Jump to content

அநியாய மங்கரியே


Recommended Posts

அநியாய மங்கரியே

ஆனந்த மானஎம் தமிழரின் வாழ்வினை

அழித்திடக் கங்கணம் கட்டியே நிக்கிற

அநியாய சங்கலார் உன்னையே கேட்கிறேன்

அடுக்குமோ உன்செயல் அவனியில் சொல்லுவாய்

தந்தையின் வியர்வையில் தோன்றிய கட்சியில்

மந்தியைச் சேர்த்தவன் யாரெனக் கேட்கிறேன்

பந்தியில் சேர்த்திட வொண்ணாப் பாதகன்

நொந்துமே மூடுவன் கண்களைச் சீக்கிரம்

சுந்தரப் பெண்களைச் சுவைத்திடத் துடித்தவன்

சுதந்திரம் பற்றியும் பேசுதல் நீதியோ

தமிழரின் உரிமைகள் பற்றியே பேசிட

தறுதலை உந்தனுக் கேதுமே தகமையாம்

ஈழமண் காத்திட உயிர்தரும் பலரிடை

இழியனாய் இருந்துநீ இழிசெயல் செய்கிறாய்

தரித்திரம் பிடித்தவுன் முகத்தினைத் துரோகியாய்

சரித்திரம் அழுத்தமாய்ப் பதிவினில் வைத்திடும்

அன்றொரு நாளுனை அழுக்கு சங்கரியென

அழைத்ததோர் கும்பலின் காலினைப் பற்றினாய்

அவனியில் இப்படி வாழ்ந்திடல் தேவையோ?

அற்பனே உந்தனை எண்ணினால் கூசுதே

மக்களின் மேடையில் ஏறிய போதெல்லாம்

மகிழ்ச்சியாய் வாழ்வதற்(கு) ஈழமே தீர்வென்றாய்

மந்திக ளோடொரு மந்தியாய்ச் சேர்ந்ததால்

மறதியோ இல்லையேல் மறையது கழன்றதோ?

அயலகம் துப்பிய எச்சிலை நக்கியே

அழிவுகள் செய்கிற கழிவுமாய்; ஆகினாய்

இழிமகன் நீசெயும் செயலினை எண்ணினால்

இறந்துமே போனவுன் தாயுமே நாணுவாள்

பாரினில் நாடின்றி அலைந்திடும் தமிழர்கள்

பாசத்தைப் பிரிந்திங்கு பதறிடும் உறவுகள்

பலரது சாபமும் உன்னைத் துரத்திடும்

படுக்கையில் கிடந்துமே நொந்துமே சாகுவாய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் நல்லதொரு கவிதையைத் தந்ததற்கு நன்றிகள் மணிவாசகன்.

தங்களுடைய கவிதை ஊற்று அழகாகப் பாய்கிறது. வாழ்த்துக்கள்!

எனது பார்வையில் இறுதி வரிகள்,

"பலரது சாபமும் உந்தனைத் துரத்திடும்

படுக்கையில் அழுந்தியே சாவுன்னை அணைத்திடும்"

இப்படி வந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.