Jump to content

யாழில். உயிர்கொல்லி தேள்கள்: உயிரி ஆயுதமாக புலிகள் பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகம்


Recommended Posts

யாழில். உயிர்கொல்லி தேள்கள்: உயிரி ஆயுதமாக புலிகள் பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகம்

 

யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்டிய பகுதியில் உயிர் கொல்லி தேள்கள் காணப்படுவதாக சிங்கள தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் எப்போது கண்டிராத வெள்ளை நிறத்திலான மிகவும் கொடி விஷத்தைக் கொண்ட தேள் வகையொன்று யாழ்ப்பாணத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தேள் கொட்டினால் மரணம் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. போர் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் இந்தத் தேள் கொட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் துரித அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

இந்த தேள் வகை இந்தியாவின் மஹாராஸ்டிரா மாநிலத்தில் அதிகமாக காணப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த தேள் வகைகளை உயிரி ஆயுதமாக பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த தேள் வகைகளை இந்திய அமைதி காக்கும் படையினர் கொண்டு வந்திருக்கலாம் என பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.ஏ.எம். குலரட்ன சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

1991ஆம் ஆண்டில் முதல் தடவையாக வெள்ளை தேள் கொட்டிய சம்பவம் பதிவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். வெள்ளைத் தேள் கொட்டியதனால் சிலர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3523

Link to comment
Share on other sites

இதென்ன அநியாயமா இருக்கு?? :D

என் அண்ணர் அப்பவே ஒருக்கால் வெள்ளைத்தேளால் கடி வாங்கினவர்.. :o

என்ன.. கடிச்ச தேள் தான் பாவம்.. :unsure: செத்துப்போச்சு.. :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஒருக்கா, தென்னோலையை நனையப்போட்டு, எடுத்துக் கிடுகு பின்னேக்கை, எனக்கும் ஒன்றிரண்டு தரம் கடிச்சிருக்கு! :o

 

white-scorpion.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பெரும்பாலான வெள்ளைத்தேள்கள்.... இந்திய அமைதிப்படை ஈழத்திற்கு வரும் போது... அவர்களின் தளபாடங்களுடன் சேர்ந்து வந்ததாக... அன்றைய பத்திரிகைகளில் செய்தி வந்தது. எதுக்கும்... வெள்ளைத் தேளில், டி.என்.ஏ பரிசோதனை செய்து பார்த்தால்... உண்மை புலப்படும். :rolleyes:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வெள்ளை தேள்: இந்திய அமைதிப் படை 'உயிரி ஆயுதமாக' கொண்டு சென்றதாக புது சர்ச்சை!


யாழ்ப்பாணம்: இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் உயிரைக் கொல்லும் 'வெள்ளை தேள்கள்' எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. யாழ்ப்பாணத்துக்கு இந்திய அமைதிப் படை சென்ற காலத்தில்தான் இந்தியாவில் இருந்து இந்த வெள்ளை தேள்களும் கொண்டுவந்துவிடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


யாழ்ப்பாணத்தில் எப்போதும் இல்லாத வகையில் வெள்ளை நிறத்திலான மிகவும் கொடிய விஷத்தைக் கொண்ட தேள்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த தேளினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதால் இது எப்படி திடீரென வந்தது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.


இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிகமாக காணப்படக் கூடிய இந்த வெள்ளை தேள்களின் படையெடுப்பு குறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகி இருக்கின்றன.


இலங்கையின் பேராதனைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் குலரத்ன கருத்து தெரிவிக்கையில், இந்திய அமைதி காக்கும் படையினர் இவற்றை கொண்டு வந்திருக்கலாம் எனக் கூறியிருப்பது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. மேலும் 1991-ஆம் ஆண்டு தான் முதல் முறையாக வெள்ளை தேள் கொட்டிய சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவானது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.


இந்திய அமைதிப் படையினர் 'உயிரி ஆயுதமாக' வெள்ளைத் தேளை பயன்படுத்தினரா? என்ற சர்ச்சைக்கு இது விதை போட்டிருக்கிறது.


நன்றி தற்ஸ்தமிழ்.


மேலே உள்ள இணையத்தில் செய்தி இப்படியிருக்க... பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர், புலிகள் மேல் குற்றம் சாட்டுகின்றார்.
இதனை யொத்த செய்தி, இந்திய அமைதிப்டை வந்த காலத்தில்.... யாழ் களத்திலும், இணைக்கப்பட்டிருந்தது... நல்ல ஞாபகம் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் மனசுக்கு எந்த வகை

உயிரினம் கடித்தாலும்..
இரண்டு எழுத்தே நினைவில்

நிற்கும்..."புலி"
 

white-scorpion.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது எல்லா கட்சிகளிலும் உள்ள ஒரு நிலைதான்.. யாரை விழுத்தி எப்படி உயர்வது எனத் தொடங்கி.. கட்சி மாறுவது வரை..   
    • வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்கத் தயார் - அமெரிக்க தூதுவர் Published By: DIGITAL DESK 3 17 MAY, 2024 | 04:50 PM   வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) அவர்களுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை (17) சந்திப்பு நடைபெற்றது.  வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாடுகள், கல்வி, சுற்றுலாத்துறை, காணி விடுவிப்பு, தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகள், தொழில் வாய்ப்புகள், முதலீட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. கால்நடை உற்பத்திகளை மேம்படுத்த வேண்டியுள்ளதாகவும், இயந்திர தொழில்நுட்ப பயன்பாட்டை மக்கள் மயப்படுத்த வேண்டும் எனவும் இதன்போது  ஆளுநர் தெரிவித்தார். காணி விடுவிப்பு, விடுவிக்கப்பட்டுள்ள காணிகளுக்குள் மக்கள் பிரவேசிப்பதற்கான வசதிகள் தொடர்பிலும் அமெரிக்க தூதுவர், ஆளுநரிடம் கேட்டறிந்துக்கொண்டார்.  ஜனாதிபதியின் வழிகாட்டுதல்களுக்கு அமைய, காணி விடுவிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக  ஆளுநர் தெரிவித்தார். அத்துடன் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பிரவேசிப்பதற்கான வீதிகள் உரிய நடைமுறைகளை பின்பற்றி திறக்கப்படுவதாகவும் ஆளுநர் கூறினார்.  மேலும், வடக்கில் காணப்படும் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்ககூடிய கண்காட்சி செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரிடம்,  ஆளுநர் கேட்டுக்கொண்டார். வடக்கிற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், மாணவர்களுக்கு இலவச ஆங்கில மொழி வகுப்புக்களை ஆரம்பிக்க உள்ளதாகவும், அதற்கான ஒத்துழைப்புகளை  ஆளுநரிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.  27 வருடங்களின் பின்னர் அமெரிக்க அமைதி காக்கும் கழகத்தின் ஊடாக இலங்கையில் இலவச ஆங்கில மொழி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க தூதுவர் கூறினார். https://www.virakesari.lk/article/183799
    • Published By: RAJEEBAN 17 MAY, 2024 | 03:49 PM   சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்தின் தாயாரின் வீட்டிற்கு சென்ற சிஐடியினர் விசாரணையில் ஈடுபட்டடுள்ளனர் திருகோணமலையில் உள்ள தனதுதாயாரின் வீட்டிற்கு சிஐடியினர் சென்று விசாரணைகளில் ஈடுபட்டனர் என ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது  இன்று காலை 10 மணியளவில் மூன்றாவது தடவையாக எந்த முன் அனுமதியுமின்றி CIDயினர் திருகோணமலையில் உள்ள எனது அம்மாவின் வீட்டிற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டார்கள்.  இங்கு கொழும்பில் இடம்பெறுகின்ற அச்சுறுத்தல்கள் என் சார்ந்தவை அதை கடந்து செல்ல என்னால் முடிகிறது. ஏற்கனவே சென்ற வருடம் இரவு 12 மணிக்கு திருகோணமலை வீட்டைச் சென்று தட்டினார்கள்.  புலானாய்வுப் பிரிவினருக்கு எனது விபரங்கள் முழுமையாகத் தெரிந்தும் தொடர்ச்சியாக எனது குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்வதை அனுமதிக்க முடியாது.  என்னைப் பற்றிய என் குடும்பம் பற்றிய விபரங்களை அம்மாவிடம் கேட்டுள்ளனர். எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் இவர்கள் தொடர்ச்சியாக இப்படியான மோசமான அத்துமீறல்/ உரிமை மீறல்களில் ஈடுபடுவதை அப்படியே ஏற்றுக்கொண்டிருக்க முடியாது.  வரும் திங்கட்கிழமை மனிதவுரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யவுள்ளேன். https://www.virakesari.lk/article/183793
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.