Jump to content

த.தே.கூட்டமைப்புக்கு வாக்களித்தவர்கள் என பட்டதாரிகளைப் புறக்கணிக்கப்பது அரசியல்வாதிகளுக்கு அழகல்ல: கூட்டமைப்பு உறுப்பினர்கள் அறிக்கை


Recommended Posts

ஜனநாயக, சட்ட, நிர்வாக நடைமுறைகள் அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தவர்கள் என்ற ரீதியில் நியமிக்கப்பட்ட பட்டதாரிகளை வெளியேற்றுவது, மக்களுக்கு சேவை செய்யப் புறப்பட்ட அரசியல்வாதிகளுக்கு அழகல்ல என தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான பொன்.செல்வராசா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம், பிரசன்ன இந்திரகுமார் ஆகியோர் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.சார்ள்ஸை சந்தித்து பட்டதாரிகளின் நியமனங்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் மேற்கொண்ட பேச்சுவார்த்தையினை தொடர்ந்து விடுத்துள்ள கூட்டு அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எதிர்க்கட்சியும் ஆளுங்கட்சியும் சேர்ந்த நிறுவனமே அரசாங்கமாகும். இந்நிலையில் ஆளுங்கட்சியினர் தாங்கள் தான் அரசாங்கம் எனச் சொல்வதும் செயற்படுவதும் அரசியலமைப்பிற்கு முரணான செயற்பாடாகும். அதுமட்டுமல்ல அரசியல் மேடைகளிலும் பாராளுமன்றம் போன்ற அரசியல் சபைகளிலும் மட்டுமே அரசியல்வாதிகள் அரசியல்வாதிகள் என்னும் அந்தஸ்தில் செயற்பட முடியும். ஏனைய சந்தர்ப்பங்களிலெல்லாம் குறிப்பாக நிர்வாக விடயங்களில் சம்பந்தப்படும்போது நிர்வாகத்திற்கு உதவும் வகையிலேயே செயற்பட வேண்டும்.

அதாவது அரசியல்வாதிகள் நிர்வாக விடயங்களில் சம்பந்தப்படும்போது நிர்வாகத்தை நெறிப்படுத்துகின்ற தாபன விதிக் கோவையின் ஏற்பாடுகளுக்கு அமைவாக பணியாற்ற வேண்டிய அவசியம் உண்டு. இவ்வகையில் செயற்படும்போது குறித்த நிர்வாக செயற்பாட்டில் சம்பந்தப்படுபவர் நாட்டின் பிரஜை என்ற ரீதியில் பார்க்கப்பட வேண்டுமேயொழிய அரசியற் கண்கொண்டு அவர் எந்த கட்சியின் ஆதரவாளர் என்ற அடிப்படையில் பார்க்கப்படலாகாது.

மேற்குறித்த நடைமுறைகளை தெரிந்துகொள்ளாமலோ அல்லது தெரிந்திருந்தும் அவற்றை

புறந்தள்ளியோ நடந்துகொள்வதால் ஊழல், பாதிப்பு, நிர்வாக சீர்கேடு என்பன நிகழ்கின்றன.

பட்டதாரிப் பயிலுநர்களாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் நியமனம் பெற்றவர்களின் நியமனங்களை உறுதிப்படுத்தும் செயற்பாட்டில் மேற்குறித்த நியமனங்களை கடைப்பிடிக்காது இரு அரசியல்வாதிகள் செயற்பட்டமை பெருங்குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் 428பேர் நியமனம் பெற்றிருந்தார்கள். இவர்களின் நியமனங்களை உறுதிப்படுத்துவதற்கான கடிதங்கள் மட்டக்களப்பு செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

428 கடிதங்களும் செயலாளரினால் ஒப்பமிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும் நியமனத்திற்குரிய பட்டதாரிகளின் பெயர்கள் குறித்த பத்திரத்தில் குறிப்பிடப்படாது அதற்குரிய இடம் வெற்றாகவே விடப்பட்டுள்ளது.

குறித்த நியமனக் கடிதங்களுக்குரிய விளக்கக் கடிதத்தில் மேற்படி நியமனங்கள் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரால் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்தெந்த பிரதேச செயலகத்திற்கு யார் யார் நியமிக்கப்பட்டுள்ளார்களோ அவர்களின் பெயர்களை அதற்குரிய அதற்குரிய அதிகாரி குறித்துக் கொடுத்ததும் தமது அங்கீகாரத்திற்கான கையொப்பத்தை குறித்த நியமனக் கடிதத்தில் இடுவதே பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரின் செயற்பாடாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர்கள் உள்ளார்கள். இவர்களில் மாகாணசபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஅவர்களும் அரசியற்தனமாய் நடந்துகொண்டமையால் 31 பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த 31பேரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தவர்கள் என குறிப்பிட்ட மேற்படி இருவரும் அவர்களின் பெயர்களை நீக்கிவிட்டு தங்கள் ஆதரவாளர்கள் 31பேரின் பெயர்களை குறித்த நியமனக் கடிதங்களில் பதியச்செய்துள்ளனர். புதிய இந்த 31பேரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சிற்கான நேர்முகத் தேர்வில் பங்குபற்றாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கையை எதிர்த்தும் தமக்கு நியாயம் வழங்கக் கோரியும் ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்கு முன்னால் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அங்கு சென்ற மாகாணசபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இந்த நியமனங்கள் திவிநெகும சம்பந்தப்பட்டதெனவும் இச்சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே அவர்களின் கோரிக்கைக்கும் பதிலளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மாகாணசபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் இக்கூற்று தொடர்பாக நாம் விசனமடைகின்றோம். ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது போல் நிர்வாக விடயங்களை அரசியல்வாதிகள் கையாளும்போது தாபன விதிக் கோவையை அனுசரித்தே செயற்பட வேண்டும்.

இவ்வகையில் நேர்முகத் தேர்வில் தெரிவுசெய்யப்பட்டு நியமிக்கப்பட்டவர்களை நீக்கியமையும் அவ்விடயங்களுக்கு நிர்வாக உத்தியோகத்தர்களால் நேர்முகம் காணப்பட்டவர்களின் பெயர்களை பதிலீடு செய்தமையும் அரச அதிகாரிகளின் கடமையில் தலையீடு செய்ததாயும் தாபன விதிக் கோவைக்கு அமையாத நியமனங்களை வழங்கியதாயும் அமைகின்றது.

மேலும் குறித்த 31பேரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தவர்கள் என்ற அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளமை அரசியலமைப்புச் சட்டத்தில் 10ஆம் உறுப்புரையில் குறித்துரைக்கப்பட்டுள்ள சிந்தனை செய்யும் சுதந்திரம் மனச்சாட்சியை பின்பற்றும் சுதந்திரம் என்பவற்றுக்கு எதிராக அமைவதால் பாதிக்கப்பட்ட பட்டதாரிகளின் அடிப்படை உரிமையை மீறியுள்ளமையை காட்டுகின்றது.

பட்டதாரிப் பயிலுநர்கள் ஏன் ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள் எனத் தெரிந்திருந்தும் அவ்விடம் சென்று அவர்களின் ஆதங்கங்களை கேட்டு ஆறுதல் வழங்கவோ பரிகாரம் வழங்கவோ முற்படாது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரிடம் சொல்லுங்கள் என்ற ரீதியில் பதிலளித்தமை வலிந்து சென்று ஆங்காரத்துடன் பதிலளித்தமையையே காட்டுகின்றது.

ஏனைய இரண்டு பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர்களும் நிர்வாக முறைப்படியும் தமது அதிகார வரம்பிற்குள்ளும் செயற்பட்டுள்ள நிலையில் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஅவர்களும் நிர்வாக நடைமுறையை மீறியும் தமது அதிகார வரம்பிற்கு அப்பாலும் செயற்பட்டுள்ளனர்.

அரசியல்வாதிகள் ஏற்கனவே குறிப்பிட்ட அரசியல் நிறுவனங்களிலல்லாது ஏனைய இடங்களில் செயற்படும்போது மக்களின் உரிமைகளில் சம்பந்தப்படுகின்ற நிர்வாக நடவடிக்கைகளில் தாக்கம் ஏற்படுத்துவதால் சட்டத்தின் முன் சகலரும் சமன் என்ற அடிப்படையிலே மக்களை அரசியல் அடிப்படையில் பேதப்படுத்தாது அனைவருக்கும் சேவை வழங்க கடமைப்பட்டவர்கள்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாத காலத்திலே தமிழன் என்பதற்காக வாக்களித்து இனியொருபோதும் எய்த முடியாத முதலமைச்சர் ஸ்தானத்தில் உங்களை உயர்த்தி வைத்த வாக்காளர்களில் இந்தப் பட்டதாரிகளும் அவர்களின் குடும்பத்தவர்களும் உள்ளடங்குவார்கள் என்பதை சந்திரகாந்தன் அவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

அரசாங்கக் கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டுமென்றால் தேர்தல் என்னும் ஏற்பாடு அரசியலமைப்பில் இடம்பெற்றிருக்க மாட்டாது. மக்கள் ஆணையை மதித்து அவர்களின் விருப்புக்கேற்ற ஆட்சியை வழங்குவதே நல்லாட்சியின் இலக்கணம்.

நமக்கு ஆதரவளித்தவர்கள் குறுகிய நோக்கங்களுக்காக ஆதரவளித்திருந்தால் அவற்றை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்பது எவ்வகையிலும் நியாயமானதல்ல. அவ்விதம் செய்ய முற்படுவது ஊழலுக்கே வழிவகுக்கும்.

எனவே நமது சந்ததியினரான இளந்தலைமுறையினரின் நெஞ்சங்களில் வெறுப்பையும் வேதனையையும் வைராக்கியத்தையும் வளர்க்கும் வகையிலான செயற்பாடுகளை கைவிட்டு அவர்களெல்லாம் இந்த நாட்டின் பெறுமதியான வளங்கள் என்ற கருத்தாக்கத்துடன் காரியமாற்றுவதே நாம் நமது சமுதாயத்திற்குச் செய்யும் தொண்டாகும்.

இந்த அடிப்படையில் ஏற்கனவே செய்யப்பட்ட நடைமுறைகளை குழப்பாத வகையில் இடையில் செய்யப்பட்ட ஏற்பாடுகளை திருத்தியமைக்க நடவடிக்கை எடுப்பதே யாவர்க்கும் நலம் பயக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் அறிக்கை! தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதனூடாக, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டமையை பொது வேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் உணர்த்த முடியும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார். -(3)   http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தொட/
    • நன்றி @கந்தப்பு நீங்களும் கலந்துகொள்ளவேண்டும்😀 @முதல்வன், 19 ஆவது கேள்விக்கு அணியின் பெயரைத் தாருங்கள் அல்லது RR என்று போட்டுக்கொள்ளவா?
    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.