Jump to content

காவியத் தூது


Recommended Posts

<span style='font-size:30pt;line-height:100%'>காவியத் தூது

e-mail_bird_ani_new.gif

கிளியினைத் தூது விட்டால்..

கிறுக்காய் ஆகுமென்றாய்!

கிள்ளை மொழியினைத் தூது விட்டால்..

கிளர்ச்சியைத் தூண்டுமென்றாய்!

நிலவினைத் தூது விட்டால்..

களங்கம் நிறையுமென்றாய்!

நீள்கடலினைத் தூது விட்டால்..

ஆழமோ புரியாதென்றாய்!

மலரினைத் தூது விட்டால்..

மதுவினைச் சொரியுமென்றாய்!

மானினைத் தூது விட்டால்..

மருட்சியைப் பெருக்குமென்றாய்!

முகிலினைத் தூது விட்டால்..

முனகலே மிஞ்சுமென்றாய்!

சகியினைத் தூதுவிட்டால்..

சச்சரவு ஆகுமென்றாய்!

தென்றலைத் தூது விட்டால்..

திசை மாறிப் போகுமென்றாய்!

திரு மடலினைத் தூது விட்டால்..

அந்தரெக்ஸைக் காவுமென்றாய்!

தொலைபேசித் தூது விட்டால்..

தொல்லைகள் கூடுமென்றாய்!

நினைவிலே தூது விட்டால்..

நீள்கதையாய் ஆகுமென்றாய்!

கண்களில் தூது விட்டால்..

கருத்தழிந்து கருகுமென்றாய்!

அன்னத்தைத் தூது விட்டால்..

அழுக்காறு நீந்துமென்றாய்!

ஓடையைத் தூது விட்டால்..

பள்ளத்தில் ஒடுங்குமென்றாய்!

வாடையைத் தூது விட்டால்..

வர்ணனுள் மாயுமென்றாய்!

இணையத்தில் தூது விட்டால்..

இதயங்கள் நோகுமென்றாய்!

இன்தமிழைத் தூது விட்டால்..

இக கவிஞர் மேய்வரென்றாய்!

இரவியைத் தூது விட்டால்..

இனிமையைப் பொசுக்குமென்றாய்!

இளமையைத் தூது விட்டால்..

இப்பிறவியில் முடியுமென்றாய்!

காவியத் தூதிற்கெல்லாம்

காரணம் சொன்னாய் தோழி!

ஏதடி என் காதல் சொல்ல

உன் இதயம் காட்டும் வழி???</span>

Link to comment
Share on other sites

ஆகா நல்லாயிருக்குது ஆதிவாசி. ஒரு "குரங்கு விடு தூது" என்ற காவியமே படைப்பீர்;கள் போலிக்கின்றது.

Link to comment
Share on other sites

கவிதை நன்றாக இருக்கின்றது வாழ்த்துக்கள்...எதற்கும் எல்ஸ்சை தூது விட்டுப் பாருங்கள் :idea: :wink:

Link to comment
Share on other sites

சொல்லிவேலையில்லை ஆதிவாசி . கற்பனை தூள் கிளப்புது.

நேரை போய்ச் சொல்லுங்கோ! பாலன் சொல்ற வேலை மட்டும் செய்து போடாதேங்கோ. பிறகு என்ன நடக்கும் எண்டு தெரியுந்தானே?

அன்புடன்

மணிவாசகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை தூள்.

காட்டுக்குள் ஒரு கவி

அவன் கற்பனைக்கு எது கட்டுப்பாடு

பெயரொ ஆதிவாசி

படைப்போ பட்டினவாசி

Link to comment
Share on other sites

ஆகா ஆதிவாசி உங்கட காவியத் தூது தூள் கிளப்பிட்டுது. நல்லாருக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

ஆகா தூது சொல்லக்கூடா உங்களுக்கு வழி இல்லையா? பேசமால் நீங்களே உங்களுக்கு தூது போங்கள் :wink: .

வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

ஆகா நல்லாயிருக்குது ஆதிவாசி. ஒரு "குரங்கு விடு தூது" என்ற காவியமே படைப்பீர்;கள் போலிக்கின்றது.

சுஜீதன் வாசிக்க நீங்க ரெடியா?...

'குரங்கு விடு தூது" எழுதும் துணிவுடன்

ஆதிவாசி.

Link to comment
Share on other sites

கவிதை நன்றாக இருக்கின்றது வாழ்த்துக்கள்...எதற்கும் எல்ஸ்சை தூது விட்டுப் பாருங்கள் :idea: :wink:

நல்ல ஆளை சொன்னாயப்பா....

என் காதலுக்கு வெடி வைத்தபின்தான் அந்த எல்ஸ் தூங்குவார்.

வேற யாராச்சும் இருந்தாச் சொல்லங்க....

வயோதிபம் வந்தும் வாலிபனாய் இருப்பேன் என்று

அடம்பிடிக்கிற கிழம்...

கதை பிறகு மாறிப்போடும்..

வயோதிப வாலிபனுக்குப் பயப்பிடும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

சொல்லிவேலையில்லை ஆதிவாசி . கற்பனை தூள் கிளப்புது.

நேரை போய்ச் சொல்லுங்கோ! பாலன் சொல்ற வேலை மட்டும் செய்து போடாதேங்கோ. பிறகு என்ன நடக்கும் எண்டு தெரியுந்தானே?

அன்புடன்

மணிவாசகன்

மணியெண்டால் மணிதான்..

எல்ஸைப் பற்றி சரியா விளங்கின பேர்வழி.

நீர் எப்பிடி எனக்குத் தூது போவீரோ?

மணிவாசகத்தை தூதனுப்ப விரும்பும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

கவிதை தூள்.

காட்டுக்குள் ஒரு கவி

அவன் கற்பனைக்கு எது கட்டுப்பாடு

பெயரொ ஆதிவாசி

படைப்போ பட்டினவாசி

இங்க பாரடா...

காவிக்கு இன்னும் காதலின் கவர்ச்சி இழுக்குது.

யோவ் புத்ஸ்..

பேரை மாற்றும் இல்லாட்டா பயங்கரப் பிரச்சினை வரும்.

புத்தனால் இத்த ஆதிவாசி

Link to comment
Share on other sites

ஆகா ஆதிவாசி உங்கட காவியத் தூது தூள் கிளப்பிட்டுது. நல்லாருக்கு வாழ்த்துக்கள்.

தூள் கிளம்பினாத் தும்முவது ஆருங்கோ?

நான் தூள் பார்ட்டியென்று ஆருங்கோ சொன்னது?

தூளான ஆதிவாசி

Link to comment
Share on other sites

ஆகா தூது சொல்லக்கூடா உங்களுக்கு வழி இல்லையா? பேசமால் நீங்களே உங்களுக்கு தூது போங்கள் :wink: .

வாழ்த்துக்கள்.

ஆகா தன்னம்பிக்கைப் பார்ட்டி....

நல்ல ஆலோசனை அமுல்படுத்தலாம்.

ஆலோசிக்கும் ஆதிவாசி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏட்டிக்குப் போட்டியாக இயம்பிடும் உங்கள் காதலி

பாட்டியானலும் பதில் சொல்ல மாட்டார்.

பேசாமல் வேறெருவரைக் காதலிக்கப் பாருங்கள். நீங்கள் ஆதிவாசிதானே!

Link to comment
Share on other sites

ஏட்டிக்குப் போட்டியாக இயம்பிடும் உங்கள் காதலி

பாட்டியானலும் பதில் சொல்ல மாட்டார்.

பேசாமல் வேறெருவரைக் காதலிக்கப் பாருங்கள். நீங்கள் ஆதிவாசிதானே!

மாட்டிக்கொண்டது நான் அய்யா!

வாட்டும் காதல்த்தீ

கூட்டும் அவள் நினைவை

கேட்டு நகைக்காதீர்..

என் உயிர்ப்புூ உதிர்ந்த பின்னும்

உயிர்த்த என் தேடல் மின்னும்

தேடலோடு ஆதிவாசி

Link to comment
Share on other sites

காவியத்தூது அற்புதமாக கவியாக வடித்திருக்கிறீர்கள்.

அருமை. வாழ்த்துக்கள்.

மேலும் தொடருங்கள் ஆதிவாசி. . .

Link to comment
Share on other sites

  • 1 month later...

காவியத்தூது அற்புதமாக கவியாக வடித்திருக்கிறீர்கள்.

அருமை. வாழ்த்துக்கள்.

மேலும் தொடருங்கள் ஆதிவாசி. . .

காதல்தான் எல்லாருக்கும் பிடிக்கும் போல இருக்கு......

:wink: :wink: :wink:

காதலுக்குள் அகப்பட்ட ஆதிவாசி

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் உங்கள் 'கவி"க்கும்???????? :evil: :evil: :evil:

என் காதலியை இப்படி விளிக்க நான் ஒருகாலமும்

அனுமதிக்கமாட்டேன் சொல்லிப்போட்டன்....

நீங்களும் :roll: அவா :roll: சொல்ற மாதிரி ஆருக்கும் சொல்லியிருக்கறீங்களோ?

அறிய ஆவலுறும் ஆதிவாசி

ம்ம் உங்கள் கவியைத்தான் அப்படி விளித்தேன்..உங்கள் அவங்களை நீங்கள் கவியாக நினைப்பது எனக்கு தெரியும் என்று நீங்கள் நினைப்பது ரொம்ப தவறு! :evil:

ஆரும் இருந்தால்..தானே கேட்கலாம்.. 8) 8) அந்த தொந்தரவுகள் எல்லாம் இல்லாத..சுதந்திரப்பறவை நான் ஆக்கும்..இப்போ நம்ம நிலா போல :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காவியத் தூதிற்கெல்லாம்

காரணம் சொன்னாய் தோழி!

ஏதடி என் காதல் சொல்ல

உன் இதயம் காட்டும் வழி???

எல்லாம் எஸ்கேப் தான் அதற்கு வழி.

Link to comment
Share on other sites

கவிதை வித்தியாசமாக இருக்கு.

இத்தனை காரணங்கள் சொல்வது..எதற்கு??

உங்களுக்கு அவ சொல்ல வருவது புரியலை போல ;)

சரி அது போகட்டும்..எதற்கு தூது? நேர நீங்களே போனால் என்ன?

ஆதியை பார்த்து

பேதைக்கு

பீதியா??

;)

Link to comment
Share on other sites

ஆதிவாசி வாழ்த்துக்கள் :D . கவிதையாலா தூது விடுறீங்கள்போல :) . மிகவும் நல்ல வரிகள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதிவாசி அறிமுகத்தில் குழப்பம் தந்த மாதிரி

கவிதைத்தளத்திலும் குழப்பமில்லை...

ஒரு வெண்பா.... இந்த இடத்திற்குப் பொருத்தமாக இருக்கும்

என நினைக்கிறேன்......

இதுவும்......ஆதியை அலற வைக்கும் அதே காளமேகம் பொழிந்ததே.....

'தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது

தூதிதூ தெத்தித்த தூததே - தாதொத்த

துத்திதத் தாதே துதித்துத்தேத் தொத்தீது

தித்தித்த தோதித் திதி'

என்ன எல்லோரும் குழம்பிப் போய் விட்டீர்களா?

விளக்கம் வேண்டும் என்றால்..

' வானம்பாடி" படத்தில் இடம்பெற்ற பாடல் 'கல்தோன்றி மண்தோன்றா முன் தோன்று தமிழே" எனும் பாடலைக் கேளுங்கள்.

அப்பாடலை இணைக்கும் தொழில் நுட்பம் எனக்குத் தெரியாது.

சிப்பி

Link to comment
Share on other sites

ம் நானெப்பிடி மிஸ் பண்ணினேன் ஆதிவாசின்ர காவியத்தூதை.....கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையன் மைண்ட் வொய்ஸ்:   அப்பாடா .......... பெரியப்பாவுடன்  10 பேர் ஆச்சுது ....... இனி போட்டிக்கு பங்கமில்லை........!  😂 கிருபன் & பையன்.......!  🤣
    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.