கோத்தபாய ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி வருவது அம்பலம்! விக்கிலீக்ஸ்
சிறீலங்கா | ADMIN | OCTOBER 26, 2012 AT 09:06
இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி வருவது தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு அமெரிக்க தூதரகம் தகவல் அளித்து வந்துள்ளது. இது விக்கிலீக்ஸ் இணையம் மூலம் கசிந்துள்ளது.
கோத்தபாய ராஜபக்ச, டெய்லி மிரர் ஆசிரியரை அழைத்து அவர் கருணாவை பற்றி எழுதியமைக்காக அச்சுறுத்தியுள்ளார்.
இதன் பின்னர் தாம் குறித்த ஆசிரியரை அச்சுறுத்தியதை ஏற்றுக்கொண்ட கோத்தபாய, தொடர்ந்தும் கருணாவை பற்றி எழுதினால், தாம் குறித்த ஆசிரியருக்கு எதிரியாக மாறவேண்டியிருக்கும் என்று எச்சரித்ததாக அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டிருந்தது.
இதேவேளை, இலங்கையில் 100 வீதமான அரச எதிர் ஊடகவியலாளர்களும் எதிர்க்கட்சிக்கு ஆதரவான ஊடகவியலாளர்களும் உள்ளதாக கோத்தபாய குறிப்பிட்டுள்ளதாகவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்திருந்தது.
http://thaaitamil.com/?p=36666
கோத்தபாய ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி வருவது அம்பலம்! விக்கிலீக்ஸ்
Started by
கறுப்பி
, Oct 26 2012 05:25 AM
1 reply to this topic
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]















