுலன் காரை பார்க் பண்ணிவிட்டு ரீனாவுடன் சேர்ந்து அவளின் நாலாம் மாடி குடியிருப்பிற்குள் நுழைகின்றான்.

 

“இதை உனது வீடுமாதிரி நினைத்து இரு ,நான் ஒரு சிறு குளியல் போட்டு விட்டுவருகின்றேன் .டி வி பார் அல்லது பாட்டு கேள். பிரிட்சில் பியர் இருக்கு அல்லது கொஞ்சம் பொறு வந்து ஒரு சுப்பர் கொலம்பியன் கோப்பி போட்டுத்தருகின்றேன்”

 

அடுத்த ரூமிற்குள் ரீனா போய்விட்டாள் . புத்தகங்கள் ,சீடி, டிவிடி, சுவர் எங்கும் சீலை சித்திரங்கள், கைவினை பொருட்கள்  என்று அறை முழுக்க பொருட்கள் நிரம்பியிருந்தாலும் ஒருவித ஒழுங்கும் கலைநயமும் அதில் இருந்தது.  டிமூலியன் ஜிமினேஸ் இன் புகைப்படம் ஒன்று கொரில்லா வீரர்  உடையுடன் கொழுவியிருக்கு, அதன் கீழ் VICTORY TO FARC  எழுதியிருந்தது .எல்லா நாட்டிலும் ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு மட்டும் குறைவில்லை போலிருக்கு அதானால் தான் உலகெங்கும் ஆயுத் போராட்டமும் தொடருது போல என நகுலன நினைக்க ,

 

“கோப்பி போடவா “ என்றபடி அறையால் ரீனா வருகின்றாள் .மிக சின்னதாக  ஒரு மிக குறுகிய காற்சட்டை இடுப்புடன் அப்பிக்கொண்டு நின்றது. பொன்னிற கால்களை முழுதாக காட்டியபடி மேலே ஒரு மெல்லிய டீ-சேட்டும் அணிந்திருந்தாள். இப்படி உடை அணிவது இவர்களுக்கு மிக சாதாரணம் என்று நகுலனுக்கு தெரியும். இருந்தும் ரீனாவை அந்த உடையில் பார்க்க அவனுக்குள் உண்டான கிறக்கத்தில்

 

“இந்த உடையில் நீ மிக அழகாக இருக்கின்றாய். மன்னிக்கவும் எந்த உடையிலும் நீ அழகுதான். இதில் நீ மேலும் அழகாக இருக்கின்றாய்”

 

“நன்றி நகுல் .” என்றபடி கேத்திலில் தண்ணீரை சூடாக்க வைத்துவிட்டு சில்வர் மூடி போட்ட ஒரு கண்ணாடி கிளாசுக்குள் கோப்பியை கொட்டுகின்றாள் .

 

“திங்ககட்கிழமை எனக்கு கடைசி பரீட்சை.  அவன் (போய் பிரெண்ட்) இங்கு இல்லாததும் எனக்கு வசதியாக போய்விட்டது.  இல்லாவிடில் வெள்ளி ,சனி இரவு என்றால் டொராண்டாவில் உள்ள பாரெல்லாம் போய் குடித்து பின்னர் பிரச்சனை பண்ணுவதுதான் அவன் வேலை, அவனை சமாளித்து வீடு திரும்ப எப்படியும் அதிகாலையாகிவிடும். ஆண்கள் எதிர்காலதைவிட நிகழ்காலத்தில் தான் வாழுபவர்கள் .அன்றாட சந்தோசமே அவர்களுக்கு முக்கியம் “

 

என்றபடி நகுலை பார்த்து கண்ணடிக்கின்றாள்.

 

ரீனா கொடுத்த கோப்பியை ருசித்தபடி நகுலன் சொன்னான் .

 

“நல்லாயிருக்கின்றது என்றால் ஏதோ தேவைக்கு சொல்லுகின்றான் என நினைப்பாய் ஆனால் உண்மையில் இந்த கோப்பியில் இருக்கும் ஒரு வகை உவர்ப்பு மிக நன்றாகத்தான் இருக்கு “

 

என்றபடி கோப்பிப் கப்பை மேசை மீது வைத்துவிட்டு

 

“அடுத்த வெள்ளி சந்திப்போம்”

 

என்றவன் வாசல் கதவை நோக்கி நடக்க ஆரம்பிக்கின்றான் .

 

“ஹேய் நகுல், உன் முகமும் உடல்மொழியும்  விளையாட்டு போட்டியில் எதிர்பாராமல் தோற்று அனைத்தையும் இழந்தது போல வெறுமையாக போவார்களே அது போல இருக்கு, ஏன் எதையும் உண்மையில் எதிர்பார்த்து வந்தாயா சொல்லு? “

 

“அப்படி ஏதும் இல்லை,  இருந்தாலும் உனது உதட்டால் ஒரு முத்தம் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்து இருந்தேன். அதுதான் சற்று ஏமாற்றமாகிவிட்டது. இன்று இல்லாவிட்டாலும் இன்னொரு நாளைக்கு நீ என்ன எனக்கு  தராமலா விடப்போகின்றாய் “

 

என்றபடி நகுல் போய் வாசல் கதவை திறக்க, சோபாவில் இருந்து எழும்பி அவனை நோக்கி வந்த ரீனா இரு கைகளாலும் அவன் கழுத்தை கட்டி இழுத்து அவன் உதட்டில் தனது உதட்டை பதிக்கின்றாள். தன்னிலை மறந்த நகுல் ஏது செய்வது என்று தடுமாற, ரீனா வெகு லாவகமாக அவனை அப்படியே சோபாவில் தள்ளி அவன் மீதேறி அவன் உடலெங்கும் முத்த மழை பொழிய தொடங்க,

 

அந்த நேரம் பார்த்து அப்பாட்மென்ட் பஸ்ஸர் ஒரு நராசுகமான ஒலியை எழுப்புகின்றது.  மெல்ல எட்டி பஸ்ஸரை ரீனா அமத்த,

 

“கதவை திற கதவை திற” 

 

என ஒரு ஆண் குரல் பெருங்குரலில் சத்தம் இடுகின்றது.  குரலை கேட்டதும் உடனே தன்னை சுதாகரித்து எழுந்த ரீனா நகுலை நோக்கி,

 

“எனது போய் பிரென்ட் வந்துவிட்டான், உடனே ஓடித்தொலை. உன்னை அவன் இங்கு பார்த்தான் என்றால் உன்னை கொன்றுவிடுவான் “

 

என்ன நடக்கின்றது என்றே புரியாமல் ஒரு கணம் திகைத்த  நகுல் “போய் பிரென்ட் ,கொலை” என்ற சொற்கள் மாத்திரம் காதில் பாய, சோபாவை விட்டு துள்ளி எழும்பியவன் தான்  உடையிலாமல் இருப்பது புரிகின்றது.

 

நகுலின் டெனிம் பான்ட்ஸ்சையும் சேட்டையும் அவன் அவன் மீது சுருட்டி எரிந்தபடி ரீனா,

 

“இப்படியே ஓடு ,ஓடு, மாடிப்படிகளால் ஓடு”  என்றபடி வாசல் கதவை திறக்கின்றாள் .

 

உயிர் தப்பினால் காணும் என்றநிலையில்  சுருட்டிய உடுப்புகளை தூக்கியபடி  அண்டர்வேயருடன் நகுலன் மாடி படிகளை நோக்கி ஓடியவன்  மாடிப்படிக்கதவை திறந்து ஒரு ஏக்க பெருமூச்சுடன் வேர்க்க விறுவிறுக்க மாடிபடிகளில் நின்றபடியே தனது பான்ட்ஸ்சை அணிகின்றான் .கடவுளே  நல்லவேளை ஒருவரும் கொரிடோரில் வரவில்லை .தலையோடு வந்தது தலைப்பாகையுடன் போய்விட்டது , விட்டால் காணும் வீடு போய் துலைவம் என்ற மன நிலையில் நகுலன் படிகளால் இறங்கி லோபிக்கு வருகின்றான் .

 

லோபியில் சிறு சனக்கூட்டம். நாலு ஐந்து போலீஸ்காரர்கள் வேறு நிற்கின்றார்கள் .என்னடா மதுரைக்கு வந்த சோதனை என்று நினைத்தபடி வாசல் கதவை திறக்க போனவன்  டாக்சிகாரன்  போலீசிடம்,

 

“விமானநிலையத்தில் ஏறியவன் இங்கு அப்பாட்மென்ட் வாசலில் இறக்கியதும் ஓட தொடங்கிவிட்டான். நான் அவன் பின்னே ஓடி வர  அவன் இரண்டாவது கதவில் யாரிடமோ கதவை திறக்க சொல்லி பஸ்சரில் குரல் கொடுக்க கதவு  திறக்கும் போது அவனை உள்ளே போகவிடாமல் நான் இழுத்து பிடித்துவிட்டேன் .என்னை  அவன் திரும்பி அடிக்க நீங்களும் வந்துவிட்டீர்கள்”

 

“அவன் ஏற்கனவே எம்மால் தேடப்பட்டுவருபவன் தான் ,அவனை சோதனை செய்ததில் அவனிடம் எதுவித பணமுமில்லை. நீ போகலாம் பின்னர் தொடர்பு கொள்கின்றோம்”.

 

நிலத்தில் வைத்து அமத்தி இரு பொலிஸ்காரர்களால் கைவிலங்கு இடப்பட்ட ஒருவனை போலிஸ் தனது காரின் பின் இருக்கையில் தள்ளுகின்றார்கள். இந்த வேடிக்கைகள் எல்லாவற்றையும் பார்த்தபடியே மெதுவாக முன் கதவை திறந்து காரை நோக்கி மிக விரைவாக நடையை கட்டுகின்றான் நகுல் .

 

“நீ ஒரு கள்ள அதிஸ்டக்காரனடா”  என்ற குரல்கேட்டு மேலே அப்பாட்மென்ட் மாடிகளை நிமிர்ந்துபார்க்கின்றான் .

 

“நன்றாக பயந்துவிட்டாய் போலிருக்கு .அவன் தான் எனது போய்-பிரென்ட் ,எனக்கு சொல்லாமல் வன்கூவரில் இருந்து பிளைட்டில் வந்ததவன் தேவையில்லாமல் டக்சிகாரனுடன் காசு கொடுக்காமல் தகராறு பண்ணி போலீசில் மாட்டுப்பட்டுவிட்டான். எனக்கு இப்படி நடப்பது எல்லாம்  மிக சாதாரணம். அடிக்கடி நடப்பதுதானே. அவன் அப்படித்தான் திருந்தவே மாட்டான் .”

 

ரீனாவை பார்த்து சிரித்தபடியே பதில் ஏதும் கூறாமல் போய் வருகின்றேன் என்று  கையை மட்டும் காட்டிய நகுல்

 

“நீ விரும்பினால் விட்டதில்  இருந்து தொடர மேலே வரலாம்,  நீ கட்டயாம் வருவாய் என்றும் எனக்கு தெரியும் “

 

என்றபடி ரீனா உள்ளே போகின்றாள் .

 

எனக்கு எங்கெல்லாம் மச்சம் இருக்கு என்று ஒருக்கா எண்ணத்தான் வேண்டும் என்று மனதிற்குள் சிரித்தபடி நகுலன் ரீனாவின் ஒட்டுமொத்ததிற்காக  திரும்ப போய் படியேறுகின்றான் .

Link to comment
Share on other sites

அர்ஜுன் இனிமேல் எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லக்கூடாது சரியா?? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான எழுத்து நடையுடன்  அளவாகவும் ரசனையாகவும் எழுதியுள்ளீர்கள் , வாழ்த்துகள்  அர்ஜுன் !! :D  :D

Link to comment
Share on other sites

பின்னூட்டங்களுக்கும் பச்சைகளுக்கும்  நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவது 

ஆத்ம சாந்தியடையக்கடவது..................... :lol:  :D  :D

Link to comment
Share on other sites

கதை நன்றாக இருத்தது,  :) அர்யுனின் அம்பு ஒரு நாளும்  குறி தப்புவது இல்லை  :lol: அவன் தம்பி நகுலனின் அம்பும் குறி தப்பாது போலுள்ளது  :D 


இனியாவது 

ஆத்ம சாந்தியடையக்கடவது..................... :lol:  :D  :D

 

யாரது சாந்தி ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கதை அந்தமாதிரி......படியாலை திரும்ப ஏறிப்போன நகுலின்ரை கதையின்ரை மிச்சம் வருமோ????
 
அதுசரி நகுலன்ரை சொந்தமனுசியும் ரீனா மாதிரி கேம் போடவெளிக்கிட்டால்??????.........நகுலன் என்ன செய்வார்? :lol:
 
எப்பவும் தனிய ஒருபக்கம் யோசிக்கக்கூடாது கண்டியளோ.......இரண்டுபக்கமும் யோசிக்கோணும். :icon_idea:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை அருமை அர்ஜுன்.

Link to comment
Share on other sites

பச்சைகளுக்கும் பின்னூட்டங்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி .

மீண்டும் அடுத்த கதையுடன் சந்திப்போம் .

Link to comment
Share on other sites

ஒரு மலையாள மசாலா படம் எடுத்த திருப்த்தி ஏற்ப்படுகின்றது....,,:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை அந்தமாதிரி......படியாலை திரும்ப ஏறிப்போன நகுலின்ரை கதையின்ரை மிச்சம் வருமோ????
 
அதுசரி நகுலன்ரை சொந்தமனுசியும் ரீனா மாதிரி கேம் போடவெளிக்கிட்டால்??????.........நகுலன் என்ன செய்வார்? :lol:
 
எப்பவும் தனிய ஒருபக்கம் யோசிக்கக்கூடாது கண்டியளோ.......இரண்டுபக்கமும் யோசிக்கோணும். :icon_idea:

 

நடத்தை கெட்டவள் என்று சொல்லிப்போட்டு ஊருக்கு போய் இன்னொருத்தியை கூட்டிக்கொண்டுவர வேண்டியதுதான்... :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.