Jump to content


Tamil Star News
Photo

பிரிவினைவாதப் போரே கோத்தாவின் விருப்பம் – விக்கிரமபாகு கருணாரட்ண


  • Please log in to reply
2 replies to this topic

#1 chinnavan

chinnavan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,068 posts
  • Gender:Male

Posted 29 October 2012 - 05:13 AM

எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் பூகோள காலக்கிரம மீளாய்வுத் தொடரில் இலங்கைக்குப் பேராபத்து காத்திருக்கிறது.

கடந்த ஜெனிவாக் கூட்டத்தொடரில் சர்வதேசத்துக்கு இலங்கை வழங்கிய உறுதிமொழிகள் எவையும் இன்றுவரை நிறைவேற்றப்படாத நிலையில், உலக நாடுகள் அனைத்தும் இலங்கையின் மனித உரிமை நிலைவரம் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான அநீதிகள் குறித்து கேள்விக் கணைகளைத் தொடுக்கத்தயார் நிலையில் உள்ளன.

அதுமட்டு மன்றி, உள்நாட்டிலும் மஹிந்த அரசுக்கு ஒரு பயங்கரமான நெருக்கடி நிலை ஏற்படவுள்ளது. இவ்வாறு தெரிவித்தார் நவசம சமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன.
நாட்டில் மீண்டும் பிரிவினைவாதப் போரை ஏற்படுத்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பிள்ளையார்சுழி போட்டுள்ளார். இவரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இனவாதப் போர் தற்போது நாட்டில் அதியுச்சம் அடைந்துள்ளது என்றும் பாகு தெரிவித்தார்.

13 ஆவது திருத்தத்தை இல்லாதொழிப்பது குறித்து பேசுவதற்கு கோத்தபாயவுக்கு அருகதையில்லை. அவர் ஓர் அரச அதிகாரி. இதை புரிந்துகொள்ளாமல் அவர் எக்காளமிடக் கூடாது. 13 ஆவது திருத்தம் தமிழர்களுக்குத் தீர்வாகாது என்றால் அவர்களுக்கான தீர்வு என்ன என்றும் விக்கிரமபாகு கேள்வியெழுப்பினார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு.

நாட்டில் மீண்டும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த அரசின் உயர்மட்ட நடவடிக்கைகளை சாதகமாக அமைத்துக்கொள்வதற்காகக் கீழ் மட்டத்தில் சிறுபான்மை மக்களது வழிபாட்டுத் தலங்களும், புனித சின்னங்கள் மீது தாக்குதல் நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
நாட்டில் இனவாதத்தைத் தூண்டும் வகையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கவேண்டும் என்ற கோஷம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் எழுப்பப்பட்டுள்ளது. இதனடிப்படையில்தான் சிறுபான்மை மக்களது வழிபாட்டுத் தலங்களைத் தாக்கும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

அடுத்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நாட்டில் சமர்ப்பிக்கப்படவிருக்கின்ற நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து மாபெரும் அரச எதிர்ப்புப் போராட்டம் நாடு முழுவதுமுள்ள மக்களால் ஆரம்பிக்கப்படவுள்ளது.
எனவே, இவற்றைக் கட்டுப்படுத்தி மக்களைத் திசைதிருப்பவே அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது என்றார் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன.
http://thaaitamil.com/?p=36902

ஒரு மானுட சமூகத்தின் இயக்கத்தில் இலட்சியங்கள் தோற்றதில்லை" எனவே; எமது மக்களின் விடுதலைக்காய் எம் இறுதி மூச்சு உள்ளவரை உறுதியுடன் போராடுவோம்!

 http://dinaithal.com


Advert

#2 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 29 October 2012 - 08:44 AM

தமிழர் மேலான போர் என்பதே சிங்கள இனவாத அரசியலின் சுலபமான ஆயுதம் பொருளாதார தோல்விகளை மறைக்க.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#3 ஆராவமுதன்

ஆராவமுதன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,494 posts
  • Gender:Male

Posted 30 October 2012 - 02:01 AM

சிங்கள அரச பயங்கரவாதிகளின் கருத்துக்கள் தமிழ் ஈழமே ஒரே ஒரு சாத்தியமான தீர்வு என்பதை பறை சாற்ற - ஒரு சில இடைத் தரகர்கள் தமது "ஏகபத்தினி" விரதத்தை உறுதியாக கடைப்பிடிக்கின்றனர் (சொந்த வாழ்வில் இல்லை :D ).

சுமார் 1000+ ஆண்டுகளின் முன்னர் வந்தேறு குடிகளான சிங்கள பௌத்தக் காடையர் கும்பல் வகை தொகையின்றி பிள்ளைகளைப் பெற்று, இன்று பெரும்பான்மையாகி நடாத்தும் பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்டு, இலங்கை முழுவதும் மண்ணின் பூர்வீக குடிகளான தமிழ் மக்களின் கட்டுப்பாட்டில் வரும் காலத்துக்கான அனைத்து வழியிலான செயற்பாடுகளையும் முன்னெடுக்க திடசங்கற்பம் பூணுவோம்! இலக்கை அடையும் வரை தொடர்ந்து அயராது உழைப்போம்!!! 





Advert
Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]