Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இம்சைக்கு கர்நாடகத்தில் 'இம்சை'!


Recommended Posts

வசூலில் ரஜினி, விஜய் படங்களை மிஞ்சிய இம்சை!

வடிவேலுவின் இம்சை அரசன் 23ம் புலிகேசி அரங்கு நிறைந்த காட்சிகளாக மட்டும் ஓடாமல், படத்தின் பிளாக் டிக்கெட் விற்பனையும் அமோகமாக இருப்பதால் படத்தை வாங்கிய அத்தனை பேரும் படு சந்தோஷமாகியிருக்கிறார்களாம

Link to comment
Share on other sites

அடேங்கப்பா வடிவேலுவின் இம்சையை பாருங்க. ரொம்பதான் வளந்துட்டார் வடிவேலு. ( நான் இம்சை அரசன் வடிவேலை சொன்னேன் ஆமா. சண்டைக்கு வராதீங்க.) :wink: :arrow:

Link to comment
Share on other sites

நகைச்சுவை நடிப்பில் திறமை மிக்கவர் வடிவேல்.....அவருக்கு கிடைக்க வேண்டிய வரவேற்பு கிடைத்துள்ளது. :) வாழ்த்துக்கள் :D அதிலும் கோவை சரளாவுடன் நடித்தவை சிறப்பானவை :roll:
Link to comment
Share on other sites

இம்சைக்கு கர்நாடகத்தில் 'இம்சை'!

vadivelu07055503ha.jpg

கன்னட வெறியர்களின் நெருக்கடியால், வடிவேலு நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்திற்கு கர்நாடகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வடிவேலுவின் அசத்தல் நடிப்பில், வெளியாகியுள்ள இம்சை அரசன் 23ம் புலிகேசி, உலகெங்கும் ரிலீஸ் ஆகிய வசூலை அள்ளி வருகிறது. கர்நாடகத்திலும் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.

புலிகேசி கர்நாடகத்தைச் சேர்ந்த மன்னன். எனவே புலிகேசியை கேலி செய்வது போல எடுக்கப்பட்டுள்ள இம்சை அரசனை கர்நாடகத்தில் திரையிட தடை விதிக்க வேண்டும் என்று கன்னட ரக்ஷனா வேதிகே என்ற அமைப்பு கோரி வந்தது.

இருப்பினும் பட போஸ்டர்களில் 23ம் புலிகேசி என்ற பெயரை மட்டும் எடுத்து விட்டு படத்தை ரிலீஸ் செய்தனர்.

ஆனாலும் விடாத பல்வேறு கன்னட அமைப்பினர், கர்நாடக திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் கங்கராஜுவை சந்தித்து உடனடியாக இப்படத்தைத் திரையிடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இவர்களைப் பகைத்துக் கொண்டால் படத்தை ஓட விடமாட்டார்கள், பல்வேறு சிக்கல்கள் வரும் என்பதை உணர்ந்த கங்கராஜுவும், படத்தை திரையிட விடாமல் தடுத்து விடுவதாக அவர்களுக்கு உறுதியளித்தார்.

அதன்படி வியாழக்கிழமை மாலை முதல் இம்சை அரசன் கர்நாடகத்தில் நிறுத்தப்பட்டு விட்டது. பெங்களூரில் திரையிடப்பட்டிருந்த பூர்ணிமா, நடராஜ், அஜந்தா ஆகிய 3 திரையரங்குகளிலும் ரசிகர் கூட்டம் அலைமோதியது, வசூலும் அமர்க்களாக இருந்தது.

ஆனால் இதை பொறுக்க முடியாதவர்கள், கன்னட மன்னனைக் கேலி செய்து விட்டார்கள், கலாச்சாரத்தை இழிவுபடுத்தி விட்டார்கள் என்று 'பிட்'டைப் போட்டு படத்தைத் தடை செய்து விட்டனர்.

ரஜினி ரசித்த இம்சை:

இந் நிலையில் ரஜினிக்கு ஒரு ப்ரிவீயூ தியேட்டரில் இம்சை படம் போட்டுக் காட்டப்பட்டது. குடும்பத்தோடு வந்து படம் பார்த்த ரஜினி, விழுந்து விழுந்து சிரித்தாராம். படம் முடிந்து வீட்டுக்குப் போனவுடன் வடிவேலுக்கு போனைப் போட்டு, ஏய் வடிவேலு கலக்கிட்டப்பா.. படத்தை நினைச்சா இன்னும் சிரிப்பு வருது என்று பாராட்டித் தள்ள, வடிவேலு அப்படியே உருகிவிட்டாராம்.

http://thatstamil.oneindia.in/specials/cin...ws/imsai_3.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகின்ற   வெசாக் போயா தினத்தில்,  சிறையில் அடைக்கப் பட்டுள்ள  ஞானசார தேரருக்கு  ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி, விடுதலை செய்வாரா...? மாட்டாரா...? 😂 🤣
    • கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு தொடர்பில் அறிவிப்பு! கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதான மதகுருக்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இலங்கையில் சிங்கள பௌத்த தேசியத்திற்காக கலகொடஅத்தே ஞானசார தேரர் கடந்த காலங்களில் குரல் எழுப்பியதாகவும் அவரை பொது மன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது இதன்படி, வெசாக் போயா தினத்தில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் சமூக ஆதரவுடன் செயற்பட்ட ஞானசாரஹிமிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இதேவேளை 2016 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு ஏழு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1383133
    • ஈரானின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முக்பர் தெரிவு! ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நேற்றைய தினம் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில்  உயிரிழந்துள்ள நிலையில் அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முக்பர் (Mohammad Mokhber) தெரிவு செய்யப்பட்டுள்ளார். இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அஜர்பைஜான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஜோல்பா நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் ஹெலிகொப்டரில் பயணித்த அனைவரும் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் அந்நாட்டின் துணை ஜனாதிபதியான மொஹமட் முக்பர், புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். https://athavannews.com/2024/1383096
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.