Jump to content

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் காவல்துறையினரும், இராணுவத்தினரும் பாடசாலைகளைப் பயன்படுத்தினர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் காவல்துறையினரும், இராணுவத்தினரும் பாடசாலைகளைப் பயன்படுத்தினர்

20 நவம்பர் 2012

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் காவல்துறையினரும், இராணுவத்தினம் பாடசாலைகளைப் பயன்படுத்திக் கொண்டதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை உள்ளிட்ட 24 நாடுகளில் இவ்வாறு காவல்துறையினரும், இராணுவத்தினரும் பாடசாலைகளைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

2005ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2012ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் இவ்வாறு பாடசாலைகளை படைத்தரப்பினர் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். ஆயுத போராட்டம் நடைபெற்ற நாடுகளிலேயே அதிகளவில் இவ்வாறு பாடசாலைகளை படையினர் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இவ்வாறு பாடசாலைகளை படையினர் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். ஆயுதக் களங்சியங்களாக, தடுப்பு முகாம்களாக, விசாரணை முகாம்களாக, செயற்பாட்டு தலைமையகங்களாக பாடசாலைகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களை படையினர் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

ஆயுதப் போராட்டங்களின் போது பாடசாலைகளைப் படையினர் பயன்படுத்துவதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடுமென தெரிவித்துள்ளனர். கல்வியைப் பாதுகாக்கும் உலக அமைப்பு என்னும் நிறுவனத்தினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/85626/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.