Jump to content

உணவு விளம்பரங்கள் - மக்களை ஏமாற்றும் யுக்தி.


Recommended Posts

நாளாந்தம் தொலைக்கட்சிகளில் பல்வேறு பட்ட விளம்பரங்களை எல்லோரும் பார்த்திருப்பீர்கள்/ பார்ப்பீர்கள். அவற்றில் பல உணவு பொருட்களை விளம்பரப்படுத்துபவை.

 

கனடாவில் அப்படியான உணவு விளம்பரங்களில் பல மக்களை ஏமாற்றி பொருகளை விற்கும் தந்திரம் கொண்டவையாக  இருக்கிறன. அதில் முதல் பத்து இடங்ககளை பெற்ற உணவு விளம்பரங்களை கனேடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் பட்டியல் இட்டுள்ளது.

 

1. Maple Leaf Foods' Natural Selections

 

இந்த உணவு தயாரிப்பு நிறுவனம் பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகையை விற்கிறது (sausage/hotdog, ham, salami etc). இறைச்சி பதப்படுத்தலுக்கு நைத்திரேற்று சேர்க்கப்படுவது வழக்கம். இந்த நைத்திரேற்று இறைச்சிக்கு சிவப்பு நிறத்தை கொடுக்கும் பொருளுடன் (மயொகுளொபின் ) சேர்ந்து புதிய ஒரு சேர்வையை உருவாக்குகிறது. இந்த புதிய சேர்வை, மற்றும் நைத்திரேற்று என்பன புற்று நோயை உருவாக்கலாம் என அறியப்பட்டுள்ளது. இதனால் மக்களிடம் இந்த பொருட்களுக்கான மதிப்பு குறைந்து வருகிறது. இதை தவிர்க்க இயற்கையிலே நைத்திறெற்றை  கொண்ட செலரி விதைகள் (celery seed) ஐ இறைச்சி பதப்படுத்தலுக்கு சேர்த்து விட்டு , பதப்படுத்திய இறைச்சியில் எந்த செயற்கை இரசாயன பொருட்களும் இல்லை என்று சொல்லி விற்க முயல்கிறார்கள்.

 

 

2. Danone's DanActive

உடலில் இயற்கையான எதிர்ப்பு சக்தியை உறுதி படுத்தும் என்று சொல்லி விற்றார்கள்.

 

அமெரிக்காவில் தடிமன் காய்ச்சலை தடுக்கும் என சொல்லி விற்றதால் 21 மில்லியன் டோலர் வாடிக்கையாளருக்கு கொடுக்க வேண்டி வந்தது.

 

தயிர் யோகட்  போன்றவற்றில் இருக்கும் சில பக்ரீரியக்கள் உடலில் நோய் ஏற்படுவதை குறைக்கும், சமிபாட்டு தொகுதியில் ஏற்படும் தோற்று நோய்களான வயிற்றோட்டம் போன்றவை ஏற்படும் சந்தர்பத்தை குறைக்கும் என்றாலும், அவை நோய்க்கான மருத்துவம் அல்ல.

 

 

3. Carnation Breakfast Essentials

 

இந்த மென்பானம், 38 கிராம் சீனியை கொண்டது.

 

4. Oasis Health Break CholestPrevent juice

 

கொலஸ்திரோலை குறைக்க ஒவ்வொரு நாளும் 2 கிளாஸ் குடிக்க வேண்டும் என சொல்கிறார்கள். அப்படி 

குடித்தால் குடிப்பவர் மாதாந்தம் 1.5 கிலோ சீனியை குடித்திருப்பார்.

 

கொலஸ்திரோல் குறைகிறதோ இல்லையோ , உடல் நிறை கூடி இருக்கும்.

 

5. McCain Pizza Pockets

 

11 கிராம் கொழுப்பு கொண்டது.

 

ஏனையவை 

 

6. Praeventia cookies from Leclerc

 

7. Kraft Canada Inc.'s KD Smart

 

8. Wonder Plus White Loaf With Fibre

 

9. Kellogg's Nutri-Grain bars

 

10. Campbell's Healthy Request soup

 

 

http://www.cbc.ca/news/canada/story/2012/02/02/marketplace-lousy-labels-full.html

 

இதே போல இன்னும் பல இருக்கிறன. இவை சில உதாரணங்கள்.  

 

பல நாடுகளிலும் இப்படிபட்ட விளம்பரங்கள் வரும்.

 

யாழ் உறவுகள் உங்கள் நாடுகளில்  உள்ள உணவு விளம்பரங்கள் பற்றி இப்படி பட்டியல் இருந்தால் இணையுங்கள். பலருக்கும் உதவும்.

 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிறீன் ரீ குடிச்சால் கொலொஸ்ற்றோல் குறையும் எண்டு சொல்லினம் . என்ரை அவர் கார்டியோலிஸற்ட்டை போற நேரம் நானும் அவரோடை  போனன் . அப்ப இதைப்பதி டொக்ரறிட்டை கேட்டன் . அவர் சிரிச்சு போட்டு சொன்னார் அதிலை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை எண்டு . அதே மாதிரி தானாம் இந்த பயோ உற்பத்தி சாமானுகளும் . ஆனால் எனக்கு ஒரு விசயம் விளங்கேலை . அப்ப எதைதான் நாங்கள் சாப்பிடிறது ?? நீங்கள் நல்ல விசயத்தை சொல்லிறதுக்கு நன்றி சொல்லிறன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிறீன் ரீ குடிச்சால் கொலொஸ்ற்றோல் குறையும் எண்டு சொல்லினம் . என்ரை அவர் கார்டியோலிஸற்ட்டை போற நேரம் நானும் அவரோடை  போனன் . அப்ப இதைப்பதி டொக்ரறிட்டை கேட்டன் . அவர் சிரிச்சு போட்டு சொன்னார் அதிலை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை எண்டு . அதே மாதிரி தானாம் இந்த பயோ உற்பத்தி சாமானுகளும் . ஆனால் எனக்கு ஒரு விசயம் விளங்கேலை . அப்ப எதைதான் நாங்கள் சாப்பிடிறது ?? நீங்கள் நல்ல விசயத்தை சொல்லிறதுக்கு நன்றி சொல்லிறன் .

 

உங்க‌ள் இத‌ய‌ நிபுண‌ரின் ப‌தில் பூர‌ணமான‌ ப‌தில் அல்ல‌. ப‌ச்சைத் தேனீரில் "ஒட்சியேற்ற‌ எதிரிக‌ள்" (anti-oxidants) என‌ப்ப‌டும் ப‌தார்த்த‌ங்க‌ள் உண்டு. ந‌ம‌து உட‌லினுள் இய‌ற்கையாக‌வும் நாம் உட்கொள்ளும் உண‌வு ம‌ருந்துக‌ள் மூல‌மும் ஒட்சியேற்ற‌த் தாக்கிக‌ள் (reactive oxidant species) என‌ப்ப‌டும் ந‌ச்சுத் த‌ன்மையான‌ பொருட்க‌ள் உருவாக்க‌ப் ப‌டுகின்ற‌ன‌. இவை உட‌ற்க‌ல‌ங்க‌ளைச் சேத‌மடைய‌ச் செய்வ‌தால் ப‌ல‌ நோய்க‌ளின் உருவாக்க‌த்திற்குப் ப‌ங்க‌ளிப்புச் செய்கின்ற‌ன‌ (க‌வ‌னிக்க‌வும்: இவை நோய்க‌ளின் மூல‌ கார‌ணிக‌ள் அல்ல‌!). இத‌ய‌ குருதிக் க‌ல‌ன் நோய்க‌ளிலும், புற்று நோய்க‌ளிலும் ஒட்சியேற்ற‌த் தாக்கிக‌ளின் ப‌ங்கைப் ப‌ற்றி பல‌ ஆய்வுக‌ள் செய்ய‌ப் ப‌ட்டிருக்கின்றன‌‌. ஒட்சியேற்ற‌ எதிரிகளை உட்கொள்வ‌த‌ன் மூல‌ம் இந்த‌ நோய்க‌ளின் தாக்கங்க‌ளைக் குறைக்க‌ முடியும் என்ப‌து இப்போதுள்ள‌ ஒரு க‌ருத்து. ம‌ருத்துவ‌ ரீதியாக‌ நோயாளிக‌ளில் இது ப‌ரீட்சித்துப் பார்க்க‌ப் ப‌ட‌வில்லை என்ப‌தே உண்மை. என‌வே ப‌ச்சைத் தேனீரில் "ஒரு ம‌ண்ணாங்க‌ட்டியும் இல்லை" என்ப‌து த‌வ‌றான‌ க‌ருத்து. ப‌ச்சைத் தேனீர் த‌விர‌ புறொக்கோலி, சிவ‌ப்பு வைன், திராட்சை (தோலுட‌ன் உண்ணும் போது) ஆகிய‌வ‌ற்றிலும் ஒட்சியேற்ற‌ எதிரிக‌ள் உண்டு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.