Jump to content

பாம்பைப் பிரசவித்த மனிதப் பெண்ணின் கதை! (படங்கள் இணைப்பு)


Recommended Posts

snake.jpg

மனிதப் பெண் ஒருவருக்கு பிள்ளையாக பாம்பு பிறந்து உள்ளது என்று ஒரு கிராமம் முழுவதுமே முழுமையாக நம்புகின்றது. இது நடப்பது வெளிநாட்டில் அல்ல. நம் நாட்டில்தான். கிழக்கிலங்கையில் மட்டக்களப்பில் உள்ளது கடுக்கன் என்கிற தனித் தமிழ் கிராமம். இங்கு அனைவருமே இந்துக்கள். இக்கிராமத்தைச் சேர்ந்த பெண் முத்துலிங்கம் மோசிகசுந்தரி. 1966 ஆம் ஆண்டு பிறந்தவர். 46 வயது. 1983 ஆம் ஆண்டு 17 ஆவது வயதில் தகாயநாயகம் என்பவரை திருமணம் செய்தார்.

தகாயநாயகம் ஒரு கூலித் தொழிலாளி. இவருக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. முதல் இரண்டும் பெண் குழந்தை. மூன்றாவது ஆண். நான்காவது பாம்பு. ஐந்தாவது ஆண் குழந்தை. 1991 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி காலை 5.00 மணிக்கு இப்பெண்ணுக்கு பாம்புக் குழந்தை பிறந்தது. இங்கு வீடுகளில்தான் பிரசவங்கள் வந்திருக்கின்றன. மருத்துவிச்சிகள்தான் வந்து பிரசவம் மேற்கொண்டார்கள். வீட்டில் இருந்த வேப்ப மரத்தடியில் பிரசவம் நடந்தது. மருத்துவிச்சிகள், வீட்டுக்காரர்களுக்கு முன்பு ஒரு போதும் கேள்விப்பட்டு இராத, கண்டிராத அதிசயத்தை பார்க்க நேர்ந்தது.

இவர்தான் மோசிகசுந்தரி வீட்டில் பாம்பு தங்குகின்ற இடம் மூன்றாவது குழந்தைக்கும் பாம்புக் குழந்தைக்கும் இடையில் ஐந்து வயது வித்தியாசம். கருத் தரித்து ஒன்பதாவது மாதத்தில் பாம்பு பிறந்து இருக்கின்றது. மதியம் 12.00 மணி அளவில் ஊர்ந்து போனது. பந்தாரியா வழி நாக தம்பிரான் ஆலயத்தை சென்றடைந்தது. கோயில் புற்றை வசிப்பிடம் ஆக்கியது. பாம்பைப் பிள்ளையாக பெற்றமையால் சபிக்கப்பட்டவராக ஊர் மக்களில் ஒரு தொகையினரால் மோசிகசுந்தரி பார்க்கப்பட்டார். இவரை பழித்துப் பேசினார்கள். பாம்பு இவரின் வீட்டுக்கு அவ்வப்போது வந்து சென்று கொண்டிருந்தது.

soma_02.jpg


soma_03.jpg


soma_04.jpg

ஊரவர்களின் பழிச் சொற்களை தாங்க முடியாத இவர் நீ ஏன் என் வயிற்றில் வந்து பிறந்தாய்? எங்கேயாவது போய் விடு, இனி மேல் இங்கு வராதே என்று பாம்பை கடுமையாக திட்டி இருக்கின்றார். இதற்குப் பின் பாம்பு இவரது கண்களுக்கு படவே இல்லை. ஐந்து வருட காலம் இந்நிலை நீடித்தது. ஆனால் இந்த ஐந்து வருடங்களும் மோசிகசுந்தரியின் குடும்பத்துக்கு மிக மோசமான சோதனைக் காலமாக அமைந்தன. ஐந்து வயது வித்தியாசம். கருத் தரித்து ஒன்பதாவது மாதத்தில் பாம்பு பிறந்து இருக்கின்றது. வீட்டில் பயங்கர வறுமை. பல சமயங்களில் ஒரு நேரச் சாப்பாடுதான். சோதனை தாங்க முடியாமல் ஒரு நாள் நாக தம்பிரான் ஆலயத்துக்கு சென்று அழுது, குழறி சாமியை கும்பிட்டு இருக்கின்றார்.

அன்றில் இருந்து பாம்பு இவர் வீட்டுக்கு மீண்டும் வர தொடங்கியது. இப்போது இவர்கள் கஷ்டங்கள் தீரப் பெற்று, மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். இவரும், இவரது கணவரும் இப்பாம்பை தற்போது சொந்த பிள்ளையாகவே நடத்துகின்றார்கள். இவர்களின் மற்றப் பிள்ளைகளும் பாம்பை சகோதரர்களாகவே நடத்துகின்றனர். பாம்பு வந்து தங்குவதற்காக வீட்டுக் கோடியில் இடம் ஒன்றை ஒழுங்கு பண்ணிக் கொடுத்து உள்ளனர்.

பாம்பு குடிப்பதற்கு தண்ணீர் வைப்பார். பாம்புக்கு மோசிகசுந்தரியின் மன நிலையை புரிந்து நடக்கும். இவர் கோபமாக இருக்கின்றபோது அதன் பாட்டில் சென்று விடும். இவ்வளவு விபரங்களை சொல்லத் தொடங்கியபோதே உணர்ச்சி வசப்பட்டு குழறத் தொடங்கினார் மோசிகசுந்தரி.

 

http://www.puthiyaulakam.com/2012/12/women-gives-births-snake.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஐயோ, ஐயோ.
 
சுத்த, சுகாதார பழக்கம் இன்மையால் வரும் பிரச்சனைகளுக்கும்  மூட நம்பிக்கைக்கும் இடையேயான பிரச்சனை இது.
 
அமெரிக்காவில் நான்கு வருட தொடர் வயிற்று நோவினால் அவதிப்பட்ட பெண்ணின் வயிறினை ஸ்கேன் செய்து பார்த்த போது, அதில் இருந்த 4 அடி நீள பாம்பினைக் கண்டு அதிர்ந்தனர் டாக்டர்கள்.
 
பாம்பு வெளியே எடுக்கப் பட்டு, நீண்ட விசாரணையின் பின், அந்த பெண், நண்பர்களுடன் காட்டின் நடுவே trekking சென்ற போது ஆறு ஒன்றில் குளித்து நீரையும் அள்ளி குடித்த போது, அதில் மிதந்து இருக்கக் கூடிய பாம்பு முட்டையும் சேர்த்து உள்ளே போய், பாம்பு உள்ளே வளர்ந்து இருக்கிறது என்ற முடிவுக்கு வந்தார்கள்.
 
இந்த பெண்ணுக்கும் நிச்சயமாக அதுதான் நடந்து இருக்கும்.
 
சின்னப் பிள்ளைகளுக்கு, மலத்துடன் பூச்சி (நீண்ட புழு) வருகின்றது என மருந்து கொடுப்பார்களே அதே போல் பாம்பு, தானாக, மல வாசல் வழியே வந்திருக்கும். புரியாமல் பாம்பினை பிரசவித்ததாக நினைகின்றனர் போலும்.
 
தண்ணியினை கொதிக்க வைத்து குடிக்குமாறு சொல்வதன் காரணம் இது தான்.
 
NewYork Times ல் வந்த இன்னுமொரு பாம்பு பற்றிய செய்தி:
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீலப்பறவை, இந்தப் பாம்பு, சின்னப் பிள்ளையாய் இருக்கும்போது எடுத்த படங்கள் கிடைத்தால், இங்கு இணைத்து விடவும்! 

அப்பாவின் சாயலா, அல்லது அம்மாவின் சாயலா என்று பார்த்து ஒரு முடிவுக்கு வரலாம்! :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஏன் தமிழகத்தில் கேரளாவில் பாஜாகவினால் வெற்றி பெறமுடியவில்லை. அங்கு வேறு இயந்திரமா உபயோகிக்கிறார்கள்?  😀
    • த‌வ‌றுக்கு ம‌ன்னிக்க‌னுன் அண்ணா🙏..............நான் நினைத்தேன் 2013கால‌ க‌ட்ட‌த்தில் சொன்ன‌து என்று......................
    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.